ஒரு ஊர்ல ஒரு குடும்பம் இருந்துச்சு. அதுல அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சி என எல்லாரும் இருந்தாங்க. தம்பிக்கு அம்மாவைப் பிடிக்கவே பிடிக்காது. ஒருநாள் காலையில் அம்மா,” எந்திரி டா! ரோகித்.” அப்படின்னு சொன்னாங்க. “நீங்க எதுக்கு என்னைக் கூப்பிடுறீங்க. உங்களுக்கு இது தேவையில்லை.” என தம்பி கூறினான். அம்மா ரோஹித்தை எப்போதும் கண்டித்து வளர்ப்பார். இது அவனுக்குப் பிடிக்காது. அதனால், அவன் இப்படி எடுத்து எரிந்து விழுந்தான். அம்மா மனசு வருத்தப்பட்டாங்க. “ஏன் நீ இப்படி இருக்க? எதுக்கெடுத்தாலும் எரிந்து விழுந்துகிட்டே இருக்க. உனக்கு என்ன தப்பு செஞ்சேன். படின்னு சொல்றது தப்பா? கண்ட பசங்களோட சேர்ந்து ஊர்சுத்தாதன்னு சொல்றது தப்பா?” அப்படின்னு கேட்டாங்க. “உங்களை எனக்குப் பிடிக்கவே மாட்டேங்குது. நீங்க எது கேட்டாலும் என்னைத் திட்டிக்கிட்டே இருக்கீங்க. ஏன் என்னைத் திட்டுறீங்கன்னு புரியலை.” அப்படின்னு ரோகித் கத்தினான். “ரோஹித் அப்படி எல்லாம் பேசக்கூடாதுப்பா. அம்மா உன் நல்லதுக்குதான் சொல்றாங்க” என அப்பா சொன்னாங்க. அதுக்கு, அம்மா எப்ப பாத்தாலும் என்னை திட்டிக்கிட்டே இருக்காங்கப்பா என ஆதங்கப்பட்டான்.
பெத்தமனசு பதறது. சரி விடு. நான் பாத்துக்குறேன். இனி எரிந்து விழாதே!” என கூறி அப்பா கிச்சனுக்குள்ள போனாங்க. அப்பா அம்மாவுக்கு கிச்சனில் எப்போதும் உதவுவார். ஒருதருக்கு ஒருத்தர் உதவியா இருந்தா வேலை சீக்கிரம் முடியும்! செல்போன் அலறியது. “சரி, வந்துறேன்.” என செல்போனை வைத்தான். படுக்கையில் இருந்து எழுந்து குளிக்க போனான். “யாருன்னு கேளுங்க. இல்லை நான் கேட்க வா?” என அம்மா அப்பாவிடம் கூறினார். “போனில் என் பிரண்டு ராஜேஷ். காலேஜ் கிளம்புறேன். அவனக்கு பர்த்டே. இன்னைக்குப் பங்க்ஷன் வச்சிருக்கான். கூப்பிட்டான். அப்பா போயிட்டு வர்றேன்.” என அம்மாவின் காதில் விழும்படி கூறினான். அவனை காலேஜ் போயிட்டு நேரா வீட்டுக்கு வர சொல்லுங்க.” என அம்மா பதிலுக்கு கத்தினாள். “அப்பா! லேட்டா தான் வருவேன். பெர்த்டே பார்ட்டி இருக்கு.” என்றான். “பார்ட்டின்னு தான் எல்லாம் ஆரம்பிக்கும். சும்மா சாப்பிடுடான்னு சொல்லி கண்டதை குடிக்கச் சொல்லுவாங்க. என்னால் அதை எல்லாம் பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது. செத்துடுவேன்.” என கத்தினார் அம்மா.
“அம்மா சொல்றாங்க. கேளுடா.நேரா வீட்டுக்கு வந்திடு. பையில் நூறு ரூபாய் எடுத்துக்க. ஏதாவது கிப்ட் வாங்கிக் கொடு.” என அப்பா கூறினார். “அப்பா சரின்னு சொல்லிட்டீங்க. பர்த்டே பங்க்ஷன் அட்டன் பண்ணினவுடன் வந்துட்றேன். அம்மா பேச்சு எல்லாம் கேட்க முடியாது.” எனக் கூறி கல்லூரி புறப்பட்டான். மாலை பெர்த் டே பார்டி தொடங்கியது. ஆண்கள் பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர். அம்மா கூறியது போல் மதுபான விருந்து இருந்தது. “மாப்ளே இதை குடி! வெளியில் வாசனையே தெரியாது.” “டேய்! கம்பல் பண்ணாத. பியர் குடி.” இப்படி பேச்சுகள் தொடர்ந்தன. ஐந்து மணிக்கு ஆரம்பித்த பார்ட்டி எட்டு மணி ஆகியும் முடிவுக்கு வரவில்லை. கண்ணன் குடித்ததை வாந்தி எடுக்க ஆரம்பித்தான். அவனால் கண் விழித்து பார்க்க முடியவில்லை. ரோஹித்தும் அவனது நணபன் லெட்சுமணனும் கண்ணனை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் கிளம்பினார்கள். கண்ணன் வீட்டின் முன் கூட்டம் கூடியிருந்தது. “டேய், கண்ணா. அம்மா நம்மை விட்டு போயிட்டாங்கடா !” என கதறி ஓடி வந்தாள் அவனது அக்கா. அதனைக் கேட்கும் நிதானத்தில் அவன் இல்லை. ரோஹித்துக்கு அழுகை பீறிட்டு வந்தது. கண்ணா என கதறி அழுதான்.
“மாத்திரை வாங்கிட்டு வர்றேன்னு போனவன். இப்படி வந்து நிக்கிறானே?“ என அவனது அப்பா கதறினார். அவனை குளிப்பாட்டி எழுப்ப முயற்சித்தனர். அம்மா இறந்த விசயத்தை உணர முடியாமல் இருந்தான். அதற்குமேல் ரோஹித்தால் அங்கு இருக்க முடியவில்லை. வீட்டிற்கு கிளம்பினான். “அம்மா! அம்மா!“ எனக் கூறியபடி வீட்டிற்குள் நுழைந்தான். அம்மா சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அம்மாவின் காலடியில் அமர்ந்தான். கால்களைப் பிடித்து அழ ஆரம்பித்தான். “ அம்மா! என்னை மன்னிச்சிடு. “ என திரும்ப திரும்ப கூறி கதறி அழுதான்.் உலகத்தில் நமக்கு அம்மா ரொம்ப ரொம்ப முக்கியம். அம்மா நம்ம நல்லதுக்குதான் கண்டிப்பாங்க என்பதை உணர்ந்து கொண்டான்.