articles

img

50 சதவீத சரிவை சந்தித்துள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகள் - பி.வைத்தீஸ்வரன்

தோல் பதனிடுவதற்கான பொருட்கள் மற்றும் வேதிப்பொருட்களின் சந்தை விலை உயர்வால் தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக தோல் பதனிடும் தொழிற்சாலைகள் 50 சதவீத சரிவை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படுபவை பெரும்பாலும் பாரம்பரிய தோல் பதனிடும் தொழிற்சாலைகளே. இவைகள் பதனி டப்பட்ட தோல் பொருட்களை, புதுதில்லி, ஆக்ரா, கான்பூர், கொல்கத்தா உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த நகரங்களின் உற்பத்தியாளர்களுக்கு விநியோகம் செய்கின்றன. இதுமட்டுமின்றி, அமெ ரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஐக்கிய அரபு அமீரகம், சீனா மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட நாடுக ளுக்கும் ஏற்றுமதி செய்கின்றன. இதுகுறித்து வாணியம்பாடியில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளர் டி.முகமது முபின் கூறுகையில், “பணவீக்கத்தை சந்திக் கும் சந்தையில் இருப்பவர்களால், தோல் பொ ருட்கள் மற்றும் ஆடைகளில் பயன்படுத்தப்படும் வழு வழுப்பான (velvety) செம்மறியாட்டின் தோல்களை வாங்க முடிவதில்லை. இதனால் வெல்வெட் பொருட்க ளுக்கான தேவை குறைந்துள்ளது. இதன் காரண மாக, வாடிக்கையாளர்கள் ஆடம்பரமான, விலை உயர்ந்த தோல் பொருட்களை வாங்குவதை நிறுத்தி விட்டு, அவரவர் வசதிக்கேற்ற மாற்றுப் பொருட்களை தேர்ந்தெடுத்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மூடப் பட்டுவிட்டன” என்றார்.

15 சதவீதத்திலிருந்து  1.02 ஆக குறைவு

வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் பொது இயக்குநரகம் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி கவுன்சிலின் தரவுகள்படி, கடந்த 2021-22, 2022-23 ஆண்டுகளில், இந்தியாவிலிருந்து ஹாங்காங் மற்றும் போலந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பதனிடப்பட்ட தோல்கள், தோல் பொருட்கள் மற்றும் காலணிகளின் அளவு 15 சதவீதத்திலிருந்து 1.02 சத வீதமாக சரிந்துள்ளது. சோமாலியா, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் (விதிவிலக்குகளுடன்) உட்பட முதல் 15 இடங்களுக்கான ஏற்றுமதி குறைந்த வளர்ச்சி யையே காட்டுகிறது. தோல் பொருட்கள் ஏற்றுமதி கவுன்சிலின் தலைவர் இஸ்ரார் அகமது கூறுகையில், ‘பதப்படுத்தப்பட்ட தோல் பொருட்களின் தேவை 2023 ஜூலை கடைசியிலிருந்து அதிகரிக்கும்’ என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

வேதிப்பொருட்களின் விலை  100 சதவீதம் அதிகரிப்பு

ராணிப்பேட்டையில் இயங்கும் இந்துஜா தோல் பதனிடும் தொழிற்சாலையின் உரிமையாளர் கே.தியாகராஜன் கூறுகையில், “தொழிலில் மந்த நிலை மற்றும் பணநெருக்கடி பரவலாக இருப்பதால், உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு நாங்கள் ஏற்றுமதி செய்வது மிகவும் குறைந்துவிட்டது. பாதி பதனிடப்பட்டதிலிருந்து, அவற்றை முழுமையாக பதப்படுத்தப்பட்ட தோல் பொருட்களாக மாற்றுவது வரை தேவைப்படும் அனைத்து வேதிப் பொருட்க ளின் விலை ஏறத்தாழ 100 சதவீதம் அதிகரித்துவிட்டது. இதனால் தொழிலாளர்களின் ஊதியமும் வெகுவாக குறைக்கப்பட்டுவிட்டது” என்றார். 

ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்

இத்தகைய தொழிற்சாலைகளுக்கு ஒன்றிய-மாநில அரசுகள் முறையாக ஒரு ஆணையத்தை அமைக்க வேண்டும். மேலும், தொழில் மற்றும் உள் நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தெரிவித்த தன்படி, ஜிஎஸ்டி-ஐ 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும் தொழிற்சாலை உரிமை யாளர்கள், பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையில், சிறு குறு தோல் பதனிடும் தொழிற்சாலைகள் வணிகத்தில் பெரும் சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. கடந்த சில ஆண்டுக ளாக தோல் தொழில்குழு உள்ளிட்ட சில தனிப்பட்ட குழுக்கள், ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த சந்தைகளில் அதிக முக்கியத்துவத்தை பெற்றுள்ளன. இவை சிறு குறு தொழில்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தணிக்கைச் சான்று  பெறுவதில் சிக்கல்

சிறு தொழிற்சாலைகளின் மூலமாக பணியாளர்கள் ஆர்டர்களை செயல்படுத்துகின்றனர். இதில் பெரும் பாலான தோல் பொருள் உற்பத்தியாளர்கள், தோல் தொழில்குழு (Leather Working Group) சான்றிதழ் கேட்கின்றனர். முறைசாரா, சிறு குறு தொழிற்சாலை கள் இத்தகைய சான்றிதழைப் பெறுவது மிகவும் கடினம். முழுமையாக பதனிடப்பட்ட தோல் பொருட்களை நாங்கள் சீனா, ஹாங்காங், வங்கதேசம் உள்ளிட்ட நாடு களுக்கு ஏற்றுமதி செய்கிறோம். ஆனால் அவர்கள் இத்தகைய சான்றிதழை எங்களிடம் எதிர்பார்ப்ப தில்லை என்று சிறு தொழிற்சாலை ஒன்றின் பங்கு தாரரான ஏஎம்ஏ யூசுப் தெரிவித்தார்.  மேலும், ‘இத்தகைய தணிக்கை சான்றுகளை ஆண்டுதோறும் புதுப்பிப்பதற்கென, ரூ.20 லட்சம் மற்றும் ரூ.5 முதல் 7 லட்சம் வரை கட்டணம் விதிக்கப் படுகின்றது. இது வணிகத்திலிருந்து மக்களை வெளியே தள்ளுகிறது. தொழில் துறையினரின் கூற்றுப்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளில், 50 ஆயிரம்  பேர் நேரடித் தொழிலாளர்கள். தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. தற்போது, பூஜ்ய திரவ வெளியேற்றம் மற்றும் ஒழுங்குமுறை தேவைகளின் அமலாக்கத்துடன் இது கணிசமாக குறைந்துள்ளது.  சிறு, குறு தோல் பதனிடும் தொழிற்சாலைகளையும் அதன் தொழிலாளர்களையும் பாதுகாக்க மேம் படுத்தப்பட்ட, நிரந்தரமான நடவடிக்கைகள் தேவை’ என்றார்.

பசுமை முறைகள் 

உலகில் அனைத்தும் மாறிக் கொண்டிருக்கிறது. தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் பசுமை முறை களைப் பின்பற்ற வேண்டும். இதன்மூலம் தண்ணீர், வேதிப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் பயன்பாட்டை குறைத்து, லாபகரமான வணிகத்தை நோக்கிச் செல்ல வேண்டும். திரவ கழிவுப்பொருட்களின் அளவு பூஜ்யமாக இருந்தாலும், திடக் கழிவு மேலாண்மைக்கு அதிக செயல்பாடு தேவை என மத்திய தோல் ஆராய்ச்சி நிறு வனத்தின் இயக்குநர் டாக்டர் கே.ஜெ.ஸ்ரீராம் தெரி வித்தார். வருங்காலங்களில் மறுசுழற்சி, மக்கும் தன்மை கொண்ட பொருட்களைத் தயாரிப்பது மற்றும் கண்கா ணிப்பது உள்ளிட்ட முயற்சிகள் வளர்ச்சியை நோக்கி  அழைத்துச் செல்லும். பாரம்பரிய தோல் பதனிடும் தொழிற்சாலைகளில், ஒவ்வொரு டன் தோலையும் பதனிடும் போது, கிட்டத்தட்ட 700 கிலோ கழிவுகளாக இருக்கிறது.

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு வகை யிலான மறுசுழற்சி குறித்த ஆராய்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, சவரக் கழிவுகளிலி ருந்து செயற்கை தோல் பதனிடுதல், இறைச்சிக் கழிவு களை கோழித் தீவனமாக மாற்றுவது, கொலஜன்க ளை (Collagen- கொலஜன் என்பது உடலில் உள்ள அதிகமான புரதம். இது இணைப்பு திசுக்களின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது) உயிரி-பொருட்களாக மேம்படுத்துவது, கேசக் (Hair) கழிவுகளை ஜெலட்டின் மருந்துகளாக மாற்றுவது உள்ளிட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. மேலும், கழிவுகளை கொண்டு சோதனை அடிப்படையில் மின்கலன்களை செயல்படுத்துவது உள்ளிட்ட பணி களையும் நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த ஆராய்ச்சி கள் அனைத்தும் தொடக்க நிலையில்தான் உள்ளன. இந்நிறுவனம், நீரற்ற குரோம் பதனிடுதல் தொழில் நுட்ப முறையையும் மேற்கொண்டுள்ளது. (Chrome - பிற உலோகங்களுக்கு வெளியுறையாகப் பயன் படுத்தப்படும், கடினத் தன்மையும் பளபளப்பும் உடைய உலோக வகை) ஆனால் வெகு சிலரே இம்முறையைப் பின்பற்று கின்றனர். விலை உயர்வால் தொழிற்சாலைகள் இம்முறையை கையாளத் தயக்கம் காட்டுகின்றன. தோல் பதனிடும் தொழிற்சாலைகள் விரைவில் இந்த நடைமுறைக்கு மாற வேண்டும் என மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை அறிவியலாளர் பி.தணிகைவேலன் தெரிவித்துள்ளார்.

