articles

img

சிறு, குறு தொழில்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு என்ன செய்யலாம்?

சிறு, மற்றும் குறுந்தொழில்களை பாதுகாத்திட தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், கீழ்கண்ட கோரிக்கைகள் தொழில் பாதுகாப்பு மாநாட்டின் மூலம் கவனத்திற்க்கு கொண்டு வரவிரும்புகிறது.

1.உடனடி நிதி ஆதாரம்:

மூலப்பொருள் வாங்குவதற்கான (WORKING CAPITAL) வட்டியில்லாமல் ஓர் ஆண்டிற்கு கடன் வழங்க வேண்டும். இதேபோன்று மூலப் பொருளுக்காக வாங்கிய கடனுக்கும், ஓர் ஆண்டுக்கு வட்டிமட்டும் தள்ளுபடி செய்ய வேண்டும். இயந்திரம் வாங்கிய, அல்லது புதியதாக வாங்கும் இயந்திரத்துக்கான (TERMLOAN) கடனுக்கு ஓராண்டு தள்ளு படி செய்வது மூலமாகவும், இதையே மாதத்தவணையாக கட்டுபவர்களுக்கு ஓர் ஆண்டுகாலம் அவகாசம் கொடுக்க வேண்டும். இதன் மூலமாக  அவர்களுக்கு உற்பத்தி செய்வதில் தடங்கல் இருக்காது. கடன் வாங்காத வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மானியமாக குறைந்தது ஒரு  லட்சம் வழங்க ஒன்றிய அரசை மாநில அரசு நிர்பந்தப்படுத்த வேண்டும் அல் லது தமிழ்நாடு நிதி மூதலீட்டு கழகம் மூலமாக ஏற்பாடு செய்ய வேண் டும்.

2.ஜிஎஸ்டி (GST - GOODS AND SERVICES TAX):

சிறு மற்றும் குறுந்தொழில்கள் ஜிஎஸ்டி-யால், மிகவும் பாதிப்புக் குள்ளாகியுள்ளனர். ஆகவே உற்பத்திக்கு ரூ.40 லட்சம், சர்வீஸ்க்கு ரூ.20 லட்சம் ஜிஎஸ்டியில் இருந்து விதிவிலக்கை, முன்பு இருந்ததை போல் 150 லட்சத்திற்கு மாற்ற ஜிஎஸ்டி கவுன்சிலில் வலியுறுத்த வேண்டும்.  அதேபோன்று இவர்கள் வாங்கும் மூலப்பொருட்களுக்கு 18 சதவிகிதம் அல்லது 28 சதவிகிதம் ஜிஎஸ்டி கட்டி தான் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்க ளுக்கு உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. ஏற்றுமதி செய்யும் பொருட் களை வரி கட்டி, பிறகு திரும்பப் பெறும் முறை உள்ளது. இதில் நடைமுறை  சிக்கல் உள்ளது. இது தலையை சுற்றி மூக்கை தொடுவது போன்று உள்ளது. ஜிஎஸ்டி-க்கு முன்பு படிவம், ‘H’ மூலமாக உற்பத்தி செய்பவர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும்வரி சலுகை அளிக்கப்பட்டது. இதையையும் தமிழக அரசு ஒன்றிய அரசை நிர்பந்தப்படுத்த வேண்டும். ஏற்றுமதி கொடுக்கும் சலுகையை நேரடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண் டும். ஒவ்வொரு தொழிற் பேட்டையிலும் இ-சேவை வரி கட்டும் மய்யம் உருவாக்க வேண்டும்.

