125 ஆவது மலர்க்கண்காட்சி கோலாகலமாக துவங்கியது
ஊட்டியில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, 125 ஆவது மலர் கண்காட்சி வெள்ளியன்று துவங் கியது. வரும், 23 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. மலர் கண்காட் சியை சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த மலர்க்கண்காட்சியில் சிறப் பம்சமாக, 80 ஆயிரம் கார்னேசன் மலர் களால் 40 அடி அகலம், 18 அடி உயரத் தில் பிரம்மாண்டமாக தேசிய பறவை யான மயில் அலங்காரம் பார்வையா ளர்களை கவர்ந்தது. மேலும், அழிந்து வரும் வன விலங்குகளை குறிக்கும் வகையில் 70 ஆயிரம் வண்ண மலர் களை மூலம் சிறுத்தை, டால்பின், பாண்டா கரடி, ஒற்றை கொம்பு காண் டாமிருகம், கடற்பசு போன்ற வடிவ மைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது. தவிர, தமிழ்நாட்டின் பல்வேறு சின்னங் களான தமிழ் மறவன், பட்டாம் பூச்சி, மரகதப்புறா, வரையாடு, பனை மரம், பரத நாட்டியம் மற்றும் செங்காந்தள் மலர் உள்ளிட்ட பல வண்ண மலர்கள் அலங்காரம் சுற்றுலா பயணிகளை கவ ரும் வகையில் அமைந்திருந்தது
ஊட்டி - 200
உதகை 200 ஆவது அகவையை கொண்டாடும் விதமாக ஊட்டி – 200, மாநில அரசின் திட்டமான மீண்டும் மஞ்சப்பை அனைவரும் பயன்படுத்த வும், உலக சர்வதேச சிறு தானிய ஆண்டையொட்டி விழிப்புணர்வு ஏற் படுத்தும் சின்னம், அங்கக வேளாண் மையை ஊக்குவிக்க ஆர்கானிக் செல்பி ஸ்பாட் போன்ற வடிவங்கள் 3 ஆயிரம் மலர்களை கொண்டு உரு வாக்கப்பட்டது. அரசு தாவரவியல் பூங்கா உரு வாகி 175 ஆவது ஆண்டை குறிக்கும் வகையில், 175 ஆவது உருவ வடிவ மைப்பு, 125 ஆவது மலர்க் காட்சி உருவ வடிவமைப்புகள் பார்வையா ளர்களை வரவேற்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது. மலர்க் காட்சி திடலில் 30 வகைகளில் ஹெலிக் கோனியா, கொய்மலர்கள், லில்லியம் மலர்களும் காட்சிப்படுத்தப்பட்டுள் ளது. மேலும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 35 ஆயி ரம் மலர் தொட்டிகள், 125 நாடுகளின் தேசிய மலர்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. கண்ணாடி மாளிகையில் உள்ள வண்ண அலங்கார தொட்டி கள் அனைவரையும் கவர்ந்தது.
ஜான் சலீவன் குடும்பத்தார் கௌரவிப்பு
ஊட்டி-200 நிறைவு விழாவில், லண் டனில் இருந்து ஜான் சலீவனின் எள்ளு பேரன், பேத்தி ஓரன் சலீவன், ஜோஸ்லீன் சலீவன் ஆகியோர் ஊட்டி வந்திருந்தனர். ஜான் சலீவனின் 5 ஆவது தலைமுறையான இவர்களை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச் சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப் பினர் ஆ.ராசா ஆகியோர் கௌரவித் தனர்.
உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் உதகையின் சிறப்புகள்
நீலகிரி எனும் மலையின் பெய ராலேயே இந்த மாவட்டமும் நீல கிரி மாவட்டம் என்று அழைக்கப் படுகிறது. இந்த மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தலங்கள் என்றால் அனைவருக்கும் தெரிந்திருப்பது ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்த கிரி ஆகிய பகுதிகளை அடையாளப் படுத்தி சொல்வர். ஆனால், உதக மண்டலத்தை பொருத்தவரையில், காணும் இட மெல்லாம் கண்களுக்கு விருந்தா கவே அமையும். தொட்டபெட்டா துவங்கி, கல்லட்டி, கூடலூர் வரையில் ஒவ்வொரு இடமும் உதக மண்ட லத்தில் தனிச்சிறப்பை பெற்றுள்ள தால், உலக சுற்றுலா பயணிகளை ஈர்த்த மாவட்டமாக உதக மண்ட லம் திகழ்கிறது.
