நவீன தாராளமயத்திற்கு எதிரான உறுதியான ‘கேரள மாடல்’
சமீபத்தில், கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு, தொழில்துறையில் எட்டியுள்ள சாத னைகளைப் பற்றி எழுதியிருந்த ‘பிசினஸ் லைன்’ ஏடு, இப்படித்தான் தலைப்பிட்டிருந்தது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இரண் டாவது அரசின் ஈராண்டு நிறைவில், ஆகப் பெரிய சாதனைகளின் முத்தாய்ப்பாக, தொழில் துறை சாதனையைக் குறிப்பிடலாம். ஒன்றிய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு ஆகியன சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதித்தன. இது நிதி மூலதனத்திற்கு ஆதரவான நவீன தாராளமய நடவடிக்கையே. இந்தியாவில், விவ சாயத்திற்கு அடுத்து மிகப்பெரிய வேலை வாய்ப்பு களை வழங்குவது சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தான். இத்துறையில் ஏற்படும் வீழ்ச்சி நம் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் கடுமையாக பாதிக்கும். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பினராயி விஜயன் தலைமையிலான கேரள இடது ஜன நாயக முன்னணி அரசு 2022ஆம் ஆண்டினை ‘தொழில் முனைவோர் ஆண்டு’ என அறிவித்து பல்வேறு முன் முயற்சிகளை மேற்கொண்டது. மார்ச் 30, 2022 அன்று முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்த திட்டம் விரிவான திட்டமிடல் மூலம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
இடது கேரள அரசு எடுத்த முயற்சிகள்
பலமுறை அமைச்சர் மட்டம், அதிகாரி மட்டம் மற்றும் ஃபிக்கி, தொழிற்சாலைகள் கூட்டமைப்பு, சிறிய அளவிலான தொழில் சங்கங்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகளின் கூட்டங்கள் நடத்தப்பட்டன. திட்டத்தின் வெற்றிக்காக பட்டய கணக்காளர்கள், மனிதவள மேலாளர்கள் உள்ளிட்ட பல அமைப்புக ளின் பிரதிநிதிகளை சந்தித்து உதவி மையங்களைத் தொடங்குவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. திட்டத்திற்கு முன்னால், தொழில் துறையின் மூத்த அதிகாரிகளுக்கு மூன்று நாள் பயிற்சி ஐஐஎம், கோழிக்கோடு மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் என்டெர்பெர்னர்ஷிப், அகமதாபாத் ஆகிய இடங்களில் அளிக்கப்பட்டது. முதற்கட்டமாக அனைத்து உள்ளாட்சி அமைப்புக ளிலும் ஒரு நாள் பட்டறைகள் நடத்தப்பட்டன. இப்பட்ட றைகள் மூலம் மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற் பட்டோருக்கு திட்டம் குறித்த தகவல்கள் நேரடியாக கொண்டு போய் சேர்க்கப்பட்டன.
குறைந்த வட்டியில் கடன்
இதன்பிறகு இரண்டாம் கட்டமாக மாநிலம் முழுவ தும் உரிமம்/கடன்/மானிய கண்காட்சிகள் ஏற்பாடு செய் யப்பட்டன. வங்கிகளும் திட்டத்திற்கு ஆதரவாக செயல் பட்டன. தொழில்முனைவோர் ஆண்டு திட்டத்திற்காக நான்கு சதவீத வட்டியில் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டது. ‘கே ஸ்விஃப்ட்’ அமைப்பின் மூலம் புதிய தொழில் முனைவோரை உரிமம் பெற வைப்பது, தொழில் முனைவோருக்கும் திட்டத்திற்கும் சாதக மான காரணியாக அமைந்தது. பிறகு தொழில்முனைவோர் ஆண்டின் பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுப்பதற்காக கேரள அரசு மாநில, மாவட்ட மற்றும் உள்ளூர் அளவில் குழுக்களை அமைத்தது. உள்ளாட்சித் துறையில் ஒரு லட்சம் தொழில்க ளைத் தொடங்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளி லும் தொழில்துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் 1158 பேர் நியமிக்கப்பட்டனர். கேரளாவில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் ஹெல்ப் டெஸ்க் மூலம் இப்பயிற்சியாளர்களின் சேவைகள் உத்தரவாதப்படுத்தப்பட்டன. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஹெல்ப் டெஸ்க் முறை அமல்படுத்தப்பட்டது. அனைத்து தாலுகா தொழில் மையங்கள் மற்றும் மாவட்ட தொழில் மையங்களிலும் தொழில் வல்லுநர் கள் நியமிக்கப்பட்டனர். அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டிற்கு சாதகமான இந்நடவடிக்கைகள், அடியெடுத்து வைக்கத் தயங்கும் தொழில் முனைவோர்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
இடது கேரளாவும் தொழிலாளர்களின் கூலியும்
