உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட ‘சில விதிவிலக்குகள்’ என்பதில் தான் குழப்பங்களும், தவறான நம்பிக்கைகளும் ஏற்படுகின்றன.
இந்தியாவில், 2014 ஆம் ஆண்டு என்பது மாநில அரசுகளுக்கும், ஆளுநர்களுக்கும் இடையி லான உறவுகள் மோசமடையும் புதிய கால கட்டத் தொடக்கத்தை குறிக்கிறது. இந்திய கூட்டாட்சி யில் ஆளுநரின் பங்கு என்பது எப்போதுமே சர்ச்சைக் குரியதாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், இன்று எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்க ளின் ஆட்சி நிர்வாகத்தை சீர்குலைப்பதற்கான ஆயுத மாக ஆளுநர் பதவி மாற்றப்பட்டுள்ள அளவுக்கு இதற்கு முன்பு நிலைமை இப்படி மோசமடைந்ததில்லை. எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும், ஆளுநர்கள் மாநில அரசுடன் தினந் தோறும் அறிவுப்பூர்வமற்ற மோதலில் ஈடுபட்டுள்ள னர். ஆளுநர்களின் மோதல் போக்கு அரசமைப்புச் சட்ட நெருக்கடி நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது.
பாஜகவின் சித்தாந்தமே மோதலுக்கு அடித்தளம்
மாநில அமைச்சரவைக்கு ஆளுநரின் ‘உதவி மற்றும் ஆலோசனை’ என்பது இன்று எதிர்க்கட்சி என்ப தாக உருமாற்றம் அடைந்துள்ளது. ஒன்றியத்தில், இன்று ஆட்சியில் அமர்ந்துள்ள பாஜக கட்சியை கணக்கில் எடுத்துக் கொண்டால் இதில் ஆச்சரியப்படு வதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில், அந்தக் கட்சி தமது சித்தாந்தத்தால், இந்தியாவின் பன்மைத்துவத்தில் நம்பிக்கை இல்லாத, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே வரி, ஒரே தேர்தல், இப்படி ஒற்றைத்து வம் கொண்ட நாடாக தேசத்தை மாற்றியாக வேண்டும் என்று உறுதியுடன் செயல்படும் ஒரு கட்சி தில்லி யில் ஆட்சியில் இருக்கும் போது ஆளுநரின் உரு மாற்றம் வியப்பளிக்கவில்லை. நாட்டை ஒற்றைத்துவ தேசமாக மாற்றி அமைப்பதற்கான தனது பயணத் தில் இந்திய கூட்டாட்சி முறை பெரும்தடையாக இருப்ப தாக அந்தக் கட்சி பார்க்கிறது. அதிகாரங்களை எல்லாம் ஒன்றியத்தில் குவிக்கும் ஒன்றிய அரசின் வேகம் முன்னுதாரணம் இல்லாதது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் ஏராளமான சட்டங்கள் மாநிலங்களின் நிதியதிகார வாய்ப்பை திட்டமிட்டே குறைப்பதாக உள்ளன. மாநில அரசின் வருவாய் ஆதாரங்கள் கசக்கி பிழிந்தெடுக்கப்படு கின்றன. மாநில ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் பதவி பெரும் தீங்காக மாறியுள்ளது.
