தஞ்சாவூர் மாவட்டம் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிறுவனம் விவசாயிகள் பெயரில் வங்கி களில் 140 கோடி ரூபாய் கடன் வாங்கி, அப் பணத்தை ஆலை நிர்வாகமே எடுத்துக் கொண்டது. விவசாயிகள் பெயரில் வாங்கிய கடனை கணக்கில் காட்டாமல், தனது இரண்டு சர்க்கரை ஆலைகளை யும் KALS Distilleries Pvt Ltd என்ற நிறுவ னத்திற்கு விற்று விட்டது. ஆலையை விற்ற நிறுவனமும் வாங்கிய நிறுவனமும் இந்த கடன் தொகைக்கு பொறுப்பேற்க மறுக்கின்றன. - இதன் விளைவு, விவசாயிகள் பெரும் துயரில் தள்ளப்பட்டுள்ளார்கள். திருமண்டகுடி ஆரூரான் சர்க்கரை ஆலை, சித்தூர் ஆரூரான் சர்க்கரை ஆலை ஆகிய இரண்டு ஆலைக ளின் பெயரில் அந்நிர்வாகம் வங்கிகளில் ஏற்கெனவே ரூ.1454.58 கோடி கடன் வாங்கியிருந்தது. வங்கிகளுக்கு தர வேண்டிய கடனில் 85 கோடி ரூபாயை ஐந்து ஆண்டு களில் ஏழு தவணைகளாக செலுத்த வேண்டும் என, தேசிய கம்பெனிச் சட்டங்கள் தீர்ப்பாயத்தின் உத்தரவைப் பெற்று, வங்கிக் கடன்களில்1369.58 கோடி ரூபாயை தள்ளுபடியும் பெற்றுக் கொண்டது இந்த நிர்வாகம். இவ்வளவு கடனை ராம் தியாகராஜரின் ஆரூரான் சர்க்கரை ஆலை நிறுவனத்திற்கு எப்படி கொடுத்தார் கள், எத்தனை ஆண்டுகளாக கொடுத்தார்கள், ஆலை துவங்கியது முதல் சம்பாதித்த பணம் எல்லாம் எங்கே கொண்டு சென்றார்கள்... என்ற எந்தக் கேள்விக்கும் விடை இல்லை.
வங்கிகளை ஏமாற்றியது மட்டுமல்ல; விவசாயிக ளுக்கு தர வேண்டிய கரும்பு பண பாக்கி 78.48 கோடி ரூபாயையும் இந்த நிர்வாகத்தினர் ஏமாற்றி விட்டனர். விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்க ளுக்கு சேர வேண்டிய பணத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறிய போதும், கரும்பு பண பாக்கியில் வட்டி இன்றி 45 கோடி ரூபாயை ஓராண்டில் ஐந்து தவணைகளில் கொடுத் தால் போதும் என்று தீர்ப்பாயம் ஆலை நிர்வாகத்தி ற்கு சாதகமாக கூறியுள்ளது. கரும்பு ஏற்றி வந்த வாகனங்களுக்கு தர வேண்டிய வாடகை பாக்கி ரூ.47.61 லட்சத்தில் 48 ஆயிரம் மட்டும் தருவது எனவும், தொழிலாளர்கள், ஊழியர்கள் சம்பள பாக்கி 22.45 கோடி ரூபாயில் 3.71 கோடி ரூபாயை மட்டுமே கொடுப்பதாகவும் சம்பளப் பணத்தில்18.74 கோடி ரூபாயை தள்ளுபடி செய்தும் தீர்ப்பாயம் ‘தீர்ப்பு’ கூறியுள்ளது. விவசாயிகளுக்குத் தர வேண்டிய கரும்பு பண பாக்கிக்கு 15 சதவீதம் வட்டியுடன் வழங்கிட வேண்டும் என்று கரும்பு கட்டுப்பாடு சட்டம் உள்ளது, உச்ச நீதிமன்றம் கரும்பு பண பாக்கியை வட்டியுடன் விவசாயி களுக்கு வழங்கிட வேண்டும் என்று பல தீர்ப்புகளை யும் வழங்கியுள்ளது. இவற்றை எல்லாம் உதாசீனம் செய்து விட்டு விவசாயிகளுக்கும், தொழிலாளர்க ளுக்கும் விரோதமாக சர்க்கரை ஆலை முதலாளிக ளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் ஆதரவாக தேசிய கம்பெனிச் சட்டங்கள் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகள் உள்ளன.
