உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்களது ஓட்டு உரிமைக்காக போராடிக் கொண்டிருந் தார்கள். அதே சமயம் எந்த போராட்டமும் இல்லாமல் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது தமிழ்நாட்டில் தான். பெண்ணு ரிமை பற்றி பேச முன்வராத காலத் தில், ‘பெண்களின் கையில் உள்ள கரண்டியை பிடுங்கிவிட்டு புத்தகங்களை கொடுங்கள்’ என்று சொன்னவர் பெரியார். இதில் இருந்து தான் நம் நாட்டில் பெண்ணுரிமையை வளர்த்தெடுக்க வேண்டும். எந்த சாதியாக, மதமாக இருந்தா லும் மீற முடியாத அளவுக்கு அடக்கு முறையை பெண்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
காஷ்மீரில் சிறுமியை பாலியல் குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக பாஜக வினர் ஊர்வலம் சென்றார்கள். இப்படிப் பட்டவர்களால் எப்படி பெண் களை பாதுகாக்க முடியும்? முத்தலாக் கிற்கு எதிரான மசோதாவை நான் எதிர்த்தபோது ஏன் முஸ்லிம் பெண்கள் மீது அக்கறை இல்லையா என மத்திய அமைச்சர் ஒருவர் கேட்டார். அவரிடம் சொன்னேன், ‘ஒருமுறை முத்தலாக் செய்துகொண்டு அந்த பெண்ணை பிரிந்து சென்றவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கினால் அவருடைய குடும்பத்தை யார் பாதுகாப்பார்கள். அப்ப டியே அதுசரி என்று சொன்னால், இது மற்ற மதத்தில் உள்ள பெண்களுக்கு ஏற்படவில்லையா? உங்களது நோக்கம் முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவானது அல்ல, முஸ்லீம் சமூகத்தை முடக்க வேண்டும் என்பதுதான்’ என்றேன். மக்களை பிரித்தாளக் கூடிய வேலையை தான் பாஜக செய்து வருகிறது.
தமிழகம் முன்னிலை
பெண்களுக்கான கல்வி வளர்ச்சி யில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. உயர்கல்வியில் 72 சதவீதத்தை எட்டியி ருக்கிறோம். இதுவே தேசிய அளவில் 24 சதவீதமாகத்தான் உள்ளது. காம ராசர் காலத்தில் ஏராளமான பள்ளிகளை திறந்தார். இதனால் பெண் குழந்தைகள் படித்தார்கள். ஆனால் தற்போது ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட புதிய கல்விக் கொள்கை சொல்லக்கூடியது என்னவென்றால் கல்லூரிக் கதவுகளை மூடிவிட்டு ஒரு வளாகத்தை உருவாக்க வேண்டும்; அங்கு மாணவர்களை கொண்டு வந்து படிக்க வைக்க வேண்டு மாம். அப்படி செய்தால் பெண் கல்வி கேள்விக்குறியாக மாறிவிடும். பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் மகளிருக்கான இடஒதுக் கீடு மசோதாவை கொண்டு வந்து நிறை வேற்றுவோம் என வாக்குறுதி அளித்தி ருந்தது. இதை பற்றி பலமுறை கேட்டும் ஒன்றிய அரசு காதில் வாங்கிக் கொள்ளா மல் உள்ளது. நமது நாட்டில் பெண்ணுரிமை உள்பட ஜனநாயகம் ஒட்டுமொத்தமாக ஆபத்தின் பிடியில் உள்ளது. இதற்கு கார ணமான பாஜகவை வருகிற நாடாளு மன்ற தேர்தலில் வீழ்த்திட பணிகளை இப்போதே முன்னெடுக்க வேண்டும். தக்கலை மாநாட்டில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதிலிருந்து