நாடாளுமன்ற/ சட்டமன்ற அமைச்சரவை ஆட்சி முறை
ஆளுநரின் உண்மையான அதிகாரங்கள், பணிகள் என்ன என்பதை இந்தியா ஏற்றுக்கொண்ட நாடாளு மன்ற/சட்டமன்ற அமைச்சரவை ஆட்சி முறையின் பின்புலத்தில் தான் மதிப்பிடப்பட வேண்டும். ஷாம் ஷெர் எதிர் பஞ்சாப் மாநில அரசு (1974) வழக்கில் உச்ச நீதிமன்றம், அரசமைப்பு சட்ட நிர்ணய சபையில் நடை பெற்ற விவாதங்களை விரிவாக ஆய்வு செய்த பின்னர் வழங்கிய தனது முக்கியமான தீர்ப்பில் கீழ்க்கண்ட வாறு குறிப்பிட்டது: ‘நேரு,பட்டேல், பி. என். ராவ் ,அல்லாடி கிருஷ்ண சாமி ஐயர் எல்லாவற்றிற்கும் மேலாக அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவரான டாக்டர். அம்பேத் கர் ஆகிய அனைவரும் குடியரசுத் தலைவர் ஆட்சி நிர்வாக நடைமுறையினை நிராகரித்து, ஒரே குரலில் நாடாளுமன்ற, சட்டமன்ற கூட்டாட்சி அமைப்பினை ஏற்றுக் கொண்டனர்.’ டாக்டர். அம்பேத்கர், குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் பணி பற்றி வெளிப்படையாகவே இவ்வாறு குறிப்பிட்டார்: “ஆளுநரின் ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநரின் பங்கு என்பது சம்பிரதாயப்பூர்வமானதுதான். தேசம் மேற்கொள்ளும் முடிவுகள் குடியரசுத் தலைவர் எனும் முத்திரை மூலம் அறிவிக்கப்படுகிறது. பொதுவாகவே குடியரசுத் தலைவர் அவரது அமைச்சர்களின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டவர்.
அமைச்சர்களின் ஆலோசனைக்கு மாறாக அவர் எதையும் செய்ய முடியாது. அமெரிக்க குடியரசுத் தலைவர் எந்த நேரத்திலும் எந்தச் செயலரையும் பதவி நீக்கம் செய்ய முடியும். போதுமான பெரும்பான்மை இருக்கும் வரையில் இந்திய குடியரசுத் தலைவர் அப்படி எல்லாம் செய்வதற்கு அதிகாரம் இல்லை”. அம்பேத்கரின் கருத்தை நேரு ஒத்துக் கொண்டார். “அமைச்சரவை அடிப்படையிலான ஆட்சியின் தன்மை என்பது அதிகாரங்கள் அனைத்தும் அமைச்சர வையிடம்தான் இருக்கும் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம். அதே நேரத்தில், பிரெஞ்சுக் குடி யரசுத் தலைவர் போன்று இந்திய குடியரசுத் தலை வரை வெறும் பெயரளவிலான தலைவராக ஆக்குவ தற்கும் நாம் விரும்பவில்லை. அவருக்கு உண்மை யான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் அவரது நிலையினைகண்ணியமிக்கதாக உருவாக்கி உள்ளோம்” என்று நேரு குறிப்பிட்டார். நாடாளுமன்ற ஆட்சி முறையின் சாதனங்களைப் பற்றி, “நாடாளுமன்ற ஆட்சிமுறை பற்றிய மதிப்பீடு தினசரி மற்றும் காலமுறையிலானதாக இருக்கும். தினசரி மதிப்பீடு என்பது நாடாளுமன்றத்தில், உறுப்பி னர்களின் கேள்விகள் தீர்மானங்கள், நம்பிக்கை இல்லா தீர்மானம், ஒத்திவைப்பு தீர்மானம், விவா தங்கள் ஆகிய செயல்பாடுகள் அடிப்படையில் இருக்கும். கால முறையிலான மதிப்பீடு என்பது தேர்த லின் போது வாக்காளர்கள் தீர்மானிப்பதாக இருக்கும். .........”என்பது அம்பேத்கரின் கருத்தாகும்.
இவை யாவும், அனைவரும் அறிந்த விசயம் தானே என்று சிலருக்குத் தோன்றலாம். இன்று, குடி யரசுத் தலைவர் ஆட்சி முறைக்கு மாறுவதற்கு திரை மறைவில் கடுமையான முயற்சிகள் நடந்து வருகின்றன என்பதால்தான் இவ்வளவு விரிவாக விளக்க வேண்டி யுள்ளது. இந்த முயற்சிகளின் பின்னணியில்தான் ஆளுநர் கள் தங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் இருப்பதாக நம்புகின்றனர்.
