articles

img

சமரசமில்லா தத்துவப் போராளி தோழர் எம்.பசவபுன்னையா - பிரகாஷ் காரத்

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சி க்கு பல முனைகளிலும் பங்களிப்பினைச் செய்த மகத்தான தலைவர் தோழர் எம்.பசவ புன்னையா. அவரது காலத்திலிருந்த பல தலைவர் கள், காங்கிரஸ் கட்சியிலிருந்தோ அல்லது காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலிருந்தோ கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தவர்கள். ஆனால், தோழர் எம். பசவபுன்னையா, 1934இல் அவர் மாணவர் இயக்கப் போராளியாக இருந்தபோதே நேரடியாக கம்யூனிஸ்ட் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டார். ‘எம்.பி.’ என்று அனைவராலும் அன்புடன் அழைக் கப்பட்ட தோழர் எம். பசவபுன்னையா, ஆந்திரப் பிரதே சத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியிலும், வீரஞ்செறிந்த தெலுங்கானா விவசாயிகள் ஆயுதப் புரட்சியை தலைமையேற்று நடத்தியதிலும் மிக முக்கி யமான பங்கினை வகித்தார். அதன்பின்னர் கட்சிக்குள் நடைபெற்ற உள்கட்சிப் போராட்டத்திலும், தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானதிலும் அவர் மிக முக்கிய பங்களிப்பினைச் செலுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த நிலைப்பாட்டை மிகக்கூர்மையாகச் செதுக்கியதிலும் அவரது பங்களிப்பு தன்னிகரற்றதாகும்.

1920களில் உருவான இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம், பொதுவாக ‘கம்யூனிஸ்ட் அகிலம் (comintern)’ அளித்த வழிகாட்டுதல் அடிப்படை யிலும் பின்னர் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி  (சிபிஎஸ்யு) அளித்த வழிகாட்டுதலின் அடிப்படையிலும் செயல்பட்டு வந்தது. சோவியத் கட்சியையே தன்னு டைய தத்துவார்த்த நிலைப்பாட்டிற்குப் பெரிதும் சார்ந்திருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப காலக் கட்டத்தில் இது இயல்பானதே. எனினும், பின்னர் இது தொடர்ந்து மார்க்சியப் புரிந்துணர்வை படிப் படியாக இந்தியாவின் நிலைமைகளுக்குப் பொருத்து வதில் ஒரு எந்திரகதியான தன்மையோடு செயல்பட வும் பின்னர் கட்சிக்குள் திருத்தல்வாத நிலையை நடைமுறைப்படுத்துவதற்கும் இட்டுச் சென்றது.

உட்கட்சிப் போராட்டம்

நாடு அரசியல் சுதந்திரம் பெற்றபின் இந்தியப் புரட்சிக்கான பாதை குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய நீண்ட காலத்திட்டம் (strategy) மற்றும் நடை முறை உத்திகள் (tactics) குறித்தும்  கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தீவிர விவாதம் நடந்தது. இவ்வாறு கட்சிக்குள் நடைபெற்ற போராட்டமானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமாக வழி வகுத்தது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பது, கட்சிக்குள் நடைபெற்ற உட்கட்சிப் போராட்டத்தின் விளைவே யாகும். இப்போராட்டத்தை நடத்திய முன்னணித் தலைவர்களில் தோழர் எம். பசவபுன்னையா முக்கிய மானவராவார். உட்கட்சிப் போராட்டம் நடைபெற்ற சமயங்களில் உருவான கட்சி ஆவணங்களை உன் னிப்பாகப் பரிசீலித்தோமானால், தோழர்கள் பி.சுந்த ரய்யா, ஹர்கிசன் சிங் சுர்ஜித், பி.டி.ரணதிவே, பி. ராம மூர்த்தி முதலானவர்களுடன் இணைந்து நின்று தோழர் எம்.பசவபுன்னையாவும் உட்கட்சிப் போராட்டங் களை, உறுதியுடன் நடத்தியிருப்பதைக் காண முடியும்.  கட்சியின் ஒரு பிரிவினர் வர்க்க சமரசப் பாதையை (class collaborationist line)  உயர்த்திப்பிடித்ததை இவர்கள் முழுமையாக நிராகரித்தனர். அந்த சமயத்தில் வர்க்க சமரசப் பாதையை மேற்கொண்டவர்களை சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது.

