articles

img

உண்மையை உரக்கப் பேச வேண்டிய தருணமிது - ஆர்.மைதிலி

 இந்திய மக்கள் தொகை 136.64 கோடி ஆகும். ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் தோராயமாக 70000 ரூபாய் வரை கடன் உள்ளது. கடந்த எட்டு வருடத்தில் மோடி ஆட்சி காலத்தில் மட்டுமே கடன் தொகை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

“இந்தியாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளை போலவே, பொருளாதார ஏற்றத் தாழ்வு களும் அதிகரித்து வருகின்றன .இந்தியா வளமான நாடாக இருந்தாலும் மக்கள் வறுமை, பட்டினி, வேலையின்மை, தீண்டாமை, சாதிவெறி மற்றும் பணவீக்கத்தை எதிர்கொள்கிறார்கள். நகர்ப் புறங்களில் ஓரளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் கிராமங்களில் வசதிகள், வாய்ப்புகள் குறைவு. எனவே மக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்கிறார்கள்”. இதை  சொல்வது நாம் அல்ல. ஒன்றிய பாஜக அரசின் அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள்.  உண்மையைக் குழி தோண்டி புதைக்க முடியாது என்பது சரி தானோ?  அம்னீசியா நோயாளிகளை போல உள்ள ஆட்சியாளர்கள், சில நேரங்களில் உண்மையை பேசி விடுகிறார்கள். 

பொருளாதார நெருக்கடி

உலகப் பொருளாதாரம் தீவிர நெருக்கடியை நோக்கி நகர்வதாக  சர்வதேச நாணய நிதியம் (IMF) கூறியுள்ளது. 2008இல் ஏற்பட்ட நெருக்கடியை காட்டிலும், 2020இல் உருவான கொரோனா பெருந் தொற்று காலத்தில் ஏற்பட்ட மந்த நிலைமையை விட 2023 மோசமாக இருக்கும் என்று கணித்துள்ளது.  இந்தியா சேவைத் துறையில் கடந்த ஆறு மாதங்க ளில் சரிவைச் சந்தித்துள்ளது. பிஎம்ஐ (purchasing manager index) தெரிவிப்பது, கடந்த 2022 ஆகஸ்டில் 57.2 விழுக்காடு புள்ளிகள் என்றிருந்தது, நவம்பர் மாதத்தில் 54.3 விழுக்காடு புள்ளிகளாகக் குறைந்து உள்ளது.  அதேபோல உற்பத்தித் துறையில் ஆகஸ்ட் மாதம் 58.2 விழுக்காடு என்று இருந்தது, செப்டம்பர் மாதம் 55 விழுக்காடு எனக் குறைந்துள்ளது. இரண்டு விழுக்காடு அல்லது மூன்று விழுக்காடு தானே  சரிவு என்று பார்க்கக் கூடாது. 0.1 விழுக்காடு  குறைந்தாலே பல லட்சம் சரிவு ஏற்படும். இதே நிலை தொடர்ந்தால் சர்வதேச பொருளாதார மந்த நிலை அபாயத்தில் இந்தியாவும் சிக்கிக் கொள்ளும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். 

2008 உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா. மயிரிழையில் தப்பித்தது. அதற்கான காரணம் பொதுத்துறை நிறு வனங்கள் தான். அன்றைக்கு இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி(UPA) அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்காமல் இந்திய தொழிலாளி வர்க்கமும் இடதுசாரிகளும் தான் தடுத்து நிறுத்தின. தற்போது அறுதிப்  பெரும்பான்மை யுடன் ஆட்சியில் இருக்கிற தைரியத்தில் ஒன்றிய  பாஜக அரசு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களை யும் தனியாருக்கு தாரை வார்ப்பதில் ஈடுபட்டுள்ளது. “இந்தியா விலைவாசிகளை கட்டுப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சமூகப் பாதுகாப்பு முறையை விரிவு படுத்த வேண்டும். மக்களுக்கு வருமானம் ஈட்டுவ தற்கான  வழிகள் வழங்கப்பட வேண்டும்,” என தெற்கு  ஆசியாவிற்கான தலைமைப் பொருளாதார நிபுணர் கூறியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும் . 

எட்டே வருடத்தில் இரண்டு மடங்கு அதிகரிப்பு

ஆனால் இந்திய அரசு மீள முடியாத வகையில் கடன் வலையில் சிக்கி உள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து 1947 முதல் 2014 வரை அதாவது 67 ஆண்டுகள், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு துவங்கி லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண்சிங், ராஜீவ்காந்தி,  சந்திர சேகர், வி.பி.சிங்,  நரசிம்மராவ், வாஜ்பாய், தேவ கௌடா, ஐ.கே. குஜ்ரால், மன்மோகன் சிங் என 13 பிரதமர்கள் இருந்துள்ளார்கள். இக்காலத்தில் அதாவது 2014 வரை இந்தியாவின் மொத்த கடன் ரூபாய் 54 லட்சம் கோடி ஆகும்.  மோடி அரசு பதவி ஏற்ற பின் கடந்த ஆறு வருட காலத்தில் மட்டும் 46 லட்சம் கோடி கடன் பெற்று இருக்கிறார்கள். அதனால் தற்போது கடன் தொகை நூறு லட்சம் கோடியை தாண்டி உள்ளது. மேலும் 2023 மார்ச் இறுதியில் இக்கடன் 152.2 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.  இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 54 விழுக்காடு ஆகும். ஒன்றிய அரசு கடனுடன் மாநில அரசுகளின் கடன் தொகையையும் கணக்கிட்டால், நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 89 விழுக்காடு ஆகும். அரசு தமது வரி வருவாயில் கிட்டத்தட்ட சரிபாதியை 9.41 லட்சம் கோடி ரூபாயை கடனுக்கான வட்டியாக மட்டுமே செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய மக்கள் தொகை 136.64 கோடி ஆகும். ஒவ்வொரு குடிமகனின் தலை யிலும் தோராயமாக 70000 ரூபாய் வரை கடன் உள்ளது. கடந்த எட்டு வருடத்தில் மோடி ஆட்சி காலத்தில் மட்டுமே கடன் தொகை இரண்டு மடங்கு அதிகரித் துள்ளது. 