3.மூலப்பொருள்களின் விலையை கட்டுபடுத்துதல் (RAW MATERIAL):

மூலப்பொருட்கள் விலை கட்டுபடுத்த முடி யாதவாறு உயர்ந்து  கொண்டே செல்கிறது. அனைத்து சிறு, குறுந் தொழிலுக்கு தேவை யான மூலப்பொருள்கள் அனைத்துமே பெரிய  கார்ப்பரேட் நிறுவனங் களே உற்பத்தி செய்கி றது, அதனால் பொரு ளின் விலையை நிர்ணயித்துக்கொள்கிறது, தற்போது கடந்த நான்கு  ஆண்டுகளில் 100 முதல் 200 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. இதன்  காரணமாக சிறு நிறுவனங்கள் உற்பத்தி செய்ய முடியாமல் தத்தளிக் கின்றன. அரசே மூலப்பொருட்களை, குறிப்பாக பஞ்சு, இரும்பு, காப்பர், பிளாஸ்டிக் கிரானுவேல்ஸ் மற்றும் இதர மூலப்பொருட்களை கொள்முதல் செய்து அரசுக்கு சொந்தமான குடோன்களில் வைத்து ரியல் டைம் விலை இல் லாமல் சலுகை விலையில் பதிவு செய்த சிறு, குறுந்தொழிலுக்கு வழங்க வேண்டும்.

4.சந்தைபடுத்துதல்:

சிறு மற்றும் குறுந் தொழிலுக்கு போது மான சந்தை இல்லை.  சில பெரிய நிறுவனங்க ளையே நம்பியுள்ள தால் அதன் கட்டுப்பாட் டுக்குள்ளேயே இயங்க வேண்டியுள்ளது. MS ME நிறுவனங்கள் 8 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்கிறது. இதன் சந் தையை விரிவுபடுத்த தமிழ்நாட்டில், உற்பத்தி செய்யப்பட்ட பொருட் களை வெளியே கொண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசுக்கென்றே புதிய ஆன்லைன் விற்பனை தளம் ஒன்று (Tamilnadu Trade base) உருவாக்கு வதற்கு அரசால் மிக குறைந்த செலவில் செய்ய இயலும். ஆனால், இவை தனியார் நிறுவனங்கள் மூலம்  இந்தியா முழுவதும் செயல்படுகிறது. ஆனால் இவைகள் பெரும்பாலும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் தொடர்புபடுத்துவ தாகவே உள்ளது. இது தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு, முக் கியத்துவம் அளிப்பதில்லை. ஆகவே தமிழ்நாடு அரசே பாரபட்சமின்றி கால் சென்டர் மூலமாக தமி ழுக்கு...1, ஆங்கிலத்தில்...2, ஹிந்தியில்...3 என்று பயன்படுத்தி நடைமுறை படுத்த ஒரு கால்சென்டரை உருவாக்கி, அதில் அனைத்து தொழில் விப ரங்களைப் பற்றியும், உற்பத்தி பொருட்களைப் பற்றியும், ஆன்லைன் விபரங் களாக தெரியபடுத்த ஒரு “அரசு கால் சென்டர்” நிறுவனத்தை உருவாக்கு வது சிறப்பாக இருக்கும். இதன் மூலம் மிகப்பெரிய தொழில் வளர்ச்சி மற்றும் வணிகத்தையும் உருவாக்க முடியும். இதற்காக அதிகளவு நிதி யும் தேவைப்படாது. இதை சிட்கோ (SIDCO) நிறுவனம் மூலம் நடை முறை படுத்தலாம்.

5.மனித வளம்: 

தமிழ்நாட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லை என்ற தோற்றம் செயற்கை யாக உருவாக்கப்பட்டுள்ளது, ஆகவே தான், வெளி மாநிலத்தில் இருந்து தான் வேலை செய்ய முடியும் என் கிற நிலைமை மாற்றபட வேண் டும், தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மட் டும் வேலைக்காக 75 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக் கிறார்கள், இவர்களில் 18 வய துக்கு உட்பட்டவர்கள் 17 லட் சத்து 81 ஆயிரத்து 695 பேரும், 23 வயதிற்கு உட் பட்டவர்கள் 16 லட்சத்து 14  ஆயிரத்து 582 பேரும், இவர்களில் 10, 12 ஆம் வகுப்பு, ITI, டிப்ளோமா (Deploma) படித்தவர்களை, குறுந்தொழிலில் வேலை செய்ய நம் இளை ஞர்களுக்கு பயிற்சியும், அதற்கான சூழலையும் உருவாக்கி தர வேண் டும்.  ஆகவே, msme பதிவு செய்த தொழில் முனைவோர்களிடம் குறைந் தது 3 ஆண்டுகளுக்கு கட்டாயம் வேலை செய்ய அரசு வழிசெய்ய வேண் டும். இங்குதான் தொழில் கற்றுக்கொள்ளவும், அவர்களை திறன் மேம்பட்ட வராக முடியும். அது மட்டும் அல்லாமல் அவர்கள் சிறுதொழிலை உருவாக்க மும், பெரிய நிறுவனங்களில் தொழிலுக்கு செல்ல வசதியாக அமையும். சிறு, குறுந்தொழில் செய்பவர்கள் வெளிமாநில தொழிலாளியை நம்பி இருக்க வேண்டியது இருக்காது. இதனால் சிறு, குறுந்தொழில் வளர்ச்சி பெறும். வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும்.

