articles

img

தொழிலாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்! - கே.திருச்செல்வன்

‘வணிகத்தை எளிமையாக்குவது’ என்ற மோடி அரசின் முழக்கம்,  தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதற்கு முதலாளிகளுக்கு எல்லையற்ற உரிமைகளைத் தருகிறது. மோடி அரசின் தொழிலாளர் சட்ட திருத்தங்கள் யாவும் முதலாளிகளுக்கு சாதகமாகவே அமைந்துள்ளன.

ஒன்றிய பாஜக அரசின் நவீன தாராளமயக் கொள்கை அமலாக்கத்தின் ஒரு பகுதி யாக தொழில்மயமாக்கல் என்ற பெயரில் சில திட்டங்களை அமலாக்கி வருகிறது. ஸ்டார்ட்அப் இந்தியா, மேக் இன் இந்தியா என்ற  கவர்ச்சிக்கர மான முழக்கங்களை முன்வைத்து தொழில் துறை  வளர்ச்சியை வேகப்படுத்தி  வருவதாக பொய்யான தோற்றத்தை உருவாக்க முனைந்துள்ளது.  உண்மை யில் உள்நாட்டு பெரு முதலாளிகளின் நலன்களையே  முன்னிறுத்துகிறது.  அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற் காக என்று கூறி பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.  நாடு முழுவதும் ஏற்றுமதி ஊக்குவிப்பு மண்டலங் கள் (EPZ) மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZ) ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக சட்டத் தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் நிறுவன மற்றும் சேவை மையங்களின் வளர்ச்சி (DESH)  மசோதா 2022, உள்நாட்டு சந்தை மற்றும் சிறப்புப் பொ ருளாதார மண்டலங்களில் பொருட்களை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சி.பொ. மண்டலத்தில்  உள்ள தொழில்களுக்கு சில தொழிலாளர் சட்டங்களில் இருந்து விலக்கு அளிக்கப் படுகின்றன மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள் முன்பு எந்த தொழில் தகராறையும் பதிவு செய்வதற்கு முன்பாக, உள்ளூர் மாவட்ட ஆணையாளரின் முன் அனுமதி கட்டாயம் பெற வேண்டும் எனக் கூறப் பட்டுள்ளது.

1க்கு 10 இடங்கள் நிரந்தரமற்றவை

உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் நிரந்தரப் பணியிடங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு ஒப்பந்த முறை பெருமளவில் புகுத்தப்பட்டுள்ளது.  நிரந்தரத் தன்மையுள்ள இடங்களில் ஒப்பந்தத்தொழிலாளர்க ளை ஈடுபடுத்துவது ஒப்பந்தத்தொழிலாளர் (முறைப் படுத்தல் மற்றும் நீக்குதல் ) சட்டம் 1970க்கு முற்றிலும் விரோதமானது. இதில் அரசு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் அப்பட்டமாக சட்டத்தை மீறு கின்றன. தமிழ்நாட்டில் பெரும்பாலான தொழில் நிறுவ னங்களில் 1 :  10 என்ற விகிதத்தில் ஒப்பந்த முறையி லான தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு சட்டப் படியான ஊதியம், சட்ட சலுகைகள், பணி பாதுகாப்பு, பணியிடபாதுகாப்பு போன்ற எதுவும் இல்லை. 

‘தொழிலாளி’ என்ற  வரையறையே மாறுகிறது

இது தவிர பயிற்சியாளர்,பழகுனர், தற்காலிகம்,  தினக்கூலி, பதிலி போன்ற பல பெயர்களில் தொழிலா ளர்களை பணிக்கு அமர்த்தி உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கும் எந்தவித சட்டப் பாதுகாப்பும் இல்லை. இவற்றுக்கெல்லாம் மேலாக ஒன்றிய அரசு  “குறிப்பிட்ட கால வேலை முறை  (Fixed Term Employment - FTE)” தேசிய வேலை வாய்ப்பு மேம் பாட்டுபணி (NEEM), இணைய வழி வேலை (NETAP), மாநில தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (SITA) என்ற புதிய வடிவங்களில் தொழிலாளி என்ற வரையறைக்குள் வர முடியாத வேலை முறைகள் புகுத்தப்பட்டுள்ளன. முதலாளி - தொழிலாளி உறவு முறையற்றவர்களாக மிக குறைந்த ஊதியத்தை கொண்டு அதீத லாபத்தை ஈட்டுவதற்கு ஆட்சியாளர் கள் வழிவகை செய்துள்ளார்கள். ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் லட்சக்ணக்கான நிரந்தர பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கு மாறாக ஒப்பந்த முறை மற்றும் வெளி பணி முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

