மதுரையில் கம்யூனிஸ்ட் இயக்கம் என்பது இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றுடன் பின்னிப்பிணைந்தது, பிரிக்க முடியாதது. தேச விடுதலைக்காக நாட்டின் சுதந்திரத்திற்காக மதுரை கம்யூனிஸ்டுகள் செய்த தியாகம் அளப்பரியது. அது உப்புச் சத்தியாகிரகத்திலிருந்து துவங்குகிறது. 1930ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகத்தில் மதுரையில் இளம் தேசபக்தர் எம்.ஆர்.எஸ். மணி பங்குபெற்றார். அவர் 1940ஆம் ஆண்டில் மதுரையில் உரு வாக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் குழுவின் உறுப்பினராவார். அதே 30ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியலிலும் அந்நிய துணிக்கடை மறியலிலும் இளைஞர் ஐ.மாயாண்டிபாரதி போன்றோர் தீவிரப் பங்கேற்றனர். சிறிதுகாலத்தில் அவரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற எம்.எஸ்.எஸ்.மணி, கன்னையா, எம்.எம்.மாணிக்கம், ஏ. செல்லையா, கே.பி.ஜானகி, அவரது கணவர் எஸ்.குருசாமி போன்றோர் 1930ஆம் ஆண்டுகளிலேயே மதுரையில் சுதந்திரப்போராட்ட இயக்கத்தில் பெரும் தூண்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1942ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் மும்பையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானத்தை இயற்றியது. எட்டாம் தேதி இரவிலேயே மகாத்மா காந்தி உள்ளிட்ட தலை வர்கள் கைது செய்யப்பட்டனர். ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் மக்கள் பெரும் கிளர்ச்சி யில் இறங்கினர். தந்திக் கம்பங்கள் பிடுங்கி எறியப்பட்டன. அரசாங்க அலுவலகங்கள் கொளுத்தப்பட்டன. கோவை சூலூரி லிருந்த விமான படைத்தளம் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. ஆங்கிலேய அரசாங்கம் கண்மூடித்தனமான அடக்குமுறையை மக்கள் மீது ஏவியது. மதுரையில் நடைபெற்ற சம்பவங்களில் ஏராளமான மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்றுவரை எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது யாருக்கும் தெரி யாது. பெரும் அடக்குமுறை காரணமாக மதுரையில் காங்கிரஸ் இயக்கம் ஒடுங்கிப் போனது. கொடிபிடித்து முழக்கங்கள் எழுப்பி தெருக்களில் வர காங்கிரஸ்காரர்கள் யாரும் முன்வரவில்லை. இந்தச்சூழலில்தான் மதுரை யில் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஊழியர்களைத் திரட்டி தேசத் தலைவர்களை விடுதலை செய். காங்கிரஸ் மீது அடக்குமுறையை நிறுத்து என்று ஒரு பெரிய இயக்கத்தை நடத்தியது. எந்த ஒரு காங்கிரஸ்காரரும் தலைவர்களை விடு தலை செய் என்று கேட்டு ஒரு ஊர்வலம் நடத்தவோ ஆர்ப்பாட்டம் நடத்தவோ முன்வர வில்லை. அத்தகைய அடக்குமுறை நிலைமை களில் காங்கிரஸ் கட்சிக்காக வாதாடியது கம்யூ னிஸ்ட் கட்சி மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது. 1946ஆம் ஆண்டில் காஷ்மீருக்குச் சென்ற ஜவஹர்லால்நேரு அங்கே கைது செய்யப் பட்டார். இந்தத் தகவல் வெளியானதும், மதுரை அப்படியே ஸ்தம்பித்தது. முழு ஹர்த்தால் நடை பெற்றது. ஹார்வி மில் தொழிலாளிகள் அப்படியே வெளிநடப்பு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த மில் நிர்வாகம் வி.கார்மேகம், எம்.முனியாண்டி உள்ளிட்டு இளம் கம்யூ னிஸ்டுகளை வேலைநீக்கம் செய்தது. காங்கிரஸ் தலைவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கம்யூனிஸ்டுகள் இத்தகைய தியாகங்களை புரிந்தனர் என்பது இதன்மூலம் நன்கு விளங்கும். அதேபோன்று 1946ஆம் ஆண்டில் மகத்தான கடற்படை எழுச்சி நடைபெற்ற போது மதுரையில் அந்தக் கப்பற்படை வீரர் களுக்கு ஆதரவாக மாபெரும் வேலை நிறுத்தமும் கதவடைப்பும் நடத்தப்பட்டன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள் தெருக்களில் இறங்கி வந்து கப்பற்படை வீரர்களுக்கு ஆதரவாக மாபெரும் கண்டன முழக்கத்தை எழுப்பினர்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்திய தேசிய இயக்கத்தின் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் மதுரையின் கம்யூனிஸ்ட் இயக்கம் தன் பிரதிபலிப்பை வெளிப்படுத்தி தேசிய இயக்கத்திற்கு துணை நின்றது. அதேபோன்று 1940ஆம் ஆண்டு களில் நாடெங்கும் இந்து - முஸ்லிம் கலவரங்கள் பரவியபோது மதுரையில் கம்யூ னிஸ்ட் இயக்கம் தனது தோழர்களைத் திரட்டி உறுதியாக நின்று மதக்கலவரங்களைத் தடுத்தது. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளித்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், மதுரையில் ஆலைகளில் வேலை செய்து வந்த முஸ்லிம் தொழி லாளர்கள் வேலைக்கு வர முடியாமல் அச்சத்தில் இருந்தபோது கம்யூனிஸ்ட் கட்சி தனது ஊழியர்களை களம் இறக்கி அவர்களை பணியிடங்களுக்கு அழைத்து வந்து திருப்பி அழைத்துச் சென்றது. இதைப்போன்று எண்ணற்ற சம்பவங்களை உதாரணம் சொல்ல முடியும். மதுரையில் கம்யூனிஸ்ட் இயக்கம் என்பது ஆழமான வேர்களைக் கொண்டது. அதன் வேர்கள் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் ரத்தம் சிந்தி வளர்க்கப்பட்டவை, அதை யாரும் சுலபமாக அகற்றிவிட முடியாது.
