மிகப்பெரிய மகாபாதக செயலை அமெரிக்கா கடந்த செப்டம்பர் மாதம் அரங்கேற்றியது. ஜெர்மனி உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு கொண்டு செல்வதற்காக கடலுக்கு அடியில் போடப்பட்ட ரஷ்யாவின் குழாய்களை வெடி வைத்து தகர்த்தது. “நார்டு ஸ்ட்ரீம்” எனப்படும் இந்த திட்டம் தகர்க்கப்பட்டதன் மூலம் ரஷ்யாவுக்கு சுமார் 20 பில்லி யன் டாலர் - அதாவது ரூ. 1,60,000 கோடி அளவுக்கு அமெரிக்கா பெரும் நட்டத்தை உருவாக்கியுள்ளது. மேலும் உலக அளவில் எரி சக்தி தேவையில் இது மோசமான தாக்கத்தை உருவாக்கியது. இந்த மகாபாதக செயலை எப்படி பைடனின் உத்த ரவின் கீழ் அமெரிக்காவும் நார்வேயும் அரங்கேற்றின என்பதை புலிட்சர் விருது பெற்ற ஊடகவியலா ளர் செய்மூர் ஹெர்ஷ் துல்லியமாக அம்பலப் படுத்தியுள்ளார். செய்மூர் ஹெர்ஷின் இந்த மிக முக்கியமான செய்தியை இதுவரை மேற்கத்திய ஊடகம் எதுவும் வெளியிடவில்லை. இந்திய ஊட கங்களும் மவுனம் காக்கின்றன.
“நார்டு ஸ்ட்ரீம்” திட்டத்தின் முக்கியத்துவம்
உலகில் எரிபொருள் வளத்தைக் கொண்டுள்ள தேசங்களில் முக்கிய இடத்தை ரஷ்யா வகிக்கிறது. வளைகுடா நாடுகள்/அமெரிக்கா/நார்வே/வெனிசுலா போன்றவை எரிபொருள் வளத்தை கொண்டுள்ள ஏனைய தேசங்கள். ரஷ்யாவின் எரிவாயு பெரும்பா லும் உக்ரைன் வழியாகவே ஏனைய நாடுகளுக்கு குழாய்கள் மூலம் செல்லும். உக்ரைன் மேலும் மேலும் ரஷ்ய எதிர்ப்பு நிலையை எடுப்பதால் அந்த பகுதியை தவிர்க்க கடலுக்கு அடியில் குழாய்கள் மூலம் எரி வாயுவை ஜெர்மனிக்கும் அங்கிருந்து ஐரோப்பா முழு வதும் விநியோகம் செய்வது என்பதுதான் ரஷ்யாவின் திட்டம். இந்த திட்டத்தை ஜெர்மனி உட்பட பல தேசங்க ளும் ஏற்றுக்கொண்டன. ஏனெனில் ரஷ்ய எரிபொரு ளின் விலை உலகிலேயே மிகக்குறைவு. எனவே தமது தொழில்துறைக்கும் குளிர்காலத்தில் வீடுகளுக்கும் இந்த எரிபொருள் மிகவும் பயன்படும் என ஐரோப் பிய நாடுகள் மதிப்பிட்டன.
ரஷ்யா “நார்டு ஸ்ட்ரீம்1” மற்றும் “நார்டு ஸ்ட்ரீம்2” என இரு திட்டங்களை நிறைவேற்றியது. இரு திட்டங்க ளின் நீளம் தலா 1200 கி.மீ. மொத்த செலவு 20 பில்லி யன் டாலர் (ரூ. 1,60,000 கோடி). ரஷ்யா வணிகம் மூலம் லாபம் பெற்றது எனில் ஐரோப்பிய தேசங்கள் விலை குறைவான எரிபொருள் பெற்றன. இது ஐரோப்பிய தேசங்களின் தொழில்வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவியது. எனினும் தொடக்கத்திலிருந்தே அமெ ரிக்கா இந்த திட்டத்தை ரசிக்கவில்லை. ஏனெனில் தனது எரிபொருள் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் தவிர்த்தன என்பது ஒரு காரணம். ஐரோப்பிய நாடு களும் ரஷ்யாவும் நெருங்கி வந்தன என்பது இன்னொரு காரணம். இந்த சூழலில்தான் உக்ரைன் போர் மூண்டது. போரைக் காரணம் காட்டி ஐரோப்பிய தேசங்களை ரஷ்யாவின் எரிபொருளை புறக்கணிக்குமாறு அமெ ரிக்கா வற்புறுத்தியது. பல ஐரோப்பிய தேசங்கள் அடி பணிந்தன. எனினும் இதன் நட்டத்தால் அதிகம் பாதிப்பு ஜெர்மனிக்குத்தான்! கிட்டத்தட்ட ஜெர்மனி யின் தொழில்துறை 75%க்கும் அதிகமாக ரஷ்ய எரிபொருளைச் சார்ந்தே இருந்தது. எனவே ஜெர்மனி ஊசலாட்டத்தில் இருந்தது. செயல்படுவதற்கு தயாராக இருந்த “நார்டு ஸ்ட்ரீம்2” திட்டத்தை அமெரிக்காவின் நிர்பந்தத்தால் ஜெர்மனி முடக்கியது. எனினும் “நார்டு ஸ்ட்ரீம்1” செயல்பாட்டில் இருந்தது.