தென்னிந்தியாவின் உயரமான சிகரம் தொட்டபெட்டா
உதகமண்டலத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளது என்றாலும், தொட்டபெட்டா தனிச்சிறப்பை பெற் றுள்ளது. தென்னிந்தியாவின் உயர மான சிகரம் தொட்டபெட்டா, இந்த சிகரம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 8 ஆயிரத்து 640 அடி உயரத்தில் அமைந்து உள்ளது. தொட்ட பெட்டா மலை சிகரத்திலிருந்து பார்த்தால் உதகை நகரம், குன்னூர், மைசூர் மற்றும் முதுமலை வனப்பகுதி உட் பட பல்வேறு இடங்களை கண்டு ரசிக்கலாம். இவற்றை பார்ப்பதற்கு தொட்ட பெட்டா மலைப் பகுதியில் தொலை நோக்கு கருவி அமைக் கப்பட்டுள்ளது.
ரோஜா பூங்கா
உதகை மத்திய பேருந்து நிலை யத்திலிருந்து சுமார் 2 கி.மீ.தொலை வில் அமைந்துள்ளது ரோஜாபூங்கா. 1995 ஆம் ஆண்டு 1919 ரகங்களில் 18 ஆயிரம் ரோஜா செடிகளுடன் இந்தப் பூங்கா துவக்கப்பட்டது. அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த பூங் காவிற்கு நூற்றாண்டு ரோஜா பூங்கா என்று பெயர் மாற்றப்பட்டது. தொடர்ந்து பூங்காவில் படிப்படியாக புதிய ரோஜா செடிகள் நடவு செய் யப்பட்டன. முதலில் 3 மாடங்களில் இருந்த ரோஜா பூங்கா தற்போது அனைத்து மாடங்களிலும் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. பூங்காவின் சிறப்பம்சமாக பச்சை நிறத்திலும் மலரக்கூடிய ரோஜா மலர் செடி உள்ளது. இந்த ரோஜா பூங்கா விற்கு கடந்த 2006 ஆம் ஆண்டு சர்வ தேச புகழ்மிக்க ரோஜா பூங்கா என்ற விருது வழங்கப்பட்டது என்பது குறிப் பிடத்தக்கது.
பைக்காரா படகு இல்லம்
உதகை படகு இல்லத்திற்கு அடுத்தபடியாக பைக்கார படகு இல்லத்திற்கு படகு சவாரி செய்ய பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்ற னர். உதகை மத்திய பேருந்து நிலை யத்திலிருந்து கூடலூர் செல்லும் சாலையில் 22 கி.மீ., தொலைவில் பைக்காரா படகு இல்லம் உள்ளது.
பைகாரா நீர் வீழ்ச்சி
உதகையிலிருந்து சுமார் 22 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது பைக் காரா நீர்வீழ்ச்சி. உதகை - கூடலூர் சாலையில் பைகாராவிலிருந்து அரை கி.மீ. நடந்து சென்றால் அழ கிய நீர்வீழ்ச்சியை அடையலாம், வனத்துறைக் கட்டுபாட்டில் இருக் கும் இந்த நீர்வீழ்ச்சிப் பகுதியில் ஆபத்துகளும் நிறைந்துள்ளது, நீர் சுழல் மற்றும் வழுக்குப் பாறைகள் இந்த நீர்வீழ்ச்சிப் பகுதியில் உள்ள தால் வனத்துறை சார்பில் பல கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.
