articles

img

கோட்சே போற்றி, எங்கு கொண்டு செல்கிறது?

பாஜகவினர் கூறும் ‘அமிர்த காலம்’ என்பதன் உண்மையான பொருள், வெறுப்பு பேச்சுகளுடன் முஸ்லீம் சிறுபான்மையினர் மீது தொடர்ந்து தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிடுவதும், காந்திஜியைக் கொன்ற கோட்சேவைப் போற்றிப் புகழ்வதுமேயாகும். மகாராஷ்டிராவில், ஷிண்டே-பாஜக அரசாங்கம் முஸ்லீம்களின் பெயர்களில் உள்ள நகரங்களை மாற்றியமைப்பதில் வெறித் தனமாக இறங்கியிருக்கிறது. அவுரங்காபாத், சத்திரபதி சாம்பாஜி நகர் என மாறியிருக்கிறது. ஓஸ்மானாபாத் இப்போது தாராசிவ். அக மதாபாத் மாவட்டம் அஹில்யாபாய் ஹோல்கா நகர் என பிரகடனம் செய்யப்படவிருக்கிறது

மதவெறி பேரணிகள்

இந்த மாற்றங்கள் அனைத்தும் தாங்கள் பெரும்பான்மை பெற்றுவிட்டோம் என்ற மமதையுடன், முஸ்லீம் ஆட்சியாளர்களையும், வரலாற்று மானிடர்களையும் பேயாகச் சித்தரிப்பதுடனும் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு முன்பு, மகாராஷ்டிரா மாநிலம் முழு வதும் சுமார் நான்கு மாதங்களுக்கும் மேலாக முஸ்லீம்களுக்கு எதிராக குரைத்துக் கொண்டும், இந்து மதவெறியை வெளிப்படுத்திக் கொண்டும்  சுமார் 50 இந்து ஜன ஆக்ரோஷ் மோர்ச்சா பேரணிகள் நடந்தன. அகமத்நகரில் சேவ்கான் கிராமத்தில் மதவெறியர்களின் வன்முறை வெறி யாட்டங்கள் நடந்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து கோலாப்பூரிலும் மதவெறி மோதல்கள் நடந்துள்ளன.  மகாராஷ்ட்ர மாநிலத்தின் துணை முதல்வரான தேவேந்திர ஃபட்னாவிஸ், இந்த நிலைமைக்கு அவுரங்க சீப்பின் குழந்தைகள்தான் காரணம் என்று கூறியிருக்கிறார். உள்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மூத்த பாஜக தலைவர் இவ்வாறு கூறுவதிலிருந்து, முஸ்லீம்களுக்கு எதிரான கேவலமான வெறுப்பு அரசியல் என்பது எந்த அளவிற்கு ஆட்சியின் உயர் தலைமை பீடத்தில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

கடைகளை காலி செய்யக் கெடு

பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லீம் களை பொருளாதாரரீதியாக ஒடுக்கி வைத்திட வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே பின்பற்றுவதுபோல் தோன்றுகிறது. உத்தர் கண்டில், மக்கள் தொகையில் சிறிய அளவில் இருந்திடும் உத்தர்காசி, புரோலாவில் கடைகள் வைத்திருக்கும் முஸ்லீம்களிடம், கடைகளைக் காலி செய்துவிட்டு வெளியேறும்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். முஸ்லீம்களின் கடைகளுக்கு வெளியே கறுப்பு குறியீடு (black cross) போடப்பட்டு, ஜூன் 15க்குள் கடைகளைக் காலி செய்ய வேண்டும் என்றும் கெடு விதிக்கப்பட்டிருந்தது.  ஒரு சிறுமியை இரு நபர்கள் கடத்தி இருக்கிறார்கள். இவ்வாறு கடத்தியவர்களில் ஒருவர் முஸ்லீம் இளைஞர். இதனைத் தொடர்ந்தே இவ்வாறு ஒட்டுமொத்த முஸ்லீம்களுக்கும் எதிராக இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இவர்களின் அச்சுறுத்தல்களுக்குப் பயந்து ஏற்கனவே சில முஸ்லீம்கள் சந்தையிலிருந்த தங்கள் கடைகளை மூடிவிட்டார்கள்.  இதேபோன்று, கடைத்தெருக்களில் கடை வைத்திருக்கும் முஸ்லீம்களும் கடைகளைக் காலி செய்து விட்டு வெளியேற வேண்டும் என்று இப்போது மிரட்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

கோட்சே புகழ் பாடல் அதிகரிப்பு

ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் வெறுப்பு மற்றும் மதவெறி அரசியல் இவ்வாறு முஸ்லீம்களைக் கடித்துக் குதறுவதன் மூலம் ஊக்கமடைந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில், ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான கிரிராஜ் சிங், நாதுராம் கோட்சேவை இந்தியாவின் சிறந்த மகன் என்று போற்றிப் புகழ்ந்திருக்கிறார். ‘‘அவர் காந்தியைக் கொன்றவர் என்றால், அவரும் பாரத மாதாவின் மதிப்புறு மகன்தான்’’ என்று அவர் கூறியிருக்கிறார் அவ்வப்போது கோட்சேவைப் புகழ்வது என்பது பாஜக தலைமையின் கொள்கையாக மாறியிருக்கிறது. இவ்வாறு கிரிராஜ் சிங், கோட்சேவைப் புகழ்ந்து தள்ளுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்புதான் உத்தர்கண்ட் மாநி லத்தின் முன்னாள் முதல்வரான திரிவேந்திர சிங் ராவத், ‘‘காந்திஜி கொல்லப்பட்டார் என்றால் அது ஒரு வித்தியாசமான பிரச்சனை. கோட்சேவும் கூட ஒரு தேசபக்தர்தான்’’ என்று பேசியிருக்கிறார். இதற்கு முன்பு, போபாலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவரும், பயங்கரவாதிகளின் வழக்கு ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவருமான பிரக்யா சிங் தாகூர் 2019இல் கோட்சேவை ஒரு தேச பக்தர் என்று புகழ்ந்திருக்கிறார்.   இதேபோன்றே கர்நாடகாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி.யான நளின் குமார் கடீல் என்பவர், ‘‘கோட்சே ஒரு வரைத்தான் கொன்றார், ஆனால் ராஜீவ் காந்தி 17 ஆயிரம் பேர்களைக் கொன்றுள்ளார்’’ என்று கூறியிருப்பதன்மூலம் கோட்சே செய்த கொலையை நியாயப்படுத்தி இருக்கிறார். இவ்வாறு பாஜக-வின் அனைத்து மட்டங்களி லும் கோட்சேவை விரும்புவது என்பது ஒரு நெறியாகவே மாறி இருக்கிறது. காந்தியைக் காலம் முழுவதும் வெறுத்து வந்த சாவர்க்கரை வழிபடுவது என்பது இத்துடன் வரும் மற்றொரு துதிப்பாடலாகும். இவ்வாறு பாஜக கூறிவரும் புதிய இந்தியா என்பது, கோட்சேவைப் புகழ்வது என்பதும் அதன்மூலம் இந்து ராஷ்டிரத்தை நிறுவுவது என்பதுமேயாகும்.

 ஜூன் 14, 2023, தமிழில்: ச.வீரமணி