உலகில் அரிசி உற்பத்தியில் இந்தியா 5-ல் 1 பகுதி உள்ள நாடாக இருக் கின்றது. ஒரு தனி மனிதன் மாதம் 6.8 கிலோ கிராம் அரிசியை உணவாக உட்கொள்கின்றார். இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரிசியை உணவாக உட்கொள்கின்றனர். உணவில் அரிசியின் தேவை மிகப் பெரும் பங்காற்றுகிறது. இதனை உணர்ந்து கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் வணிக நோக்கத்தோடு அரிசியின் மீதான பார்வையை செலுத்தி வருகின்றன. 2021-2022இல் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘மிஷன் போஷான் 2.0’, ‘போஷான் அபியான்’ திட்டத்துடன் இணைத்து செயல்படுத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 2023 சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி 2024-இல் நாடு முழுவதும் ‘செறிவூட்டப்பட்ட அரிசி’ வினியோகிக் கப்படும் என்று அறிவித்தார். இந்திய உணவு பாது காப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உண வில் பொதுமக்களுக்கு நுண்ணூட்டச் சத்து தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று வரையறுத்துள்ளது.
செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன?
வழக்கமான அரிசி மாவில் நுண்ணூட்ட சத்துக்களை சேர்த்து மீண்டும் அரிசி வடிவிலேயே தொழில் நுட்ப முறையில் தயாரிப்பதுதான் செறி வூட்டப்பட்ட அரிசி என்பதாகும். ‘எக்ட்ரூடர்’ இயந்தி ரத்தை பயன்படுத்தி அரிசி மாவுக்கலவையிலிருந்து வலுவூட்டப்பட்ட அரிசியை தயாரிப்பதை இந்தியா சிறந்த தொழில்நுட்பமாக தேர்வு செய்துள்ளது. நுண்ணூட்டம் சேர்க்கப்பட்ட அரிசி மாவு கலவையை மீண்டும் அரிசியாக மாற்ற உலரவைத்தல், குளி ரூட்டல் செய்யப்பட்டு அரிசி மணிகள் (கர்னல்கள்) வடிவில் தயாரிக்கப்படுகிறது.
இந்தியாவில் சத்துக் கலவையின் அளவு
50 சதவீத பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள வர்களாக இருக்கின்றனர்; குழந்தைகள் 60 சதவீதம் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்; மூன்றில் ஒரு குழந்தை வளர்ச்சி குன்றிய குழந்தையாக உள்ளது என்பதால் இத்திட்டத்தை செயல்படுத்திட அரசு முன் வந்துள்ளது என்று கூறப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு உணவை வலுப்படுத்துவது முக்கியமானது என்று கருதப் பட்டுள்ள நிலையில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி வழக்கமான 100 கிலோ அரிசியுடன் கலக்கப்படும் (100:1) 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு சத்து 28-42.5 மி.கி., போலிக் அமிலம்-0.75-1.25 மைக்ரோ கிராம், துத்தநாகம்-10-15 மி.கி., வைட்டமின் B3-12.5-20 மி.கி., வைட்டமின் B6-1.5-2.5IA என்ற உணவு தர கட்டுப்பாட்டு ஆணையத்தின் வரையறையின் விகிதத்தில் அரிசி மாவில் மேற்கண்ட நுண்ணூட்ட இரசாயனக் கலவை சேர்க்கப்படுகிறது. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகம், ஒடிசா உட்பட 15 மாநிலங்களில் பொது வினியோக முறை (PDS) மூலமும், மதிய உணவு திட்டத்தின் மூலமாகவும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 88.65 லட்சம் மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட அரிசி உற்பத்தி செய்யப்படுவதாக ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. செறிவூட்டப்பட்ட அரிசி இருக்கும் சணல் பைகளில் (+F) Fortified with Iron, Folic Acid, and Vitamin B12 என்று அச்சிடப்பட்டிருக்கும். ஒன்றிய அரசு முதற்கட்டமாக நாடு முழுவதிலும் 112 மாவட்டங்களை தேர்வு செய்துள்ளது. தமிழ்நாட்டில் விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களை தேர்வு செய்துள்ளது.
எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு பதில் என்ன?
- அரிசியின் மிகப்பெரிய சந்தையை கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக இருக்கலாம் என்ற கேள்வி எழுகிறது. ஆரோக்கியமாக இருக்கும் ஒரு தனிமனிதன் ஏன் செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும்?
- சர்வதேச அளவில் 5 பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் (Oasf -ஜெர்மன், கொன்ட்சா- சுவிட்சர்லாந்து,அடிசியோ- பிரான்ஸ், பில்கேட்ஸ் மெலிண்டா கேட்பவுன்டேசன்- அமெரிக்கா, யுவுர்-ஐரோப்பிய யூனியன்) மட்டுமே நுண்ணூட்ட இரசாயன பொருட்களை வாங்குவதற்கு ரூ.2,700 கோடி நிதி ஒதுக்கி ஒப்பந்தம் செய்திருப்பதன் உள்நோக்கம் என்ன?
- செறிவூட்டப்பட்ட அரிசியை 3 மாதங்களில் பயன்படுத்திட வேண்டும். அதற்குமேல் அதன் வீரியத்தன்மை குறைந்துவிடும் நிலையில் இதன் வினியோக முறை பயன் அளிக்குமா? ஏற்கனவே அரசுத்
- திட்டங்களின் மூலம் இரும்புச் சத்து மாத்திரைகள், ஊட்டச்சத்து மாவுகள், ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்ட பிறகு ஏற்பட்டுள்ள ஆரோக்கியத்தின் மீதான ஆய்வுகள் விபரம் தெரிவிப்பது என்ன? இந்த முயற்சிகள் தோல்வியடைந்தனவா?
- செறிவூட்டப்பட்ட அரிசி உட்கொள்வதால் சத்து குறைபாடுகள் சரிசெய்யப்பட்டதாக ஆய்வுகள் விபரம் இல்லாத நிலையில் ஒன்றிய அரசு முனைப்பு காட்டுவது ஏன்? ஒன்றிய அரசிற்கு ஆதரவாக இருக்கின்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்புமே கூட ஏன் இதனை எதிர்க்கின்றது?
- உணவும், உடல்நலமும் கார்ப்பரேட் சந்தைக்குள் வரும்போது ஆபத்தான கேடுகளை ஏற்படுத்தும் வாய்ப்புகளை எதிர்கொள்வது மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கப்போகிறதா?
- செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சென்று கருத்துக்களை கேட்காமலேயே செயல்படுத்துவது சரியான நடைமுறை தானா?
இது தனிமனிதனின் உணவு உரிமையின் மீதான கட்டாயமான தாக்குதலாகவே கருதப்படும்.