வர்த்தக தடைகள் மூலம் ரஷ்யாவின் பொருளா தாரத்தை சிதைத்துவிடமுடியும் என அமெரிக்கா மதிப்பிட்டது. ரஷ்யாவின் நாணயம் “ரூபிள்” ரப்பிளாக - அதாவது குப்பையாக மாறப்போகிறது என அமெரிக்க ஜனாதிபதி பைடன் ஆரூடம் கூறினார். ஆனால் அது நிறைவேறவில்லை. போரிலும் ரஷ்யா எதிர்பார்த்த அளவு பின்னடைவை சந்திக்க வில்லை. மாறாக மெதுவாக என்றாலும் முன்னே றிக்கொண்டிருந்தது. இந்த கட்டத்தில்தான் 22.09.2022 அன்று “நார்டு ஸ்ட்ரீம்” இரு திட்டங்களும் வெடிவைத்து தகர்க்கப்பட்டன. “நார்டு ஸ்ட்ரீம்1” முற்றிலும் அழிந்தது. “நார்டு ஸ்ட்ரீம்2” 70% அழிந்தது.
யார் காரணம்?
“நார்டு ஸ்ட்ரீம்” குழாய்கள் இருந்த கடல் பகுதி சுவீடன் மற்றும் டென்மார்க் நாடுகளின் எல்லைக்கு உட்பட்டதாகும். இரு நாடுகளுமே இது விபத்து அல்ல; மாறாக வெடி வைத்து திட்டமிட்டு தகர்க்கப்பட்டன என அறிவித்தன. ஆனால் யார் காரணம் என்பது தான் வெளிப்படுத்தப்படவில்லை. அமெரிக்காவின் கடைந்தெடுத்த சுயநல அரசியலை அறிந்த எவரும் அமெரிக்காதான் காரணம் என்பதை யூகிக்க இயலும். ரஷ்யாவும் அமெரிக்காவையே குற்றம் சாட்டியது. எனினும் சி.என்.என். உட்பட பல மேற்கத்திய ஊட கங்கள் இந்த சதிச் செயலை அரங்கேற்றியது ரஷ்யா தான் என திரும்பத்திரும்ப பிரச்சாரம் செய்தன. தான் உருவாக்கிய - தனக்கு மிகவும் பொருளாதார பலன் தருகிற திட்டத்தை ரஷ்யா ஏன் தானே அழிக்க வேண்டும்? இந்த சாதாரண கேள்வியை மேற்கண்ட ஊடகங்கள் புறம் தள்ளின. எனினும் ஐரோப்பிய மக்கள் - குறிப்பாக ஜெர்மன் மக்கள் இந்த சதிக்கு பின்னால் அமெரிக்காவின் கை உள்ளது என்பதை உணர்ந்தனர். அது சமூக ஊடகங்களில் பிரதி பலித்தது.
அமெரிக்காவின் கை வரிசை எனக் கருதுவதற்கு என்ன காரணம்?
