நுரையீரல், குரல்வளை, வாய், உண வுக்குழாய், தொண்டை, சிறுநீர்ப்பை, சிறுநீரகம், கல்லீரல், வயிறு, கணையம், கருப்பை வாய் உள்ளிட்ட பல்வேறு வகை புற்று நோய்களுக்கு புகையிலைப் பொருட்களே முக்கிய காரணம் என பல்வேறு மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகையிலைப் பொருட்கள் நுகர்வதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் மே 31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினமும் அனுசரிக் கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள், 1987 முதல் இந்த நாளை அனுசரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டில் ‘நமக்கு தேவை உணவு, புகை யிலை அல்ல’ என்ற பொருளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இதையொட்டி ஒன்றிய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறையும், தன் னார்வ அமைப்புகளும் புகையிலைப் பொருட்க ளால் ஏற்படும் தீமைகள் குறித்த பல்வேறு தகவல்களை வெளியிட்டு, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இந்த வகையில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை அவர்கள் வெளி யிட்டுள்ளனர். உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் பேர், புகையிலைப் பொருட்களை நுகர்வ தால் புற்றுநோய், மாரடைப்பு, மூளை பக்கவாதம், வாய்புற்று நோய், நாள்பட்ட நுரையீரல் நோய், மற்றும் புற்று நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.அவர்களில் 13.5 லட்சம் பேர் இந்தியர்களாக உள்ளனர். ஹெச்ஐவி, காசநோய், வாகன விபத்து, தற்கொலை போன்றவற்றால் ஏற்படும் மர ணத்தை விட புகையிலை பொருட்களால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம் என்று சொல்லப்படு கிறது. நீடித்த பயனுள்ள முன்முயற்சிகள் செயல் படுத்தவில்லை என்றால் 2025ஆம் ஆண்டில் பெரும் அபாயங்களை சந்திக்க நேரிடும் என்று சொல்லப்படுகிறது. இதேபோல் சமீப காலமாக பெண்கள் புகையிலை பொருட்களை உபயோகிப்ப தும் அதிகரித்து வருகிறது. இது அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் 20 சதவீதம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் அவர்கள் கர்ப்பகால பிரச்சனைகள், மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் போன்ற ஆபத்துகளை எதிர்கொள்கின் றனர் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் கூறியதாவது: பீடி, சிகரெட், குட்கா, பான்மசாலா என்று பல்வேறு பெயர்களில் புகையிலைப் பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது.இந்தியாவில் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவோரில் 15 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் 20 சதவீதம் பேர். 25 வயது முதல்40வயதுக்கு உட்பட்டவர்கள் 40 சதவீதம் பேர். இந்தப்புள்ளி விபரமே இளைய தலைமுறையிடம் புகையிலைப் பொ ருட்களின் தாக்கமும், பயன்பாடும் எந்த அளவுக்கு உள்ளது என்பதை சொல்லிவிடுகிறது. புகை யிலைப் பொருட்கள் அனைத்தும் அபாயம் நிறைந் தவை என்பதை நாம் உணர வேண்டும். இது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்தே, பெரும்பாலானவர்கள் அதை பயன் படுத்துகின்றனர் என்பது வேதனைக்குரியது.
குறிப்பாக புகையிலைப் பொருளான சிகரெட் பிடிப்பதில் எளியவர்கள் முதல், மேல்மட்டத்தினர் வரை அனைவரின் கண்ணோட்டமும் ஒரே மாதிரி தான் உள்ளது. புத்துணர்வுக்காக புகைக்கி றோம் என்பதே அவர்களின் எண்ணமாக உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவ ரப்படி உலகளவில் தினமும் 70 கோடி பேர் புகைபிடிக்கின்றனர். இவர்களில் ஆண்டுக்கு 60 லட்சம் பேர், நோய்களால் பாதித்து உயிரிழக்கின்ற னர். தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்த வரை 50 சதவீதம் பேர் புகை பிடிக்கின்றனர். இவர்க ளில் ஆண்டுதோறும் 13 சதவீதம் பேர், இறப்பை தழுவுகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவித் துள்ளது. ஒருவர் புகைபிடிக்கும் போது உள்ளே இழுக்கும் புகையைவிட, வெளியே விடும் புகையே அதிகம் உள்ளது. இதனால் புகைபிடிப்பவர் மட்டுமின்றி அருகில் உள்ளவர்களும் பாதிக்கும் நிலை இருக்கிறது. புகைபிடிப்பதால் உடலளவில் மட்டுமல்ல, மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். ஒரு சிகரெட்டில் 12 மி.கி அளவு நிகோடின் உள்ளது. இதுவே பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு வழி வகுக்கிறது. புகையிலைப் பொருள்களுக்குத் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டிருக்கி றது. உடல் பாதிப்புகளைக் குறைக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டே, இதுபோன்ற போதை வஸ்துகளுக்கு அரசு தடை விதித்தது. ஆனாலும், பெரும்பாலானோரால் அந்தப் பழக்கத்தில் இருந்து மீள முடியவில்லை. அத னால், இன்னமும் அவை மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வப்போது, அப்படி மறைத்து வைத்து விற்கப்படும் புகையிலைப் பொருள்களை காவல்துறையினர் அவ்வப்போது பறிமுதல் செய்து வருகிறார்கள்.
