“---சைவம் உண்டு அசைவம் உண்டு ரெண்டில் நீ எந்த வகை கூறு...” என்ற பாட்டை முணுமுணுத்தவாறே, செடி களுக்கு தண்ணீர் ஊற்றிச் சென்று கொண்டி ருந்தவனை யாரோ கையைப் பிடித்து நிறுத்தியது போலிருந்தது. ஒரு கிளை கையில் படர்ந்திருந்தது. எடுத்து விட்டு நகர முயன்றவனை அந்தக் கிளை “பளார்” என்று கன்னத்தில் அறைந்தது. அவ்வளவு நேரம் காதில் மாட்டியிருந்த இயர் போனைக் கழற்றியபோது, “இத முதல்லயே செஞ்சிருக்கலாம்ல. எவ்வளவு நேரமா நா கூப்புட்டே இருக்கேன்” என்றது செடி. “என்ன விஷயம்... சீக்கிரமா சொல்லு.. நேரமாச்சு...” “என்ன அவசரம்... லீவு விட்டாச்சு.. டிவி தான பாக்கப் போற... முதல்ல நீ நடக்குற ஸ்டைல மாத்து. அதுலதான் உனக்கு நேரமாகுது..” “என் நடைக்கு என்ன குறைச்சல்..” “ம்ம்... ஒரு கால் அரபிக்கடலுக்கும், இன்னொரு கால் வங்காள விரிகுடாவுக்கும் போகுது..நேர நட.. நேரம் மிச்சமாகும்..” “உனக்கு இதெல்லாம் எப்புடி தெரியும்??”
“முதல்ல என்னோட கேள்விக்குப் பதில் சொல்லு... பாட்டுப் பாடினியே, நான் சைவமா அசைவமா..?” “எங்களுக்கு நீ சைவம்... அசைவம்னா மாமிசம். உயிர் இருக்குறச் சாப்புட்டா அசைவ உணவு...” “உங்கள மாதிரி எங்களுக்கும் உயிரி ருக்கு... உணர்வு இருக்கு...” “ஆமா... நானும் எங்கயோ படிச்சுருக் கேன்... அப்போ, உன்னை வெட்டுனா வலிக்குமா..?” “உன்னை மாதிரியே எனக்கு உணர்வு இருக்கும்னு நெனக்காத... ஆனா, எங்கிட்ட மாற்றங்கள் இருக்கும்.. நானும் போராடு வேன்.. “ “தொட்டா சிணுங்கினு ஒண்ணு இருக்குல்ல..” “ஆமா, உணர்வ வெளிப்படையா காட்டுற செடில அதுவும் ஒண்ணு.. மிமோசா பியூடிகா (Mimosa Pudica) குடும்பத்தச் சேர்ந்தது... “
“ஆமால்ல... உங்களுக்கும் குடும்பம் லாம் இருக்குதே.. தமிழ்நாட்டத் தவிர மத்த மாநிலங்கள்ல குடும்பப்பெயர்னு சொல்லி சாதியச் சேத்து வெச்சுருக்காங்க... ஆனா, உங்களுக்கு பேரினம் முதல் பெயராவும், இனம் இரண்டாவது பெயராவும் வெச்சுருக் காங்க...” “ஆமா... நல்லவேளை... எங்களுக்கு சாதியக் குடுக்காம விட்டீங்க..” “உங்களுக்கு எல்லாம் உயிர் இருக்குனு ஜகதீஷ் சந்திர போஸ் சொன்னப்ப யாரும் நம்பல.. அவரு என்ன பண்ணாருன்னா ஒரு பாத்திரத்துல புரோமைடு கரைசலை ஊத்தி, அதுல உன்னோட தாத்தாவோட, தாத்தாவ இறக்கி விட்டுட்டாரு.. உயிர் ஊசலாடும் நேரத்துல, நாங்க எப்புடி துடிப்போமோ அதே மாதிரி இருந்துச்சுன்னு பாத்தவங்க சொன்னாங்க... உயிர் இருக்குனு நம்புனாங்க..” “இன்னொரு சம்பவமும் சொல்றாங்க... ஒரே நேரத்துல ஒரு எலிக்கும், ஒரு செடிக் கும் புரோமைடை ஊசி மூலம் ஏத்துனா ராம்... இரண்டும் துடிச்சத மற்ற விஞ்ஞானி களும் பார்த்தாங்களாம்..” “ஆனாலும் எங்கள பிடுங்குறது, வெட்டுறது எல்லாம் நிக்கலியே...”
“ரெண்டு வகை இருக்கு.. ஒண்ணு எங்க ளோட உணவுச் சங்கிலில நீங்க இருக்கீங்க... ரெண்டாவது, இயற்கை வளத்தச் சுரண்டு றதுக்காக உங்கள அழிக்குறது... இந்த ரெண்டாவதுதான் பூமிப்பந்துக்கே அழிவ உண்டாக்கும்...” “ஆமா... ரெண்டாவது சம்பவம் ஒண்ணு நடக்குறப்ப கட்டிப்புடிச்சு எங்களக் காப்பாத் துனது உனக்குத் தெரியுமா..?” “இது எப்போ நடந்துச்சு..?” “சிப்கோ இயக்கனு சொல்வாங்க... இப்போ இருக்குற உத்தரகாண்ட் மாநி லத்துல இமயலைப் பகுதிகள்ல மரங்கள வெட்டத் திட்டம் போட்டாங்க.. அப்போ அப்பகுதில இருக்குற மக்கள், குறிப்பா கிராமப்புற பெண்கள், மரங்களக் கட்டிப் பிடிச்சுட்டு நின்னாங்க.. எங்கள வெட்டிட்டு மரங்கள வெட்டுங்கனு சொன்னாங்க.. சிப்கோனா, கட்டிப்பிடினு அர்த்தம். இதுவும் இயற்கை வளத்த சுரண்டுற ரெண் டாவது வகை..இதெல்லாம் உங்களுக்கு பாடமாவே இருக்கு.. படிச்சத நினைவுல வெச்சுக்குற பழக்கம் வேணும்”
“ஆமாம்... லீவுல முன்னாடி படிச்ச வகுப்புப் புத்தகங்ள்லாம் படிக்கப் போறேன்.. இமயமலைல நடத்துன மாதிரி உலக நுரையீரல்னு சொல்ற அமேசான் காடுகளப் பாதுகாக்கவும் இயக்கம் நடத்துறாங்களாம்..” “அது சரி..எனக்கு நீ தண்ணி ஊத்துறது, அந்த முத வகையா?..” “இல்லையில்ல... “என்று செடியைக் கட்டி அணைத்தான். செடியின் இலைகள் விரிந்தன.