articles

img

உயர்கல்விப் படிப்புகளுக்கு புதிய பெயர் : குழப்பம் ஆரம்பம்! - பேரா.பொ.இராஜமாணிக்கம்

பி.எஸ்., எம்.எஸ். என  மருத்துவம், பொறியியல், தொழில் நுட்பம் போன்ற கல்விகளுக்கு வழங்குவதை எல்லாப் பட்டப் படிப்புகளுக்கும் வழங்குவது என்பது உயர் கல்வியை விளம்பரமாக்கி  கடைச் சரக்காக்கி வர்த்தகம் செய்ய வழி வகுக்காதா?

பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சமீபத்தில் உயர்கல்வி பட்டப் படிப்புக ளுக்கு புதிய பெயர்களில்  பட்டம் வழங்கு வது குறித்த ஒரு கடிதத்தை பல்கலைக்கழகத்  துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள், பிற கல்வி  நிறுவன இயக்குநர்கள் ஆகியோருக்கு அனுப்பி யுள்ளது. இக்கடிதத்தில் குறிப்பிட்டவற்றில் பொது மக்கள் கருத்தையும் ஜூலை 5க்குள் அனுப்பும்படி கேட்டுள்ளது. இக் கடிதம் என்பது தேசிய கல்விக் கொள்கை-2020இன் படி உயர்கல்வியில் நான்கு வருட பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்புகள், ஆய்வுக ளுக்கு எந்த வகையான பெயரில் பட்டம் வழங்குவது குறித்ததாகும்.  தற்போது அமலில் இருக்கும் மூன்றாண்டுப் படிப்புகள், இரண்டாண்டு பட்ட மேற்படிப்பு அதே பட்டத்தின் பெயரில் அழைக்கலாம் எனக் குறிப்பிட் டுள்ளது. அதாவது பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம், எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்.காம் என அதே பட்டத்தின் பெயரில் அழைக்கலாம் என அறிவித்து உள்ளது. 

கிரெடிட்டும் ஆன்லைனும்

ஆனால் தேசிய கல்விக் கொள்கைப் படி உயர் கல்வியில் நான்காண்டு பட்டப் படிப்பும் அதில் தேவையின் போது சேருவதும் மற்றும் விலகுவதும் (Multiple Entries and Exits), ஒரே சமயத்தில் குறைந்த பட்சம் இரு வகை பட்டப்படிப்பு படிப்பதற்கான பல்துறைப் பட்டப் படிப்புகள்  துவங்குவதும் (Multidisciplinary Courses), கிரெடிட் பெறுவதற்கு ஆன்லைன் வழிக் கல்வி (On line Education) மூலம் கற்றுக் கொள்வதும் அனுமதிக் கப்பட்டுள்ளதற்கு ஏற்ப  புதிய பட்டங்களின் பெயர்கள் வடிவமைக்கப்பட இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறது. எடுத்துக்காட்டாக உயர் கல்விப் படிப்புக ளுக்கு உரிய கிரெடிட் பெற வேண்டும் எனப் பரிந்து ரைத்துள்ளது. ஒவ்வொரு படிப்புக்கும் கிரெடிட் (Credit)  மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கிரெ டிட்டுகளை உரிய காலத்திற்கு முன் பெற்றுவிட்டாலும் உரிய பட்டம் வழங்கப்படும் என்று கூறியுள்ளது.  அதன்படி பட்டப் படிப்பு, சான்றிதழ் பெறுவதற்கு 40, டிப்ளோமா பெறுவதற்கு 80, மூன்றாண்டு படிப்பிற்கு 120, நான்காண்டு படிப்பிற்கு 240, முத லாண்டு பட்ட மேற்படிப்புக்கு 40, இரண்டாண்டு பட்ட மேற்படிப்புக்கு 80,  மூன்றாண்டு ஆய்வுப் படிப்புக்கு 12 கிரெடிட்டுகள் என அறிவித்து உள்ளது. எம்.ஃபில் படிப்பு இனிமேல் இருக்காது என அறிவித்து உள்ளது. இதன் படி நான்காண்டு பட்டப் படிப்பில் சேர்ந்து முதல் வருடத்தில் விலகினால் சான்றிதழ் படிப்பு ஆக அறிவித்து  அதற்கு யுஜி சான்றிதழ் (UG Certificate), இரண்டாம் ஆண்டில் விலகினால் யுஜிபட்டயம்(UG Diploma) , மூன்றாம் ஆண்டில் யுஜி பட்டமும் (UG Degree) , நான்கு ஆண்டுகள் படித்து முடித்தால் யுஜி ஆனர்ஸ்(UG Honors)  என்ற பட்டமும் வழங்கப் பரிந்துரைத்துள்ளது. அந் தந்தத் துறையின் பாடப் பெயர்களையும் குறிப்பிட்டுக் கொள்ளலாம். அதே போல் முதலா மாண்டு பட்ட மேற்படிப்பு படித்து விட்டு விலகினால் பிஜி பட்டயம்(PG Diploma) எனவும், இரண்டாம் ஆண்டில் முடித்தால் எம்.எஸ் என்ற பட்டமும் வழங்கப்படும் என்கிறது.

