articles

img

திக்கெட்டும் பரவட்டும் தொழிலாளி வர்க்க உரிமைக்குரல் - ஆர்.சிங்காரவேலு

ஒரு தொழிலாளியின் ஆகப்பெரிய கனவு நிரந்தரமான கண்ணியமான வேலை வாய்ப்பு என்பதாகும். ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை அளிப்போம் என்ற பாஜகவின் தேர்தல் வாக்கு றுதி என்னவாயிற்று எனக் கேட்டதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இது ஜும்லா (சும்மா ஒரு பேச்சு க்கு) என்று பதில் அளித்தார். நம் நாட்டில் மனித வளம் உண்டு; இயற்கை வளம் உண்டு. ஆனாலும் இவற்றை முழுமையாக நாட்டின் முன்னேற்றத்திற்கு உகந்தாற் போல் பயன்படுத்துகிறோமா என்பது கேள்விக்குறியே. நம் நாட்டு மக்கள் தொகையில் இளைஞர்கள் அதிக விகிதாச்சாரத்தில் உள்ளனர். முறையான, விஞ்ஞானப்பூர்வமான கல்வி பெறும் வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. 1990களில் அமலுக்கு வந்த நவீன தாராளமய கொள்கைகளால் கல்வி, மருத்துவம் ,போக்குவரத்து, தொலைத் தொடர்பு, நிதித்துறை போன்றவை அனைத்திலும் தனியார் மயம் தலைவிரித்து ஆடுகிறது. ஆண்டில் 240 நாட்கள் பணி புரிந்தால் தொழிலாளி நிரந்தரம் ஆக்கப்பட வேண்டும் என்ற சட்டத்தை ஆளும்  வர்க்கங்கள் தொடர்ந்து உதாசீனப்படுத்தி வரு கின்றன.  நீம் (தேசிய வேலைவாய்ப்பு மேம்பாட்டு திட்டம்) என்பதன் மூலம் அப்ரண்டீஸ் பயிற்சியா ளர்களை உற்பத்தி பிரிவில் பணி செய்ய அனும திக்கிறார்கள். ‘குறிப்பிட்ட கால வேலை’ என்பது ஆலை களில் துவங்கி, ராணுவத்தில் ‘அக்னி வீர்’ திட்டம் வரை பரவியுள்ளது. நான்காண்டுகள் மட்டுமே ராணுவ வீரர்; பின்னர் இருண்ட எதிர்காலம் நோக்கி விழிப்பிதுங்கி நிற்கும் நிலை. 

தொற்று நோய் போல...

எங்கும் காண்ட்ராக்ட், எதிலும் காண்ட்ராக்ட் தொற்று நோய் போல் பரவி உள்ளது. அரசு துறைக ளில் பொதுத் துறைகளிலேயே காண்ட்ராக்ட் தொழி லாளர்களின் எண்ணிக்கை, நிரந்தரத் தொழிலா ளர்களின் எண்ணிக்கையை விட கூடி வருகிறது. நிரந்த ரத் தன்மையுள்ள பணிகளில் காண்ட்ராக்ட் முறை கூடாது என 1970 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட காண்ட்ராக்ட் சட்டம் கூறுகிறது.  இதை மீறும் தனி யார் கார்ப்பரேட் நிறுவனங்களை, முதலாளிகளை தட்டிக் கேட்க தார்மீக உரிமை அரசு பெற்றிருக்கிறதா என்றால், இல்லையே!  20 அல்லது அதற்கு மேற்பட்ட காண்ட்ராக்ட் தொழி லாளர்களை வைத்து வேலை வாங்கும் காண்ட்ராக் டர் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும். பிஎப், இஎஸ்ஐ, போனஸ் போன்ற சமூக பாதுகாப்பு திட்டங் களை அமலாக்க வேண்டும். ஒன்றிய அரசு 20 என்பதை 50 ஆக திருத்திக் கொள்ளலாம் என அனுமதிக்கிறது .

