அமெரிக்காவில் அடுத்தடுத்து வங்கிகள் திவாலான போதும், ‘அவை சிறு பகுதிக்குள் செயல்படக்கூடிய பிராந்திய வங்கிகள்தான், அமெரிக்க வங்கித்துறையில் பிரச்சனை எதுவுமில்லை’ என்று அமெரிக்க அரசு அவசரமாக அறிவித்தது. அந்த அறிவிப்பின் அவசரமே, பெரும் நெருக்கடியொன்று வருவ தற்கான அறிகுறி என்று சந்தேகிக்க வைத்த நிலை யில், வீழ்ந்தால் நாட்டின் பொருளாதாரத்திற்கே நெருக்கடி ஏற்படலாம் (டூ பிக் டு ஃபெய்ல்) என்று கருதப்படும் வங்கிகளில் ஒன்றான கிரெடிட் ஸ்வீஸ் வங்கி திவாலின் விளிம்பிற்குச் சென்றது. அவசர அவ சரமாக அதன் போட்டி வங்கியான யுபிஎஸ் (யூனியன் பேங்க் ஆஃப் ஸ்விட்சர்லேண்ட்) வங்கியிடமே அடிமாட்டு விலைக்கு கிரெடிட் ஸ்வீஸ் வங்கி விற்கப் பட்டு, அமிர்தாஞ்சன் விளம்பரம்போல, பிரச்சனை ‘போயே போச்சே, போயிந்தே, இட்ஸ் கான்...’ என்று காட்டிக்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் அமெரிக்காவிலும், ஐரோப்பா விலுமுள்ள 6 மத்திய வங்கிகள்(அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ், ஐரோப்பிய மத்திய வங்கி, ஸ்விட்சர் லாந்து தேசிய வங்கி, பேங்க் ஆஃப் இங்கிலாந்து, பேங்க் ஆஃப் கனடா, பேங்க் ஆஃப் ஜப்பான்) அமெரிக்க டாலர் புழக்கத்தினை அதிகரிப்பதற்கான கூட்டு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அறி வித்தன. டாலரை போட்டி நாணயமாகக் கொண்டுள்ள ஐரோப்பிய மத்திய வங்கி, பேங்க் ஆஃப் இங்கிலாந்து ஆகியவையும் டாலரின் புழக்கத்திற்காகக் கை கோர்க்கின்றன என்பது மிகக் கடுமையான நெருக்கடியில் டாலர் - அதாவது அமெரிக்கப் பொரு ளாதாரம் சிக்கவிருக்கிறது என்பதற்கான கட்டிய மாகவே தோன்றுகிறது.
2008 நெருக்கடியின்போது வங்கிகளுக்கான அவசர கால நிதியிலிருந்து(டிஸ்கவுண்ட் விண்டோ) பெறப்பட்ட தொகை 110 பில்லியன் (பில்லியன் = 100 கோடி) டாலர்கள். ஆனால், தற்போது அந்நிதியி லிருந்து வங்கிகள் பெற்றுள்ள தொகை 152.8 பில்லியன் டாலர்கள். வரலாற்றிலேயே மிக அதிகமாக இந்த அவசரகால நிதி பயன்படுத்தப்பட்டுள்ளபோதும், பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டால் இது அதிகமில்லை என்று சமாளிக்கிறது அமெரிக்க அரசு. ஆனால், ஃபெடரல் ரிசர்வ் மார்ச் 16 அன்று வெளியிட்ட தகவல்களின்படி, அதர் கிரெடிட் எக்ஸ்ட்டென்ஷன்ஸ் என்ற பெயரில் 142 பில்லியன் டாலர்களும், ஊதியப் பாதுகாப்புக்கான நிதி, டெர்ம் ஃபண்டிங் புரொகிராம் ஆகிய பெயர்களில் மேலும் 22 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிதியும் வழங்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 318 பில்லியன் டாலர்கள் அவசரமாக வழங்கப்பட்டுள்ள நிலையில், நெருக்கடி இல்லை என்பது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிற முயற்சியா கவே தெரிகிறது.
