இளைய தலைமுறையின் எழுச்சி முழக்கம்
வேலை கிடைப்பதே பெரிய விஷயம், அதிலென்ன சமூ கப் பாதுகாப்புடன் கூடிய வேலை? இப்படி ஒரு கேள்வியை சிலர் எதிரொ லிப்பதாக உள்ளது. வேலைக்கு சேரும் போதே, வெளியேறும் தேதியும் சான்றிதழ் பார்த்து குறித்தால், அது ஓய்வு பெறும் வயது சார்ந்தது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பயன்படுத்தி பின் வெளியேற்றும் விதமாக, நாள் குறிக்கப்பட்டால், அது பிக்சட் டெர்ம் எம்ப்ளாய்மெண்ட். இன்று நவ தாராளமய கொள்கை அளித்திருக்கும் வேலை வாய்ப்பின் தன்மை, ‘பிக்சட் டெர்ம் எம்ப்ளாய் மெண்ட்’ என்ற வடிவில் உள்ளது. நிரந்தர வேலை இல்லை என்பதை தெளிவாக அரசும், தனியாரும் கூட்டாகச் சொல்கின்றனர்.
உழைப்புச் சக்திக்கு நியாய விலை எப்போது?
தக்காளி அதிகம் விளைந்தால், விலை படுமோசமாக சரியும். தக்காளிக்கு கிராக்கி அதிகம் என்றால், விலை ஏறுகிறது. இப்போது ஆனால், வீடுகள் அல்லது கார் போன்றவை மிக அதிகமாக உற்பத்தியாகி விற்பனைச் சந்தையில் காத்திருந்தாலும், விலை குறை வதில்லை. முதலாளி எதிர் பார்க்கும் விலைக் காக காத்திருக்கின்றார். ஏனென்றால் குறுகிய காலத்தில் கார் கெட்டுப் போகப் போவதில்லை. எனவே முதலாளியால், தனது உற்பத்திப் பொருளின் விலையை தீர்மானிக்கவும், அதற்கேற்ப விற்பனையை ஒத்தி வைக்கவும் முடிகிறது. ஆனால் விவசாயி அல்லது சிறு வணிகரால் அது முடிவதில்லை. அதேபோல் தான் வேலை இல்லா இளை ஞர் தான் விரும்பும் அல்லது தனது கல்வி தகுதிக்கான வேலை கிடைக்கும் வரை காத்திருக்க முடிவதில்லை. மாறாக ஏதாவது ஒரு வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக உழைப்புச் சந்தையில் பெரும் கூட்டம் இருப்பதால், தனது உழை ப்புச் சக்தியை மலிவான விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தொழிலாளி ஆளா கிறார். ஒரு வேளை, படித்து முடித்தவர் தான் விரும்பும் வேலைக்காக காத்திருக்க வசதி யாக வேலையில்லா கால நிவாரணம் கிடைக்கும் என்றால், கடும் போட்டி இருக்காது. அது மலிவு விலைக்கு உழைப்புச் சக்தியை விற்கும் கட்டாயச் சூழலை உருவாக்காது. இந்த பின்னணியில் தான் வேலை உரிமை அடிப்படை உரிமைக்கான சட்டமாக்கப்பட வேண்டும்; அப்படி சட்டமானால், வேலை கிடைக்கும் வரை நிவாரணம் கிடைப்பது உறுதியாகும். எனவேதான் இந்த கோரிக் கையை வலுவாக முன் வைக்க வேண்டி யுள்ளது.