வெவ்வேறு மாநிலங்களில் தொழிலாளி களுக்கு அளிக்கப்படும் தினக்கூலி குறித்த விவரங்களை இந்தியத் தொழிலாளர் ஏடு (Indian Labour Journal) மூலம் பெற்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இவ்விவரங்களின் படி, தேசத்திலேயே அதிகமான தினசரி கூலியை தொ ழிலாளர்களுக்கு தரும் மாநிலமாக கேரளா உள்ளது. விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.726.80 கூலியும் விவசாயம் அல்லாத தொழிலாளர்க ளுக்கு ரூ.681.80 கூலியும், உற்பத்தி துறை தொழிலா ளர்களுக்கு ரூ.737.70 கூலியும் கேரளாவில் உறுதி படுத்தப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் விவசாயத் தொழிலா ளர்களுக்கு ரூ.217.80, குஜராத்தில் ரூ.220.30 மட்டுமே வழங்கப்படுகின்றன. தேசத்திலேயே மிக குறைவான கூலியை விவசாயத் தொழிலாளர்களு க்கு வழங்கும் மாநிலங்களாக மத்தியப் பிரதேச மும், குஜராத்தும் உள்ளன. ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு ஆகிய மாநிலங் கள் விவசாயத் தொழிலாளர்களுக்கு முறையே ரூ.524.60, ரூ.445.60 ம் வழங்கி 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளன. அதே போல் உற்பத்தி துறையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ரூ.519.80, ரூ.478.60 ம் வழங்கி 2வது மற்றும் 3வது இடங்களில் ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன. இதன் மூலம் செல்வங்க ளை ஓரளவிற்கு நியாயமான முறையில் பகிர்ந்த ளிக்கும் (Fair Distribution of Wealth) மாநிலங்க ளில் கேரளா முதலிடத்தில் உள்ளது.
எட்டே மாதங்களில் 1 லட்சம் தொழில் நிறுவனங்கள்
விரிவான ஆயத்தம் மற்றும் குழுப்பணி செய்த தன் விளைவாக ஆண்டுக்கு ஒரு லட்சம் தொழில் நிறுவனங்கள் என்ற இலக்கு எட்டே மாதங்களில் எட்டப்பட்டது. கேரளாவில் இதற்கு முன்பு ஒரு வரு டத்தில் சராசரியாக பத்தாயிரம் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தச் சூழலில் இங்கு என்னென்ன முயற்சிகளைத் தொடங்கலாம் என்பது பற்றி அறிவியல் பூர்வமான ஆய்வு நடத்தப்பட்டது. ஆண்டுக்கு 1,09,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படு கின்றன. ஜிஎஸ்டி அடிப்படையில் இவை எந்தெந்த பிரிவுகளில் உள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றுள் கேரளாவின் சாத்தியக்கூறுகளை பொறுத்து சிறிய அளவிலான தொழில் நிறுவனங்களாக தொடங் கக்கூடியவை எவை எனப் பட்டியலிடப்பட்டது. இவ்வாறாக கேரளா சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையில் சாதனைகளை புரிந்து தொழில் முனைவோர் ஆண்டினை நிறைவு செய்துள்ளது. தொழில் முனை வோர் ஆண்டு என்ற முறையில், ஒரு நிதியாண்டில் தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்களின் எண் ணிக்கை, உருவாக்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கை மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் பிரிவில் செய் யப்பட்ட முதலீடு ஆகிய மூன்று பிரிவுகளில் வரலாறு படைத் துள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கேரளா வில் 1,39,840 நிறுவனங்கள் உருவாகியுள்ளன. 3,00,056 வேலைகள் புதிதாக உருவாகியுள்ளன. 8422 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
40 ஆயிரம் பெண்கள்
சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் தொழில் நிறுவ னங்கள் தொடங்கி புதிய ‘வனிதா மதிலை’ உருவாக்கிய ஆண்டும் இது தான். தொழில்முனைவோராண்டு திட்ட காலத்தில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களால் தொழில் நிறுவனங்கள் தொடங்க முடிந்துள்ளது. காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரையிலான பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் ஜனவரி 21 அன்று கொச்சியில் ஒன்று சேர்ந்த அதே சமயம், கேரளா பிறந்ததிலிருந்து மிகப்பெரிய தொழில் முனைவோர் சந்திப்பை கண்ட நிகழ்வும் அது தான். தொழில்முனைவோராண்டு திட் டத்தில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையில் செய் யப்பட்ட இந்த சாதனைகளே பிரதமர் மோடி தலைமை யிலான கூட்டம் ஒன்றில் இது, ‘தேசத்தின் சிறந்த நடை முறைத் திட்டம்’ என தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணம்.