1942ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் மும்பையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானத்தை இயற்றியது. எட்டாம் தேதி இரவிலேயே மகாத்மா காந்தி உள்ளிட்ட தலை வர்கள் கைது செய்யப்பட்டனர். ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் மக்கள் பெரும் கிளர்ச்சி யில் இறங்கினர். தந்திக் கம்பங்கள் பிடுங்கி எறியப்பட்டன. அரசாங்க அலுவலகங்கள் கொளுத்தப்பட்டன. கோவை சூலூரி லிருந்த விமான படைத்தளம் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. ஆங்கிலேய அரசாங்கம் கண்மூடித்தனமான அடக்குமுறையை மக்கள் மீது ஏவியது. மதுரையில் நடைபெற்ற சம்பவங்களில் ஏராளமான மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்றுவரை எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது யாருக்கும் தெரி யாது. பெரும் அடக்குமுறை காரணமாக மதுரையில் காங்கிரஸ் இயக்கம் ஒடுங்கிப் போனது. கொடிபிடித்து முழக்கங்கள் எழுப்பி தெருக்களில் வர காங்கிரஸ்காரர்கள் யாரும் முன்வரவில்லை. இந்தச்சூழலில்தான் மதுரை யில் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஊழியர்களைத் திரட்டி தேசத் தலைவர்களை விடுதலை செய். காங்கிரஸ் மீது அடக்குமுறையை நிறுத்து என்று ஒரு பெரிய இயக்கத்தை நடத்தியது. எந்த ஒரு காங்கிரஸ்காரரும் தலைவர்களை விடு தலை செய் என்று கேட்டு ஒரு ஊர்வலம் நடத்தவோ ஆர்ப்பாட்டம் நடத்தவோ முன்வர வில்லை. அத்தகைய அடக்குமுறை நிலைமை களில் காங்கிரஸ் கட்சிக்காக வாதாடியது கம்யூ னிஸ்ட் கட்சி மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது.
1946ஆம் ஆண்டில் காஷ்மீருக்குச் சென்ற ஜவஹர்லால்நேரு அங்கே கைது செய்யப் பட்டார். இந்தத் தகவல் வெளியானதும், மதுரை அப்படியே ஸ்தம்பித்தது. முழு ஹர்த்தால் நடை பெற்றது. ஹார்வி மில் தொழிலாளிகள் அப்படியே வெளிநடப்பு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த மில் நிர்வாகம் வி.கார்மேகம், எம்.முனியாண்டி உள்ளிட்டு இளம் கம்யூ னிஸ்டுகளை வேலைநீக்கம் செய்தது. காங்கிரஸ் தலைவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கம்யூனிஸ்டுகள் இத்தகைய தியாகங்களை புரிந்தனர் என்பது இதன்மூலம் நன்கு விளங்கும். அதேபோன்று 1946ஆம் ஆண்டில் மகத்தான கடற்படை எழுச்சி நடைபெற்ற போது மதுரையில் அந்தக் கப்பற்படை வீரர் களுக்கு ஆதரவாக மாபெரும் வேலை நிறுத்தமும் கதவடைப்பும் நடத்தப்பட்டன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள் தெருக்களில் இறங்கி வந்து கப்பற்படை வீரர்களுக்கு ஆதரவாக மாபெரும் கண்டன முழக்கத்தை எழுப்பினர்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்திய தேசிய இயக்கத்தின் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் மதுரையின் கம்யூனிஸ்ட் இயக்கம் தன் பிரதிபலிப்பை வெளிப்படுத்தி தேசிய இயக்கத்திற்கு துணை நின்றது. அதேபோன்று 1940ஆம் ஆண்டு களில் நாடெங்கும் இந்து - முஸ்லிம் கலவரங்கள் பரவியபோது மதுரையில் கம்யூ னிஸ்ட் இயக்கம் தனது தோழர்களைத் திரட்டி உறுதியாக நின்று மதக்கலவரங்களைத் தடுத்தது. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளித்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், மதுரையில் ஆலைகளில் வேலை செய்து வந்த முஸ்லிம் தொழி லாளர்கள் வேலைக்கு வர முடியாமல் அச்சத்தில் இருந்தபோது கம்யூனிஸ்ட் கட்சி தனது ஊழியர்களை களம் இறக்கி அவர்களை பணியிடங்களுக்கு அழைத்து வந்து திருப்பி அழைத்துச் சென்றது. இதைப்போன்று எண்ணற்ற சம்பவங்களை உதாரணம் சொல்ல முடியும். மதுரையில் கம்யூனிஸ்ட் இயக்கம் என்பது ஆழமான வேர்களைக் கொண்டது. அதன் வேர்கள் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் ரத்தம் சிந்தி வளர்க்கப்பட்டவை, அதை யாரும் சுலபமாக அகற்றிவிட முடியாது.