தீர்ப்பாயத்திற்கு சென்ற ஏழு தனியார் சர்க்கரை ஆலைகள்
தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டகுடி-ஆரூரான், கடலூர் மாவட்டம் சித்தூர் -ஆரூரான், பெண்ணாடம் அம்பிகா,துகிளி- அம்பிகா, வாசுதேவநல்லூர்- தரணி, தியாகதுருகம் -தரணி, போளூர் -தரணி ஆகிய ஏழு தனியார் சர்க்கரை ஆலைகள் தேசிய கம்பெனிச் சட்டங்கள் தீர்ப்பாயத்திற்கு சென்றன. உயர்நீதிமன் றத்தால் இத்தீர்ப்பாயத்திற்கு இப்பிரச்சனையைக் கையாள நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர்கள் விசா ரித்து, கடன் விவரங்களை சேகரித்து சர்க்கரை ஆலை களை ஏலம் மூலம் விற்று, வருகிற பணத்தை வைத்து ஆலை தர வேண்டிய பணத்தை பிரித்து தருவார்கள். ஏழு தனியார் சர்க்கரை ஆலைகளில் திருமண்ட குடி ஆரூரான், சித்தூர் ஆரூரான் சர்க்கரை ஆலை களை ஏலம் விட்டு, துவக்கத்தில் கூறப்பட்டுள்ள படி கடன் தொகையை வழங்குவதாக தீர்ப்பாயம் உத்தர விட்டுள்ளது. அந்த உத்தரவில், ஆரூரான் சர்க்கரை ஆலை நிறுவனம் நேரடியாகப் பெற்ற வங்கிக் கடன்களை மட்டும் தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது; விவசாயிகள் பெயரில் ஆரூரான் நிர்வகம் மோசடியாகப் பெற்று நிலு வையில் உள்ள கடன்களை ஏற்கவில்லை. மேலும், கரும்பு விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கரும்பு பயிர்க் கடன்களை ஆரூரான் ஆலை விவசாயிகளிடம் பிடித்தம் செய்திருந்தது; ஆனால் அந்த பணத்தையும் வங்கிகளுக்கு செலுத்தவில்லை.இதையும் தீர்ப்பாயம் ஒரு பொருட்டாக கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை. இப்படி ஏழு தனியார் சர்க்கரை ஆலைகளில் சுமார் ஒரு லட்சம் கரும்பு விவசாயிகளின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல; திரு.ஆரூரான் சர்க்கரை ஆலைக ளுக்கு சொந்தமாக 750 ஏக்கர் நிலம், அன்றாடம் 5000 டன்கள் கரும்பு அரவை செய்யும் திறன் கொண்ட இரண்டு சர்க்கரை ஆலைகள், டிஸ்டிலெரி ஆலை கள், மின்சாரம் உற்பத்தி செய்யும் இணைமின் நிலை யங்கள் கொண்ட ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. ஆனால், 145 கோடி ரூபாய்க்கு ஏன் ஏலம் விட்டீர்கள் என்று விவசாயிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் இல்லை.
கடந்த அதிமுக ஆட்சியே பொறுப்பு
கடன்களை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றும் நோக்கத்துடன் தேசிய கம்பெனிச் சட்டங்கள் தீர்ப்பா யத்திற்கு சென்ற தனியார் சர்க்கரை ஆலைகளால் இன்று ஒரு லட்சம் கரும்பு விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். இதற்கு கடந்த அதிமுக ஆட்சியே காரணம். அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமியை கரும்பு விவசாய பிரதிநிதிகள் நேரில் சந்தித்து கரும்பு விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தோம். அப்போது தனியார் சர்க்கரை ஆலைகள் பிரச்சனை களை எடுத்துக் கூறி முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினோம். அதற்கு முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனியார் சர்க்கரை ஆலை முதலாளிகள் ஆலையைப் பூட்டி சாவியை கொடுத்து விடுகிறோம் என்று கூறுகிறார்கள் என்றார். விவசாயிகள் பெயரில் உள்ள இந்த கடன் தொகை யால் விவசாயிகள் புதிய கடனை எந்த வங்கிகளிலும் வாங்க முடியவில்லை.ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு பண பாக்கியையும் தரவில்லை. வங்கிகள் வட்டியுடன் சேர்த்து கடனை கட்டுமாறு விவ சாயிகளுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பின. இந்த நிலையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 2018 ஆம் ஆண்டு துவக்கத்திலேயே அதிமுக அரசு தலையிட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனக் கோரி பெரும் போராட்டங்களை நடத்தினோம். சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் உட்பட நடத்தப்பட்டது.