இதற்கிடையில், மார்ச் 24 அன்று டச்சு வங்கியின் பங்கு விலை 15 சதவீதம் அளவுக்குச் சரிந்து நெருக்க டியில் இருப்பதாகச் செய்திகள் வெளியாகிக் கொண்டி ருக்கின்றன. இதுவும் ஒரு ‘டூ பிக் டு ஃபெய்ல்’ வங்கி தான் என்பது நெருக்கடி மறைக்க முடியாத நிலையை நெருங்கிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. பொதுவாக ஒன்றிரண்டு வங்கிகள் திவாலா னால், மற்ற வங்கிகளின் மீதும் மக்கள் நம்பிக்கை யிழந்து தங்கள் பணத்தைத் திரும்பப் பெறத் தொடங்குவதால், இது தொற்று நோய்போலப் பரவும் என்று கூறப்படுவதுண்டு. ‘பேங்க் ரன்’ என்று அழைக் கப்படும் இது அடுத்தடுத்த வங்கிகளின் திவாலுக்குக் காரணமாகி, பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் செல்லவோ, அல்லது அதுவரை மறைக்கப்பட்டி ருந்த பொருளாதார நெருக்கடியை வெளிப்படுத்த வோ செய்கிறது என்பது வரலாற்று அனுபவம். அப்படி யான நிலையை அமெரிக்க, ஐரோப்பியப் பொருளா தாரங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன என்று தான் இந்த வங்கிகளின் நெருக்கடிகள் கூறுகின்றன.
வங்கி திவால், பேங்க் ரன் என்றால்...
இந்த நேரத்தில் வங்கி திவால், பேங்க் ரன் ஆகி யவை என்னவென்று புரிந்துகொள்வது அவசியமாக இருக்கிறது. ஒரு வங்கியின் மொத்த சொத்துகளின் (அசெட்ஸ்) மதிப்பு, அது திருப்பித்தர வேண்டிய நிதியின் (லயபிலிட்டி) மதிப்பைவிடக் குறைந்துவிடு வது திவால் என்றழைக்கப்படுகிறது. பொதுவாக, மக்களிடம் திரட்டப்படும் சேமிப்பிற்கு வழங்குகிற வட்டியைவிட அதிக வட்டிக்கே வங்கிகள் கடன் அளிக்கும் என்பதால் அசெட்களின் மதிப்பு எப்போதும் அதிகமாகவே இருக்கும். வங்கியில் மக்கள் வைத்திருக்கிற சேமிப்பு, பத்திரங்களின் மூலம் வங்கி திரட்டியுள்ள நிதி போன்றவை லயபிலிட்டிகளாக இருக்கும். அரசுப் பத்திரங்கள், வேறு முதலீடுகள் போன்றவற்றில் வங்கி செய்திருக்கிற முதலீடுகள், (வளர்ச்சியுடன் - அதாவது வட்டியுடன் - திரும்ப வரக்கூடியவை என்பதால்) வங்கி வழங்கியிருக்கிற கடன்கள் போன்றவை வங்கியின் அசெட்களாக இருக்கும். சில கடன்கள் திரும்ப வராமல் போவது என்பது எல்லா வங்கிகளுக்கும் நிகழக்கூடிய ஒன்றுதான். அதற்கும் சேர்த்துக் கணக்கிட்டுத்தான் வங்கிகள் சொத்துகளை வைத்துக்கொள்கின்றன. ஆனால், அப்படியான திரும்ப வராத கடன்கள் அதிகமாவது, முதலீடு செய்துள்ள பத்திரங்கள் போன்றவற்றின் மதிப்பு சரிவது போன்ற காரணங்களால், அசெட்க ளைவிட லயபிலிட்டிகளின் மதிப்பு உயர்ந்து விடுவது தான் நெருக்கடி. அப்படியான நேரங்களில், நெருக்கடி என்று தெரிந்தவுடன், வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் தங்கள் பணத்தை எடுத்துவிட முயற்சிப்பது பேங்க் ரன்.
பொதுவாக வங்கிகள் தங்களிடமுள்ள சேமிப்புக ளில் மிகச்சிறிய பகுதியைத்தான் உடனடியாகப் பயன் படுத்தும் வகையில் ரொக்கமாகவோ, அல்லது அத்தகைய உடனே மாற்றத்தக்க முதலீடாகவோ வைத்திருப்பார்கள். அதனால், ஒரே நேரத்தில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பணத்தைத் திருப்பித் தருவது என்பது சாத்தியமாக இருக்காது. வழங்கியுள்ள கடன்களையும் உடனே திருப்பித் தரும் படிக் கேட்க முடியாது. மாறாக, அந்தக் கடன்களை நீங்கள் வசூலித்துக்கொள்ளுங்கள் என்று மற்றொரு வங்கியிடம் விற்கலாம். அந்தக் கடன்களின் தரத்தை உடனடியாகக் கணக்கிட முடியாது என்பதால், வாங்குகிற வங்கி மிகக்குறைந்த மதிப்பிற்குத்தான் அவற்றை வாங்கும். இந்தக் காரணங்களால், அசெட்களைவிட லயபிலிட்டிகளின் மதிப்பு மேலும் அதிகமாகி, செயல்படும் நிலையை வங்கி இழந்து விடுவது திவாலாகி விட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு வங்கி இவ்வாறு திவாலானதும், மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்களும் தங்கள் பணத்தை எடுக்க ஓடும் பேங்க் ரன் நிகழ்ந்து, தொற்று நோயாக மற்ற வங்கிகளும் வீழத் தொடங்குகின்றன. 1930களின் கிரேட் டிப்ரஷனில் இவ்வாறு சுமார் 9 ஆயிரம் வங்கி கள் வீழ்ந்தன.
