articles

img

நிதிப் பங்கீடும் கூட்டாட்சியும் - கே.என்.பாலகோபால், கேரள நிதி அமைச்சர்

இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக வரையறை செய்துள்ளது. அதிகார பலமிக்க ஒரு ‘ஒன்றிய’ அரசு மற்றும் எவ்வித அதிகாரங்க ளும் இல்லாத மாநில அரசுகள் என்று அரசியல மைப்புச் சட்டம் கூறவில்லை. சமமான அதிகா ரங்களும் உரிமைகளும் படைத்த மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் அரசியல் சாசனத்தை வடிவ மைத்த அம்பேத்கர் உள்ளிட்ட அறிஞர்கள் வரையறை செய்தார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பதை  அடிநாதமாகக் கொண்ட - பலவிதமான பண்பாடு கள், கலாச்சாரங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள், மொழிகளைக் கொண்ட - ஒரு குட்டி உலகமாகவே  இந்திய ஒன்றியம் திகழ்கிறது.  கன்னியாகுமரியில் உள்ள உணவுப் பழக்கவழக்கம் நாகாலாந்தில் இல்லை. அவர்களது அண்டை மாநிலமான மணிப்பூரில் கூட இல்லை. ஒவ்வொரு மாநில மும், ஒவ்வொரு பிரதேசமும் தனித்தனி வாழ்வியலைக் கொண்டவையாக உள்ளன. வேறுபட்ட தன்மைகள் இருந்த போதிலும் இந்திய மக்களிடையே ஒற்றுமை என்பது வரலாற்று ரீதியாக கட்டமைக்கப்பட்டது. ஒட்டுமொத்த மக்களும் ஒன்றுபட்டே இந்தியா எனும் மாபெரும் தேசத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதேவேளை இந்த ‘ஒன்றுபடுதல்’ என்பதன் பொருள் கட்டாயப்படுத்தலின் பெயரால் ஒன்றுபடுதல் என்பதல்ல.

இத்தகைய உயரிய ஜனநாயக உள்ளடக்கம் கொண்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பு களைச் சிதைக்கும் நடவடிக்கைகளை பாஜக தலை மையிலான ஒன்றிய அரசு தற்போது மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மாநிலங்களுக்கு அதிகாரப் பரவல் மற்றும் நிதிப் பரவல் என்பதில் மோடி அரசு தானடித்த மூப்பாக பெரும் ஆக்கிர மிப்பை மேற்கொண்டு வருகிறது. மாநில அரசு நிர்வாகம் மற்றும் நிதி நிர்வாகம் என்பது ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களின் மிகவும் முக்கியமான கவனம் பெற வேண்டிய அம்சம் ஆகும். கடந்த சில நாட்களாக இலங்கையில் மிகப்பெரிய அள விற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு வருவதை பார்க்கி றோம். நிதி மேலாண்மை தவறினால் நாடு பெரும் ஆபத்தை நோக்கி பயணிக்கும் என்பதற்கு இது உதாரணம்.

ஜிஎஸ்டி- பெரும் தாக்குதல்

இந்தியாவைப் பொறுத்தவரை ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலாக்கம் செய்யப்பட்ட பிறகு நாட்டின் நிதி பொறுப்பு மற்றும் நிதி மேலாண்மை பெரும் சீர்குலைவை நோக்கிச் சென்றுள்ளது. ஜிஎஸ்டி முறை வந்த பிறகு மாநிலத்திற்கான வருவாய் ஈட்டும் துறைகளாக இரண்டு அம்சங்கள் மட்டும் விட்டு வைக்கப்பட்டுள்ளன. ஒன்று, பெட்ரோலியப் பொ ருட்கள் மீதான மாநில அரசின் வரி விதிப்பு; மற்றொன்று மதுபானங்கள் மீதான மாநில அரசின் வரி விதிப்பு. ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு முன்பு மாநிலங்களுக்கு பல்வேறு வகையிலான வரி வருவாய் இனங்கள் இருந்தன. அந்த வழிகள் அனைத்தும் ஜிஎஸ்டியால் அடைக்கப்பட்டுவிட்டன. உண்மையில் தற்போதைய புதிய சூழலில் மாநில அரசுகளின் நிதி அமைச்சர் கள் என்பவர்கள் பெயருக்குத்தான் நிதி அமைச்சர்க ளே தவிர, நடைமுறையில் நிதி இல்லாத அமைச்சர்க ளாக; ஒன்றிய அமைச்சரிடமிருந்து நிதிக்காக  கையேந்துகிற அமைச்சர்களாக மாற்றப்பட்டிருக்கி றார்கள் என்பது வேதனைக்குரியது. ஜிஎஸ்டி வரி முறை அறிமுகம் செய்யப்பட்ட போது மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அச்சமயம் நான் மாநிலங்க ளவை உறுப்பினராக செயல்பட்டேன். ஜிஎஸ்டி வரி தொடர்பான குழுவில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆட்சேபணை எழுப்பி, நீண்ட குறிப்புகளை அளித் தோம். நாடு முழுவதும் ஒரே விதமான மற்றும் தன் னிச்சையான ஜிஎஸ்டி முறை என்பது எதிர்காலத்தில் மாநிலங்களின் பொருளாதாரத்தில் அளவிட முடியாத அளவிற்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்த ஆட்சேபணையில் குறிப்பிட்டிருந்தோம். எனினும் ஒன்றிய அரசு அதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

