வாச்சாத்தியில் அரங்கேற் றப்பட்ட கொடிய சம்ப வத்திற்கு ஒரு சில மாதங்க ளுக்கு முன்பு ஆளும் கட்சி அதிமுக எம்.எல்.ஏ, வனத்துறையினர் மற்றும் நாமக்கல் மஸ்தான், சந்தனக் கடத்தல் கும்பல், இவர்க ளெல்லாம் தர்மபுரி மாவட்ட வன அலுவலர் (டி.எப்.ஓ) முன்னிலையில் வீட்டிற்கு ஒரு சந்தன மரம் என 40,50 சந்தனமரம் வெட்டி வரவேண்டு மென வாய்வழி உத்தரவிடுகின்றனர். மரம் வெட்டிக் கொண்டுவந்து 3,4 லாரிகளில் ஏற்றப்படுகிறது. இந்த சந்தனக் கட்டைகளை ஏற்றிக் கொண்டு செல்ல லாரிகள் நாமக்கல் மஸ்தானுக்கும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ சிங்கா ரத்திற்கும், மிக முக்கிய அரசியல் பிரமுக ருக்கு சென்னைக்கும், இதோடு வனத்துறைக் கும் சேர்த்து பங்கு பிரிக்கப்பட்டிருக்கிறது.
வனத்துறையினர் வந்ததன் காரணம்
வனத்துறைக்கு சேர வேண்டிய பங்கும், சந்தனக் கட்டையும் முழுமையாக கிடைக்காத தினால் தான் வனத்துறையை சேர்ந்த கும்பல், ஓரிரு மாதங்கள் கழித்து சித்தேரி கலசப்பாடி வழியாக வந்து எத்தனை மரங்கள் வெட்டப் பட்டது, அதில் யார் யார் திருடியது என்று உறுதி செய்யத்தான் மாவட்ட வன அலுவலர் (டி.எப்.ஓ) நாதன் தலைமையில் வாச்சாத்தி க்கு வந்தது.. இச்சம்பவத்திற்குப் பிறகு தான் வாச்சாத்தி மக்களே இவ்வளவு விலையுயர்ந்த பொருளா சந்தன மரம் என்று வியப்பாகியுள்ளனர். வெளி யூர் ஆட்கள் சித்தேரி மலை, கலசப்பாடி பகுதி களில் திருப்பட்ட கட்டைகள், வனத்துறை யினர் அனுமதியுடன் வெட்டிக் கடத்தப்பட்ட வைதான் என்று அன்று பரவலாக பேசப் பட்டது. அதே காலத்தில், பாப்பிரெட்டிபட்டி வனச்சரகர் சிவக்குமார் வாச்சாத்தி மல்லங் குட்டை மண் சாலை வழியாக நெம்பர் பிளேட் போடாத டிப்பர் லாரியில் மப்டியில் சந்தனக் கட்டையை கடத்தி வந்ததை வாச்சாத்தி மக்களே கையும் களவுமாகப் பிடித்து வட்டாட்சி யரிடம் ஒப்படைத்துள்ளனர். சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக சித்தேரி மலையிலோ, ஜவ்வாது மலையிலோ வளர்ந்த மிக உயர்ந்த சந்தன மரங்களை பழங்குடி மலைவாழ் மக்கள் எவருமே வெட்டியது கிடை யாது. அவர்களுக்கு அதன் விலை மதிப்பும் தெரியாது. வனத்துறையினர் இந்த சந்தன மரங்களின் விலைமதிப்பை தெரிந்து, அவர்களால் தான் சந்தன மரங்கள் வெட்டப் பட்டு கடத்தப்பட்டது. அதற்கு அன்றைய ஆளும் அதிமுக ஆட்சியாளர்கள், அமைச் சர், எம்.எல்.ஏக்கள் தான் உடந்தை என்பதே உண்மை.
உயிரையே பணயம் வைத்த போராட்டம்
வாச்சாத்தி பயங்கரம் குறித்து சிபிஐ விசார ணைக்கு உத்தரவிடக்கோரி 1994ஆம் ஆண்டில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் அரூரில் சாகும் வரை உண்ணா விரதத்தை மேற்கொண்டார். 4 நாட்களாக உயிரையே பணயம் வைத்து கோரிக்கை நிறை வேறும் வரை போராட்டத்தை நடத்தினார். உடல்நலம் சீரற்றுப் போகும் நிலையில் அவரை கைது செய்து தருமபுரி மருத்துவ மனையில் சிகிச்சை அளித்தனர். 1995ஆம் வருடம் சிபிஐ வசம் வாச்சாத்தி வழக்கு ஒப்படைக்கப்பட்டது. இதற்கு முன்பாக திருமதி பாமதி ஐ.ஏ.எஸ், ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் சென்று முதல்கட்ட விசாரணை செய்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை அளித்தார். அன்றைய சிபிஐ, துணை காவல் கண்கா ணிப்பாளர் எஸ்.ஜெகநாதன், வழக்கறிஞர் எம்.ஜெயபால் ஆகியோர் 19 ஆண்டு காலத்தில் 16 ஆண்டுகாலமாக வழக்கை நடத்தி னர். 70க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்த னர். வாக்குமூலம் அளித்தனர்.