வேலை இல்லா கால நிவாரணம் இன்றைய நிலை
சோசலிசக் கொள்கையை பின்பற்றும் நாடுகளின் எண்ணிக்கை, இரண்டாம் உலகப் போர் முடியும் போது அதிகரித்தது. சோசலிச நாடுகள் வேலை அல்லது நிவாரணம் என்பதை உத்தரவாதம் செய்தன. பல்வேறு சமூக பாதுகாப்பு கொள்கைகளையும் கொண்டிருந்தன. இதன் காரணமாக, முத லாளித்துவ நாடுகளுக்கு ஏற்பட்ட நிர்ப்பந் தத்தின் விளைவு, உலகின் பல நாடுகள் தங்க ளை, ‘நலத்திட்ட அரசுகள்’ (welfare state) என பிரகடனம் செய்யும் நிலை உருவானது. வேலை அல்லது வேலை இல்லாக் கால நிவா ரணம் என்ற கொள்கையை அவையும் அமலாக் கின. இன்றும் பல வளர்ந்த நாடுகளில் இந்த சமூகப் பாதுகாப்புக் கொள்கை அமலில் உள்ளது. ஆனால், சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட சில சோசலிச நாடுகள் பின்னடைவைச் சந்தித்த போது, முதலாளித்துவ நாடுகள் கூடுதல் லைசன்ஸ் வழங்கப்பட்டதைப் போல், அதி வேகமாக உழைப்புச் சுரண்டல் கொள்கைக ளை தீவிரப்படுத்தின. வேலையின்மையை பரா மரிப்பதும் போட்டியை அதிகப்படுத்துவதும் நவீன இயந்திரங்கள், தானியங்கி மய மாக்கல், ரோபோ மயமாக்கல் மூலம் வேலை வாய்ப்பை சுருக்குவதும் இன்று அதிகமாகி உள்ளது. இது சுரண்டல் மற்றும் மூலதனக் குவிப்பிற்கு பெரும் உதவியாக உள்ளது. குறிப்பாக வேலை இல்லாக் கால நிவாரணம் போன்றவை கைவிடப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் 2022 கணக்குப்படி, மஸ்ஸாசூஸெட்ஸ் மாநிலம் ஒரு வாரத்திற்கு 1015 டாலர் என அதிகபட்சமாகவும், மிஸ்ஸி ஸிப்பி மாநிலத்தில் 235 டாலர் என குறைந்த பட்சமாகவும் வேலை இல்லா கால நிவாரணம் காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கு வதாக, விக்கிபீடியா தெரிவிக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒரு நாளைக்கு 4.01 யூரோ என்ற முறையில், வயதுக்கு ஏற்ப வழங் கப்படுகிறது. குறைந்தபட்சம் லக்சம்பர்க் நாட்டில் 12 மாதம் துவங்கி ஸ்பெயினில் 72 மாதங்கள் வரையிலும் வேலை இல்லாக் கால நிவாரணம் வழங்கப்படுகிறது. பரவலான முறையில் 24 மாதங்கள் பின்பற்றப்படுகிறது. இது இளைஞர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. சீனாவில் 1585 யுவான் ஒரு மாதத்திற்கு நிவா ரணமாக வழங்கப்படுகிறது. வியட்நாமில் ஒரு மாத சம்பளத்தில் 60 சதம் வேலை இல்லா கால நிவாரணமாக அரசு வழங்குகிறது. வட கொரியாவில், 50 சதம் வழங்கப்படுகிறது. கியூ பாவில் உணவுப் பொருள்கள் முழுமையாக வழங்கும் ஏற்பாடு உள்ளது. இவை சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான உதார ணமாக உள்ளன.
இந்தியாவில் வேலை இல்லாக் கால நிவாரணம்
இந்தியாவில் பெரும்பாலான மக்களிடம் நிலப்பிரபுத்துவ சிந்தனையே நிலை நிறுத் தப்பட்டு உள்ளது. வேலை இல்லாக் கால நிவா ரணம் வழங்கினால் அது மனிதர்களை சோம் பேறி ஆக்கி விடாதா? அரசிடம் அவ்வளவு பணம் எங்கிருக்கிறது? - போன்ற பிற்போக்குத் தனமான கேள்விகள் முன்வைக்கப்படுவது நீடிக்கிறது. இது ஆட்சியாளர்களுக்கு சாதக மாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால், ஆட்சியாளர்களின் பிரதிநிதிகளே இந்த பிற்போக்குவாதத்தை பொது சமூகத்தில் தீவிரமாக முன் வைக்கின்றனர். இந்தியாவில் ஒன்றிய அரசு, வேலை இல்லாக் கால நிவாரணம் வழங்க முன் வராத காரணத்தால், சில மாநிலங்களே வேலை இல்லாக் கால நிவாரணம் வழங்குகின்றன. 2018 விவரத்தின் படி, திரிபுராவில் ரூ.1000 வழங்கப்பட்டது. ஹரியானா மாநிலத்தில் ரூ.1000 முதல் ரூ.2000 வரை வழங்கப்படு கிறது. தமிழ்நாட்டில் ரூ.350 துவங்கி ரூ.450 வழங்கப்படுகிறது. இந்த குறைந்தபட்ச தொ கைக்காக, ஏராளமான பிரச்சார இயக்கங்க ளும், போராட்டங்களும் நடத்தப்பட்டன. கேரளாவில் கிராமப்புற வேலை உறுதிச் சட்டம் அடிப்படையில், வருடத்திற்கு சராசரி யாக 62 நாட்கள் ஒரு நபருக்கு வேலை வழங்கப்பட்டு, தினமும் ரூ.310 சம்பளம் வழங்கப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் ரூ.204, குஜராத்தில் ரூ.239 என்பதாக உள்ளது; இந்த மாநிலங்கள் வேலை நாட்கள் குறைவாக வழங்குகின்றன. இதை 200 நாட்களாகவும், ரூ.600 சம்பளமா கவும் அதிகரிப்பதன் மூலமே வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியா முன்னேற முடியும்.
இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தால் 2004-ல் ஐமுகூ அரசு கொண்டு வந்த கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை அமலாக்குவ தற்கான நிதியை இன்றைய பாஜக ஆட்சி வெட்டிச் சுருக்கி உள்ளது. இதன் விளைவாக சராசரியாக 42 வேலை நாட்களாக குறைந்துள் ளது. பாஜக ஆட்சி சமூக பாதுகாப்பு திட்டங்க ளை அழித்து வருகிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். அய்யங்காளி நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் தனியாக கேரளாவில் செயல்படுத்தப் படுகிறது. இதில் ரூ.331 தினக்கூலி அமலாகிறது. இதை தமிழ்நாடும் அமலாக்க வேண்டும். இதன்மூலம் கல்வித் தகுதி குறைவானவர்க ளுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அதேநேரம், தமிழ்நாட்டிலும், வேலை இல்லாக் கால நிவாரணத் தொகையை அதி கப்படுத்த வேண்டும்.
நிவாரணத்தை விட காண்ட்ராக்ட் பரவாயில்லையா?
வேலை இல்லாக் கால நிவாரணத்தை விடவும், காண்ட்ராக்ட் அல்லது அவுட்சோர்ஸ் மூலமான வேலை வாய்ப்பை அரசு மற்றும் தனி யார் நிறுவனங்கள் வழங்குகின்றன. அரசின் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கை இல்லை என்பதாலேயே இளைஞர்கள் இந்த வேலைத் திட்டத்திற்குள் தள்ளப்படுகின்றனர். சமூகப் பாதுகாப்பிற்கு மாற்றாக காண்ட்ராக்ட் வேலை வாய்ப்பு இருக்க முடியாது. அது தனியார் கொள்ளை லாபத்திற்கு மட்டுமே வழி வகுக்கும். சமூக பாதுகாப்பு திட்டங்கள் இல்லாததன் காரணமாக, தமிழ்நாடு உள்பட இந்தியா முழு வதும் இளைஞர்கள் ஏதாவது ஒரு வேலைக்குச் செல்லும் நிலை, வரம்பற்ற வேலைநேரம், குறைந்தபட்ச ஊதியச் சட்டம் பின்பற்றப் படாதது போன்றவை காரணமாக, ரத்த அழுத்தம், உடல் சோர்வு, சர்க்கரை நோய், மன அழுத்தம் போன்ற நோய்களுக்கு இளைஞர்கள் ஆட்படுவதை காணமுடிகிறது. இது சரியான திசையில் இந்திய மனிதவள குறியீடு பயணிப்பதற்கு மிகப் பெரிய தடை என்பதை அரசுகள் உணர வேண்டும்.
சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம்
கடந்த காலங்களில், வேலையின்மைக்கு எதிரான நடவடிக்கைக் குழு என்ற பெயரில், வேலையின்மையை எதிர்த்த கூட்டு பிரச் சாரம் - போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. இன்று சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைக் கான இயக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் உள்ள பல்வேறு வெகுமக்கள் அமைப்பு கள், கூட்டாக முன்னெடுக்கும் பிரச்சாரமும், போராட்டங்களும் ஆளும் அரசுகளை நிர்ப் பந்திப்பதாக மாறும் வாய்ப்பு உள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில், ஆகஸ்ட் 1 அன்று நடைபெறும் சிறப்பு மாநாடு தமிழ்ச் சமூகத்தின் இளம் தலைமுறைக்கு கட்டியம் கூறும் வகையில் எழுச்சி நடை போட அழைக்கிறது.