நாடு முழுவதும் ஒற்றை வரி விதிப்பு முறையை அமலாக்குவது எத்தகைய ஆபத்து நிறைந்தது என்பதை ஐரோப்பிய யூனியன் நாடுகள் அனுப வப்பூர்வமாக உணர்ந்திருக்கின்றன.  அதனால்தான் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வெளியேறுவது என்று தீர்மானித்தன. இந்தியா போன்ற மாநிலங்களின் ஒன்றியமாக உள்ள நாட்டில் ஜிஎஸ்டி போன்ற ஒற்றை வரி விதிப்பு முறை ஆபத்தா னது என்பதை தொடர்ந்து சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் உள்ளது.  ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு நாட்டில் வரி விதிப்பு முறையே மாறியிருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஜிஎஸ்டி கவுன்சில் கூடுகிற போது பல்வேறு விதமான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிகளும், விகி தங்களும் மாற்றி அமைக்கப்படுகின்றன. உதார ணத்திற்கு மிக மிக அத்தியாவசியப் பொருட்கள் கூட  இந்த வரி விதிப்பில் சிக்கி, அந்தத் தொழிலே நிலை குலையும் ஆபத்துகள் அதிகரித்து வருகின்றன. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய்க்கு வரி விதிக்கப்படுகிறது. அது அத்தியாவசியப் பொருள் அல்ல; ஆடம்பரப் பொருள் என்று ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் ஜிஎஸ்டி கவுன்சிலில் அமர்ந்து கொண்டு வகைப்படுத்துகிறார்கள். தேங்காய் எண்ணெய்க்கு வரி விதித்த போது தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் ஒன்றிய ஆட்சியாளர்கள் அதை ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்ளவில்லை.

அத்தியாவசியப் பொருள் அல்லாத குளிர்சாதனப் பெட்டிக்கு ஜிஎஸ்டி கவுன்சில் வரியை குறைத்து அறி விக்கிறது. இந்த வரிக்குறைப்பால் எளிய மக்களுக்கு எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை. அதை வாங்கி விற்கிற இடையீட்டு வணிகர்களுக்கும் கூட பலன் கிடைக்கப் போவதில்லை. மாறாக, குளிர்சாதன பெட்டி  உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்குத்தான் லாபம்.  ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை ஆபத்தானது மட்டு மல்ல, ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தருவதாக அறிவித்ததும் கூட 2022 ஜுன் மாதத்து டன் முடிவடைகிறது. இதற்கு பின்னர் மாநிலங்கள் மிகக் கடுமையான நிதி நெருக்கடியை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கேரள அரசு தனக்கு சேரவேண்டிய பத்தாயிரம் கோடியை இழந்தது. எதிர் வரும் ஆண்டில் ரூ.17ஆயிரம் கோடி இழப்பைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை ரூ.25ஆயிரம் கோடி அள விற்கு பெரும் இழப்பு ஏற்படும். இது சாதாரணமான தொகை அல்ல. இவ்வளவு பெரிய தொகையை மாநில அரசுகளால் திரட்டுவதும் சாத்தியமல்ல. இதன் விளைவாக மாநில அரசுகள் தங்களது மக்களுக்கான நலத்திட்ட நடவடிக்கைகளை தொடர முடியாத அபாயம் ஏற்பட்டுள்ளது.

வரி வருவாய் அனைத்தும்  ஒன்றிய அரசுக்கே!