1960களின் முற்பகுதியில், சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் மிகவும் கூர்மை யாகவும் கசப்பாகவும் வெளிப்பட்டன. உலகில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளில் மிகப்பெரிய கட்சிகளாக விளங்கிய இவ்விரு கட்சிகளுக்கும் இடையிலான இந்த முரண்பாடு இந்தியாவிலும் தத்துவார்த்த மோதலை ஏற்படுத்தியது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் கட்சித் திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும், புரட்சிக்கான நீண்ட காலத்திட்டம் (strat egy) மற்றும் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை  உத்திகள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது  குறித்துமான போராட்டமாக பின்னிப்பிணைந்து காணப்பட்டது. இந்தியாவில் உள்ள துல்லியமான நிலைமைக ளுடன் மார்க்சிய- லெனினிய சித்தாந்தத்தைச் சரியா கப் பொருத்தி,  மிகச் சரியான முறையில் ஒரு கம்யூ னிஸ்ட் கட்சியைக் கட்டுவதே நம் நாட்டின் தேவை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். அந்த அடிப்ப டையில் நீண்ட நெடிய தத்துவார்த்தப் போராட்டத்தின் ஊடாகத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மலர்ந்தது. தோழர் எம். பசவபுன்னையா இது தொடர் பாக கட்சிக்குள் நடைபெற்ற  உட்கட்சிப் போராட்டங் களிலும், அதன்பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தத்துவார்த்த ரீதியிலான உலகக் கண்ணோட் டத்தை உருவாக்கியதிலும் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பினைச் செய்துள்ளார்.

சிபிஐ(எம்) கட்சித் திட்டம்

கட்சியின் நீண்டகாலத் திட்டம் (strategy) குறித்து சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற உட் கட்சிப் போராட்டத்தின் விளைவாக 1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதே போன்று இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியும் தனித்தனியே நடத்திய தங்கள் அகில இந்திய மாநாடுகளில் தனித்தனியாக கட்சித் திட்டங்க ளை வெளியிட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 7ஆவது அகில இந்திய மாநாடு 1964 அக்டோபர் 31- நவம்பர் 7 தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெற்றது. வரைவு கட்சித் திட்டம் தோழர் எம்.பசவபுன்னையா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. கட்சித் திட்டத் தின் சாராம்சங்களை விளக்கி அவர் உரையாற்றினார். இந்திய சமூகத்தின் வர்க்கங்களை ஆய்வு செய்தும்,  புரட்சியின் கட்டம் குறித்தும், இந்திய அரசின் வர்க்கத் தன்மை குறித்தும், தொழிலாளி வர்க்கத்தின் தலைமை யில்  மக்கள் ஜனநாயகப் புரட்சியை நடத்தும்போது அது யார் யாரை தன் வர்க்கக் கூட்டாளிகளாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் அவர் தெளிவு படுத்தினார். எந்தெந்த அம்சங்களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வேறுபடுகிறது  என்பதையும் தெளிவுபடுத்தினார். இந்திய அரசு என்பது பெரு முதலாளிகளின் தலைமை யிலான முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவக் கூட்டணி அரசு என்பதையும்,  மக்கள் ஜனநாயக முன்னணியின் தலைமைப் பாத்திரம் தொழிலாளி வர்க்கத்திடம்தான் இருந்திட வேண்டும் என்பதையும், மாறாக அது தேசிய முதலாளிகளுடன் கூட்டாக இருக்கக்கூடாது என்பதை யும், தற்போதுள்ள முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசு அந்நிய நிதி மூலதனத்துடன் வேகவேகமாக கைகோர்த்துக் கொண்டிருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்தினார்.

