articles

img

வரி விதிப்புகள் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதாக இருக்க வேண்டும் - அ.சிவசண்முக குமார்.

தொழில் நகரமான கோவையை பற்றி அனைவரும் அறி வோம். நமது கோவை மாவட் டத்தில் 400க்கும் மேற்பட்ட குறு பவுண்டரிகள் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இதில் நேரடியாக இலட்சம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பு பெற்று உள்ளார்கள். மேலும். மறை முகமாக பல இலட்சம் பேர் பயன் பெற்று வரு கிறார்கள். இவ்வாறு சிறந்து விளங்கிய பவுண் டரி தொழில் பல்வேறு காரணங்களால் முடங் கும் அபாயத்தில் உள்ளது. இந்நிலை நீடித் தால் கோவை மாவட்டத்தில் குறு பவுண்டரி கள் முழுவதுமாக காணாமல் போய்விடும் என்று அச்சப்படுகிறோம். மத்திய, மாநில அரசுகள் நாட்டின் பொரு ளாதார வளர்ச்சிக்காக வரி விதிப்புகள் மற்றும் விலையேற்றங்கள் அவசியம் என்றாலும் அது குறுந்தொழில்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். மேலும் அத்தகைய வரி விதிப்புகள் தொழில் வளர்ச்சியை ஊக்கப் படுத்துவதாக இருக்க வேண்டும் எங்களுக்கு அளிக்கப்பட்ட கால அளவை கருத்தில் கொண்டு குறுந்தொழில் வளர்ச் சியை பாதிக்கும் பல காரணிகளில் முக்கிய காரணிகளை மட்டும் எல்லோருடைய பார் வைக்கு கொண்டு வருகிறோம்.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி என்றவுடன் அனைத்து குறுந் தொழில்களும் ஒரே குரலில் ஒலிப்பது குறுந் தொழில்கள் அனைத்தும் அதிக அதிக அள வில் பாதிப்பிற்கு உள்ளானது. ஜிஎஸ்டியால் தான் ஜிஎஸ்டி வருவதற்கு முன்னர் குறுந் தொழில்கள் 5சதவிகிதம் வாட்  மட்டுமே செலுத்தப்பட்டு வந்தது. பெரும் நிறுவனங் கள் 12.5 சதவிகிதம் மத்திய கலால் வரி மற் றும் 5 சதவிகிதம் வாட் வரி செலுத்தி வந்தார் கள். ஆகையால் குறுந் தொழிலுக்கும் பெருந் தொழிலுக்கும் இடையே 12.5 சதவிகிதம் வரி விதிப்பில் வித்தியாசம் இருந்ததால் எல்லா குறுந்தொழில் நிறுவனங்களும், குறுந் தொழில் நிறுவனங்களிடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்து வரப்பட்டது. அதனால் உலக அளவில் (Industrial recession) தொழில் மந்தம் ஏற்பட்ட போதும், குறு நிறு வனங்கள் பெரும் பாதிப்பு இன்றி செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது 18 சதவிகிதம் ஜிஎஸ்டி என்ற ஒரே வரி விதிப்பால் பெரும் நிறுவனங்களுடன் குறுந்தொழில்கள் போட்டி யிட முடியாமல் பெரும் பாதிப்பிற்கு உண்டாகி வருகிறது. இந்நிலை நீடித்தால் குறு நிறுவ னங்கள் எதிர் காலங்களில் இல்லாமல் சென்று  விடும். தற்போது செய்யப்பட்ட ஆய்வின்படி கடந்த ஐந்து ஆண்டுகளாக 76  சதவிகிதம் குறுந் தொழில்கள் எவ்வித வளர்ச்சியும் இன்றி ஒரே நிலையில் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. குறுந்தொழில்கள் அழிவிலிருந்து காப்பாற்ற ஜிஎஸ்டி வரிவிதிப்பில் சில மாற்றங்கள் செய் யப்பட வேண்டும். குறுந்தொழில்கள் அதாவது முதலீடு ரூ.1 கோடியில் இருந்து ரூ5 கோடிக்கு மிகாமல் பணபரிவர்த்தனை இருக்கும் தொழில்களுக்கு ஜிஎஸ்டி சதவீதம் 5 சதவிகிதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். பெரும் நிறுவனங்களிலி ருந்து கொள்முதல் செய்யப்படும் மூலப் பொருட்கள் மற்றும் அனைத்து பொருட்க ளுக்கும் ஜிஎஸ்டி வரி 5 சதவிகிதமாக ஆக மட் டுமே இருக்க வேண்டும்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போல் குறுந்தொழில்களால் விற்பனை செய்யப்பட்ட பொருட்களுக்கு 45 நாட்களுக்குள் Payment கொடுக்கப்பட வேண்டும். இந்த நடைமுறை கண்டிப்பாக செயல்படுத்தப்படுவதை மத்திய மாநில அரசுகளால் தீவிரமாக கண்காணிக் கப்பட வேண்டும். மின்சார கட்டணம், மூலப்பொருட்களின் அபரிமிதமான விலையேற்றம், பணியாளர் களின் ஊதியம் மற்றும் கடனின் வட்டி விகிதம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் காஸ்டிங் விலையில் மற்ற மாநில பவுண்டரிகளுடன் போட்டி போட முடியாமல் குறு பவுண்டரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்ட நிலையில், மாநில மின்வாரியத்தின் மின் கட்டண உயர்வு பவுண்டரி தொழிலை முழுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது. ஒரு யூனிட்டிற்கான மின் கட்டண உயர்வை தவிர்க்க முடியாத காரணங் களால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் நிலைக் கட்டணம் எல்டிசிடி பயன்பாட்டாளர்களுக்கு ரூ.35லிருந்து ரூ.150 Per Kw என 300 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வை உடன டியாக திரும்ப பெறப்பட வேண்டும். எங்கள் உற்பத்தி பொருட்களின் விலை அதிகமாக இருப்பதாக கூறி நம் தமிழ்நாட்டின் பம்பு உற் பத்தியாளர்கள் மற்ற மாநிலங்களிலிருந்து வாங்க தொடங்கி விட்டார்கள் என்பதை வருத் தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

சொத்து வரி உயர்வு

பெரும்பாலான குறுந்தொழில் செய்பவர் கள் வாடகைக்கு எடுத்து தொழில் நடத்து பவர்கள். இந்த சொத்து வரி உயர்வால் அவர்களுடைய வாடகை உடனடியாக உயர்த் தப்பட்டு விட்டது. அதனால் உற்பத்தி பொருட் களின் விலை உயர்த்த வேண்டிய கட்டாயத் திற்கு தள்ளப்படுகிறார்கள். நம் பொருட்களின் விலை மற்ற மாநிலங்களை விட உயர்வாக இருப்பதால் கொள்முதல் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலை நீடித்தால் அனைத்து குறுந்தொழில்களும் முடங்கும் அபாயத்தில் உள்ளது. உடனடியாக சொத்து வரி உயர்வை திரும்ப பெற ஆவண செய்ய வேண்டும்.

வங்கிகளின் வட்டி விகிதம்

நம் அனைவருக்கும் நன்றாக தெரியும் வேளாண் தொழிலுக்கு அடுத்து அதிகமான வேலை வாய்ப்பு அளிப்பது குறுந்தொழில்கள் மட்டுமே. அதனால் குறுந்தொழிலையும் முக் கிய தொழிலாக கருதி வேளாண் தொழிலுக்கு கொடுக்கும் வட்டி விகிதத்தில் குறுந்தொழில் புரிவோருக்கு வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப் பட்டால் குறுந்தொழில்கள் காப்பாற்றப்படும்.