articles

img

“இறந்தவர்களின் சங்கம்” - கணேஷ்

கைல என்ன?” 

“நேத்து எங்க ஏரியாவுல போட்டிலாம் வெச்சாங்க.. ஓட்டப்பந்தயத்துல ஜெயிச்சு இந்த கப்பு வாங்குனேன் சார்..” 
“ஜெயிச்சு.. ஜெயிச்சு..” என்று பக்கத்தில் இருந்த மாணவர்கள் கிண்டலடித்தார்கள். 
“யாரு நடத்துனாங்க..” 
“குடியிருப்போர் சங்கம் சார்...” 
“பின்ன என்ன செத்துப்போனவங்களா சங்கம் வெச்சுக்குவாங்க...” மாணவர்களின் கிண்டலால் மறுபடியும் சிரிப்பலைகள் 
“செத்துப் போனவங்களும் சங்கம் வெச்சுருக்காங்க” என்று ஆசிரியர் சொன்னவுடன் அதே கிண்டல் பார்வையுடன் அவரை நோக்கித் திரும்பினார்கள். 
“அதெப்புடி சார்.. குடியிருந்தோர் சங்கம்னு பேயெல்லாம் சேந்து வெச்சுருக்குதா..?” 
அதற்குள் மற்றொரு மாணவர், “பேய் இருக்குனு அறிவியல் இன்னும் நிரூபிக்கலியே..” 
“இல்லாதத எப்புடி நிரூபிக்க முடியும்... பேய் இருக்குனு சொல்றவங்கதான் அறிவியல் பூர்வமா நிரூபிக்கனும்” - ஆசிரியர். 
“சரி சார்.. செத்தவங்க எப்புடி எந்திரிச்சு வந்து சங்கம் ஆரம்பிச்சாங்க..” 
“லால் பீகாரின்னு ஒருத்தர்.. வருமானம் போதாதுனால எட்டு வயசுலயே வேலைக்குப் போயிட்டாரு.. கொஞ்சம் காசு சேந்ததுனால, சொந்த ஊருக்குத் திரும்பி ஏதாவது தொழில் பண்ணலாம்னு நெனச்சாரு.. வங்கிக்குப் போயி தனது சொத்துக்கு நேரா கடன் வாங்குறதுக்கு விண்ணப்பிச்சாரு..”  
“அந்த விண்ணப்பத்த வாங்கி வெச்சுக்கிட்டு ரெண்டு நாள் கழிச்சு வரச் சொன்னாங்க... இவரும் போயிருக்காரு.. விண்ணப்பத்த திரும்பவும் கைல கொடுத்த மேலாளர், உங்களுக்குக் கடன் தர  முடியாது என்றார்.”
“ஏன் சார்.. - லால் பிகாரி” 
“உங்க சொத்து உங்க பேர்ல இல்ல.. அது மட்டுமில்ல, நீங்க உயிரோடயே இல்ல என்று மேனேஜர் சொல்ல, மயக்கம் போட்டு விழுந்தார் லால் பிகாரி.” 
தெளிந்த அவர், “உங்க முன்னாடிதான சார் நிக்கு
றேன்” என்றதற்கு, “இறப்பு சான்றிதழே இருக்கு” என்று
அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டார் மேலாளர். 
“உண்மைலயே அவரு இருக்காரா, இல்லையா சார்..?” 
“இருக்காரு.. ஆனா செத்ததா பதிவாயிருச்சு..” 
“அதெப்புடி பண்ணுனாங்க..” 
“இவரு வர மாட்டார்னு நெனச்சு இவரோட மாமாவே
இந்த வேலையப் பண்ணிருக்காரு.. லஞ்சம் குடுத்து இறப்பு சான்றிதழ் தயார் பண்ணியாச்சு. அவரோட சொத்த தன்னோட பேருக்கு மாத்திக்கிட்டாரு..” 
“அவர்தான் வந்துட்டாரே... சொத்த திரும்பவும் வாங்கிக்கலாமே..” 
“ஆனா, அவர்தான் செத்துட்டாரே.. சர்ட்டிபிகேட்டே இருக்குதே..” - மாணவர்களின் முகங்களில் குழப்ப ரேகைகள். 
“மோசடி நடந்துருக்கு.. லஞ்சம் புரையோடிப் போயிருக்கு. இந்தியாவுல ஊழல் அதிகமா இருக்குற மாநிலங்கள்ல உத்தரப்பிரதேசமும் ஒண்ணு.. டிரான்பரன்சி இன்டர்நேஷனல்னு ஒரு அமைப்போட ஆய்வுல உத்தரப்பிரதேசம் மூணாவது இடத்துல இருக்கு.. அதுக்கு முன்னாடி ராஜஸ்தானும், பீகாரும் இருக்கு..” 
“எங்க சார் ரொம்ப குறைவான ஊழல்..”
“கேரளாதான்..”  
தொடர்ந்தார் ஆசிரியர், “தான் உயிரோட இருக்குறத நிரூபிக்குறதுக்கு லால் பிகாரி என்னவெல்லாமோ பண்ணிப் பாத்தாரு.. மாமாவோட பையனக் கடத்திருக்காரு... போலீஸ் வந்து பிடிச்சா, தன் மேல வழக்குப் பதிவு பண்ணுவாங்க. அப்போ உயிரோட இருக்குறத நிரூபிச்சுரலாம்னு நெனச்சார்.. ஆனா, இவரோட தந்திரத்தப் புரிஞ்சுக்கிட்ட போலீஸ் இந்த விவகாரத்துல தலையிடவே இல்ல..” 
“போலீஸ் கிட்டயே திருடன்-போலீஸ் விளையாடுனாரோ சார்..” 
“ஆமா... அமைச்சர் கார் முன்னாடி விழுந்துருக்
காரு... எழுப்பி சும்மா அனுப்பி வெச்சுட்டாங்க..”  
“எப்ப சார் அவருக்கு மறுபடியும் உயிர் வந்துச்சு..” 
“புதுசா ஒரு மாவட்ட ஆட்சியர் வந்தாரு.. இவரோட கதையைக் கேட்டுட்டு அவருக்கு உயிரோட இருக்காருனு சொல்லி சான்றிதழ் கொடுத்தாரு..” 
“பரவாயில்ல... பல நாள் போராடுனதுக்கு பலன் கிடைச்சுருச்சு..” 
“பல நாள் இல்ல... பல வருஷம்.. 18 வருஷம்.. 1976லருந்து 1994 வரைக்கும் போராடிருக்காரு..  அது மட்டுமில்ல. இவர மாதிரி ஆயிரக்கணக்கானவங்க இருக்காங்கனு அவருக்குத் தெரிஞ்சுச்சு... எல்லாரையும் கூப்புட்டு சங்கம் ஆரம்பிச்சாரு..” 
“ஓ... இறந்தவங்க சங்கமா சார்..” 
“ஆமா... இறந்தவர்களின் சங்கம்னு பெயர் வெச்சாரு..”