தமிழ்நாட்டில் ஆரம்பப் பள்ளி முதல் பல்கலைக்கழக கல்லூரிகள் வரை பணி யாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சுமார் ஒரு லட்சம் பேர் உள்ளனர். அவர்களது உரிமை களையும் மாணவர் நலன் கல்வி நலன் தேச நலன் போன்றவற்றையும் பேணி பாதுகாப்ப தற்கு 2001 இல் ஓய்வு ஆசிரியர்களுக்காய் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கம் (TNRTA). 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பி னர்களைக் கொண்ட இவ்வமைப்பு சிவகாசி, மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் மூன்று மாநில மாநாடுகளை நடத்தி வலிமை சேர்த்துக் கொண்டது. காலப்போக்கில் குழப்பவாதிகள் சங்க தலைமையில் வந்து பதவிக்காகவும் சுயநலத் துக்காகவும் செயல்பட்டனர். ஆண்டு தணிக்கை நடத்தாமல் சங்கப் பெயர் புதுப்பிக்காமல் பலவீனமாக்கினார்கள். இக் குறைபாடுகளை சங்க பதிவு அலுவலருக்கு புகார் செய்தும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் நெருக்கடி தந்தார்கள். அன்றைய மாநில தலைமை தீர்வு காண்பதற்கு பதிலாக சங்கப் பெயரை மாற்றி பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து அறிவித் தார்கள். இரண்டாவது பெயராக தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து ஆசிரியர் சங்கம் (TNRTA) என பெயர் சூட்டினார்கள்.
தமிழில் இரண்டு பெயர்களாக இருந்தாலும் ஆங்கிலத்தில் அறிமுகமான Tamil nadu Reteired teachers Association ( TNRTA) என்ற பெயர் காப்பாற்றப்பட்டுள்ளதை ஏற்றுக் கொண்டு உறுப்பினர்கள் செயல்பட்டார்கள். ஆனால் பிரச்சனையின்றி சங்கத்தை வழி நடத்த வேண்டிய மாநில நிர்வாகிகள் தங்க ளுக்குள் சண்டையை துவங்கினார்கள். தலைவர், பொருளாளர் பெயர்களில் கூட்டுக் கணக்கில் இருந்து பண பரிவர்த்தனை செய்ய மாநில தலைவர் மறுத்து பொருளாளருக்கு நெருக்கடி கொடுத்தபோது அவர் ஒதுங்கிக் கொண்டார். பொதுச் செயலாளரும் மாநில தலைவரும் சங்கத்தை கைப்பற்ற இணைந்து அனைத்து ஆவணங்களையும் வங்கிக் கணக்கு புத்தகங்களையும் தங்கள் வசமாக்கிக் கொண்ட னர். பெரும்பான்மை உறுப்பினர்கள் சார்பில் கையெழுத்து மூலம் கூட்டத்தை கூட்ட வலியுறுத் தப்பட்டது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தனர். மூத்த உறுப்பினர் போடி பொன்னையா தலைமையில் அமைப்பு குழு போட்டு செயல்பட தீர்மானித்த போது வழக்கறி ஞர்கள் மூலம் தடுத்தனர். “பொறுத்தது போதும் பொங்கி எழுவோம்” என்பதற்கு ஏற்ப உறுப்பினர்கள் ஒன்று கூடி மாநிலத் தலைவர், பொதுச்செயலாளர், சென் னையைச் சார்ந்த மாநில செயலாளர் உள்ளிட்டோரை நீக்கிவிட்டு புதிய சங்கம் உருவாக்கி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரி யர்கள் நல சங்கம் (RTWA) 7/2019 என பதிவு செய்யப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளாக 25 மாவட்டங்களில் சங்கம் அமைத்தும் மூன்று மாவட்டங்களில் அமைப்புக்குழு அமைத்தும் சுமார் 10,000 உறுப்பினர்களோடு சங்கம் செயலாற்றி வருகிறது. தனிநபர் பிரச்சனைகளுக்காகவும் பொது கோரிக்கைகளுக்காகவும் தனியாக சங்கம் போராடியும் கூட்டமைப்போடு இணைந்து போராடியும் முன்னேறுகிறது. காசில்லா மருத்துவத்திற்காகவும் ரூ. 80 கூடுதலாக சேர்த்து 150 குடும்ப நலநிதிக்கு பிடித்தம் செய்யும்போது குடும்ப நலநிதியை 2 லட்சம் ஆக உயர்த்த வேண்டும். 70 வயது பூர்த்தி செய்தோருக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவோம் என்ற தேர்தல் அறிக்கை வாக்குறுதியை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர் ஆசிரியர்களின் முழக்கங்களோடு மதுரை மன்னர் கல்லூரியில் 26. 3. 2003 ஞாயி றன்று ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் நல சங்கம் மாநில மாநாடு நடக்க உள்ளது.
கட்டுரையாளர் : மாநிலத் தலைவர்,தமிழ்நாடு ஓய்வு
பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கம்