இடது அதிதீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபின் மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே, நக்சலிசம் வடி வத்தில் உருவான இடது அதிதீவிரவாத (Left sectarian trend) சவாலையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதில் பெரும் பாதிப்பு ஆந்திராவில் ஏற்பட்டது. அந்த சமயத்தில் சீனாவில் ‘கலாச்சாரப் புரட்சி’ நடந்து கொண்டிருந்தது. அப்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி யால் ஆயுதப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப் பட்டதை அடுத்து ஆந்திராவில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர்களும் தலைவர்களும் பெருமளவில் ஈர்க்கப்பட்டார்கள்.  இவ்வாறு கட்சிக்குள் ஏற்பட்ட இடது அதிதீவிரவாத திரிபுக்கு (ultra-Left deviation) எதிரான போராட்டத்தையும் தோழர் எம்.பசவபுன்னையா தீவிரமாக நடத்தினார். இந்தப் பின்னணியில் கட்சியின் சார்பில் 1968இல் பர்துவானில் தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான பிளீனம் (சிஐடியு மாநாடு) நடைபெற்றது. இதற்கு முன்னதாக ஆந்திராவில் மாநில அளவிலான பிளீனம் (சிறப்பு மாநாடு) நடைபெற்றது. இதில் இடது அதிதீவிரவாத திரிபுக்கு எதிரான போராட்டத்தை மிகச் சரியான முறை யில் பி.சுந்தரய்யாவுடன் இணைந்து நின்று எம். பசவ புன்னையா நடத்தினார். பின்னர் பர்துவானில் நடைபெற்ற பிளீனத்தின்போதும், ஆந்திராவிலிருந்து வந்திருந்த தலைவர்களில் ஒரு பிரிவினர் மேற் கொண்ட இடது அதிதீவிர நிலைப்பாட்டினை எதிர்த்து  பசவபுன்னையா முறியடித்தார்.பர்துவான் பிளீ னத்தில் தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீது நிறை வேற்றப்பட்ட தீர்மானமானது வலது திருத்தல்வாதம் (right revisionism) மற்றும் இடது அதிதீவிரவாதம் (left sectarianism) ஆகியவற்றிற்கு எதிராக மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட தத்துவார்த்த உட் கட்சிப் போராட்டத்திற்கு இன்றளவும் அடிப்படையாக இருந்து வருகிறது.

சர்வதேச அளவிலும்...

சர்வதேச அளவில் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்தல்வாதப் போக்கிற்கு எதிராகவும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட இடது அதிதீவிர வாத நிலைப்பாட்டிற்கு எதிராகவும் போராட்டத்தை நடத்துவதற்கான பொறுப்பை பசவபுன்னையா எடுத்துக்கொண்டார். சமூக முரண்பாடுகளைத் தவறாகப் புரிந்துகொண்டு, முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையே சமாதான முறையில் போட்டியை ஏற்படுத்தி, சோசலிசத்தை சமாதான மான முறையிலேயே அடைய முடியும் என்று சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட திருத்தல் வாத சிந்தனைகளை வேரறுக்கும் அறுவைக் கத்தியாக பசவபுன்னையா தன் பேனாவை உபயோகித்தார். அதேபோன்று கலாச்சாரப் புரட்சிக் காலத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட இடது அதிதீவிர நிலைப்பாடுகள் (Left sectarian positions) பல வற்றையும் பசவபுன்னையா கடுமையாக எதிர்த்தார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த “மூன்றுலகக் கோட்பாடு”, சோவியத் யூனியனை “சமூக ஏகாதிபத்திய வாதி” என்று சித்தரித்தது மற்றும் பல நாடுகளி லும் உள்ள நிலைகளின் தன்மைகளைப் புரிந்து கொள்ளாமல் அல்லது அதனைப்பற்றிக் கவலைப்படா மல் ஆயுதப் போராட்டத்திற்காக இடது அதிதீவிர அறைகூவல் (Left adventurist call) விடுத்தது ஆகியவை இதில் அடங்கும்.