6. வடிவமைத்தல் (Design and Development):

சிட்கோ (SIDCO) மூலமாக ஏற்படுத்தப்பட்ட industrial  estate, மற்றும் தனியார் தொழிற் பேட்டை பெரும்பாலும் அனைத்து மாவட்டத்திலும் உள்ளது. அனைத்து இண் டஸ்ட்ரியல் எஸ்டேடிலும் டிஸைன் டெவலப்மெண்டிற் கான இடமும், பயிற்சியும் ஏற் படுத்திகொடுப்பதன் மூலம் தொழில் வளர்ச்சி மேம்படும், அதாவது இன்ஜினியரிங் படித்த இளைஞர்களுக்கும் ஆட்டோகேடு, அல் லது பொருள் வடிவமைப்பு சாப்ட்வேர் படித்த,மற்றும் அறிந்தவர்கள், அனு பவம் உள்ளவர்களுக்கு, அரசு அதற்க்கான கம்ப்யூட்டர், 3D பிரின்ட்டர் வழங்கியோ, அல்லது கடன் அளித்தோ அவர்களுக்கு வேலைவாய்ப்பும், தொழில் முனைவோர்களின் சிந்தனை – ஐடியாவை மாடல்செயல் செய்து கொடுத்தால் அவர்களுடைய ஐடியாபொருள் வடிவமாக பார்க்கும் போது தொழில் முனைவோர்கள் புதிய தொழில் உருவாக்கவும், உற்பத்தியை அதி கப்படுத்த முடியும், தொழில் வளர்ச்சி ஏற்படும். அரசுக்கு அதிகசெலவினம் ஏற்படாது. தொழில் வளர்ச்சியில் பெரிய அளவில் முன்னேற்றத்தை காண முடியும்.

7.தொழில் தொடங்க தகுந்த இடம் வழங்குதல்:

தமிழ்நாடு அரசு சிட்கோ மூலமாக தொழில் இடம் வசதி செய்து கொடுக் கிறது, இதில் உண்மையிலேயே தொழில் செய்பவர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், விண்ணப்பம் அளிக்கும் போது அல்லது நாளிதழில்களில் விளம்பரம் கொடுக்கும் போது என்ன விலை கொடுக்கப்படுகிறதோ, அதே விலையில் வழங்கவேண்டும். தனியாக உருவாக்கப்பட்ட தனியார் தொழில் பேட்டைக்கு அரசு அடிப் படை வசதி செய்து கொடுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலமாக வீடுக ளில் பகுதியில் தொழில் செய்பவர்களை, தொழில் பேட்டைக்கு கொண்டு வர இயலும்.

8. தொழிற்பேட்டையில் தனியாக எலக்ட்ரிகல் சப்-ஸ்டேஷன் (electrical feeder) அமைத்தல்:

தொழிற்பேட்டையில் தடை யில்லா மின்சாரம் வழங்க தனியாக துணை மின் நிலையம் (EB-FEEDER) அமைக்க வேண்டும், இதன் மூலமாக சிறு, குறுந்தொழிலுக்கு தனி விலை  நிர்ணயம் ஏற்படுத்தி, மானிய விலை யில் மின்சாரம் தருவது மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும், தடை யில்லா மின்சாரம் வழங்க துணை மின் நிலையத்துடன் இணைந்த ஜெனரேட்டர்  அமைப்பது மூலமாக சிறு, குறுந் தொழில்கள் உற்பத்தியை அதிகபடுத்த முடியும், இதன் மூலம் வேலை வாய்பையும் அதிகபடுத்த இயலும்