2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்த ஜோ பைடன் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால் “நார்டு ஸ்ட்ரீம்2” திட்டத்தை அமெ ரிக்கா முடக்கும் என பகிரங்கமாக அறிவித்தார். போலந்து தேசத்தின் ஒரு முக்கிய அரசியல்வாதி குழாய்கள் தகர்க்கப்பட்டவுடன் “நன்றி அமெரிக்கா வுக்கு” என ட்வீட் பதிவு போட்டார். இந்த பதிவு அடுத்த சில நாட்களில் நீக்கப்பட்டாலும் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. இந்த சம்பவம் குறித்த செய்தி யாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க வெளி யுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் “நிரந்தரமாக ரஷ்யா இனி ஐரோப்பாவுக்கு எரிபொருள் தர இயலாது எனும் சூழல் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று” எனக் கூறினார். அமெரிக்காவின் இன்னொரு அமைச்சர் விக்டோரியா நுலந்த் “நார்டு ஸ்ட்ரீம்” திட்டங்கள் வெறும் இரும்புக் குப்பைகளாக மாறி கடலுக்கு அடியில் இருப்பது நல்லதுதான்” எனக்கூறினார். இந்த சதிச் செயல் குறித்து புலனாய்வு செய்வதாக ஜெர்மனி/ சுவீடன்/ டென்மார்க் தனித்தனியாகவும் பின்னர் கூட்டாகவும் அறிவித்தன. தனது முதலீடு அழிந்து போயுள்ளதால் புலனாய்வில் தன்னையும் சேர்க்க வேண்டும் எனும் ரஷ்யாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. புலனாய்வு விவரங்களை எந்த தேசமும் வெளியிடவில்லை. முதலில் சுவீடனும் பின்னர் டென்மார்க்கும் விசாரணையிலிருந்து விலகின. ஜெர்மனி மவுனம் காத்தது. இந்த நிகழ்வு களை உற்று நோக்கினால் ஜெர்மனி/ சுவீடன்/ டென்மார்க் ஆகிய தேசங்கள் அமெரிக்காவின் சதிச்செயலை மறைக்க முயல்கின்றன என்பதை எளிதில் அறியலாம்!
செய்மூர் ஹெர்ஷின் அம்பலம்
இந்த சூழலில்தான் செய்மூர் ஹெர்ஷ் மிக துல்லிய மாக அமெரிக்காவின் சதி திட்டத்தை அம்பலப் படுத்தியுள்ளார். இதற்கு முன்பே சில பத்திரிகையா ளர்கள் அமெரிக்காவின் சூழ்ச்சி குறித்து எழுதியி ருந்தாலும் செய்மூர் ஹெர்ஷின் அம்பலம் துல்லி யமாக உள்ளது என்பது மட்டுமல்ல; அவரின் கடந்த கால அம்பலங்கள் உலக அளவில் தாக்கத்தை உரு வாக்கியவை. வியட்நாமில் அமெரிக்கப் படைகள் பல கிராமங்களை அழித்ததையும் மக்களை கொன்று குவித்ததையும் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய வர் செய்மூர் ஹெர்ஷ். அதே போல அமெரிக்காவின் இராக் படையெடுப்பின் பொழுது அபு காரிப் சிறையில் இராக் வீரர்கள் எப்படி நாய்களை ஏவிக் கொல்லப் பட்டார்கள் என்பதையும் இவர் அம்பலப்படுத்தினார். எனவே அவர் முன்வைக்கும் விவரங்களை அமெரிக்க அரசாங்கம் அவ்வளவு எளிதாக புறக்கணிக்க இயலாது.
செய்மூர் ஹெர்ஷ் அம்பலப்படுத்திய சில முக்கிய அம்சங்கள்:
- 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் - அதாவது ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பதற்கு இரு மாதங்க ளுக்கு முன்பே ஜோ பைடன் தனது வெளியுறவு அமைச்சர் ஜேக் சல்லிவனுக்கு இந்த நார்டு ஸ்ட்ரீமை முடக்குவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு ஆணையிட்டார்.
- ராணுவ தளபதி/சி.ஐ.ஏ./பல அரசு உளவு அமைப்பு கள்/நிதி அமைச்சகம் ஆகியோரின் குழுவை ஜேக் சல்லிவன் அமைத்தார்.
- ரஷ்யாவின் நார்டு ஸ்ட்ரீம் தொடர்ந்து செயல் பட்டால் உக்ரைனுக்கு ஜெர்மனி உதவாது என்பதால் இந்த சதியை விரைவுபடுத்துவது என முடிவு செய் யப்பட்டது.
- இந்த குழு 9 மாதங்கள் இத்திட்டம் குறித்து ரகசிய மாக விவாதித்தது. (எந்த கட்டிடத்தில் எந்த அறையில் விவாதித்தது என்பதைக் கூட ஹெர்ஷ் செய்மூர் வெளியிட்டுள்ளார்)
- எவர் செய்தார்கள் என்பதை வெளியே தெரியாமல் எப்படி செய்வது என்பதுதான் விவாதம்!