தஞ்சாவூர், கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் புகார் மனு கொடுத்தோம்.பாதிக்கப்பட்ட விவசாயிகளில் ஆயிரம் பேர் காவல் நிலையங்களில் ஆரூரான், அம்பிகா சர்க்கரை ஆலைகள் மீது மோசடி செய்ததாக புகார் கொடுத்தனர். புகாரை விசாரித்த தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்ட காவல் துறை ஆரூரான் நிர்வாகமும் வங்கி நிர்வாகமும் மோசடி செய்து விவசாயிகள் பெயரில் கடன் வாங்கியுள்ளனர் என்று வழக்கு பதிவு செய்த னர். அப்போது ஆரூரான் நிறுவனத்தின் பொது மேலாளர் விவசாயிகள் பெயரில் வங்கிகளில் கடன் பெற்று ஆரூரான் சர்க்கரை ஆலைக்கு பயன்படுத்திக் கொண்டோம்; விவசாயிகள் பெயரில் உள்ள வங்கி கடன்களை ஆரூரான் சர்க்கரை ஆலை பெயரில் மாற்றிடக் கோரி வங்கி அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்; அடுத்த 45 நாட்களில் வங்கி கடனை ஆலையின் பெயரில் மாற்றி விடுவார்கள் என்று தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாள ருக்கு 27-05-2019 ல் கடிதம் கொடுத்தார். இதே போல ஒப்புதல் கடிதத்தை கார்ப்பரேஷன் வங்கி மேலாள ரும் காவல்துறைக்கு கொடுத்தார். இவை அனைத்தும் அதிமுக ஆட்சி காலத்தில் அவர்களுக்கு தெரிந்தே நடந்தது. ஆனால், மோசடி செய்த தனியார் சர்க்கரை ஆலை கள் மீது நடவடிக்கை எடுத்து விவசாயிகளை பாது காக்க வேண்டிய மாநில அரசு ஆரூரான் ஆலைகள் தேசிய கம்பெனிச் சட்டங்கள் தீர்ப்பாயத்திற்குச் செல்ல அன்று அதிமுக அரசு அனுமதித்தது.இதனால் கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 2011-ல் தமிழ்நாட்டில் சர்க்கரை உற்பத்தி 23 லட்சம் டன்களாக இருந்தது, அதிமுக ஆட்சிக் காலத்தில் 7 லட்சம் டன்களாக குறைந்து தமிழகத்தில் கரும்பு சாகுபடி, சர்க்கரை உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது. ஒன்றிய பாஜக அரசு கரும்புக்கு விலையை உயர்த் தாமல் ரெக்கவரியை உயர்த்தியது; குறைந்தபட்ச விலையை ரத்து செய்ய வைத்தது. அதிமுகவும் பாஜகவும் ஆலை முதலாளிகளுக்கு சாதகமான கொள்கைக ளை செயல்படுத்தினர்.
முதல்வர் உடனே தலையிட வேண்டும்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் சமர்ப்பித்தனர்.சர்க்கரை ஆலைகளை தொழில் துறையில் இருந்து வேளாண் துறைக்கு மாற்றி சர்க்கரை துறையை மேம்படுத்த சில முயற்சி களை எடுத்து வருகிறார்கள். கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் கரும்பு பண பாக்கி இல்லை. கரும்பு சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. இவை வரவேற்கத்தக்க அம்சங்கள். ஆனால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகள் கடந்த ஒரு மாதமாக திருமண்டகுடி ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு போராடி வருகிறார்களே, மாநில அரசு தலையிட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டாமா?
ஆலையை வாங்கிய கால்ஸ் நிறுவனம் விவ சாயிகள் பெயரில் வங்கிகளில் உள்ள கடனுக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும்.கடனுக்கு பொறுப்பு ஏற்காமல் ஆலையை குறைந்த விலைக்கு வாங்கிய கால்ஸ் நிறுவனம் ஆரூரான் ஆலையை எடுத்து பணிகளை துவக்க வந்த போது கரும்பு விவசாயிகள் வலுவாக ஆட்சேபனை தெரிவித்தனர். மாவட்ட ஆட்சி யர் முத்தரப்பு கூட்டத்தை தஞ்சாவூர் ஆட்சியர் அலுவ லகத்தில் நடத்தினார். ஆனால், வங்கி கடன் பிரச்சனை களுக்கு தீர்வு காணாமல் ஆலையை செயல்படுத்தக் கூடாது; ஆலையை அரசே ஏற்று நடத்திட வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் மாவட்ட ஆட்சி யர் ஆலையை திறந்து செயல்படுத்த விவசாயிகள் ஒப்புக் கொண்டதாக, கால்ஸ் நிறுவனத்திற்கு ஆதர வாக மாநில சர்க்கரைத் துறை ஆணையருக்கு அறிக்கை அனுப்பி வைத்தார். இந்த அறிக்கையை ஏற்று ஆலையை செயல் படுத்த 28-10-2022 அன்று சர்க்கரை துறை ஆணை யர் உத்தரவு பிறப்பித்தார்.அதுவும் சர்க்கரை துறை ஆணையர் பணி ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்க ளுக்கு முன்பு இந்த உத்தரவை பிறப்பித்தார். பாதிக் கப்பட்ட கரும்பு விவசாயிகள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் எப்படியாவது ஆரூரான் சர்க்கரை ஆலையை ஏலம் எடுத்த கால்ஸ் நிறுவனத்திடம் ஆலையை ஒப்படைத்து விட முயற்சிப்பது என்ன நியாயம்?
இத்தகு சூழ்நிலையில் தான் கரும்புவிவசாயிகள் திருமண்டகுடி ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு 30-11-2022 முதல் தொடர் காத்திருக்கும் போராட் டத்தை துவக்கி நடத்தி வருகிறோம். இது கரும்பு விவசாயிகளின் ஜீவாதாரப் போராட் டம். இத்தகு சூழலில் பாதிக்கப்பட்டுள்ள கரும்பு விவ சாயிகளை பாதுகாத்து அவர்களை கடன் வலையில் இருந்து விடுவிக்க தமிழக முதலமைச்சர் உடனடி யாக தலையிட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
கட்டுரையாளர் : பொதுச் செயலாளர், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்