சர்வதேசப் பாட்டாளி வர்க்க ஒருமைப்பாட்டு தினமான இந்த மே நன்னாளில் உலகம் முழுவதும் பெரும் முதலாளிகள் மற்றும் அவர்களின் அடக்குமுறைக் கருவிகளின் பல்வேறு தாக்குதல்களுக்கு மத்தியில் போராடிப் பெற்ற உரிமை களையும் பயன்களையும் பாதுகாப்பதற்காக போராடி வரும் உழைப்பாளி மக்களுக்கு மே தின வாழ்த்துக் களை சிஐடியு உரித்தாக்குகிறது. உலகம் முழுவதும் அமைப்பு ரீதியாக அணி திரள்வ தன் அவசியத்தை தொழிலாளி வர்க்கம் உணர்ந்து வருவதை வரவேற்கிறோம். குறிப்பாக முதலாளித்து வத்தின் கோட்டையான அமெரிக்கா உள்பட உலக அளவில் தொழிலாளி வர்க்கப் போராட்டங்கள் எழுச்சி பெற்று வருவதும், இளைஞர்கள் அவற்றில் பங்கேற்ப தும் வரவேற்கத்தக்கது.
சீனா, வியட்நாம், கியூபா, வடகொரியா, லாவோஸ் ஆகிய சோசலிச நாடுகள் மக்களின் நலனையே பிர தானமாகக் கொண்டு செயல்படுகின்றன. வலுவான பொதுசுகாதார கட்டமைப்பைக் கொண்டுள்ளன. மக்களின் வாழ்வாதாரத்தை கொரோனா பொது முடக்கக் காலத்தில், பாதுகாப்பதில், சோசலிச நாடு களே முன்னணியில் நின்றன. இதற்கு நேர்மாறாக வளர்ச்சி அடைந்த அமெரிக்கா போன்ற முதலாளித் துவ நாடுகளில் பல லட்சக்கணக்கான மக்கள் கொரோ னாவினால் மடிந்து விட்டனர். முதலாளித்துவ நாடு களில் கார்ப்பரேட்டுகளின் லாபங்களே முன்னுரிமை பெற்றன. அங்கு பெயரளவிற்கு பொதுசுகாதார கட்ட மைப்பு உள்ளது. கொரோனாவை சந்திக்க வல்ல விஞ்ஞான, தொழில்நுட்ப வசதிகள் இருந்தும் முதலா ளித்துவ நாடுகளில் இது தான் நிலை. பெரும்பாலும் தொழிலாளரும், ஏழை எளிய மக்களும் தனியார் சுகாதார சிகிச்சை வசதிகளை பயன்படுத்திக் கொள்ள இயலாமையால் மடிந்தனர்.
தெள்ளத் தெளிவாக அம்பலப்படுத்திய கொரோனா
அதுமட்டுமல்ல, நமது இந்தியா உள்பட பல முதலாளித்துவ நாடுகளின் அரசுகள் பெருந்தொற்று பொது முடக்கக் காலத்தை பயன்படுத்திக் கொண்டு, உழைக்கும் மக்களின் வாழ்வு, வாழ்வாதாரம் மீது தாக்குதல்களை தொடுத்தன. தொழிலாளர் சட்டங்க ளைத் திருத்துவதன் மூலமும், பல்வேறு ஒடுக்குமுறை நடவடிக்கைகள் மூலமும், தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுப் பேர உரிமையின் மீது தாக்குதல்களை தொடுத்தன. சில பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் செல்வத் தைப் பெருக்கிக் கொள்ள, அரசுகள் பின்பற்றிய நவீன தாராளமயக் கொள்கைகள் துணை புரிந்தன. இதனால் பணி நிலைமைகள் சீர்குலைந்தன. உண்மை ஊதியம் குறைந்தது. இக்கால கட்டத்தில் அசமத்துவம் மேலும் வலுவாக விரிவடைந்தது. உலக அளவில் வறுமையும், பசியும் தலை விரித்தாடுகின்றன. இதற்கு நேர் எதிர் மாறாக சோஷலிச சீனா இதே காலகட்டத்தில், 2030க்குள் வறுமை ஒழிப்பு இலக்கு என்பதை இப்போதே பூர்த்தி செய்துள்ளது. மக்கள் நலனை மையமாகக் கொண்டு செயல் படும் சோசலிச அமைப்புக்கும், லாபத்தை மைய மாகக் கொண்டு செயல்படும் முதலாளித்துவ அமைப்புக் கும் உள்ள வித்தியாசத்தை கொரோனா பெரும் தொற்று தெள்ளத்தெளிவாக அம்பலப்படுத்தியது.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு
தங்கள் நாடுகளில் சோசலிச அமைப்பு முறையைப் பாதுகாக்க போராடிவரும் சோஷலிச நாடுகளின் மக்க ளுக்கு சிஐடியு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள் கிறது. அமெரிக்காவின் ஆதரவுடன் நிராயுதபாணி களான பாலஸ்தீன மக்களை, பெண்களை, குழந்தை களை கொன்று குவிக்கும் இஸ்ரேலை எதிர்த்து தாய் நாட்டிற்காக போராடி வரும் பாலஸ்தீன மக்களுக்கு சிஐடியு உறுதுணையாக நிற்கிறது. ஏகாதிபத்திய யுத்தங்களை, உலகின் பல பகுதி களில் அதன் ராணுவ தலையீடுகளை சிஐடியு வன் மையாகக் கண்டிக்கிறது. அமெரிக்க மேலாண்மையை நிலைநாட்ட, தனது சரக்குகளுக்கான கடல்வழிப் பயணத்தை நிறுவிட, எண்ணெய் வளம், எரிவாயு மற்றும் தாதுப் பொருட்கள் உள்பட இயற்கை வளத்தின் மீது தனது கட்டுப்பாட்டை நிறுவிட அமெரிக் காவும் இதர ஏகாதிபத்திய நாடுகளும் எடுத்துவரும் மேலாதிக்க முயற்சிகளை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது.
