அரசியலமைப்பு சட்டம் வரையறுத்துள்ள வாழ்வு ரிமை, அனைவருக்கும் உணவு வழங்க வேண்டுமென்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு போன்றவை அமலாகா மல் உள்ளன. 2014ல் பட்டினிக் குறி யீட்டில் 55வது இடத்திலிருந்த இந் தியா, 2021ல் 101வது இடத்திற்கு தள் ளப்பட்டுள்ளது. நாடு வறுமை நிறைந்த தாக மாறிக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசுக்கு எதிராக அக்டோபர் மாதம் தில்லியில் மாதர் சங்கம் பெரும் பேரணியை நடத்த உள்ளது. முறைசாரா தொழிலில் உள்ள பெண்களிடம் கொத்தடிமைகளை விட மோசமாக உழைப்புச் சுரண்டல் நடை பெறுகிறது. இதை தடுக்க வேண்டும். தமிழக அரசு நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை நகர்ப்புற உள் ளாட்சிகளின் அனைத்து வார்டுகளி லும் செயல்படுத்த வேண்டும். கிரா மப்புற வேலை திட்டத்தில் தனித்து வாழும் பெண்களுக்கு கூடுதலாக 50 நாள் பணி வழங்கப்படும் என்று அரசு அறிவித்ததை, அமல்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கொத்தடிமை முறை உள்ளது. இது குறித்து மாநிலம் முழு வதும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நுண்நிதி நிறு வனங்களின் கடனை வசூலிக்கும் முறையால் பல மாவட்டங்களில் பெண் கள் தற்கொலை செய்து கொள்கின்ற னர். இதனை தடுக்க, அரசுடமையாக் கப்பட்ட வங்கிகள் வாயிலாக குறைந்த வட்டியில் கடன் தர வேண்டும்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா பேசியதிலிருந்து...