வரி விதிப்பு மற்றும் நிதிப் பகிர்வு உள்ளிட்ட கொள் கைகளில் ஒன்றிய அரசு மாநிலங்களை எவ்வளவு கடுமையாக கசக்கிப் பிழிகிறது என்பதை 15வது நிதிக்கமிசனின் ஆய்வறிக்கையே சுட்டிக்காட்டுகிறது. அந்த அறிக்கையின்படி, நாட்டின் ஒட்டுமொத்த வருவாய் இனங்களில் ஒன்றிய அரசு 62.7சதவீதத்தை உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது; ஆனால் அதில் வெறும் 37.6சதவீத நிதியையே செலவினங்களுக்காக ஒதுக்குகிறது. மறுபுறம் மாநிலங்களுக்கு 37.3 சத வீதம் வருவாய்தான் கிடைக்கப்பெறுகிறது; ஆனால் மாநிலங்களின் தோள்களில் 62.4 சதவீதம் செலவினப் பொறுப்புகள் ஒன்றிய அரசால் ஏற்றப்பட்டுள்ளன.  மேற்கண்ட தாக்குதல்களோடு ஒன்றிய அரசு நிற்க வில்லை. மாநிலங்களின் அதிகார வரம்புக்குட்பட்ட கூட்டுறவுத்துறையை தன் கையில் எடுத்துக் கொண்டு அதுசார்ந்த நிதியை கபளீகரம் செய்வதற்கு முயற்சிக்கிறது. தற்போது “ஒரே நாடு, ஒரே பதிவு முறை” என்பதை அமலாக்க திட்டமிடுகிறது. மாநிலங்களைப் பொறுத்தவரை நிறுவனங்கள் மற்றும் நிலப் பதிவு போன்ற பதிவு நடவடிக்கைகளில் மாநில விற்பனை வரி மற்றும் நில பதிவு வரி ஆகிய வருவாய் இனங்கள் கிடைத்து வருகின்றன. ஆனால் ஒரே நாடு, ஒரே பதிவு என்ற முறை அமலானால் இதன்மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயும் மாநிலங்களிடமிருந்து பறிக்கப்படும்.  உதாரணத்திற்கு இந்த வருவாய் இனங் கள் மூலமாக கேரள அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3,500 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. ஒரே நாடு, ஒரே பதிவு முறை அமலானால் கேரள அரசு இந்தத் தொகையை இழக்க நேரிடும். தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் இதே கதிதான். 

நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் வரி செலுத்துகி றார்கள். ஆனால் அதற்கான பலன் அனைவருக்கும் சமமாக சென்றடையும் விதத்தில் நிதிக்கமிசனின் நிதி பகிர்வு வரையறை இல்லை. அங்கு நிதிப்பகிர்வு என்பது தன்னிச்சையாக தீர்மானிக்கப்படுகிறது. மாநி லங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு முன்பு அவர்க ளது தேவைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து நிதிக் கமிசன் ஆலோசிக்க வேண்டும் என்று சர்க்காரியா கமிசன் மற்றும் பூஞ்சி கமிசன் ஆகியவை வலுவாக வற்புறுத்தி உள்ள போதிலும் கூட்டாட்சியின் அந்த அடிப்படை அம்சங்களை அமலாக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை. நிதிப் பகிர்வு வரையறை என்பது தனி அதிகாரம் கொண்டதாக, தன்னிச்சையாக ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்படுகிறது; அதன் விளைவு மாநிலங்கள் நிதி அதிகாரம் இல்லாத நிலைக்கு தள்ளப்படுகின்றன.

அதிகரித்துள்ள மறைமுக வரி

ஒன்றிய - மாநில நிதி தொடர்பான விசயங்களில் மற்றொரு முக்கியப் பிரச்சனை நேர்முக மற்றும் மறைமுக வரி விகிதங்களின் ஏற்றத்தாழ்வு பற்றிய தாகும். 2004-05 ஆம் நிதியாண்டிலிருந்து 2015-16ஆம் நிதியாண்டு வரையிலான காலத்தில் நேர்முக வரியானது மொத்த வரி வருவாயில் 19சதவீதம் அள விற்கு  அதிகரித்தது. அதாவது, ரூ.78ஆயிரம் கோடியிலி ருந்து ரூ.5லட்சம் கோடி அளவிற்கு அதிகரித்தது. ஆனால் மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நேர்முக  வரி விகிதம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து தற்போது  வெறும் 7.8சதவீதமாக உள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம் என்னவென்றால், பெரும் கார்ப்பரேட்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன; மகாகோடீஸ்வ ரர்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இவர்கள் மீதான நேர்முக வரியை அதிகரிப்பதற்குப் பதிலாக ஒன்றிய மோடி அரசு எளிய மக்கள் மீதான மறைமுக வரியை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மறைமுக வரியில் மிக முக்கியமானவை ஒன்றிய அரசு விதிக்கும் செஸ் மற்றும் சர்ஜார்ஜ் ஆகியவை ஆகும். 2011 மற்றும் 12ல் பல்வேறு இனங்கள் மீதான செஸ் மற்றும் சர்ஜார்ஜ் வரிகள் மொத்த வருவாயில் சுமார் 10 சதவீதம் என்ற அளவிற்கு இருந்தது; தற்போது அது கிட்டத்தட்ட இரண்டு மடங்காகி 19.9 சத வீதம் என்ற அளவிற்கு வந்துள்ளது. இந்த வரிகள் மூலம் மட்டும் ரூ.4.5லட்சம் கோடிக்கும் அதிகமாக ஒன்றிய அரசு வருவாய் ஈட்டுகிறது. இந்த ஒட்டு மொத்த தொகையில் ஒரு பைசா கூட மாநிலங்களு க்குப் பங்காக தரப்படாது. 