இதேபோன்று, சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை  அன்றைக்கு மேற்கொண்ட தவறான கொள்கைக ளுக்கு எதிரான நிலையினை மேற்கொண்ட அதே சமயத்தில், சோவியத் எதிர்ப்பு அல்லது சீன எதிர்ப்பு  நிலைப்பாடுகளை மேற்கொள்ளாமல் இருப்பதிலும் பசவபுன்னையா மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார். இரு நாடுகளுமே மார்க்சிய- லெனினிய நிலைப்பாடுகளிலிருந்தும், சோசலிசத்தைக் கட்டு வதற்கான விஞ்ஞானப்பூர்வமான அணுகுமுறையிலி ருந்தும்  விலகிச் செல்வதை விமர்சித்த போதிலும், அடிப்படையில் அவை இரண்டும் சோசலிச நாடுகள் தான் என்பதிலும் மிக உறுதியாக இருந்தார். இந்தியா போன்ற புதிய சுதந்திர நாடுகள் தங்களு டைய வளர்ச்சிக்கு முதலாளித்துவமற்ற பாதையைப் பின்பற்றலாம் என்று கூறிய சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தத்தை (இதனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டிருந்தது) பசவபுன்னையா மிகவும் நாசூக்கானமுறையில் நிராக ரித்தார். அதேபோன்று இந்தியாவில் ஏற்பட்டுவந்த முத லாளித்துவ வளர்ச்சியின் குணம் குறித்து நக்சலைட்டு கள் முன்வைத்த வறட்டுத்தனமான புரிந்துணர்வையும் எதிர்த்துத் தவிடு பொடியாக்கினார். அவர் எழுதிய “ஆந்திரத் தோழர்களுக்கான கடிதம்” (இதனை பர்து வான் பிளீனத்திற்குப்பின்னர் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஏற்றுக்கொண்டது) இவற்றை நன்கு விளக்குகிறது.

இந்தியாவில் உள்ள முதலாளித்துவம் ‘தரகு முத லாளித்துவம்’ என்று நக்சலைட்டுகள் கூறிவந்ததையும் அவர் தவிடுபொடியாக்கினார். மற்ற  ஜனநாயகக் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி அமைத்துப் போராட வேண்டும் என்பதனை அவர் உயர்த்திப்பிடித்தார். அதேபோன்று நாடாளுமன்றத்தில் பங்கேற்பது மற்றும் 1967களில் கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அமைக்கப்பெற்ற இடதுசாரி கூட்டணி அரசாங்கங்களுக்கும் எதிரான இடது அதிதீவிரவாத நிலைப்பாட்டையும் (Left sectarian stand) அவர் கண்டித்தார். 1978இல் கட்சியின் ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ இதழின் ஆசிரியராக அவர் பொறுப்பேற்றபின் தத்து வார்த்தப் பிரச்சனைகள் தொடர்பாக தொடர்ந்து அதில் எழுதி வந்தார்.