அமெரிக்காவின் பொருளாதார வல்லமை குறைந்து வந்த போதிலும் தனது அரசியல் செல் வாக்கை, ராணுவ பலத்தை பயன்படுத்தி உலக மேலாதிக்கத்தை பாதுகாத்துக்கொள்ளவும், விரிவாக்க வும் அமெரிக்கா முயற்சித்து வருகிறது. ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட, மக்கள் ஆதரவு அரசுக ளுக்கு எதிராக அமெரிக்கா தனது தலையீடுகள் மூலம் தனது தலையாட்டி பொம்மை அரசுகளை நிறுவிட முயற்சித்து வருகிறது. அமெரிக்காவின் தலைமையில், ஏகாதிபத்திய கூட்டணிகளை நிறுவி, தனது மேலாதிக் கத்தை நிலைநாட்ட, விரிவாக்க அமெரிக்கா முயற்சிக் கிறது. பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கை மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் இராணுவ மோதல்கள் உள்பட சச்சரவு நிலைமை களை தொடர்ச்சியாக அமெரிக்கா ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்பாடு களின் மிக சமீபத்திய எடுத்துக்காட்டு உக்ரைன் யுத்தக் களமாக மாறியுள்ளதாகும்.
மகிழ்ச்சி - உறுதி - வாழ்த்து - நன்றி
நவீன தாராளமயம் மற்றும் பல நாடுகளில், குறிப்பாக லத்தீன் அமெரிக்காவில், அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் தலையீடுகளை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களில் மென்மேலும் கூடுதலாக மக்கள் பங்கேற்று வருவது குறித்து சிஐடியு மகிழ்ச்சி கொள் கிறது. இத்தகைய போராட்டங்களில் தொழிலாளி வர்க்கம் தனது முனைப்பான பங்கை ஆற்றி வரு கிறது. இத்தகைய போராட்டங்கள் பல நாடுகளில் முற்போக்கான மக்கள் ஆதரவு அரசுகளை ஏற்படுத்தி யுள்ளன. இத்தகைய அரசுகள் கேடுகெட்ட நவீன தாராளமயக் கொள்கைகளை கைவிட்டு, மக்கள் நலன் களை முன்னிறுத்தி மாற்றுக் கொள்கைகளை அம லாக்கும் என சிஐடியு நம்புகிறது. சர்வதேச நிதி மூலதனம் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் அச்சுறுத் தல்களை மக்களின் பேராதரவைத் திரட்டி அவை முறியடிக்கும் என சிஐடியு நம்புகிறது. நவீன தாராள மயச் சுரண்டல் அமைப்பிற்கு எதிரான, மக்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற் கான ஒன்றுபட்ட போராட்டங்களும் தொழிலாளி வர்க் கத்தின் மத்தியில் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை உயர்த்துவதும் ஒருங்கிணைந்ததாகும். இந்த மே நன் னாளில் இத்தகைய உணர்வை மேலும் ஆழப்படுத்த வும், உயர்த்தவும் சிஐடியு உறுதி கொள்கிறது.
நாடு தழுவிய பிரம்மாண்டமான மார்ச் 28- 29 பொது வேலைநிறுத்தத்தை நடத்திய தொழிலாளி வர்க்கத்தை சிஐடியு வாழ்த்துகிறது. மாநில அடக்குமுறை, நிறு வனங்களின் பழிவாங்குதல், பயங்கரவாத நடவடிக் கைகள் தடுப்புச் சட்டம் அத்தியாவசிய சேவைப் பாது காப்புச் சட்டம் போன்ற எதேச்சதிகாரத் தலையீடு கள், நீதிமன்றத் தடைகள் போன்ற பல சவால்களை தொழிலாளி வர்க்கம் வெற்றிகரமாக எதிர்கொண்டது. தொழிலாளர்களின் கோரிக்கைகள் மட்டுமல்ல, விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர் மற்றும் சாமானிய மக்களின் கோரிக்கைகளையும் தொழிற்சங்க கூட்டு இயக்கம் முன்வைத்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. ஆத்மநிர் பாரத் என போலியான கோஷத்தால் மக்களை திசை திருப்புகிற, நமது நாட்டின் உற்பத்தி சக்திகளை அழிக்கின்ற மோடி தலைமையிலான பாஜக அரசின் நாசகர கொள்கைகளுக்கு எதிராக வேலை நிறுத்தம் நடைபெற்றது. நமது இயற்கை வளங்களை, நிலம், தாது வளம், நீர்வளம், வனங்கள், உள்கட்டமைப்பு, மக்களின் வரிப்பணத்தில் உருவான பொதுத்துறை, நமது நாட்டின் ஒட்டு மொத்த செல்வத் தையும் உள்நாட்டு பன்னாட்டு களவாணி கார்ப்ப ரேட்டுகளுக்கு மோடி அரசு தாரை வார்த்து வருகிறது. யபொது சொத்தை தனியார் கைகளில் ஒப்படைக்க தனி யார்மயம், தேசிய பணமாக்கும் திட்டம், தேசிய நிலம் பணமாக்கும் திட்டம் போன்ற கொள்கைகளை அரசு அமலாக்குகிறது.