குறைந்த செலவில் சோதனை

மேலும், தற்போது மேற்கத்திய பொருளாதா ரங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஒழுங்குமுறையாளர்கள், ஒரு பொருள் எங்கு உற்பத்தி யாகிறது; விலங்குகள் எந்த இடத்தில் வளர்க்கப்படு கின்றன, கொல்லப்படுகின்றன; இதனால் ஏற்படும் நோய் பரவலை கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அறிந்து கொள்ள விரும்புகின்றனர். இத னால் கண்டுபிடிக்கக் கூடிய தன்மை அத்தியாவசிய மான ஒன்றாகிறது என்றும் தணிகைவேலன் தெரி வித்தார். உயர்தர பிரிவைச் சார்ந்த பொருட்கள் தனித்து வமான விற்பனை புள்ளியை பெற்றுள்ளனவா, உற்பத்தி செய்யப்படும் பொருள் மக்கும் தன்மை கொண்டதா, இல்லையா என்பனவற்றை ஆராய்ந்து சான்றளிக்கும் பணிகளையும் தொழிற்சாலை துவக்கி யுள்ளது. சமீப காலங்களாக நாட்டில் இவ்வாறு சான்றளிக்கும் முறையில்லை. 

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘கேட்டர்ஸ்’  ஆய்வகம், சோதனை மற்றும் அளவுத்திருத்த தேசிய அங்கீகார ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. கேட்டர்ஸ் ஆய்வகம் முழுவதும் பதனிடப்பட்ட தோல், அதன் உற்பத்திகள், தோல் வேதிப்பொருட்கள், தோல் சாரா உற்பத்திப் பொருட் கள், ஜவுளிகள், காலணி ஆகியவற்றின் கூறுகளை சோதனை செய்கிறது. ஜெர்மனி வழங்கும் சான்றிதழு டன் ஒப்பிடுகையில், இந்த ஆய்வகத்தில் குறைந்த செலவில் சோதனையைச் செய்ய முடியும். இதுமட்டுமின்றி உற்பத்தி செய்யப்படும் தோல்  பொருள், உலோகம் இல்லாத, குரோம் இல்லாத மற்றும் மக்கும் தன்மை கொண்டதா என ஆராய்வ தற்கு, கேட்டர்ஸ் ஆய்வகம் புதிய சோதனை முறையை  அறிமுகப்படுத்தி உள்ளது என இந்த ஆய்வகத்தின் மூத்த தொழில்நுட்ப அதிகாரி பிரியா நாராயணன் கூறியுள்ளார்.

பூஜ்ய வெளியேற்ற  சுத்திகரிப்பு முறை

இந்த ஆய்வகம், தோல் பொருளுக்கு அடையா ளம் மற்றும் அந்த அடையாளத்திற்கான நம்பகத்தன் மையை வழங்குவது உள்ளிட்ட பணிகளையும் மேற் கொண்டுள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் முடிவு செய்யப்பட வில்லை. மேலும், மிக அதிக செறிவு கொண்ட பொருட் கள், அபாயகரமான வேதிப்பொருட்களின் பூஜ்ய வெளி யேற்றம் உள்ளிட்டவற்றை சோதனை செய்வதற்கான திறன்களையும் இந்த ஆய்வகம் கொண்டுள்ளது. ஆய்வகத்திற்கான உபகரணங்கள் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தால் அளவீடு செய்யப்படு கின்றன. ஒவ்வொரு தோல் பொருள் தயாரிப்பின் போதும், வெளிப்படுத்தப்படும் கார்பன் வேதிப்பொருளுக்கு ஒரு குறிப்பிட்ட வரைமுறை ஏற்படுத்துவது மற்றும் கார்பன் தடங்களை மதிப்பிடுவதற்கான மென்பொ ருளை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளையும் இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (19, 20.6.23) 
தமிழில் : ஆர்.நித்யா