50 அல்லது அதற்கு மேலும் நூற்றுக்கணக்கான காண்ட் ராக்ட் தொழிலாளிகளை வைத்து வேலை வாங்கும் காண்ட்ராக்டர் 49 ,49 என தனித்தனி காண்ட்ராக்ட் என மாற்றினால் சட்ட அமலாக்கத்திலிருந்து அவர் முழு மையாக தப்பி விடுவார், அரசு பொதுத் துறையில் கூட வாழ்நாள் முழுவதும் காண்ட்ராக்ட் தொழிலாளி யாகவே பணிபுரிந்து ஓய்வு பெறும் துரதிர்ஷ்ட நிலை யைக் காண முடியும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட் டின்படி நிரந்தர தொழிலாளிக்கு சமமாக பணி புரியும் காண்ட்ராக்ட் தொழிலாளிக்கு சமமான ஊதியம் மறுக்கப்பட்டு வரும் கொடுமையை அரசு கண்டு கொள்வதில்லை. பல ஆலைகளில் வெவ்வேறான கேண்டீன்கள், வெவ்வேறான உணவு வகைகள், வெவ்வேறான விலைகளில் உணவு வழங்கப்படு கிறது. சமீபத்தில் மாநில அரசு மின்வாரியத்தில் பணி புரியும் நிரந்தர தொழிலாளருக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூலம் வழங்கியது. சென்ற ஒப்பந்தத்தில் காண்ட்ராக்ட் தொழிலாளருக்கு ஊதிய உயர்வு இருந்தது. தற்போதைய ஒப்பந்தத்தில் இல்லை. மின்வாரிய கேங்மன் தொழிலாளிக்கும் ஊதிய உயர்வு இல்லை .மேலும் ஊதிய ஒப்பந்தத்தில் ‘ரைட் சைஸிங்’- அதாவது ஒவ்வொரு குறிப்பிட்ட பணி யிடத்திலும் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை சரிப்படுத்துவது என்ற ஆட்குறைப்பிற்கு வித்திடும் ஷரத்து  இடம் பெற்றதால் சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வில்லை.

கேள்விக்குறியாகும்  எதிர்காலப் பாதுகாப்பு

சமூகப் பாதுகாப்பு முறை சார்ந்த தொழிலாள ருக்கு வருங்கால சேமிப்பு நிதி பிஎப், பென்சன் போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் உள்ளன. ஒன்றிய அரசு தனது நான்கு  தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள் மூலம்  நிர்வாகமும் தொழிலாளரும் விரும்பினால் பிஎப், ஈஎஸ்ஐ திட்டங்களிலிருந்து வெளியேறலாம் என்ற ஷரத்தை கொண்டு வருகிறது. போராடிப் பெற்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது? தனியார் இன்சூரன்ஸ், தனியார் மருத்துவமனைகள், தனியார் மருந்து உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒன்றிய அரசு பயணித்து வருகிறது . ஒன்றிய - மாநில அரசு ஊழியர்களுக்கு 2004 ஜனவரி முதல் புதிய பென்சன் திட்டம் அம லாக்கப்பட்டுள்ளது .பழைய பென்ஷன்  திட்டப்படி, ஊழியர் ஓய்வு பெறும்போது அவர் வாங்குகிற கடைசி மாத ஊதியத்தில் சரிபாதி பென்சனாக பெற்று வந்தார். ஊழியரின் பங்குத் தொகைக்கு இணையாக அரசு பிஎப் பங்குத்தொகை செலுத்துவதில்லை .அதற்கு மாறாக பென்ஷன் ஏற்பாடு .ஆனால் புதிய பென்ஷன்  திட்டத்தில் அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து பென்ஷனுக்காக 10% நிதி மாதா மாதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அரசும் பத்து சதவிகிதம் தனது பங்காக செலுத்துகிறது .60 வயதில் மொத்த பென்ஷன் சேமிப்பில் 60% ரொக்கமாக கிடைக்கும். 40% இன்சூரன்ஸ் கம்பெனிகளின்  பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். இதற்கு ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டும். முதலீடு நல்ல முறையில் லாபம் ஈட்டினால் நல்ல பென்ஷன். இவ்வளவுதான் பென்ஷன் என வரையறுக்கப்படவில்லை. பழைய பென்ஷன் திட்டத்தில் 40% பென்ஷனை ரொக்கமாக கம்யூட்டே ஷன் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் புதிய பென்ஷன் திட்டத்தில் இந்த வசதி இல்லை. ராஜஸ்தான், சத்தீஸ்கார், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில அரசுகள் பழைய பென்ஷன் திட்டத்தை அமலாக்க முடிவு செய்துள் ளன. மேற்கு வங்கத்தில் பழைய பென்ஷன் திட்டம்தான் அமலில் உள்ளது.

பாஜக அரசின் பெரும் துரோகம்

முறைசாரா தொழிலாளர்களின் சமூக பாது காப்பிற்காக அகில இந்திய சட்டம் 2008இல் நிறை வேற்றப்பட்டது .இதற்கு பிரதான காரணம் அன்றைய 62 இடதுசாரி எம்பிக்களின் நிர்ப்பந்தமே. மன்மோகன் சிங் அரசு ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் சட்ட அமலாக்கத்திற்காக நிதி ஒதுக்கியது. அனைத்து  தொழிற்சங்கங்களும் ஆண்டுக்கு ஒன்றிய அரசு முறைசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்புக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவிகிதம்- அதாவது ரூபாய் மூன்று லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன. இக் கோரிக்கை அனைத்து தொழிற்சங்க பொது வேலை நிறுத்தங்களில் இடம்பெற்று இருந்த முக்கிய கோரிக்கையாகும். பாஜக அரசு இதுவரை எந்தத் தொகையும் இதற்காக ஒதுக்கவில்லை. பல லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கும் ஒன்றிய அரசு,