முழுமையான கூட்டாட்சி இல்லாத அரசமைப்புச் சட்டம்
ஷாம்ஷெர் வழக்கு தீர்ப்பில் உச்ச நீதிமன்றம், நன்கு அறியப்பட்ட ‘சில விதிவிலக்குகளைத் தவிர’ ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையின்படி தான் தமது அதிகாரங்களை பயன்படுத்த முடியும்; அமைச்சரவைக் குழுவின் ஆலோசனையின்படி ஆளுநர் செயல்பட மறுப்பதற்கு ஆளுநருக்கு உரிமை இல்லை என்று குறிப்பிட்டது. உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட ‘சில விதிவிலக்கு கள்’ என்பதில் தான் குழப்பங்களும், தவறான நம்பிக் கைகளும் ஏற்படுகின்றன. ஆளுநருக்குரிய அரசமைப்புச் சட்ட அதிகாரங்கள் (பிரிட்டிஷ்) இந்திய அரசின் 1935 ஆம் ஆண்டு சட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும். இந்தச் சட்டம் தான், சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு இணைத்துக் கொள்ளப்பட்டது.
ஒன்றிய அரசு- மாநில அரசுகளுக்கு இடையில் ஆளுநர் முக்கியமான இணைப்பாக பார்க்கப்பட்டார். மாநிலங்களை கலந்து ஆலோசிக்காமலேயே ஆளுநர் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுகிறார். அவரது பதவிக்காலமும் ஒன்றிய அரசின் கருணை அடிப்படை யில் அமைகிறது. அரசமைப்புச் சட்டத்தில்,ஆளுநரின் சில தனி விருப்புரிமைகள், அதிகாரங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாநில அரசியலிலிருந்து தகவலை கேட்டுப் பெறலாம். மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கலாம் என்று அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பி டப்பட்டுள்ளது.
இதைத்தான் ஆளுநர்கள் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றனர். இதையே சாக்கிட்டு ஆளு நர்கள் தாங்கள் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல என்று அச்சுறுத்துகின்றனர். இந்தச் சூழலை அரசமைப்பு சட்டத்தின்படியான கூட்டாட்சித் தன்மையின் பின்னணி யில் தான் புரிந்து கொள்ள முடியும். இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமையான கூட்டாட்சி அமைப்பு அல்ல. (அது quasi federal எனும் முழுமையற்ற கூட்டாட்சி அமைப்பு தான்). உண்மை யில் 73 மற்றும் 74 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரையில், காந்தியின் முக்கியமான சிந்தனையான கிராம சுயராஜ்யமெனும் மூன்றாம் மட்ட அரசு இல்லாதது ஒரு புதிராகவே இருந்தது. நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்கள் ஒன்றிய அரசுவசம் குவிக்கப்பட்டன.
இதனால், விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் பதற்றமான நிச்சயமற்ற சூழல் நிலவியது. அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில், காங்கிர சைச் சேர்ந்த பீகார் மாநிலத்துக்காரரான பிரஜேஸ்வர் பிரகத் என்பவர், இந்திய ஒற்றுமையை முன்னிட்டு மாநிலங்கள் மீதான இந்திய அரசின் அதிகார மேலாண்மை பாதிக்கப்படாமல் பராமரிப்பது அவசி யம் என்று குறிப்பிட்டார். இத்தனை ஆண்டுகளில், அதிகாரங்கள் யாவும் ஒன்றியத்தில் மேலும் மேலும் குவிக்கப்பட்டுள்ளன. ஆளுநரின் பங்கு மென்மேலும் சர்ச்சைக்குரியதாகி வருகிறது. ஒரே கட்சி ஒன்றியத்திலும் மாநிலத்திலும் ஆட்சி யில் இருக்கும் போது அங்கே மோதல் போக்கு எழுவ தில்லை. ஆனால் 1957- 59 களில் கேரளா போன்று எதிர்க்கட்சிகள் ஆட்சி நடந்த போதும், 1967க்குப் பின்னர் பல்வேறு மாநிலங்களிலும் மோதல் போக்குகள் தலை தூக்க ஆரம்பித்தன. 1977க்கு பின்னர் ஒன்றியத்தில் ஆளுங்கட்சி மாறி மாறி வந்த போது சூழ்நிலை மிகவும் மோசமடைந்தது. அரசியல் நோக்கத்திற்காக ஆளுநர் கள் மாற்றப்பட்டனர்.
தொடரும்...