புதுதில்லி, ஜூன் 27- மின்நுகர்வோர் முன்கூட்டியே பணம் செலுத்தும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண் டும் என்றும், மாநிலங்கள் இந்த திட்டத்தை அமல்படுத்த நிர்ப்பந்திப்பதை கைவிட வேண்டும் என்றும் சிபிஎம் வலியுறுத்தியுள் ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழுக் கூட்டம், புதுதில்லியில், மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபா லன் பவனில் ஜூன் 24, 25 தேதிகளில் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்ப தாவது:
பாட்னா சந்திப்பு
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அழைப்பின் பேரில் ஜூன் 23 அன்று பாட்னாவில் 15 எதிர்க் கட்சிகள் சந்தித்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்திய குடியரசின் மதச்சார் பற்ற ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாத்தி டவும், ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பாக மக்களுக்கு அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள உத்தரவாதங்களைப் பாதுகாத்தி டவும் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒத்துழைப்பு தேவை என்று அழுத்தமாக கூறப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில், முக்கியமான பிரச்சனைகள் மீதும், நாட்டு மக்களின் வாழ்க்கை மிக வேகமாக சீர்கேடு அடைந்து கொண்டிருப்பது குறித்தும், அகில இந்திய அளவில் பிரச்சாரத்தை எதிர்க்கட்சி கள் கூட்டாக மேற்கொள்ள வேண்டும் என்று முன்மொழியப்பட்டது. ஒவ்வொரு மாநில அளவிலும் எதிர்க்கட்சிகள் மத்தியில் வர விருக்கும் 2024 பொதுத் தேர்தலில் பாஜகவைத் தனிமைப்படுத்திட சாத்தியமான அளவிற்கு எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்திட, விவாதங் கள் தொடங்கப்பட வேண்டும்.
மணிப்பூர்
மே 3 அன்று தொடங்கி ஏழு வாரங்கள் கழிந்த பின்னரும் இன வன்முறை வெறியாட்டங்கள் தொடர்வதற்கு அரசியல் தலைமைக்குழு ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கி றது. “இரட்டை என்ஜின்” பாஜக அரசாங்கம், நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் முழு மையாகத் தோல்வி அடைந்துவிட்டது. மணிப் பூர் நிலைமை குறித்து எவ்விதமான கருத்துக் கூறவும் பிரதமர் மோடி மறுத்துவிட்டார். வன் முறை வெறியாட்டங்கள் தொடங்கி 26 நாட்கள் கழித்து உள்துறை அமைச்சர் பயணம் செய்தி ருந்த போதிலும் சட்டம்-ஒழுங்கு நிலைமை யில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. நிலை மையைச் சமாளிக்க இயலாத நிலையிலும், வன்முறை வெறியர்களுடன் ரகசிய பிணைப் பும் கொண்டிருக்கும் பைரேன்சிங் தலைமையி லான பாஜக அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை மோடி அர சாங்கம் ஏற்க மறுப்பதால் உள்துறை அமைச்சர் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தால் எவ்விதப் பயனும் கிடையாது. வன்முறை வெறியாட்டங்கள் உடனடி யாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் இயல்பு நிலை மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அரசியல் தலைமைக்குழு கேட்டுக் கொள்கிறது.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்
பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ அமெ ரிக்க பயணம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக இந்தியா மாறும் தன் நிலையில் மேலும் வளைந்து கொடுத்திருக்கி றது. ஜிஇ-எஃப் 414 ஜெட் என்ஜின் உற்பத்தி யைக் கூட்டாக செய்வது போன்று பல ராணுவ ஒப்பந்தங்கள் மூலமாக இந்தியா, அமெரிக்கா வின் ‘பெரிய அளவிலான ராணுவக் கூட்டாளி’ யாக மாறியிருக்கிறது. அமெரிக்கா, உலக மேலாதிக்கத்தை வலுப் படுத்திடுவதற்காகவும், சீனாவைத் தனி மைப்படுத்துவதற்காகவும், இந்தியாவைத் தன்னுடைய முக்கியமான ராணுவக் கூட்டாளி யாகப் பார்க்கிறது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா இந்தியாவில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் மோச மான நிலைக்குச் சென்றிருப்பது குறித்து விமர்சனங்களை எழுப்பியிருந்தபோதிலும் கூட, பைடேன் நிர்வாகம் இவற்றை எழுப்பிட மறுத்திருக்கிறது. மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பாக மோடி அரசாங்கத் தின் மீது அமெரிக்க காங்கிரசின் 75 உறுப்பி னர்கள் பிரச்சனைகளை எழுப்பியிருக்கி றார்கள்.