வராக் கடன்  என்ற பெயரில் ரத்து செய்யும் ஒன்றிய அரசு, 38 கோடி முறைசாரா தொழிலாளிகளின் சமூகப் பாதுகாப்பிற்காக ஒரு பைசா கூட ஒதுக்காதது பெரும் துரோகம் அல்லவா? ‘இ-ஷ்ரம்’ என்ற- முறைசாரா தொழிலாளரை பதிவு செய்யும் நடைமுறை உச்சநீதிமன்ற ஆணை யின் அடிப்படையில் 2021 ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வந்தது .வெளி மாநில தொழிலாளர்களும் இதில் பதிவு   செய்யப்படுகின்றனர் .ஆனால் இது வரை இவர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களோ, சமூக பாதுகாப்பு நிதியோ ,பணப்பயன் விநியோக உள்கட்டமைப்போ எதுவும் ஒன்றிய அரசு ஏற்படுத்த வில்லை. பிரதான் மந்திரி சிரம் யோகி மந்தன் (PM-SYM) என்ற உருமாறிய அட்டல் பென்ஷன்  யோஜ னாவை அரசு அறிவித்துள்ளது. 18 முதல் 40 வயது வரை உள்ளவர் மட்டும் சேரலாம். மாதம் ரூபாய் 55 முதல் 200 வரை தொழிலாளி அரசுக்கு செலுத்த வேண்டும். 60 வயதில் ரூபாய் 3000 பென்ஷன். தற்போது 40 வயது உள்ள தொழிலாளி திட்டத்தில் சேர்ந்தால் அடுத்த 20 ஆண்டுக்கு அவர் மாதா மாதம் ரூ.200 அரசுக்கு செலுத்தி வந்து 20 ஆண்டு க்குப் பிறகு 3 ஆயிரம் பென்சனாக பெறுவார். அப்போது 3 ஆயிரம் என்பதன் உண்மை மதிப்பு வெகுவாக சுருங்கிவிடும்.

நலவாரியங்கள்

தமிழகத்தில் 18 முறை சாரா தொழிலாளர் நல வாரியங்கள் உள்ளன .16 நல வாரிய முத்தரப்பு குழுக்கள் இன்னமும் அமைக்கப்படவில்லை. அனைத்து வாரியங்களிலும் ஒரே சீரான, உயர்வான, கண்ணியமான சமூக பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்த மாநில அரசு உரிய நிதி வசதி, கட்ட மைப்பு வசதிகளை விரைவுபடுத்த வேண்டும். அங்கன்வாடி ,ஆஷா, சத்துணவு போன்ற திட்ட தொழிலாளர்களை அரசு ஊழியராக்குவோம் என  அளித்த தேர்தல் வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும். டாஸ்மாக் போன்ற பல துறைகளில் எத்தனை காலம்தான் தொகுப்பூதியம் அமலாகிக் கொண்டு இருக்கும்?

ரூ.26ஆயிரம்...

1957இல் கூடிய இந்திய தொழிலாளர் மாநாடு தொழி லாளருக்கு தேவையின் அடிப்படையிலான குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும் என தீர்மானித்தது. ஆண்டுதோறும் அரசு நடத்தும் உச்சமட்ட ‘இந்திய தொழிலாளர் மாநாடு’ என்ற முத்தரப்பு மாநாட்டை மோடி அரசு இந்த ஒன்பது ஆண்டுகளில் 2015 -ல்  மட்டுமே நடத்தியுள்ளது .இன்றைய விலைவாசி நிலவரப்படி ,1957 மாநாடு தீர்மானித்த தேவையின் அடிப்படையிலான குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வருகிறது. அனைவருக்கும் இது கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். இத்தகைய பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி; ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை முறியடிக்க; தமிழக உழைக்கும் வர்க்கத்தை ,சாதி ,மத ,இன, மொழி பேதமின்றி ஒற்றுமைப்படுத்த; சக்திமிக்க வர்க்கப் போராட்டங்களை முன்னெடுக்க; மதவெறி அரசியலுக்கு முடிவு காண.. சிஐடியு மே 20 முதல் 30 வரை நடத்தி வரும் நடைபயணம் திக்கெட்டும் எழுச்சிமிகு வரவேற்பு கண்டு வருகிறது. மே 30  சிஐடியு-வின் 54ஆவது அமைப்பு தினத்தன்று  திருச்சியில் நடைபெறும் பயண குழுக்கள் சங்கமிப்பு பேரணி பொதுக்கூட்டத்தில் இணைவோம், வாரீர்! 

கட்டுரையாளர் : மாநில துணைத்தலைவர், சிஐடியு