நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, சென்ற வாரம் மூன்று நிகழ்வுப் போக்குகள் ஏற்பட்டிருக்கின்றன. ஒன்று, ஆக்கப்பூர்வமானது, மற்ற இரண்டும் எதிர்மறையானவைகளாகும். முதலாவது பிரச்சனை, மார்ச் 15க்குள் தேர்தல் ஆணையம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India)-வால் மார்ச் 12 அன்று சமர்ப்பிக்கப் பட்ட தேர்தல் பத்திரங்களின் விவரங்களை மார்ச் 15க்குள் தன்னுடைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கி றது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தேர்தல் பத்திரங் கள் தொடர்பான விவரங்களை சமர்ப்பித்திட ஜூன் 30 வரை சுமார் நான்கு மாத கால அவகாசம் கேட்டிருந்த சூழ்நிலையில் உச்சநீதிமன்றம் இவ்வாறு கட்டளை பிறப்பித்திருக்கிறது.
இந்துத்துவா- கார்ப்பரேட் ஊழல் கூட்டணி அம்பலம்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் வேண்டு கோளை உச்சநீதிமன்றம் உறுதியுடன் நிராகரித்தி ருக்கிறது. இறுதியாக இப்போது பாஜக-விற்கு நன்கொடை அளித்தவர்கள் யார், எவ்வளவு நன் கொடை அளித்திருக்கிறார்கள் என்கிற விவரங்களை மக்கள் அறிந்துகொள்ள இருக்கிறார்கள். பதி வேற்றம் செய்யப்படும் தரவினை ஆய்வு செய்வதன் மூலம், ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் அம லாக்கத்துறை போன்ற புலனாய்வு முகமைகள் சோத னைகள் மேற்கொண்டு, அதிலிருந்து தப்பிப்பதற்காக கைமாறாக பாஜக-விற்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகள் அளிக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள முடியும். நாட்டை ஆண்டு கொண்டி ருக்கும் இந்துத்துவா-கார்ப்பரேட் ஊழல் கூட்டணி எந்த அளவிற்கு மிகவும் மோசமான முறையில் ஆழ மாக வேரூன்றி இருந்திருக்கிறது என்பதை, தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், மக்கள் நன்கு மதிப்பிடு வதற்கு இது உதவிடும்.
முஸ்லிம் மக்கள் தவிர்ப்பு
இரண்டாவது நிகழ்ச்சிப்போக்கு, மோடி அரசாங் கம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ் அதற்கான விதிகளை அறிவித்திருக்கும் படுபிற்போக்கு நடவ டிக்கையாகும். 2019 டிசம்பரில் சட்டம் நிறைவேற்றப் பட்டது. அதன்பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்து, அதற்கான விதிகள், மக்களவைக்கான தேர்தல்கள் அறிவிக்கப்படுவதற்கு ஒருசில தினங்களுக்கு முன் பாக, இவ்வாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது. குடியுரி மைத் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் விதிகள் ஏற் படுத்தப்பட்டிருப்பதன் மூலம், நாட்டிலுள்ள பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் பிரிவினரில் முஸ்லிம் மக்க ளைத் தவிர்த்து இதர மதங்களைச் சேர்ந்த மக்கள் பிரிவி னர் மட்டும் விரைந்து குடியுரிமை பெற முடியும்.
அசாம் ஒப்பந்த கெடு நிர்ணயம் மீறல்
குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாட்டிலுள்ள அரச மைப்புச் சட்டத்திற்கும் மற்றும் பல்வேறு சட்டப் பிரிவு களுக்கும் எதிரானது என்பது தொடர்பாக மிகவும் ஆழ மான முறையில் இப்போது போக வேண்டியது அவசி யம் இல்லை. எனவே, இந்தச் சட்டத்தினை நடை முறைப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டிருக் கும் விதிகள் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும். இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் விதிகளில் மிக முக்கியமான பிரச்சனை என்னவெனில், 2014 டிசம்பர் 31 குடியுரிமையை நிர்ணயிப்பதற்கான கெடு தேதி என்று கூறப்பட்டிருக்கிறது. இது, அஸ்ஸாம் ஒப்பந் தத்தின் (Assam Accord) ஷரத்தின்படி 1971ஆம் ஆண்டு கெடு தேதியாக நிர்ணயித்ததை மீறுகிறது. இது, அஸ்ஸாம் மாநிலத்தில் மிகவும் விரிவான அளவில் எதிர்ப்புக்கு இட்டுச் சென்றிருக்கிறது.
மாநில உரிமை மறுப்பும் விசித்திரமான அம்சமும்
மேலும், குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் மீது முடிவு எடுக்கும் உரிமை மாநில அரசாங்கங்களுக்கு இல்லை என்று விதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மாநிலங்களில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் இதுதொடர்பான விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து முடிவெடுக்கும் அதிகாரத்திற்காக அமைக்கப் படும் அதிகாரம் பெற்ற குழு(empowered com mittee)வில் ஒன்றிய அரசாங்கத்தின் துறைகளைச் சார்ந்த பிரதிநிதிகளே நிரம்பி வழிவார்கள். மாநில அளவில் உள்ள குழுவிலும், மாவட்ட அளவில் உள்ள குழுக்களிலும் மாநில அரசின் சார்பில் ஒரேயொருவர்தான் அழைக்கப்பட்டிருப்பார். தங்கள் மாநிலத்தில் வசிப்போருக்கு குடியுரிமை வழங்குவதற் காக அடையாளம் காட்டப்படுவதற்கு அம்மாநில அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று கூறி அதனை ஓரங்கட்டும் விதத்தில் மிகவும் வெளிப்படை யாகவே இந்த விதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இதில் மிகவும் விசித்திரமான அம்சம் என்னவெனில், இந்தப் பணிக்கு அஞ்சல் துறை மற்றும் ரயில்வேயில் வேலைபார்க்கும் அலுவலர்களே பொருத்தமான வர்கள் என்று கூறப்பட்டிருப்பதாகும்.