பொது சிவில் சட்டம்
சட்ட ஆணையம், மீண்டும் பொது சிவில் சட்டம் குறித்த பிரச்சனை மீது கலந்தாலோ சனைகளைத் தொடங்கி இருக்கிறது. சென்ற சட்ட ஆணையமும் இதே போன்று ஒரு முயற்சி யை மேற்கொண்டு, அது 2018இல் “ஒரே சிவில் சட்டம் என்பது அவசியமும் அல்ல, இந்தக் கட்டத்தில் விரும்பத்தக்கதும் அல்ல” என்ற முடிவுக்கு வந்தது. இந்தக் கருத்து சரி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆமோதித்து ஏற்றுக்கொள்கிறது. சீரான தன்மையை (uniformity) சமமான தன்மையுடன் (equality) ஒப்பிட முடியாது. அனைத்து சமூகத்திலும் உள்ள பெண்களுக் கும் சம உரிமைகள் வேண்டும் என்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. இதனை பல்வேறு சமூகத்திலும் உள்ள ஆண் களும் பெண்களும் ஜனநாயகப் பூர்வமாகப் பங்கேற்க வைத்து, அவரவர்களுடைய பர்சனல் அல்லது வழக்கமான சட்டங்களில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதன் மூலம் மட்டுமே முன்னெடுத்துச் செல்ல முடியும்.
மக்கள் பணத்தைச் சட்டப்பூர்வமாகச் சூறையாட முயற்சிகள்
வங்கிகளில் மிகப்பெரிய அளவில் கடன் களைப் பெற்றுள்ளவர்கள், வேண்டுமென்றே திருப்பிச்செலுத்தாமல், வங்கிகளை ஏமாற்றும் பேர்வழிகள் அவ்வாறு சூறையாடியதைச் சட்டப்பூர்வமாக்கிடும் விதத்தில், இந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டிருப் பதை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று அர சியல் தலைமைக்குழு கோருகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை, பணத்தைத் திருப்பிச் செலுத்தாதவர்கள், அந்த வங்கிகளு டன் சமரசம் செய்துகொள்வதற்கு அனுமதி அளிக்கிறது. வங்கிகளின் கடன்க ளைப் பெற்றுவிட்டுத் திருப்பிச் செலுத்தாத நபர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்,அவர்களிடம் பெற்ற கடன்தொகை யை முழுமையாகத் திரும்பப் பெற்றிட வேண்டும்.
மாநிலங்களுக்கு அரிசி விநியோகத்தைக் குறைக்காது அளித்திடுக!
மோடி அரசாங்கம் மிகவும் ஜனநாயக விரோதமான முறையில், சர்வாதிகாரமாக இந் திய உணவுக் கழகம் மாநிலங்களுக்கு அரிசி யை விற்கக் கூடாது என்று கட்டளையிட்டிருக்கி றது. பாஜக அல்லாத மாநில அரசாங்கங்கள் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தடுத்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த நட வடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்க!
மின்நுகர்வோர் முன்கூட்டியே பணம் செலுத்தும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை மோடி அரசாங்கம் அமல்படுத்திக் கொண்டிருக்கி றது. பல மாநில அரசாங்கங்கள் இதனை அமல்படுத்திட நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின் றன. அதன்மூலம் மின் பகிர்மானத்தை அளிக்க வேண்டும் என்கிற பொறுப்பிலிருந்து வில கிக்கொண்டு, அதனைத் தனியார் கார்ப்ப ரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு ஒப்ப டைத்துக் கொண்டிருக்கிறது. இது ஏழைகள் மீதும் விவசாயிகள் மீதும் தாங்க முடியாத சுமையை ஏற்படுத்திடும். இத்திட்டத்தை உட னடியாக ரத்து செய்திட வேண்டும்.
