ஏற்ற தாழ்வான சமூகத்தில் ஒடுக்கு முறைகளும், உழைப்பு சுரண்டலும் எல்லா இடங்களிலும் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் இதில் மிக அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் பட்டியல் சாதி மக்களும், பழங்குடியினரும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. பழங்குடி மக்கள் மலைப்பகுதிகளிலும், சமவெளி பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையில் வாழ்நிலையில், எதிர்கொள்ளும் சவால்களில், கோரிக்கைகளில் வித்தியாசம் இருக்கிறது. இருப்பினும் உள்ள 37 பட்டியல் பழங்குடியினரும் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் அமைப்பாக திரண்டு போராடுவதன் மூலம் தான் இம்மக்களின் குரல் ஆட்சியாளர்களை எட்டும். அந்த வகையில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றிய காலந்தொட்டு மக்கள் அனைத்து விதமான சுரண்டல்களில் இருந்தும், விடுதலை பெற வேண்டும் என்பதற்காக பாடுபட்டு வந்திருக்கிறது. அதிகார வர்க்கத்தினராலும், ஆதிக்க சாதியினராலும் ஒடுக்குமுறைக்கு ஆளாவது தொடர்கிறது. பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதும், செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள், கல்குவாரிகளில் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதும் நீடித்துக் கொண்டுள்ளது. எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருப்பதும். வாழ்வாதாரத்திற்காக இதன் உரிமையாளர்களை சார்ந்திருக்க வேண்டிய நிலையும், விழிப்புணர்வு இல்லாததும் இதற்கு முக்கிய காரணமாகும். இத்தகைய பிரச்சினைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் வெகுஜன அமைப்பான தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் முத்திரை பதிக்கத்தக்க வகையில் பணியாற்றி இருக்கிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
வாச்சாத்தி கொடூரம்
வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை சேர்ந்து வாச்சாத்தி கிராமத் தையே சூறையாடி, 18 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப் பட்டு, சிறை, சித்திரவதை என எண்ணற்ற கொடுமைகளுக்கு மக்கள் ஆளாக்கப் பட்டதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது கம்யூனிஸ்ட் இயக்கம். 19 ஆண்டு காலம் சட்டப் போராட்டத்தை நடத்தி அம்மக்களுக்கு நீதியும், நிவாரணமும் பெற்றுத்தந்ததும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்ததும் உலக வரலாற்றில் இடம்பெற்ற நிகழ்வாகும். செங்கொடி இயக்கம் தலையிடா மல் போயிருந்தால் பொய் வழக்கில் அம்மக்கள் தான் சிறைத் தண்டனைக்கு உள்ளாகி இருப்பார்கள். கோவை மாவட்டம், சின்னாம்பதி கிராமத்தில் இருளர் பழங்குடி சமூகத்தை சார்ந்த இரு பெண்களை துணை ராணுவப் படையைச் சேர்ந்தவர்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய பிரச்சனையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலையிட்டு போராடியதன் விளைவாக நீதிபதி பானுமதி தலைமை யிலான விசாரணை ஆணையம் வழக்கை விசாரித்தது. பாதிக்கப்பட்ட பெண் களுக்கு இழப்பீடு பெற்றுக் கொடுத்தது, குற்றம் நடந்தது உண்மை என்று விசாரணை அறிக்கையில் ஆணித்தரமாக குறிப்பிட்ட பிறகும், குற்றவாளி களுக்கு தண்டனை வழங்கப்படவில்லை.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் காவல்துறையினரால் பழங்குடி இருளர் இனத்தைச் சார்ந்த பெண்கள் ஐந்து பேர் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பிரச்சனையில் வலுமிக்க போராட்டத்தை நடத்தியது. இப்படி தமிழ்நாடு முழுவதும் பழங்குடிப் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து போராட்டத்தை சமரசமின்றி நீடித்து நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்து, அம்மக்களுக்கு நம்பிக்கையும், பாதுகாப்பையும் உறுதி செய்தது செங்கொடி இயக்கம். மலைகளில் வாழும் பழங்குடியினர் மீது வனத்துறையும், சமவெளிகளில் வாழும் குறவர், இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது காவல்துறையும், திருடர்கள் என்று பழி சுமத்தி வழக்கு போட்டு சிறையில் தள்ளுவதை வழக்கமாக வைத்திருந்தனர். குற்றச்செயல்களில் வழக்கமாக ஈடுபடுபவர் கள் என்று சொல்லி காவல்துறை மற்றும் வனத்துறையினர் இம்மக்களை கைது செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த மனித உரிமை மீறல். சட்டவிரோத செயல்களுக்கு எதிராக எண்ணிலடங்கா போராட்டங் களை நடத்தி அதிகார வர்க்கத்தினரின் கொடுமைகளைக் குறைத்ததில் பெரும் பங்காற்றி இருக்கிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், பழங்குடி யினர் ஆணையம் போன்றவையெல்லாம் இருந்தாலும் இப்பகுதி மக்களுக்கு அது பாதுகாப்பை வழங்கவில்லை என்பதே உண்மை. மாறாக, வீடுகளில் மக்கள் இப்போது நிம்மதியாக உறங்குகிறார்கள் என்றால் அதற்கு காரணம் செங்கொடி இயக்கத்தின் தோழர்களும், அவர்கள் செய்த தியாகமும்தான். நிலத்திலிருந்து வெளியேற்றம், குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றம் போன்றவை சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. வாழ்வா தாரத்தை, வாழும் உரிமையை இழந்து சொந்த மாநிலத்திலேயே அகதி களாக வாழும் அவல நிலைமைக்கு மக்கள் உள்ளாக்கப்பட்டனர். இதை தடுத்து நிறுத்துவதற்கான போராட்டங்களும் நடைபெற்று வந்தன.
சட்டம் வந்தாலும்...
இந்த நெடிய போராட்டத்தின் விளைவாகவும், 2004 ஆம் ஆண்டு இடதுசாரிகளின் ஆதரவுடன் தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட கட்டாயமும் சேர்ந்து விளிம்பு நிலை மக்களுக்கு சாதகமான பல புதிய சட்டங்கள் இயற்றப்பட காரணமாக இருந்தது. அதில் ஒன்றுதான் “பழங்குடியினர் மற்றும் வனத்தை சார்ந்து வாழும் இதர சமூகத்தினருக்கு காடுகளின் மீது உரிமைகள் வழங்கும் சட்டம் 2006” இச்சட்டத்திற்கான விதிகள் 2008 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துவிட்டது. இந்த சட்டத்தை வடிவமைப்பதிலும், நிறை வேற்றச் செய்ததிலும் இடதுசாரிகளின் பங்கு ஈடு இணையற்றது. 15 ஆண்டு கள் கடந்துவிட்டன. ஆனால் சட்டத்தின் பலன் மக்களைச் சென்றடைய வில்லை. சட்டத்தை இயற்றிய அரசுக்கும், அதை நடைமுறைப்படுத்தும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கும் இதில் கடுகளவும் அக்கறை இல்லை. அதிலும் ஆதிவாசி மக்களுக்கு நிலத்தை உரிமையாக்குவது என்றால் அதை எவ்வாறு சகித்துக் கொள்ள முடியும் என்ற வகையில் தான் வனத்துறை அதி காரிகள் நடந்து கொள்கின்றனர். தமிழ்நாட்டில் சட்டப்படி உரிமை கோரி வந்த மனுக்களே சுமார் 40000 தான். இதில் சுமார் 8000 பேருக்கு மட்டும் தான் நில உரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே இச்சட்டத்தை தீவிரமாக அமல்படுத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, இம்மாநாட்டுக் கோரிக்கைகளில் முக்கியமான ஒன்று!
இதற்கிடையில், சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் ஒன்றிய பாஜக அரசு பல்வேறு திருத்தங்களையும், அரசு ஆணைகளையும் அடாவடித் தனமாக வெளியிட்டுள்ளது. வன உரிமைச் சட்டம் 2006 ன் மூலம் வனம் மக்களுக்கு சொந்தம் என்று மாறியது. இப்போது பாஜக ஆட்சியில் வனம் பெருமுதலாளிகளுக்கு சொந்தம் என்றாகிவிடும் போல் உள்ளது. ஆம்! மலைகளில் உள்ள இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் கொள்ளையடித்து கொழுத்த லாபம் ஈட்டும் வகையில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. வனத்தையே தங்களின் உலகமாக கருதி வாழும் மக்களை வெளியேற்ற சட்டம் எனும் ஆயுதத்தை அது தயாரித்துள்ளது. நாங்கள் வாழும் மலை, எங்கள் மலை, அதில் அந்நியர் வந்து ஆக்கிர மிப்பது என்ன நீதி என்ற ஆவேசக் குரல் எதிரொலிக்கச் செய்ய வேண்டும். கண்மூடித்தனமான பெரு முதலாளிகளின் ஆதரவு கொள்கை காரணமாக, நாட்டின் நலம், மக்களின் நலன்களை காவு கொடுக்கவும் பாஜக தயங்குவ தில்லை என்பதை அதன் பல்வேறு செயல்கள் மூலம் பார்த்து வருகிறோம். எனவே, ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக அணி திரண்டு போர்க்கோலம் பூணுவது அவசியம்.
சான்றிதழ் பெற படும்பாடு
பழங்குடியினர் இனச் சான்றிதழ் கோரி போராட்டங்கள் நடக்காத நாளே இல்லை என்று சொல்லலாம். “போலியானவர்கள் சான்றிதழ் பெற்று பழங்குடி யினருக்கான சலுகைகளை பெற்று வருகின்றனர்; எனவே, அரசு எச்சரிக்கை யாக இருக்கிறது” என்பது முழு உண்மை அல்ல. இவனெல்லாம் சான்றிதழ் பெற்று நாளைக்கு அதிகாரியாக வந்துவிட்டால் இவனுக்கு கீழ் நம்மாட்கள் வேலை செய்ய வேண்டுமே என்ற அதிகாரிகளின் மேலாதிக்க கண்ணோட்டம் தான் பழங்குடிகளின் பல தலைமுறைகளை அழித்துக் கொண்டுள்ளது. சான்றிதழ் வழங்குவதற்கான தெளிவான வழிகாட்டுதல் உள்ளது. ஆனால் அதிகாரிகள் நேர்மையாகவும், நடுநிலையோடும் தங்களது கடமையைச் செய்யாதது தான் முக்கியக் காரணம். அரசு உத்தரவில், காலவரையறை இருந்தாலும் காலவரையறையே இல்லாமல் மனுக்களை கிடப்பில் போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இல்லையென்றால், பல்லாயிரக்கணக்கான ரூபாய் லஞ்சத்தை எதிர்பார்த்திருப்பது; இதற்கு எதிராக சான்றிதழுக்காக அந்த அதிகாரிகளை நம்பி இருக்கும் ஏழையால் எப்படி கேள்வி எழுப்ப முடியும்? ஒவ்வொருவருக்கும் பிறப்புச் சான்றிதழ், ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என பல அட்டைகள் வழங்க முடிகிற ஆட்சியாளர் களால், பழங்குடியினர் சான்றிதழ் மட்டும் வழங்க முடியவில்லை என்றால் ஏற்கத்தக்கதா?
மற்றொரு கொடுமை, உண்மையில் பழங்குடியினராக இருந்தும், பட்டியலில் சேர்க்கப்படாத காரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கனவே பட்டியலில் இருந்து, தவறாக பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்கள் (மலைப் புலையன்); பட்டியலில் இருந்தும் மாவட்ட பிரிவினை காரணமாக பாதிக்கப் பட்டவர்கள் (ஈரோடு மலையாளி); பழங்குடியினராக இருந்தும் பல்வேறு பட்டியல்களிலும் வைக்கப்பட்டுள்ள காரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் (குறவர், குறுமன்ஸ்) இவைகளெல்லாம் தீர்க்க முடியாத பிரச்சனைகள் அல்ல மத்திய, மாநில அரசுகளின் அலட்சியம், அக்கறையின்மை தான் முக்கியக் காரணம். பல்வேறு சிரமங்களுக்கிடையே சான்றிதழ் பெற்று படித்து முடித்தாலும் வேலையின்மை என்பது பூதாகரமாக முன்னே வந்து நிற்கிறது. ஆட்சிகள் கடைபிடிக்கும் தாராளமயக் கொள்கையின் காரணமாக நிரந்தர வேலைகள், அரசு வேலை வாய்ப்பு என்பது பறிக்கப்படுகிறது. இட ஒதுக்கீடு என்பது பொய்யாய், பழங்கதையாய் ஆகிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்து கிறார்கள். தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கவும் சட்டமியற்ற மறுக்கிறார்கள். பட்டியல் சாதியினர், பழங்குடியினருக்கான பல லட்சம் பின்னடைவு காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் பல்லாண்டு காலமாக காலியாக வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான நீதிமன்றங்களின் உத்தரவு கள் ஒட்டடை படிந்து கிடக்கிறது. கௌரவமான வேலை என்பது கனவாகப் போய்க் கொண்டிருக்கிறது. வேலையில் இருப்பவர்களையும், வேலையை விட்டு தூக்கி எறிகிற காலமாக இருக்கிறது. இதனால் நிச்சயமற்ற ஒரு நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள் உலகின் மிக முக்கியமான பிரச்சினையாக வேலையின்மை என்பது முன்னுக்கு வந்திருக் கிறது. இதிலிருந்து பழங்குடியினர் மட்டும் தனித்து தப்பி விட முடியாது.
அணி திரட்டுவோம்!
பழங்குடியினர் பல்வேறு வகையான புறம்போக்குகளில், குந்த சொந்த மனை இன்றி வாழ்ந்து வருகின்றனர். அதிலிருந்து எப்போது அகற்றப்படு வோமோ என்ற அச்சத்திலேயே வாழ வேண்டிய அவல நிலை. அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு சொந்த வீடு என்பது நாகரிகமான சமுதாயத்தில் அவசியமான ஒன்று. ஆனால், விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆனதற்குப் பிறகும், பல கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு கனவாகவே இருக்கிறது. பல்வேறு வீடுகட்டும் திட்டங்கள் பலபத்தாண்டுகளாக நடைமுறையில் இருந்தாலும் தீராத பிரச்சனையாக தொடர்கிறது. உணவு, உடை, இருப்பிடம் இவை மூன்றையும் உறுதி செய்ய வருமானம் அவசியம். அதற்கு கண்ணியமான வேலை என்பது முக்கியம். அதை உறுதி செய்ய வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.