உச்சநீதிமன்றத்தின் தாமதத்தால்...
குடியுரிமைத் திருத்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி அதற்கு எதிராக சுமார் 200 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. எப்படி தேர்தல் பத்திரங் கள் வழக்குகளிலும், அரசமைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளிலும் உச்சநீதிமன்றம் முடிவெடுக்காமல் தாமதித்ததோ, அதைப்போலவே, இதிலும் முடிவெடுக்கத் தவறியதன் காரணமாக, இப்போது மோடி அரசாங்கம் இவ்வாறு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, ஜனநாயக விரோத நடவடிக்கை களில் இறங்கிட வழியேற்படுத்திக் கொடுக்கப் பட்டிருக்கிறது.
தேர்தலில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் முடிவு
எதிர்மறையான மூன்றாவது நிகழ்ச்சிப்போக்கு என்பது, தலைமைத் தேர்தல் ஆணையம் சம்பந் தப்பட்டதாகும். இது வரவிருக்கும் மக்களவைக்கான தேர்தலை நடத்துவதில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். சென்ற வாரம், தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அருண் கோயல், திடீரென்று ராஜினாமா செய்ததைப் பார்த்தோம். அவர் ராஜினாமா செய்ததை அடுத்து, தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர், ராஜீவ் குமார், மட்டுமே தேர்தல் ஆணையத்தில் எஞ்சி இருக்கிறார். மூன்றாவது ஆணையர் ஒரு சில மாதங்க ளுக்கு முன்பு ஏற்கனவே ஓய்வுபெற்று விட்டார். 2022 நவம்பரில் அவசரகோலத்தில் அருண் கோயல் நியமனம் மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணை யர்களின் நியமனம் ஒரு நடுநிலை வகித்திடும் சுயேச் சையான குழுவால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்துக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் இவ்வாறு அருண் கோயல் நியமனம் செய்யப் பட்டதால் இதனை உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வாயம் கேள்விக்கு உட்படுத்தி இருந்தது.
உச்சநீதிமன்ற பரிந்துரையின் நோக்கம் முறியடிப்பு
அருண் கோயல் ராஜினாமா செய்ததற்கான உண்மையான காரணம் என்ன என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும், இது தேர்தல் ஆணையத்தில் இரு காலியிடங்களை ஏற்படுத்திட இட்டுச் சென்றிருக்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையரும், இதர தேர்தல் ஆணையர்களும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர் மற்றும் மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவால் பரிந்துரைக்கப்படுவதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில், உச்சநீதிமன்றத்தின் அமர்வாயம் தீர்ப்பளித்திருந்தது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவது அவசியம் என்று உச்சநீதிமன்றம் கருதியது. ஏனெனில் அப்போதுதான் அரசாங்கத்தின் தலையீடு எதுவுமின்றி, சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தல்களை தேர்தல் ஆணையம் நடத்த முடியும். எனினும், உச்சநீதிமன்றம் இது தொடர்பாக ஒரு தீர்வறிக்கையை (ruling) அளித்தபின்பு, மோடி அர சாங்கம் நாடாளுமன்றத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்களின் நியமனம் மற்றும் பணி நிலைமைகள் சம்பந்தமாக, ஒரு சட்டமுன்வடிவைக் கொண்டுவந்து நிறைவேற்றி யுள்ளது. இந்தச் சட்டமானது தேர்தல் ஆணையர்க ளைத் தேர்ந்தெடுக்கும் தேர்வுக் குழுவிலிருந்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை கழட்டிவிட்டு விட்டது. அதற்குப் பதிலாக, பிரதமரால் நியமனம் செய்யப்படும் ஓர் ஒன்றிய கேபினட் அமைச்சருக்கு இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு, மூன்று பேர் அடங்கிய தேர்தல் ஆணையர் குழுவில் அரசாங்கத் தின் பிரதிநிதிகள் பெரும்பான்மையாக இருப்பார்கள். இது, உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையின் நோக்கத் தையே முறியடித்துவிட்டது.
அரசுக்கு சேவை செய்யும் நிறுவனமாக மாற்றம்
மூவர் அடங்கிய குழு மார்ச் 14 அன்று இரு தேர்தல் ஆணையர்களைத் தெரிவு செய்வதற்காக சந்தித்தது. எதிர்பார்த்ததைப்போலவே, அரசாங்கத்தால் பரிந்து ரைக்கப்பட்ட இரு பெயர்கள், சுக்பீர் சிங் சாந்து மற்றும் ஞானேஷ் குமார் (Sukhbir Singh Sandhu மற்றும் Gyanesh Kumar) தேர்வு செய்யப்பட்டார்கள். இவர் கள், தலைமைத் தேர்தல் ஆணையருடன் இணைந்து நின்று, விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் மக்கள வைத் தேர்தலை நடத்திடுவார்கள். அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட நிறு வனங்களின் சுதந்திரம் படிப்படியாகத் திட்டமிட்டு அரிக்கப்பட்டுவருவதன் பின்னணியில், இப்போது தேர்தல் ஆணையமும் சுதந்திரமாகச் செயல்பட்டு வந்த நிலையிலிருந்து, அரசாங்கத்திற்கு சேவகம் செய் யும் நிறுவனமாக மாற்றப்பட்டிருப்பது, தீய அறிகுறி யேயாகும். இது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே ஓர் ஆழமான அச்சுறுத்தலை முன்னறிவித்திருக்கிறது.
மார்ச் 14, 2024,
தமிழில்: ச.வீரமணி