அசாம் தொகுதிகளின் எல்லையை மறுநிர்ணயம் செய்தல்
அசாம் மாநிலத்தில் மட்டும் 2001 மக்கள் கணக்கெடுப்பின் அடிப்படையில் 2023இல் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லையை மறு நிர்ணயம் செய்திடும் அரசின் முடிவை அரசி யல் தலைமைக்குழு எதிர்க்கிறது. ஆளும் பாஜகவின் அரசியல் நோக்கங்களை முன்னெ டுத்துச் செல்வதற்காகவே, எல்லை மறுநிர்ண யம் செய்வதற்காக தனியே ஆணையம் எதை யும் அமைக்காது தேர்தல் ஆணையம் இவ் வாறு செய்திருக்கிறது என்பது தெளிவாகும்.
மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகளின் கிளர்ச்சிப் போராட்டம்
பாஜக எம்.பி.க்கு எதிராக, அவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் துன் புறுத்தல்களில் ஈடுபட்டார் என்பதற்கு பூர்வாங்க சாட்சியம் இருந்த போதிலும், அந்த எம்.பி.யைப் பாதுகாப்பதிலேயே பிடிவாத மாக பாஜகவும், மோடி அரசாங்கமும் அப்பட்ட மான முறையில் இருந்து வருகிறது. பாதிப் புக்கு உள்ளானவர் தன் வாக்குமூலத்தைத் திரும்பப் பெற நிர்ப்பந்தம் அளிப்பதற்காக, கால அவகாசம் கொடுத்து, பாலியல் குற் றங்களிலிருந்து குழந் தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் அந்த நபர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வழக்கின் புலன்விசார ணையை வேண்டுமென்றே தாமதப்படுத்தி யது. இது, பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வழக்கு தொடுத்துள்ள சிறுமிகளின் முறையீடுகள் அனைத்திலும் கடும் பாதிப்பு களை ஏற்படுத்திடும். அந்த எம்.பி.யை மேலும் காலதாமதம் செய்யாமல் கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
மேற்குவங்க பஞ்சாயத்துத் தேர்தல்கள்
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கி ரஸ் அரசாங்கத்தின் கீழ் பஞ்சாயத்துத் தேர்தல் கள் என்பதை மிகப்பெரிய அளவில் வன் முறை வெறியாட்டங்கள் மற்றும் அராஜக நட வடிக்கைகளுடன் இருந்திடும் என்பது ஒரு வழக்கமாகவே மாறிப் போயிருக்கிறது. இப் போது நடைபெறவுள்ள தேர்தலிலும் இதுவரை 10 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர் களில் ஒருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் இளைஞர் தோழர் மன்சூர் ஆலம். திரிணாமுல் காங்கிரசார் வன்முறை மற்றும் அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போதிலும், மேற்கு வங்க மக்கள் இந்தத் தடவை இவர்களின் ஜனநாயகப் படுகொலை யைத் துணிவுடன் எதிர்த்துநின்று, மக்களின் பஞ்சாயத்துக்களை நிறுவிட முன்வந்திருக்கி றார்கள். கடந்த பஞ்சாயத்துத் தேர்தலின்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் அரா ஜக நடவடிக்கைகள் காரணமாக 34 விழுக்காடு இடங்களில் போட்டியின்றி தேர்தல்கள் நடந் தன. இந்த முறை, இது சுமார் மூன்றில் இரண்டு பங்காகக் குறைந்திருக்கிறது.
தேசிய குடும்ப சுகாதார சர்வே
தேசிய குடும்ப சுகாதார சர்வே-6இலிருந்து ஊனமுற்றோர் சம்பந்தமான கேள்விகள் கை விடப்பட்டிருப்பதை அரசியல் தலைமைக்குழு ஆழமான கவலையுடன் பார்க்கிறது. முந் தைய சுற்றில் முன்வைக்கப்பட்ட கேள்விகள் பிழையானதாக இருந்தாலும், அவற்றை முழு மையாக நீக்குவது என்பது பிற்போக்கான நட வடிக்கையாகும். இதனை இணைத்திட வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது.
மத்தியக் குழுக் கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக் குழுக் கூட்டம் 2023 ஆகஸ்ட் 4-6 தேதி களில் புதுதில்லியில் நடைபெறும்.
(தமிழில்: ச.வீரமணி)