இந்திய கஜானா யாருக்கு -? 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மோடியும், நிர்மலா சீதாராமனும், அமித்ஷாவும் ஒட்டு மொத்த பாஜகவும் வளர்ச்சி, வளர்ச்சி என்று வாய்ப்பந்தல் போடு கிறார்கள்.  வளர்ச்சி என்றால் முன்னேறிச் செல்வது. எதிர்மறை வளர்ச்சி என்றால் பொருளாதாரம் சரிகிறது அல்லது பின்னோக்கிச் செல்கிறது என்று பொருள். இன்று இந்தியா எதிர்மறை வளர்ச்சியை நோக்கி  நகர்வதாக பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரி வித்துள்ளார்கள். இதனால் தொழில்கள் வளர்வ தற்குப் பதிலாக அனைத்தும் சுருங்கி வருகின்றன. தொழில்கள் சரிவு ஏற்பட்டால், விற்பனை சரிவு மற்றும் லாபத்தில் சரிவு ஏற்படும். ‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று கம்பராமாயணம் கூறுகிறது.

கடன் பெறுவது அதை திரும்பச் செலுத்துவது என்பது அவ்வளவு வேதனையான நிகழ்வாகும். கடன் பிரச்சனை என்பது தனி மனிதருக்கு மட்டுமல்ல. நாட்டை நிர்வகிக்கும் அரசுக்கும் உள்ளது.  இந்திய பட்ஜெட்டில் 30 விழுக்காடு ராணு வத்திற்கும், கடனுக்கு வட்டியாக மட்டும் 25 விழுக்காடு என மொத்தம் 55விழுக்காடு செலவாகிறது. மீதி 45 விழுக்காடு செலவு தொகை தான் இதர செலவுக ளுக்கு பயன்படுத்தப்படுகிறது.  “5 கிலோ இலவச உணவு தானியத்தை ஏழைக ளுக்கு வழங்கிவிட்டு, நன்றியை எதிர்பார்க்கும் நாடாளு மன்றத்தில் தான், இந்தியாவில் ரூபாய் 10 லட்சம் கோடி  வாராக் கடனை, கார்ப்பரேட் தொழிலதி பர்களுக்கு தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது. அரசு கஜானா யாருக்கு முன்னுரிமை” என பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பி னர் வருண் காந்தியே கேட்டுள்ளார் . 

தள்ளுபடியாகும் மக்களின் வரிப்பணம்

வாராக் கடனாக கடந்த ஏழு வருடங்களில் ரூ.10.72  லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2016-17 இல் ரூ.1.8 லட்சம் கோடி, 2017 -18 இல் ரூ. 1.60 லட்சம் கோடி, 2018 -19 இல் ரூ. 2.36 லட்சம் கோடி,   2019 -20 இல் ரூ. 2.34 லட்சம் கோடி, 2021 இல் 2.03 லட்சம்  கோடி என்கிற அடிப்படையில் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. இது சாமானிய மக்கள் சேமித்து வைத்துள்ள  பொதுத்துறை வங்கிகள் கொடுத்த 75 விழுக்காடு கடன்கள் ஆகும். 2020-21இல் மட்டும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைமை தாங்கும் ஐந்து வங்கிகளில் மட்டும் ரூபாய் 89,686 கோடி ரூபாய் வாராக் கடனாக தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. பெரும்பான்மையான கடன்கள் பெரும் நிறுவனங்களுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் வழங்கிய கடன்கள் ஆகும். இதுவரை எந்தெந்த பெரு நிறுவனங்களுக்கு எவ்வளவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விபரம், பட்டியல் வெளியிட ஒன்றிய அரசு மறுக்கிறது.  கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவை வறுமை, பசி, பட்டினி, பெண்கள் பாதுகாப்பு,  மனித வள குறியீடுகள் என அனைத்திலும் உலகின் மையப் புள்ளியாக மாற்றியுள்ள பாஜக ஒன்றிய மோடி அரசு பொய்யான புள்ளி விபரங்களை கொஞ்சமும் வெட்கப்படாமல் நாடாளுமன்றத்திலும் அள்ளி வீசுகிறது. மக்களின் கவனத்தை திசை திருப்ப மத ரீதியான பிரச்சனைகளை கிளப்பி மக்கள் ஒற்று மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடு கிறது. இதன் தொடர்ச்சியாக தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பல ஆயிரம் கோடிகள் நன்கொடையாக பாஜக பெற்று வருகிறது. ஊழலை இன்று சட்டப்பூர்வமாக இப்படி மாற்றியுள்ளது.  

இதற்கு மாற்றாக இடதுசாரிகள் முன்வைக்கும் மாற்றுப் பொருளாதாரக் கொள்கையையும்,  மக்களின் சிந்தனையில் மாற்றுச் சிந்தனையையும் விதைப்பது அவசியமாகும். எனவே, விழிப்புடன் இருப்போம்! இந்தி யாவை காப்போம்! “வெல்ல முடியாத சேனைகள் என்று எதுவும் இல்லை! எந்த காலத்திலும் இருந்ததும் இல்லை!”  என்பது தோழர் ஸ்டாலின் அவர்களின் கூற்று.

கட்டுரையாளர்: சிபிஐ(எம்) 
திருப்பூர் மாவட்டக்குழு உறுப்பினர்