1992 ஆம் ஆண்டு நடந்த கொடூரச் சம்ப வத்திற்கு 2011ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 29 ஆம் தேதியன்று தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம், வாச்சாத்தி வழக்கில் அன்றைக்கு உயிருடன் இருந்த அனைத்து குற்றவாளிக ளுக்கும் தண்டனையை வழங்கியது. பாலி யல் வல்லுறவில் ஈடுபட்டவர்கள், சேலம் மத்திய சிறையில் அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்டு, அங்கு10 வருடங்கள் கழித்தும் சரியாகவே பெண்கள் அடையாளம் காண் பித்தனர். பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட 17 பேர் களை அன்றைய தினமே கைது செய்து வேலூர் சிறைக்கு கொண்டு சென்றனர். அதன் பின்னர் இவ்வழக்கின் குற்றவாளிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் 12 ஆண்டு காலமாக மேல்முறையீட்டு மனு விசாரிக்கப் பட்டது. கடந்த 2023 மார்ச் 4 அன்று இவ்வழக்கி னை கூர்ந்து விசாரித்து வந்து நீதியரசர் பி.வேல்முருகன் அவர்கள், வாச்சாத்தி கிரா மத்தை பார்த்தே ஆகவேண்டுமென்று நேடி யாக வருகை புரிந்தார். அவருடன் தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சியர் கே.சாந்தி ஐ.ஏ.எஸ், மாவட்ட காவல் காண்காணிப்பாளர் டேவிட் ஜேசுபாதம் ஐ.பி.எஸ் ஆகியோர் வாச்சாத்தி, கலசப்பாடி கிராமங்களைப் பார்வையிட்டு விசாரித்து வந்தனர். இறுதியாக 2023 செப்டம்பர் 29 ஆம் தேதி யன்று நீதியரசர் பி.வேல்முருகன் அவர்கள் குற்றம்சாட்டப்பட்ட 215 பேருக்கும் தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய அதே தண்ட னையையே வழங்கினார். பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும், தலா 10 லட்சம் ரூபாயும், குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டுமென்ற தீர்ப்பை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் முழுமனதாக வரவேற்று பாராட்டுகிறோம்.
உடனிருந்து உதவியவர்கள்
பழங்குடி மக்களை வெறும் கிள்ளுக்கீரை யாக நினைத்து, இவர்களை எது வேண்டு மானாலும் செய்யலாம். வீடுகளை உடைக்க லாம். பெண்களை வல்லுறவு செய்யலாம். அம்மக்களை ஊரைவிட்டே விரட்டி அடித்துவிட லாம். குடிநீர், உணவுப் பொருட்களை நாசப் படுத்திடலாம் என்று அதிகார வர்க்கம் செய்கிற காட்டுமிராண்டித்தனமான இத்த கைய செயல்களுக்கு இந்த வாச்சாத்தி தீர்ப்பு ஒரு பாடமாக அமையட்டும். இந்தத் தீர்ப்பு தமிழ்நாடு முழுவதுமுள்ள பழங்குடி மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 30 ஆண்டுகாலம் ஆனாலும் நீண்டநெடிய போராட்டத்தின் மூலம் நீதிபெற்று தரும் இயக்கமாக செங்கொடியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மலைவாழ் மக்கள் சங்கமும் இருக்கிறது என்பதை மீண்டும் பறைசாட்டியிருக்கிறது. வாச்சாத்தி வழக்கில் வாதாடிய உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் ஆர்.வைகை, என்.ஜி.ஆர் பிரசாத், சம்கிராஜ், இளங்கோ, சுப்புராம் இவர்களால் தான் இவ்வழக்கிற்கு முதல் வெற்றி கிடைத்தது.
அதே போல் சிபிஐ அதிகாரிகள், டிஎஸ்பி உட்பட இதர மற்றும் அதன் வழக்கறிஞர் ஜெயபாலன் சாட்சிகளாக வந்து உதவியி ருக்கிறார்கள். பாமதி ஐஏஎஸ், முன்னாள் எம்.எல்.ஏ, எம்.அண்ணாமலை, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்கள் மைதிலி சிவராமன், பாப்பா உமாநாத், பங்கஜம், பூபதி, அரூர் தோழர்கள் கண்ணகி, கஸ்தூரி, இந்திராணி, கண்ணாயிரம் போன்ற தோழர்கள் எல்லாம் இத்தீர்ப்பு பெற அந்தக் காலத்திலேயே உடனிருந்து உதவிய வர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்று பட்ட தருமபுரி மாவட்டச் செயலாளர் கே.எம். ஹரிபட், கே.சி.கிருஷ்ணன், ஜி.சேகர், சேது மாதவன், எஸ்.எம்.கண்ணன், ஆறுமுகம், அஜாய் கோஷ் இவர்களுடன், இன்றைக்கும் தோழர்கள் களப்பணியாக உழைத்ததும் வாச்சாத்தி மக்கள் கடைசி வரை நம்முடன் பிடிப்புடன் நின்றதும் இந்த வெற்றிக்கு கிடைத்த பெருமையாகும்.