‘வணிகத்தை எளிமையாக்குவது’ என்ற மோடி அரசின் முழக்கம்,  தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதற்கு முதலாளிகளுக்கு எல்லையற்ற உரி மைகளைத் தருகிறது. இதன் வெளிப்பாடே தொழி லாளர் சட்டத் தொகுப்புகள். ‘சீர்திருத்தம்’ என்பது, ஏற்கனவே இருப்பதைக் காட்டிலும் கூடுதலான உரி மைகளையும், சட்ட பாதுகாப்பையும் அளிப்பதாக இருக்க வேண்டுமே தவிர, இருப்பதைப் பறிப்பதாக இருக்கக்கூடாது. ஆனால் மோடி அரசின் தொழி லாளர் சட்ட திருத்தங்கள் யாவும் முதலாளிகளுக்கு சாதகமாகவே அமைந்துள்ளன. பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, உற்பத்தி,சேவை, நிதி நிறுவனங்களில் உள்நாட்டு - அந்நிய நாட்டு முதலீட்டை அனுமதிப்பது என்ற மோடி அரசின் நடவடிக்கையால் தொழிலாளர் பணிப் பாதுகாப்பும், இட ஒதுக்கீடும் கேள்விக்குறியாக் கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்...

தமிழ்நாட்டிலும் அரசுத் துறைகளில் பல லட்சத் திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நிரந்தரப் பணியிடங்களிலும் ஒப்பந்த முறை, தொகுப்பூதியம் - மதிப்பூதியம் - சுய உத விக்குழு - தன்னார்வலர் என்ற பெயரில் லட்சக்க ணக்கான  தொழிலாளர்கள் அத்துக்கூலிகளாகவே வைக்கப்பட்டுள்ளனர்.  தற்போது மாநகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப்பணி, மேற்பார்வைப் பணி, ஓட்டுநர், காவலர், குடிநீர் விநியோகப் பணியாளர்கள், வரி வசூ லிக்கும் அலுவலர், ஆவண எழுத்தாளர், மின் பணியா ளர் பணியிடங்கள் உட்பட பல்வேறு பணியிடங்கள் முழுவதையும் அவுட்சோர்சிங் என்ற பெயரில் தனி யார்மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசா ணைகள் மூலம் மாநில அரசு மேற்கொண்டுள்ளது.   தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறு வனங்களில் பல லட்சக்கணக்கில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மாறாக  50 சதவிகித பணியிடங்களை தனியாரிடம் தரும் வகையில் அவுட் சோர்சிங் மூலம் எடுத்துக் கொள்ள அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணைகள் மூலம் இனி எதிர்காலத்தில் அரசுப் பணியிடங்கள் யாவும் நிரந்தரத்தன்மை யில்லாத பணியிடங்களாக மாறுவதோடு,  வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு என்ற சமூக நீதி மறுக்கப் படும் ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

மாநில அரசுத் துறைகளில்...

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த, தற்காலிக, தினக்கூலி, தொகுப்பூதியம்,மதிப்பூதியம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான  தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மின்சார வாரியத்தில் புகார் தெரிவிக்க மையப் படுத்தப்பட்ட கால்சென்டர் உருவாக்கப்பட்டு அதில் நூற்றுக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் நிய மனம் செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் அத்துக்கூலிகளாகவே உள்ளனர். டாஸ்மாக் நிறுவனத்தில் மாவட்ட மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களில் தற்காலிக அடிப்படையி லான ஒப்பந்த அதிகாரிகள் உள்ளனர். இது தவிர 20 ஆண்டுகளாக தொடர்ந்து கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தொகுப்பூதியத்திலேயே உள்ளனர். சிவில் சப்ளை நிறுவனத்தில் சுமைப்பணி, கணினி இயக்குதல் உள்ளிட்ட பணியிடங்களில் ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள் தினக்கூலியாகவே உள்ளனர்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு சொந்த மான இ-சேவை மையங்களில் ஆயிரக்கணக்கான டேட்டா எண்ட்ரி ஊழியர்கள் ஒப்பந்த முறையில் மிக குறைந்த ஊதியத்தில்  பணிபுரிந்து வருகின்றனர். கூட்டுறவு நூற்பாலைகளில் நிரந்தர தொழிலாளர்க ளைக் காட்டிலும் பன்மடங்கு தினக்கூலி தொழிலாளர் கள் உள்ளனர். சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தில் 3 ஆயிரத் திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். இதில் அடையாறு பகுதியில் நிரந்தர தொழிலாளர் 83, ஒப்பந்த தொழிலாளர் 424; அண்ணா நகர் பகுதியில் நிரந் தர தொழிலாளர் 73, ஒப்பந்த தொழிலாளர் 358.  தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸ் கார்ப்பரேசனில் நிரந்தர தொழிலாளர் 235, ஒப்பந்த தொழிலாளர் 754; தமிழ்நாடு பஞ்சாலைக்கழகத்தில் நிரந்தர தொழிலா ளர் 63, தினக்கூலி தொழிலாளர் 63 என்ற நிலை உள்ளது.