தேசிய இனப் பிரச்சனை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் திட்டம் உருவாக் கப்பட்ட சமயத்தில் எழுந்த விவாதங்களின்போது இந்தியாவில் தேசிய இனப் பிரச்சனை குறித்து பின்னர் தீர்மானித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப் பட்டது. பல தேசிய இனங்களைக் கொண்ட இந்தியா  போன்றதொரு நாட்டில், பல்வேறு மொழி பேசுகின்ற தேசிய இனங்களுக்கான பங்கு என்ன? இது தொடர் பாக 1972இல் மதுரையில் நடைபெற்ற கட்சியின் அகில இந்திய மாநாட்டில் விவாதங்கள் நடைபெற்றன. “தேசிய இனப்பிரச்சனை மீதான குறிப்பு” இம்மாநாட் டில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அகில இந்திய மாநாட்டில் இதற்கான ஆவணத்தை எம்.பசவ புன்னையா அறிமுகப்படுத்தி உரைநிகழ்த்தினார். அப்போது அவர், ரஷ்யாவில் புரட்சிக்கு முன்பிருந்த நிலைக்கும், இந்தியாவில் நாம் அதிலிருந்து எப்படி யெல்லாம் வேறுபடுகிறோம் என்பதையும் மிகவும் தெளிவாக முன்வைத்தார்.  ஜார் ஆட்சி காலத்தில் அங்கிருந்த பல்வேறு தேசிய இனங்கள், வெள்ளை ரஷ்ய தேசிய இனத்தால் ஒடுக்குமுறைக்கு ஆளாகி இருந்தன. ஆனால் இந்தியா பல்வேறு தேசிய இனங்க ளைக் கொண்ட ஒரு நாடு. இங்கே எந்த தேசிய இனமும், மற்றொரு தேசிய இனத்தை அடக்கி ஆள வில்லை. இரண்டாவதாக, இந்தியாவின் ஆளும் வர்க்க மான முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்கம், பல்வேறு மொழிபேசும் பல்வேறு தேசிய இனங்களின் கூட்டுக் கலவையாகும். இந்த ஆளும் வர்க்கம்தான்  பல்வேறு மொழிபேசும் பல்வேறு தேசிய இன உழைக்கும் வர்க்கத்தினரையும் சுரண்டிக் கொண்டி ருக்கின்றன. அதன்மூலம் ஒரு பொதுவான வர்க்க ஒடுக்குமுறையை அவர்கள் மீது ஏவிக்கொண்டி ருக்கின்றன. எனவே, இந்தியாவில் தனித்துப் பிரிந்து செல்ல வேண்டுமென்கிற அறைகூவல் நாட்டில் உழைக்கும் மக்களுக்கு எதிராக நடந்துவரும் ஒடுக்கு முறைக்கு எதிராக உழைக்கும் மக்களை ஒன்று படுத்தி, போராட்டத்தில் இறக்குவதற்கு ஊறு விளை வித்திடும். எனவே, தொழிலாளர் வர்க்கக் கட்சியின் பணி என்பது முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க் கங்களின் பொதுவான வர்க்க சுரண்டலுக்கு எதிராக அனைத்து மொழி மற்றும் தேசிய இனங்களின் தொழி லாளர் வர்க்கம் மற்றும் விவசாயிகளின் ஒற்றுமையைக் கட்டுவதாகத்தான் இருக்க வேண்டும்” என விவரித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,   கட்சித் திட்டத்தில் முன்வைத்துள்ள பிரச்சனைகள் மீது தத்துவார்த்த ரீதியாக ஒரு நீண்ட நெடிய உள்கட்சிப் போராட் டத்தை மேற்கொண்டு உருவான கட்சியாகும். கட்சி உருவானபின்பு அதன்மீது சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் தவறாக மேற்கொண்ட நிலைப்பாடுகளையும் முறிய டித்து வளர்ந்த கட்சியாகும். இது எப்படி சாத்தியமா னது? கட்சி, இந்திய நிலைமைகளுக்கேற்ப மார்க்சிய- லெனினியத்தை மிகச் சரியான முறையில் பொருத்தி முன்னேறியதே இதற்குக் காரணமாகும். இவ்வாறு கட்சியை முன்னெடுத்துச் சென்றதில் தோழர் எம். பசவ புன்னையா அவர்களுக்கு மகத்தான பங்கு உண்டு.

இன்று (ஏப்.12) தோழர் எம்.பசவபுன்னையா நினைவு நாள்

(தீக்கதிர் கோப்புகளில் இருந்து),
 தொகுப்பு: ச.வீரமணி