நிதிப் பகிர்வில்  பெரும் தாக்குதல்

நிதிப் பகிர்வு தொடர்பான நிதிக்கமிசனின் வரை யறையில் மற்றொரு தன்னிச்சையான தாக்குதலும் துவங்கியுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள மக்களிட மிருந்து வரிகள் வசூலிக்கப்பட்ட போதிலும், சில குறிப் பிட்ட மாநிலங்களின் மக்கள், இந்த நிதிப் பகிர்வு முறையால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி றார்கள். கேரளாவில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதி உள்ளது. தமிழகத்திலும் கிட்டத்தட்ட அந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள், பீகார் மற்றும் உத்தரப்பிர தேசம் போன்ற வடமாநிலங்களுடன் ஒப்பிடும் போது ஓரளவிற்கு தரமான கல்வி, சுகாதாரம், போக்கு வரத்து உள்ளிட்ட வாழ்வியல் குறியீடுகளில் கூடுதல் தர நிலையைப் பெற்றுள்ளன. கூடுதல் தர நிலையைப் பெற்றுள்ளதால் இந்த மாநிலங்களுக்கு நிதி தேவை யில்லை என்ற முடிவுக்கு நிதிக்கமிசன் செல்கிறது. இந்த வளர்ச்சிநிலையை எட்டாத மாநிலங்கள் எப்போது எட்டிப்பிடிக்கின்றனவோ அப்போதுதான் உங்களுக்கு நிதி ஒதுக்குவோம் என்று நிதிக்கமிசன் கூறுகிறது. இது மிகவும் கொடூரமானது. ஓரளவு அரசியல் விழிப்பு ணர்வால் தென்மாநில மக்கள் வாழ்வியல் தரத்தில் சில குறியீடுகளை எட்டியிருப்பது தவறா என்ற கேள்வி  எழுகிறது. இந்த மக்களுக்கு சேர வேண்டிய நியாய மான நிதியை திட்டமிட்டு நிறுத்துவது அநியாய மானது. இதனால் கேரளமும் தமிழகமும் மிகக்கடுமை யாக பாதிக்கப்படுகின்றன.

உதாரணத்திற்கு 10வது நிதிக்கமிசன் இருந்த போது மாநிலங்களுக்கான நிதி பகிர்வு தொகுப்பி லிருந்து கேரளாவுக்கு 3.87 சதவீதம் நிதி ஒதுக்கப் பட்டது; தற்போது 15வது நிதிக் கமிசனில் அது சரி பாதியாகக் குறைக்கப்பட்டு வெறும் 1.92 சதவீதமாக வெட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 10வது நிதிக்கமிசன் இருந்த போது 6.63 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 4.07சதவீத மாக வெட்டுள்ளது. ஆந்திரப்பிரதேசத்தைப் பொறுத்த வரை 8.46 சதவீதத்திலிருந்து தற்போது 4.04 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது தென்மாநிலங்கள் மீது  நிதிப்பகிர்வில் நடத்தப்பட்டுள்ள மிகப்பெரிய தாக்குத லாகும்.