9.Msme-யிடம் இருந்து கொள்முதல் செய்தல்:

அரசு நிறுவனங்கள் சிறு, குறுந்தொழிலுக்கு 20 சதவிகிதம் உற் பத்திக்கு ஆர்டர் இருந்தும், இது நடைமுறையில் மிக குறைவாக உள் ளது. இதனை 50 சதவிகிதம் அதிகப்படுத்திட வேண்டும், இதை நடை முறை படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்

10. புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல்:

சிறு, குறுந்தொழில்களில் தொழில்முனைவோர்கள் அவர்களுடைய வாடிக்கையாளருக்காக, வெளியில் தெரியாமல் புதிய கண்டுபிடிப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. இவர்களுக்கு காப்புரிமை செய்ய உதவிட வேண் டும். அதேபோன்று தமிழ்நாட்டளவில் காப்புரிமை பதிவு (patent) செய்தவர் களுக்கும், நிதி ஆதாரத்துடன் அவர்களுக்கு உதவி செய்து தொழில் தொடங்க அரசு உறுதுணையாக,  தனி ஒரு குழுவை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு அளவில்  புதிய கண்டுபிடிப்புகளுக்கு பதிவு அலுவலகம் திறந்திட வேண்டும்.  அவர்களை ஊக்குவிக்க பரிசும், தொழில் தொடங்க ticc மூலமாக நிதி  அளிக்க வேண்டும்.

11. தொழில் முனைவோருக்கான பயிற்சி:

ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் முனைவோர்களுக்கான தகுதியை மேம்படுத்துவதற்க்கு தேவையான பயிற்சி கூடங்களை உருவாக்க வேண் டும். அதில் ISO போன்ற பயிற்சி அளிக்க வேண்டும்.

12. தனியார் தொழிற்பேட்டைக்கு அடிப்படை வசதி:

தமிழ்நாட்டில் ஏராளமான தனியார் தொழில் பேட்டைகள் அமைந் துள்ளன, இந்த தொழிற்பேட்டைகள் அடிப்படை வசதியின்றி இருப்ப தால், தரமான தார்ச்சாலைகளும், மழைநீர் செல்லும் வடிகால் மற்றும் தேவையான வசதிகளை செய்து தரவேண்டும்.

13. MSME பதிவு:

தொடர்ச்சியாக தொழில் சார்ந்த அரசின் சட்டம் மற்றும் கொள்கை மாற்றங்களையும், எந்தந்த தொழில் முனைவோர்களுக்கான, அரசு சார்ந்த நிறுவனங்கள் உள்ளது. அது எந்த மாதிரியான உரிமை உள்ளது என்ற விளக்கமான கையேடு புத்தகத்தை msme பதிவு செயும் போதும், ஏற்கனவே பதிவு செய்த நிறுவனங்களுக்கு வழங்கிட வேண்டும்

14. தொழில்நுட்ப நூலகம் அமைத்தல்:

ஒவ்வொரு தொழிற்பேட்டைகளிலும் தொழில் நுட்ப நூலகமும், மின்காட்சியமும் அடங்கிய அரங்கம் அமைப்பது மூலமாக இன்றைய காலக்கட்டத்திற்க்கான தொழில் அறிந்திட மிகவும் உதவியாக அமையும்.

15. குடும்ப நலத்திட்டம் உருவாக்குதல்

தமிழ்நாடு அளவிலாவது சிறுதொழில் முனைவோர்களுக்கு குடும்ப நலத்திட்டம் உருவாக்குவதால் (EPF), அவர்களுக்கு பொருளாதார வீழ்ச்சியின்போதோ அல்லது அவர்கள் தொழில் செய்ய இயலாத காலத்தில் மாத வருமானமோ, அதன் மூலம் கடன்பெறவோ அதற்கான திட்டத்தை அரசு திட்டமிடுவது மூலம் சிறு தொழில் முனைவோர்கள் வாழ்க்கைக்கு பெரிய உதவியாக அமையும்.

மேற்கண்ட காரணிகளில் அரசு உடனடியாக நிறைவேற்றுவது மூலமாக நம்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த முடியும்.