புகையிலைப் பொருள்களைச் சாப்பிட்டதும் ஆற்றல் கிடைத்தது போன்ற ஓர் உணர்வு ஏற்படும். இதனால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். அந்த வகை போதைப் பழக்கத்தை ஆரம்பத்தில் குறைவான அளவில் தொடங்கினாலும், நாள டைவில் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். பின்னர் அதைப் பற்றிய சிந்தனையே மேலோங்கி காணப்படும். இதனால், பணிபுரியும் இடங்களில் எரிச்சல், மற்றவர்கள் மீது கோபம், பணியில் கவனமின்மை ஏற்படும். புகையிலைப் பழக்கத்தால் வாயில் ஒரு வகைக் கட்டி ஏற்படுகிறது. இந்த நிலையில் பாதிக் கப்பட்டவரின் வாயில் நீர் வறட்சி ஏற்படும். தாடை கள் இறுக்கமடைந்து வாயின் இயல்பான அசை வுகள் தடைபடும். இதனால் ஒருகட்டத்தில் வாயைத் திறக்க சிரமப்படுவார்கள். மேலும் பற்கள், ஈறுகள் பாதிக்கப்படும் அல்லது அழுகிப்போக நேரி டும். இது வாய்ப்புற்று நோயின் ஆரம்ப நிலையா கும். இதன் தொடர்ச்சியாக வாய்ப்புற்று நோய் ஏற்படும். குட்கா, பான்மசாலா போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வரும் இளைஞர்க ளுக்கு நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவு ஏற்படும். பெண்களுக்கு இந்தப் பழக்கம் இருந் தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் உடல் எடை மிகவும் குறைவாக இருக்கும். எந்தவொரு போதைப்பழக்கத்தையும் கைவிட வேண்டும் என்றால், அந்த முடிவை அந்த நபரிடமிருந்துதான் தொடங்க வேண்டும். எனவே, அந்தப் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று முதலில் அவர்தான் முடிவெடுக்க வேண்டும். அடிக்கடி முகம், வாய், உதடுகள் மற்றும் பற்களைக் கண்ணாடியின் முன் நின்று கொண்டு பார்க்க வேண்டும். அப்போது எவ்வாறெல்லாம் அவை முகத்தோற்றத்தை குலைக்கிறது என்பதை உணர வேண்டும்.
அதேநேரத்தில் தொடர்ச்சியாக பின்பற்றி வந்த பழக்கத்தை திடீரென கைவிடும்போது, அந்த மாற்றத்தை உடலும் மனதும் ஏற்றுக்கொள்ள சில நாள்கள் தேவைப்படும். குறிப்பாக, தூக்கமி ன்மை, எரிச்சல், சோர்வாக உணர்வது போன்றவை வெளிப்படும். இவையெல்லாம் மனரீதியான பாதிப்புகள் மட்டுமே, மற்றபடி உடலுக்கோ, உயி ருக்கோ இதனால் எந்தப் பாதிப்பும் இருக்காது. இப்படிப்பட்ட நேரங்களில் இளநீர், மோர் போன்ற இயற்கையான நீராகாரங்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது உடலில் ஏற்கெனவே சேர்ந்துள்ள நச்சுகளை வெளியேற்றும். பெரும்பாலானோருக்கு உணவு உண்டதும் போதை மருந்துகளைச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அப்போது கிராம்பு, ஏலக்காய், சோம்பு ஆகியவற்றைச் சாப்பிடச் சொல் வார்கள். இவை அந்தப் பழக்கத்துக்கு மாற்றாக அமைவதுடன், உடலுக்கும் சத்துக் கிடைக்க உதவும். எனவே இதை கருத்தில் கொண்டு புகையிலை மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். பொது மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.