அதிகரிக்கும்  மாநிலங்களின் சுமை

இவ்வாறாக மாநில அரசுகளின் நிதி ஒன்றிய அர சால் முற்றாக கபளீகரம் செய்யப்படும் நிலையில் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு கடன் தொகையை அதி கரித்துத் தரவும் மறுக்கிறது. இதன்விளைவாக வேறு வழியில்லாமல் வெளியில் கடன்வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால் நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை 2003, மாநிலங்களின் நிதி பற்றாக்குறை 3 சதவீதத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டுமென்று நிபந்தனை விதிக்கிறது. எனவே மாநி லங்களால் தாங்க முடியாத அளவிற்கு கடுமையான நிதிச்சுமை சூழ்கிறது.  இவை ஒருபுறமிருக்க, ஒன்றிய அரசு தனது பட்ஜெட்டில் மிக முக்கியமான துறைகளுக்கு இதுவரை காணாத அளவு மானியங்களை வெட்டியிருக்கிறது. 2022-23 ஒன்றிய பட்ஜெட்டில் உணவு மானியம் ரூ.5.4லட்சம் கோடியிலிருந்து ரூ.2.06லட்சம் கோடியாக மிகப்பெரும் அளவிற்கு வெட்டப்பட்டுள்ளது. உர மானியம் ரூ.1.3லட்சம் கோடியிலிருந்து ரூ.1.05லட்சம் கோடியாக வெட்டப்பட்டுள்ளது. பெட்ரோலிய மானி யம் ரூ.38ஆயிரம் கோடியிலிருந்து ரூ.5,800 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. தேசிய கிராமப்புற வேலை உறுதித்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.1.1லட்சம் கோடியிலிருந்து ரூ.73ஆயிரம் கோடியாக வெட்டப் பட்டுள்ளது. அதேபோல, சமையல் எரிவாயு சிலிண்டர் பெறும் எளிய மக்களுக்கான நேரடி நிதி மானியம் ரூ.23,600 கோடியிலிருந்து வெறும் ரூ.4ஆயிரம் கோடி யாக குறைக்கப்பட்டுள்ளது. 

இவை மட்டுமல்ல, எல்ஐசி உள்ளிட்ட பொ துத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்ப தற்கான நடவடிக்கைகளில் மோடி அரசு தீவிரமாக மேற்கொண்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்க ளை விற்பது என்பது விதை நெல்லை விற்றுத் தின்ப தற்குச் சமமாகும்.  கேரள இடதுஜனநாயக முன்னணி அரசு, ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைகளையெல்லாம் தீவிரமாக எதிர்க்கிறது. அதை வெளிப்படுத்தும் விதமாகத்தான், எல்ஐசி பங்குகள் தாரைவார்ப்பை எதிர்த்து கேரள சட்டமன்றத்தில் கட்சி பேதமின்றி ஏகமனதாக தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.

இடது ஜனநாயக முன்னணி அரசின் பாதை

ஒன்றிய அரசின் இத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்ள கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொள்ள பட்ஜெட்டில் அறிவிப்புகளை வெளியிட்டுள் ளது. நிதி பகிர்வில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டினா லும் கேரள அரசோ, தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளோ நமது மக்களின் நலன்களை கைவிட்டுச் சென்றுவிட முடியாது. மக்கள் நம்மை நம்பி இருக்கி றார்கள். அவர்களது வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் மாநில அரசுகளுக்கு உள்ளது. அந்த அடிப்படையில் கேரள இடதுஜனநாயக முன்னணி அரசு மக்களுக்கான தனது செலவினங்களை 18சதவீதம் அளவிற்கு அதிகரிப்பது என முடிவு செய்துள்ளது.

கேரளாவில் 42லட்சம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5லட்சம் அளவிற்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை உறுதி செய்துள்ளோம். ஏற்கெனவே ஒன்றிய அரசின் சார்பில் பிரதான் மந்திரி மருத்துவக் காப்பீடு திட்டம் இருக்கிறது. ஆனால் அத்திட்டத்தின்கீழ் வெறும் ரூ.90 கோடிதான் கிடைக்கப்பெற்றது. ஆனால் கேரள அரசின்  மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மதிப்பீடு ரூ.600 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.  அதேபோல, 58லட்சம் குடும்பங்களுக்கு சமூகப் பாது காப்பு ஓய்வூதியம் என்ற அடிப்படையில் மாதம் ரூ.1600 தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல கல்வி, சுகாதாரம், சிறுதொழில்கள், தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கிய நீடித்த வளர்ச்சிக்கான ஒரு முன்மாதிரியை கேரள அரசு உருவாக்கமுனைந்துள்ளது. மொத்தத்தில் கேரள பொருளாதாரத்தை ஓர் அறிவுசார் பொருளாதாரமாக வளர்த்தெடுப்பதற்கான ஒருங்கி ணைந்த திட்டத்தை இடதுஜனநாயக முன்னணி அரசு உரு வாக்கியுள்ளது. ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வு பாரபட்சங்க ளை எதிர்த்துப் போராடிக் கொண்டே, அனைத்து மாநிலங்க ளையும் இதற்காக அணிதிரட்டி குரல் கொடுத்துக் கொண்டே கேரள அரசு தனது மக்களை பாதுகாக்கும் பாதையில் உறுதியுடன் நடைபோடும்.

தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்