articles

‘திமிர் வரி’ எதிர்கொண்ட கண்ணம்பாளையம்

வெள்ளையர்களின் கட்டளைக்கு அடங்க வில்லை என்றும், விடுதலை போராட்டத் தீயை மூட்டி விடுகிறார்கள் என்பதற்காக, ஒரு கிராமத் துக்கே ‘திமிர் வரி’ போட்டனர் வெள்ளையர்கள். கோவை மாவட்டத்திலுள்ள கண்ணம்பாளையம் கிராமம்தான் 1942-ல், வெள்ளையர்களின் திமிர் வரிக்கு இலக்கானது.  ஆகஸ்ட் புரட்சியின் போது கோவையில் நடந்த சூலூர் ரயில் எரிப்பு மற்றும் சிங்காநல் லூர் ரயில் கவிழ்ப்பு சம்பவங்கள் சுதந்திரப் போராட்டத்தில் சிவப்பு எழுத்துக்களால் எழுதப் பட்டவை. செய் அல்லது செத்துமடி’ என்ற முழக் கத்துடன் 1942 ம் ஆண்டில் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ’வெள்ளையனே வெளியேறு’ தீர்மா னம் முன்வைக்கப்பட்டது. இதையொட்டி கோவையில்  கூட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில் ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் ரயில்களை கவிழ்ப்பது, சூலூர் விமான தளத்தை கொளுத்துவது, சிறைகளை உடைத்து கைதிகளை விடுதலை செய்தல், அரசு  அலுவலகங்களை கைப்பற்றி போட்டி அரசு நடத்துதல் ஆகிய திட்டங்கள் தீட்டப்பட்டன. இத் திட்டங்களை செயல்படுத்த தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டன. நீலகிரி மாவட்டம், அருவங்காட்டில் இருந்து வெடி மருந்து மற்றும் போர் தளவாடங்களோடு  சரக்கு ரயில் ஒன்று போத்தனூர் வழியாக ஈரோடு செல்வது குறித்து போராட்டக்காரர்களுக்கு தக வல் கிடைத்தது. சிங்காநல்லூர் குளத்தேரி பகுதி யில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் ரயில் தண்டவாளங்களை போராட்டக்காரர்கள் தகர்த் தனர். இதனால் தடவாளங்களை ஏற்றி வந்த  சரக்கு ரயில் தடம் புரண்டு பெட்டிகள் குளத்தில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் உயிர் சேதம் எது வும் ஏற்படவில்லை. போராட்டக் குழுவின் ஒரு பகுதியினர் சிங்காநல்லூர் பகுதியில் இருந்த கள்ளுக்கடைகளுக்கு தீ வைத்தனர். இந்த போராட்டங்களில் பங்கேற்ற தொழிலாளர்களை பிடிக்க, பஞ்சாலைகளுக்குள் காவலர்கள் புகுந் தனர்.  அப்போது தொழிலாளர்களுடன் போலீசா ருக்கு மோதல் வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 தொழிலாளர்கள் பலி யாகினர்.

சூலூர் விமான தளம் போராட்டக்காரர்களின் அடுத்த இலக்காக இருந்தது. ஆகஸ்ட் 26 ஆம் தேதி அத்தளத்தில் இருந்த கொட்டகைகளும், லாரிகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. ஆனால் எதிர்பாராத விதமாக இருவர் உயிரி ழந்தனர். இதில் போராட்டக்காரர்களை கைது  செய்த போலீசார், அவர்களை சித்திரவதைக்கு உள்ளாக்கினர். பலர் சிறைவாசம் அனுபவித்த னர். இதில் தப்பிய போராட்டக்காரர்களை சல்லடை போட்டுத் தேடியது பிரிட்டிஷ் போலீஸ். போராட்டக்காரர்களின் உறவினர்கள் கடும் சித் தரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். சூலூர் விமானப்படை தளம்  தாக்கப்பட்டதற்கு இழப்பீட் டுத் தொகையை போராட்டக்காரர்களின் கிரா மங்களை சேர்ந்தவர்கள் ஏற்க வேண்டும் என உத்தரவு போட்டது பிரிட்டிஷ் அரசு. இதில் அதி கம் பாதிக்கப்பட்டது கண்ணம்பாளையம் கிரா மம் தான். போராட்டக்காரர்களை காட்டிக்  கொடுக்காத காரணத்துக்காக கண்ணம்பாளை யம் கிராமத்துக்கு திமிர் வரி என்று புதிதாக ஒரு  வரியை விதித்தனர் பிரிட்டிஷ் அதிகாரிகள். அந்த  வரியை 48 மணி நேரத்துக்குள் செலுத்த வேண் டும் எனவும் மக்கள் நிர்பந்திக்கப்பட்டனர். இதை இப்போது கேட்டாலும் கதை கதையாய் சொல்கி றார்கள் கண்ணம்பாளையத்தை சேர்ந்த மூத்த  குடிமக்கள்.  ஆகஸ்ட் புரட்சியின் போது கண்ணம்பாளை யத்தைச் சேர்ந்த 33 பேர் சிறையில் அடைக் கப்பட்டனர். அவர்களுக்கு 3 மாதத்திலிருந்து 10 ஆண்டுகள் வரையிலும் சிறை தண்டனை விதிக் கப்பட்டது. கிராமத்தினரின் ஒற்றுமை காரணமாக பிரிட்டிஷ் போலீசாரிடம் போராட்டக்காரர்கள் கடைசிவரை சிக்கவே இல்லை. இத்தகைய  போராட்டங்களாலும், தியாகங்களாலும் கண்ணம் பாளையம் கிராமம் சுதந்திரப் போராட்டத்தில் நிலையான இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத் தக்கது.