articles

மதவாத ஆட்சியை தூக்கி எறிவோம்! - க. பொன்முடி ,உயர்கல்வித்துறை அமைச்சர்

தமிழ்நாட்டில் சமூக சமத்துவத்தையும் பொருளாதார சமத்துவத்தையும் ஒன்றி ணைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த மாநாட்டை நடத்துகிறது. சமூக நீதி,  பொருளாதார நீதி ஆகிய இரண்டையும் இணைத்து  ஆட்சி நடத்தி வருகிறது திமுக. இதனால் தான் இந்த இரு கட்சிகளும் ஒரு அணியாகச் செயல்பட்டு வருகின்றன. இதற்குக் காரணம் கொள்கை அடிப்படையிலான ஒற்றுமையாகும். நானும், கே.எஸ்.அழகிரியும், கே.பால கிருஷ்ணனும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது அரசியல் சார்புடையவர்களாக சமூக சமத்து வம், பொருளாதார சமத்துவம் குறித்து கேட்டு வளர்ந்தோம். பெரியார் கொள்கை, மார்க்சிய சிந்தனைகளை வளர்த்துக் கொண்டோம். அந்த அடிப்படையிலும் அதே உணர்வோடும் இந்த மாநாட்டில் பங்கேற்று இருக்கிறோம். பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு புகார் அளிக்க திமுக  அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள் ளது. இங்கே பேசிய பலரும் சில இடங்களில் இன்னமும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்தது உள்ளிட்ட பலதையும் சுட்டிக்காட்டினார்கள். அந்த உண்மைகளை நான் ஒருபோதும் மறைக்க வில்லை. இன்னமும் கூட சாதிய வெறித்தனம் சில  இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

பட்டியலின, பழங்குடி மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது திமுக  அரசு. குறிப்பாக தனித்துறையை உருவாக்கி யதும், தூய்மைப் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைத்தது. தேநீர் கடைகளில் இரட்டைக் குவளை முறைகளை ஒழிக்கவும் மனிதக் கழிவு களை மனிதனே அள்ளுவதை தடுக்கவும் தனி சட்டம் கொண்டு வந்ததும், பெரியார் சமத்துவ புரங்களை அமைத்துக் கொடுத்ததும் கலைஞர் ஆட்சிதான். பட்டியலின மக்களுக்கு இலவசமாக வீடுகளை கட்டிக் கொடுப்பதற்கு வீட்டு வசதி கழகத்தை உருவாக்கியதும் திமுக அரசு தான் . சாதி மறுப்பு திருமணங்களை சட்டப் பூர்வமாக அங்கீகரித்ததும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அதிகரித்து கொடுத்ததும் திமுக அரசு தான். பட்டியலின, பழங்குடி மக்கள் அனை வருக்கும் முதலமைச்சர் எடுக்கும் சிறப்பான திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும். தோழமைக் கட்சிகள் இதற்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும். எதற்காக என்றால், நாட்டில் மதவாதத்தையும் சாதி வெறியையும் தூண்டிவிடும் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சிக்கு வருகிற மக்களவைத் தேர்தலில் ஒரு முடிவு கட்ட வேண்டும். இதற்காக தமிழ்நாட்டில் உள்ள கட்சி கள் அனைத்தும் ஓரணியில் இணையவேண்டும்.