அதே சமயத்தில் நான்காண்டு ஆனர்ஸ் (Hons) படிப்புகள் அதே பெயரில் தொடரலாம் எனவும் அறிவித்துள்ளது. நான்காண்டு பட்டப் படிப்பு முடித்த வர்களுக்கு பி.எஸ்ஸி/பிஎஸ் எனவும் ஓராண்டு, ஈராண்டு எம்.எஸ்ஸி படிப்பு முடித்தவர்களுக்கு எம்.எஸ்ஸி/எம்.எஸ் எனவும் பெயரிட்டுக் கொள்ளலாம் எனவும் பரிந்துரைத்துள்ளது. தொழிற்கல்வி படிப்ப வர்கள் பி.வோக். (B.Voc.), எம்.வோக். (M.Voc.) எனப் போட்டுக் கொள்ளலாம் என அறிவித்து உள்ளது 

இப்போது எழும் பிரச்சனைகள்

நமது நாடு பல்வேறு மாநிலங்கள் கொண்ட கூட்டமைப்பாகும். தேசிய கல்விக் கொள்கை கர்நாடக, கோவா மாநிலங்கள் தவிர பிற மாநிலங்களில் முழு மையாக அமலாகாத சூழலில் இந்தப் பரிந்துரை ஏற்புடையது தானா?  பல மாநிலங்கள் எவ்வாறு நான்காண்டு பட்டப் படிப்பை துவங்குவது, அதற்கான கட்டமைப்பை எவ்வாறு உருவாக்குவது, இதற்கான மனித வளத்தை எவ்வாறு உருவாக்குவது, எந்த வகையான பாடத்திட்டத்தை உருவாக்கிச் சான்றிதழ், பட்டயம், பட்டம் வழங்குவது எனப் பெருங்குழப்பத்தில் உள்ள போது இவற்றையெல்லாம் தீர்க்காமல் நான்காண்டு பட்டப் படிப்பைத் திணிப்பதற்காக செய்யும் குறுக்கு வேலையாகத்தெரியவில்லையா? ஏற்கனவேஇது போன்று திட்டமிடாது சிபிசிஎஸ் (CBCS) போன்ற பாடத்திட்டம் தோல்வி கண்டதும்,தற்போது அதை மாற்றி ஓபிஇ (OBE) என்ற முறையில் சீர்திருத்தம் கொண்டு வந்து அது பெரும் சிக்கலுக்குள்ளாகி உள்ளது. இது போன்று நான்காண்டு பட்டப் படிப்பும் சிக்கலில் மாட்ட வேண்டுமா? கேரளாவில் நான்காண்டு பட்டப் படிப்பை பட்ட மேற்படிப்புக் கல்வி நிறுவனங்களில் முதற்கட்டமாக, பரீட்சாத்தமாக அமலாக்கலாம் என அறிவித்து தற்போது இந்தக் கல்வியாண்டில் நிறுத்தி வைத்துள் ளது. இது போன்று அமல்படுத்தும் பொழுது பல அரசுக் கல்லூரிகளில் /உதவி பெறும் கிராமப்புறக் கல்லூரிகளில் பட்டமேற்படிப்பு இல்லாத போது நான் காண்டு படிப்புகள் துவங்கப்படாமல் ஏற்றத் தாழ்வு கள் அதிகரிக்க வாய்ப்பில்லையா? ஒரு சாரார் பி.எஸ்ஸி எனப் பட்டம் பெற்று வெளிவர மற்றொரு சாரார் பி.எஸ்.(B.S), எம்.எஸ் (M.S) எனப் பட்டம் பெற்று வருவது இளம் தலைமுறையினரிடம் தாழ்வு மனப் பான்மையை வளர்க்காதா?