சூசைட் பாய்ண்ட்
குன்னூரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது லேம்ஸ்ராக் காட்சி முனை. இது கடல் மட்டத்திலிருந்து 5536 அடி உயரம் கொண்டது. சூசைட் பாய்ண்ட் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியியிருந்து பார்த்தால் மலை ரயில் பாதையும் மற்றும் ஜில்லென்று வீசும் காற்றும், சுற்றுலா பயணி களை ஈர்க்கிறது. இதன் அருகாமையிலேயே டால்பின்நோஸ் என்று மற்றொரு காட்சி முனையும் உள்ளது, இந்த மலை டால்பின் மீன் மூக்கு போல தோற்றம் உள்ளதால், இதற்கு டால் பின் நோஸ் என்று பெயர் வந்துள் ளது.
குன்னூர் சிம்ஸ்பூங்கா
கடந்த 1874 இல் அப்போதைய உதகை மாவட்ட கண்காணிப்பாள ராக இருந்த ஜே.டி.சிம் என்ற ஆங்கி லேயரால் உருவாக்கப்பட்டது, சுமார் 30 ஏக்கர் பரப்பிலான இந்த பூங்கா கடல் மட்டத்தில் இருந்து 1798 மீட்டர் உயரத்தில் உள்ளது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில், 285 தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த 1,200 தாவர வகைகள் உள்ளன. குறிப்பாக, அரியவகை மரங்கள், மூலிகை செடி கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. இந்த சிம்பூங்காவில் ஆண்டு தோறும் கோடைக்காலங்களில் பழக்கண்காட்சியை கண்டு ரசிக்க ஆயிரக்கணக்கான பொது மக்கள் வந்து செல்வர் சிறுவர் பூங்காவில் விளையாடுவதிலும், இங்குள்ள இயற்கையான புல்வெளிகளை கண்டு ரசிப்பதிலும், சுற்றுலா பயணி கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
மழலையரை கவர்ந்த மலை ரயில்
மலைகளின் ராணிக்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்துள்ள இந்த முக்கிய சுற்றுலாத் தலங்களில், ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் மேல் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது, இங்குள்ள மலை மாவட்ட மக்களை மட்டுமல்லாமல், சுற்றுலா தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக் கானோரின் வியாபாரிகளின் வாழ்வா தாரத்தை பாதுகாத்து வருகிறது. நீலகிரி மலை ரயில் பாதை பணி 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கம்பெனிக்கு ராபர்ட்மில்லர் என்பவர் தலைவராக செயல்பட்டார். அப்போது ரூ.25 லட்சம் முதலீடு செய்யப்பட்டு . 1891 ஆம் ஆண்டு அப் போதைய சென்னை கவர்னர் லார்டு வென்லாப் என்பவர் மலைப் பாதையை அமைக்க அனுமதி அளித் தார். இதனைத்தொடர்ந்து, மேட்டுப் பாளையம் முதல் குன்னூர் வரை யிலான 27 கி.மீ மலைரயில் பாதை அமைக்கும் பணி 1899 இல் முடிக் கப்பட்டது. இதில், மொத்தம் 212 வளை களும், 16 குகைகளும், 31 பெரிய பாலங்களும், 219 சிறிய பாலங்களும் உள்ளன. கல்லார் முதல் குன்னூர் வரை உள்ள 27 கிலோ மீட்டர் மலைப் பாதையை பல் சக்கரம் அமைத்து, அதன் மூலம் ரயில் தண்டவாளத்தை அமைத்துள்ளனர், மலைப் பாதை யில் ரயில் தண்டவாளம் விட்டு விலகா மல் இருக்க உதவும் வகையில் இந்த பல் சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட மலைரயிலுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்கா வில் டர்பன் நகரில் பாரம்பரிய சின்ன மான யுனஸ்கோ அந்தஸ்து வழங்கப் பட்டது.
முதுமலை
மேலும் முதுமலை தேசிய பூங்கா, யானைகள் புத்துணர்வு முகாம், புலிகள் காப்பகம் ஆகியவை நீலகிரி யில் மேலும் பார்க்க வேண்டிய சுற்று லாத் தலங்களாகும். வேன் ட்டிரக்கிங் மூலம் வனப்பகுதியை சுற்றிப் பார்க்க வனத்துறையினர் ஏற்பாடு செய்துள் ளனர். இந்த டிரக்கிங் செல்லும் பய ணிகள் வனவிலங்குகளை அருகா மையிலே கண்டு களிப்புறுகின்றனர்.