‘தன்னார்வலர்கள்’  என்ற பெயரில்...

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்து வப் பணிக்காக தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள், மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணி ஊழியர்கள் என சுகாதாரத்துறையில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஊழியர்களை அரசு தன்னார்வலர்களாக அறிவிக்கிறது.  இவர்க ளுக்கு வழங்கப்படும் ஊதியம் எந்த ஊதிய வகையி லும் சேராது. தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களில் நிரந்தரத் தொழிலாளர்களைக் காட்டிலும் ஒப்பந்த, தற்காலிக, மதிப்பூதியம், தொகுப் பூதியம், தினக்கூலி என்ற பெயரில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  2021 சட்ட பேரவை தேர்தல் அறிக்கையில் திமுக, 10 ஆண்டுகள் தொகுப்பூதியம் மதிப்பூதியத்தில் பணிபுரியும் ஊழி யர்கள் நிரந்தரப்படுத்தப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தது. அதை நிறைவேற்ற வேண்டும். ஒட்டுமொத்தத்தில் நிர்வாக செலவினங்கள் குறைப்பு என்ற பெயரில் தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு, சமூக பாதுகாப்பை கேள்விக்குறியாக்கக் கூடாது.

தனியார் துறையின் நிலைமை

அரசு நிறுவனங்களில் தொழிலாளர் நிலைமை இப்படியிருக்க, தனியார் துறையில் தொழிலாளர் நிலைமை படுமோசம். தொழில் வளர்ச்சி என்ற பெயரில் முதலீடு ஈர்ப்பு மாநாடுகள் நடத்தப்படுகின்றன. பல அந்நிய நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன. சிறப்பு பொரு ளாதார மண்டலங்கள், தொழிற்பேட்டைகளில் உற் பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் நிரந்தர தொழி லாளர்களைக் காட்டிலும் ஒப்பந்த தொழிலாளர் கள் பன்மடங்கு அதிகம். இதில் கணிசமானோர் வெளி மாநில தொழிலாளர்கள். உற்பத்தியில் நேரடியாக ஈடுபட வைக்கப்படும் இத்தொழிலாளர்களுக்கு அதிக நேர வேலை, குறைந்த அளவு கூலியே வழங்கப்படு கிறது. ஒரே தன்மையுள்ள பணிகளை செய்யும் தொழி லாளர்களுக்கிடையே சம்பளம் வித்தியாசம் கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு பெரும் நிறுவனங்க ளில் அமலாக்கப்படவில்லை. அமலாக்க வேண்டிய தொழிலாளர் துறையும்,  தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையும் அந்நிய நிறுவனங்களுக்குள் கால் வைக்காது. கடந்த ஆண்டு பல்லாயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையை மறித்த சம்பவமே வெளிநாட்டு நிறுவனங்க ளின் தொழிலாளர் விரோத அணுகுமுறையை வெளிப் படுத்தியது.

இன்று சிஐடியு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு, ‘முன்மாதிரி முதலாளியாக’ மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்திட வேண்டும். தொழிலாளருக்கு விரோதமான அரசாணைகளை திரும்பப்பெற வேண்டும். அமலாக்கப்பிரிவுகள் மூல மாக தனியார் துறையில் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தவும், சம வேலைக்கு சம ஊதியம் கிடைத்திவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி  பிப்ரவரி 7 (இன்று) நடைபெறும் ஆர்ப்பாட் டத்தில்  அணிதிரள்வோம்! தொழிலாளர் விரோத அர சாணைகளை திரும்பப்பெறச் செய்வோம்!

கட்டுரையாளர் : உதவி பொதுச்செயலாளர், 
சிஐடியு, தமிழ்நாடு மாநிலக்குழு