தனியாரின் வர்த்தகத்துக்கே  வழி வகுக்கும்

மாநிலங்கள் முடிவெடுக்காத சூழலில் மாநிலங்க ளில் உள்ள தனியார் பல்கலைக் கழகங்கள் ஏற்கனவே நான்காண்டு பட்டப் படிப்பை ஆரம்பித்து தங்கள் வர்த்தகத்தை ஆரம்பித்து விட்டன. சில தனியார் பல்கலைக்கழகங்கள் கல்விக் கொள்கையில் கூறியபடி பேச்சலர் ஆஃப் லிபெரல் ஆர்ட்ஸ் (BLA) என்ற பெயரில் விளம்பரம் கொடுத்து ஆட்களைச் சேர்த்து ஏற்கனவே வர்த்தகத்தை ஆரம்பித்து விட்டன.  இந்தப் பரிந்துரையும்  தனியார் பல்கலைக் கழகங்க ளுக்கு வர்த்தகத்தை  பெருக்குவதற்கு  வாய்ப்பாக அமையாதா? உயர்கல்வியில்  எப்போதும் சேரலாம், எப்போதும் விலகலாம் என்று இந்தக் கொள்கை உள்ளது. குறிப்பாக தில்லியில் சில கல்வி நிறுவனங்களில் ஆரம்பிக்கப்பட்ட நான்காண்டு பட்டப்படிப்பில் பெரும்பான்மையோர் மூன்றாம் ஆண்டிலேயே விலகிச் சென்றுள்ளனர். இப்படி மாணவர்கள் முழு மையான கல்வி பெறாமல் விலகும் வாய்ப்பு இருப்ப தால் எவ்வாறு தற்போதுள்ள 23% உயர்கல்வி சேர்க்கை இலக்கை 2030க்குள் 50% ஆக்கும் எனத் தெரிய வில்லை.உரிய கிரெடிட்களை மட்டும் பெற்றால் போதும் உரிய பட்டங்களைப் பெறலாம் என்பது ஆன் லைன் கல்வியை ஊக்குவிக்கும் வழிமுறையாக இல்லையா? இதனால் நிறுவனம் சார் முறைசார் கல்வி நிராகரிக்கப்பட்டு உயர்கல்வி நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் தெரியவில்லையா?  உயர்கல்விக்குத் தேவையான காலத்தை முடிக்கா மல் கிரெடிட் பெற்றவுடன் உரிய பட்டங்களைப் பெறலாம் என்பதும் ஆன்லைன் வழியாகக் கிரெடிட் பெறலாம் என்பதும் உயர் கல்வியின் தரத்தை எவ் விதத்தில் உயர்த்தும் என்பது தெரியவில்லை?  பி.எஸ்., எம்.எஸ். என மருத்துவம், பொறியி யல், தொழில் நுட்பம் போன்ற கல்விகளுக்கு வழங்கு வதை  எல்லாப் பட்டப் படிப்புகளுக்கும் வழங்குவது என்பது உயர் கல்வியை விளம்பரமாக்கி  கடைச் சரக்காக்கி வர்த்தகம் செய்ய வழி வகுக்காதா?

கட்டமைப்புகளை உருவாக்காமல்...

தற்போது ஐஐஎஸ்இஆர் (IISER), மும்பை, ஐஐஎஸ்சி (IISc), பெங்களூரு போன்ற கட்டமைப்பு, மனித வளம், பல்வகைத் துறைகள்,ஆராய்ச்சிக்கான முனைப்புகள்  கொண்ட கல்வி நிறுவனங்களில் அமலில் இருப்பதைப் போன்று மிகவும் சாதாரண வசதி வாய்ப்புகள் கொண்ட கிராமப்புறக் கல்லூரி களில் நான்காண்டு பட்டப் படிப்பைத் துவங்குவதும் புதிய வகைப் பெயர்களைக் கொண்ட பட்டங்கள் வழங்குவது தரமானதாக இருக்குமா?  மேற்சொன்ன கல்வி நிறுவனங்கள் போல் கட்டமைப்புகளை உரு வாக்குவது தானே முன்னுரிமையாக இருக்க வேண்டும். இதை விடுத்து பட்டங்களின் பெயர்களை மாற்றுவதால் என்ன பயன்? வெளிநாடுகளில் எம்.ஃபில் (M.Phil) போன்ற உயர்கல்விப் படிப்பு இன்றும்தொடரும் போது  தற்போது நமது நாட்டில் இல்லை என அறிவிப்பது ஏன் என்று தெரியவில்லை. மேலும் தமிழ்நாடு எம்.ஃபில் தொடரும் என்று அறிவித்துள்ள சூழலில் இது மாணவர்களைப் பாதிக்காதா? உயர்கல்வியில் கட்டமைப்பு, மனித வளம், பாடத்திட்டம், நிதி ஆகியனவற்றை மேம்படுத்தாமல் படிப்புகளுக்கு வழங்கும் பட்டத்தின் பெயரை மட்டும் மாற்றி வழங்கத் திட்டமிடுவது பேரு பெத்த பேரு,தாக நீலு லேது..என்ற தெலுங்கு பழமொழியை நினை வூட்டுகிறது.

கட்டுரையாளர் : மேனாள் பொதுச் செயலாளர்,  அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு