articles

img

பாலஸ்தீன மக்களுக்கு ஒருமைப்பாட்டை வெளிப்படுத்திடுவோம்!

பெஞ்சமின் நேதன்யாஹூ மிகவும் மதவெறி பிடித்த வலதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணி அரசாங்கம் அமைத்ததிலிருந்து, சென்ற ஆண்டின் இறுதி வரையிலும், மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனர்க ளுக்கு எதிராக இஸ்ரேலிய ராணுவமும், யூதக் குடியிருப்பாளர்களும் தொடர்ந்து தாக்குதல்களைத் தொடுத்து வந்தனர், வருகின்றனர். மேற்குக் கரை என்பது 1967 யுத்தத் திற்குப்பின் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப் பட்ட பகுதி என்று சர்வதேசச் சட்டம் கூறிவரு கிறது. எனினும் இந்தச் சட்டத்தை மீறி,  நேதன்யாஹூ அரசாங்கம், இஸ்ரேலு டன் மேற்குக் கரையை இணைத்திடுவ தற்கான வேலைகளில் ஈடுபடுவோம் என்று அறிவித்திருக்கிறது.

சட்டவிரோதமாக குடியேற்றும் இஸ்ரேல்

பிப்ரவரி மத்தியில், இஸ்ரேலிய அரசாங்கம் மேற்குக் கரையில் சட்டவிரோதமான முறையில் ஒன்பது குடியிருப்புப் பகுதிகளுக்கு (settlements) அதிகாரம் அளித்திருக்கிறது. இங்கே புதியதாக 10 ஆயிரம் பிரிவுகளுடன் குடியி ருப்புகள் கட்டப்பட இருக்கின்றன. இஸ்ரேல் 1967 ஆக்கிரமிப்புக்குப் பின்னர், மேற்குக் கரையிலும், கிழக்கு ஜெருசலத்திலும் சுமார் 6 லட்சம் யூதர்க ளைக் குடியமர்த்திட, 140 குடியிருப்புப் பகுதிகளை (செட்டில்மெண்டுகளை)க் கட்டியிருக்கிறது. மேற்குக் கரையில் குடி யிருந்துவரும் பாலஸ்தீனர்களை விரட்டியடிப்பதற்காக, சட்டவிரோதமாக அங்கே குடியமர்த்தப்பட்டிருக்கும் யூதர் கள் மட்டுமல்லாது, இப்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மதவெறி வலதுசாரிக் கட்சிகளின் கூட்டணி அரசாங்கமும் வன்முறை வெறியாட்டங்களைத் தொடர்ந்து கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. இஸ்ரேலிய ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவப் பிரிவினர், பயங்கரவாதி களைக் கைது செய்வதாகக்கூறி, மேற்குக் கரையில் அமைந்துள்ள நகரங்களை தொடர்ந்து சோதனைகளுக்கு உட் படுத்தி வருகின்றனர். ஜனவரியில் ஜெனின் நகரில் நடைபெற்ற இத்தகைய சோதனை களின்போது பத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்களில் 61 வயது மூதாட்டி உட்பட அனைவருமே அநேகமாக அப்பாவி மக்களாவர். இதேபோன்று பிப்ரவரி 22 அன்று  நப்ளஸ் நகரில் நடைபெற்ற சோதனை யின்போது, 11 பாலஸ்தீனர்கள் இனப்படு கொலை செய்யப்பட்டார்கள்.மொத்தத் தில் 2023இல் கடந்த இரண்டு மாதங்க ளில் மட்டும் 62 பாலஸ்தீனர்கள் படு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதாவது சராசரியாக ஒவ்வொரு நாளும் ஒன்றுக்கு மேற்பட்ட பாலஸ்தீனர் கொல் லப்படுகிறார்.