- இறுதியில் சி.ஐ.ஏ. முன்வைத்த திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- பனாமா நகரில் உள்ள திறமை வாய்ந்த ஆழ்கடல் நீச்சல் தெரிந்த வீரர்களை பயன்படுத்துவது என்பது முடிவு.
- சி-4 எனப்படும் மிக சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் தேர்வு செய்யப்பட்டன.
- குழாய்கள் உள்ள பால்டிக் கடலை நன்கு அறிந்த நார்வே தேசத்தை இணைத்துக் கொள்வது. நார்வே கடற்படையில் ஆழ்கடல் நீச்சல் தெரிந்த பல அதி திறமை வீரர்கள் உள்ளனர் என்பது முக்கிய காரணம். அதைவிட இன்னொரு முக்கிய காரணம்- ரஷ்ய எரி பொருள் முடக்கப்பட்டால் தனது எரி பொருளை விற்க முடியும் எனும் நார்வேயின் மதிப்பீடு.
- பால்டிக் கடலை டென்மார்க்/சுவீடன் நாடுகளின் ராணுவமும் கண்காணிப்பதால் அந்த நாடுகளின் தலைவர்களிடம் பொதுவாக தகவலை சொல்லி வைப்பது.
- ரஷ்யாவுக்கு சந்தேகம் வராமல் இருக்க எப்பொழுது இதனை செயல்படுத்துவது? ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் பால்டிக் கடலில் நேட்டோ படை கள் ராணுவ பயிற்சி நடத்தும். அதனை திரையாக பயன்படுத்தி குழாய்களில் குண்டுகளை வைப்பது.
- பயிற்சி முடிந்த 48 மணி நேரத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்வது.
- கடைசி நேரத்தில் பைடன் 48 மணி நேரம் என்ப தற்கு தடை விதித்தார். ஏனெனில் பயிற்சி முடிந்த வுடன் குண்டுகள் வெடித்தால் நேட்டோ நாடுகள் மீது பழிவிழும்.
- எனவே பயிற்சியின் பொழுது குண்டுகளை பதிப்பது. பின்னர் வெடிக்க வைப்பது என முடிவு செய்யப் பட்டது.
- இதற்காக நார்வே விசேடமாக ஒலி மூலம் வெடி குண்டுகளுக்கு கட்டளையிடும் தொழில்நுட்பம் கொண்ட sonar buoy எனும் கருவிகளை வடிவ மைப்பது என முடிவு.
- இந்த முடிவின் அடிப்படையில் ஜூன் மாதம் குண்டு கள் பதிக்கப்பட்டன. sonar buoy கருவிகளை நார்வே விமானங்கள் செப்டம்பர் மாதம் கடலில் மிதக்க விட்டன. அடுத்த சில மணி நேரங்களில் குண்டு கள் வெடித்தன. ரூ.1,60,000 கோடி மதிப்புள்ள ரஷ்யாவின் எரிகுழாய்கள் இரும்பு குப்பைகளாக மாறி ஆழ்கடலில் மூழ்கின.
- ஏற்கெனவே திட்டமிட்டபடி மேற்கத்திய ஊடகங் கள் ரஷ்யாதான் குழாய்களை தகர்த்தது என பொய் பிரச்சாரம் அள்ளிவிட்டன. பல ஐரோப்பிய ஊடகங்க ளும் இந்திய ஊடகங்களும் இதனை பிரதிபலித்தன.
ஹெர்ஷ் செய்மூரின் விவரங்கள் கட்டுக்கதை என அமெரிக்காவும் நார்வேயும் கூறியுள்ளன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த செய்தி இது வரை நியூயார்க் டைம்ஸ்/வாஷிங்டன் போஸ்ட் ஆகிய ஊடகங்களில் இடம் பெறவில்லை. தனது நலனுக்கு எதிரானது எனில் - தன் நாட்டாமை கேள்வி கேட்கப்படும் எனில் - எத்தகைய கொலை பாதகச் செயலையும் செய்ய அமெரிக்க ஏகாதிபத்தியம் தயங்காது என்பதற்கும் ஏனைய மேற்கத்திய நாடுகள் அமெரிக்காவுக்கு அடி பணியும் என்பதற்கும் நார்டு ஸ்ட்ரீம் குழாய்கள் தகர்ப்பு மீண்டும் ஒரு நிரூபணம். எனவேதான் ஏகாதிபத்தியம் உலக மக்களின் மிகப்பெரிய எதிரி என கம்யூனிஸ்டுகள் திரும்பத் திரும்ப கூறுகின்றனர்.