அடிமாட்டு விலைக்கு விற்பனை
அமெரிக்காவைப் பொறுத்தவரை, இவ்வாறு திவாலான வங்கிகளை அதன் எஃப்டிஐசி (FDIC- ஃபெடரல் டெபாசிட் இன்ஷ்யூரன்ஸ் கார்ப்பரேஷன்) எடுத்துக்கொண்டு, மற்றொரு வங்கியிடம் விற்க முயற்சி மேற்கொள்கிறது. திவாலான வங்கியின் சொத்துகளை சரியாக மதிப்பிடுவதற்கான கால அவகாசம் இருப்பதில்லை என்பதால், இந்த விற்பனை அடிமாட்டு விலைக்குத்தான் நடக்கும். அது தான் கிரெடிட் ஸ்வீஸ் வங்கியை யுபிஎஸ் (UBS) வாங்கியபோது நடந்தது. அப்படி வாங்கவும் எந்த வங்கியும் தயாராக இல்லையென்றால், வாடிக்கையா ளர்களின் 2.5 லட்சம் டாலர்கள் வரையான சேமிப்பை உடனே எடுத்துக் கொள்ள எஃப்டிஐசி (FDIC) வழி வகை செய்யும். அதற்கும் அதிகமான தொகைக்கு ‘ரிசீவர் சர்ட்டிஃபிகேட்’ என்ற ஒன்றை வழங்கும். அதாவது, சொத்துகளை விற்பது, கடன்களை வசூல் செய்வது ஆகியவற்றை முடித்து, கிடைக்கிற தொகையில் நம் சேமிப்பின் அளவுக்கேற்ற விகி தத்தில் திருப்பித் தருவதான சான்று. அதனால், வாடிக்கையாளரின் சேமிப்பு முழுமையாகத் திரும்பக் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாத மில்லை. சேமிப்புகளைத் திருப்பிக் கொடுத்து மீத மிருந்தால்தான், வங்கியின் பத்திரங்களில் முதலீடு செய்திருந்தவர்களுக்குக் கிடைக்கும். பங்குதாரர்க ளுக்கு அதுவுமில்லை.
அதனால்தான், வங்கியின் நெருக்கடி பற்றிய செய்தி வெளியானவுடனேயே பங்குகளை வைத்தி ருப்பவர்கள் விற்க முயற்சிக்கிறார்கள், பங்கின் விலை சரிந்துவிடுகிறது. இது பிற வங்கிகளுக்கும், பிற துறை பங்குகளுக்கும் பரவி சங்கிலித் தொடராக நெருக்கடியைப் பரவச் செய்கிறது. 1929இல் கிரேட் டிப்ரஷன், 1873இல் லாங் டிப்ரஷன், 1970களின் எனர்ஜி க்ரைசிஸ் உட்பட பல நெருக்கடிகளின் தொடக்கத்தை அறிவித்தவை பங்குச் சந்தை வீழ்ச்சி கள்தான் என்பது கவனிக்கத் தக்கது. இம்மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட முதல் வங்கி திவாலைத் தொடர்ந்து சரிந்த பங்குச் சந்தைகள் உலகெங்கும் அதே நிலையிலேயே தொடர்கின்றன, தொடர்ந்து சரிந்துகொண்டே இருக்கின்றன என்பதும், பொரு ளாதார நெருக்கடியினை உணர்த்துவதாகவே உள்ளது. சோறு எவ்வளவுதான் அதிகம் என்றா லும், சோற்றுக்குள் மறைக்கப்பட்டிருப்பது முழுப் பூசணிக்காய்தான் என்பது வெளிப்படும் காலம் அதிகத் தொலைவில் இல்லை என்றே தோன்று கிறது!