ஐ.நா.தீர்மானத்தை  காலி செய்த அமெரிக்கா

விரக்தியின் எல்லைக்குத் தள்ளப் பட்டுள்ள பாலஸ்தீனர்களில் சிலர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில் பழி வாங்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். நப்ளஸ் தாக்குதலுக்குப்பின்னர் அதன் அருகில் உள்ள ஹூவாராவில் குடியமர்த் தப்பட்டுள்ள இரு யூத சகோதரர்கள் சுடப்பட்டனர். அதே நாளன்று, 400 யூதக் குடியமர்த்தப்பட்டவர்கள் சில இஸ்ரேல் ராணுவத்தினரின் தலைமையில் பாலஸ்தீனப் பகுதிகளைத் தாக்கினர். இதில் 30 வீடுகள் தீ வைத்துக் கொளுத் தப்பட்டன, 40 வீடுகள் சேதப்படுத்தப் பட்டன, 100 கார்கள் அடித்து நொறுக்கப் பட்டன. பாலஸ்தீனர் ஒருவர் கொல்லப் பட்டார், மற்றொருவர் படுகாயத்திற்கு ஆளாகியுள்ளார். இதில் மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவ்வாறு பாலஸ்தீனர்கள் அழித்து ஒழிக்கப்படும் வன்முறை வெறியாட்டங்களை இஸ்ரேல் கூட்டணி அரசாங்கத்தில் மிக முக்கியமான நபராக இருப்பவர், சிவில் உரிமைக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள இனப்படுகொலை என்று நியாயப்படுத்தி இருப்பதாகும். அதே சமயத்தில், காஜா துண்டு (Gaza strip) ப்பகுதியில் வாழ்ந்துவரும் பாலஸ்தீனர்கள், சுற்றிலும் இஸ்ரே லால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டி ருப்பதுடன், வான் வழியாக தொடர்ந்து  குண்டுவீச்சு தாக்குதல்களுக்கு உள்ளாக் கப்பட்டு வருகின்றனர். இதனால் அங்கே வாழ்ந்துவரும் சுமார் 20 லட்சம் பேர் வாழ்க்கை கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இவ்வாறு இஸ்ரேல் அரசாங்கம், ஐ.நா.தீர்மானங்கள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, வெளிப்படையாகவே சட்டவிரோத குடியிருப்புகளை ஏற்படுத்து வதற்காகக் கட்டிடங்களைக் கட்டி வரும் நிலையில், பிப்ரவரி 14 அன்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் இஸ்ரேலின் கட்டு மானப் பணிகளையும், குடியிருப்புகள் விரி வாக்கத்தையும் வன்மையாக எதிர்த்து ஒருமனதாகத் தீர்மானம் ஒன்றை நிறை வேற்றி இருக்கிறது.  எனினும், அமெரிக்கா வின் தலையீட்டின் காரணமாக, இந்தத் தீர்மானம் புஸ்வானமாகிப் போனது.  

யூதவெறிக்கு ஆதரவாய் இந்துத்துவாவெறி

நாம் முந்தைய தலையங்கங்களில் குறிப்பிட்டிருப்பதைப்போல, காலங்கால மாக பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியா கடைப்பிடித்து வந்த ஆதரவு நிலைபாட்டிலி ருந்து பின்வாங்கிவிட்டது. இப்போது இஸ்ரேலிய ராணுவம் ஜெனின் மற்றும் நப்ளஸ் நகரங்களில் கட்டவிழ்த்து விட்டுள்ள இனப் படுகொலைகள் குறித்து எதுவுமே கூறவில்லை. மாறாக, இந்திய  அயல்துறை அமைச்சகத்தின் செய்தித்  தொடர்பாளர், ஜெருசலத்தில் யூதர்கள் கோவில் ஒன்றில் ஏழு யூதர்கள் கொல்லப் பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டித்தி ருக்கிறார்.  மேலும் அமெரிக்காவின் தலை மையிலான மத்திய கிழக்கு நான்கு நாடுக ளின் கூட்டணியான அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகள் கூட்டணியில் இணைந்திருக்கிறது. இஸ்ரேலின் இப்போதைய மதவெறி அணுகுமுறை யுடன் உள்ள நேதன்யாஹூ கூட்டணி அரசாங்கத்திற்கு, இந்தியாவில் உள்ள இந்துத்துவா வெறியர்களின் அரசாங்கம் முழு ஆதரவினை அளித்து வருகிறது. அதனால்தான், இந்தியாவில் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள்,  போராடும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதர வாக அணிதிரண்டு, ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியமாகும். அகில இந்திய சமாதான மற்றும் ஒருமைப்பாட்டு ஸ்தாபனம் (AIPSO-All India Peace and Solidarity Organi sation) மார்ச் 7இலிருந்து 11 வரையிலும் பாலஸ்தீன ஒருமைப்பாடு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று அறை கூவல் விடுத்திருக்கிறது. இந்தப் பிரச்சாரம்  வெற்றி பெறச் செய்திட, அனைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு, இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டும்.

(மார்ச் 1, 2023), 
தமிழில்: ச.வீரமணி