நாட்டை காப்போம் ,மக்களை காப்போம் என்ற தெளி வான அறைகூவலை ஏற்று கோடிக்கணக்கான தொழி லாளர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். சிஐடியு அவர்களை பாராட்டுகிறது. சாமானிய மக்களின் மகத்தான ஆதரவு வேலை நிறுத்தத்திற்கு கிடைத்தது. பல மாநிலங்களில் கிராமப்புறங்களில் அதன் யதாக்கத்தை காணமுடிந்தது. கோடிக்கணக்கான விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர், பெண்கள், இளை ஞர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து பிரிவுகளை சார்ந்த முற்போக்கு மக்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டங்களில், சாலை/ரயில் மறியல் போராட்டங்களில் பங்கேற்றனர். அவர்க ளுக்கு சிஐடியு தனது நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறது.
ஒற்றுமையை உருவாக்க... போராட்டங்களுக்கு தயார்ப்படுத்த...
டிப்படை வர்க்கங்களை சார்ந்த தொழிலாளர், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட நடவடிக்கைகள் வளர்ந்து வருவது உத்வேகம் அளிக்கிறது. இந்த ஒற்றுமை மேலும் வலுவடைய வேண்டும். ஒற்றுமை கிராம அளவில், வட்டார அளவில் விஸ்தரிக்கப்பட வேண்டும். தொழிலாளர், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்க ளின் பொதுக் கோரிக்கைகள் மீது கூட்டுப் போராட்டங்க ளை உருவாக்கிட சிஐடியு முன்முயற்சி எடுக்க உறுதி ஏற்கிறது. இவை உழைக்கும் மக்களின் ஜனநாயக இயக்கத்தை வலுப்படுத்தவும், ஒற்றுமையை உருவாக்கவும் உதவிடும். அரசு பின்பற்றுகிற நவீன தாராளமயக் கொள்கை களுக்கு ஒத்துழையாமை மற்றும் எதிர்ப்பை வெளிப் படுத்தி தொழிலாளர்களின் கூட்டுப் போராட்டங்களை அதிகரித்திட சிஐடியு கூடுதல் முயற்சிகள் மேற் கொள்ளும் என உறுதிபடக் கூறுகிறது. தொழிலாள ருக்கு, மக்களுக்கு ஆதரவான மாற்றுக் கொள்கைக ளுக்கான போராட்டத்தை வலுப்படுத்தும். இந்த வேலை நிறுத்தங்களும், முந்தைய பொது வேலை நிறுத்தங்க ளும், துறைவாரியான வேலை நிறுத்தங்களும் நமக்கு போதிப்பது என்ன? தொழிலாளரை முறையாக அணுகி, பிரச்சனைகள் - கோரிக்கைகளை அவர்க ளுக்கு விளக்குவதன் மூலம் பல கடினமான சூழ்நிலைக ளையும் பொருட்படுத்தாமல் தொழிலாளர் போராட்டக் களத்தில் இறங்குவர். அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கும், அரசின் கொள்கைகளுக்கும் உள்ள தொடர்பை புரிய வைப்பதன் மூலம் தொழிலா ளர்களை போராட்டத்தில் ஈடுபட வைக்க முடியும். சிஐடியு- இன் ஊழியர்கள், உறுப்பினர்கள், செயல் வீரர்கள் இந்தக் கடமையை அவசர அவசியமாக நிறைவேற்றுவதன் மூலம், தொழிலாளி வர்க்கத்தை மென்மேலும் சக்திமிக்க ஒன்றுபட்ட போராட்டங்க ளுக்குத் தயார்ப்படுத்த வேண்டும்.
வெறுப்பை - கலவரத்தை ஏற்படுத்தும் ஆர்எஸ்எஸ் - பரிவாரங்கள்
இந்துத்துவா சித்தாந்தம் தான் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அதன் துணை அமைப்புகளின் அரசியல் திட்டம். இந்து மக்களின் மத நம்பிக்கையை தனது தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் வகையில், மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்துகின்றன. இந்துத் துவா சித்தாந்தத்தின் தாக்குதலுக்கு உள்ளாகும் மக்களின் ஒற்றுமையைப் பாதுகாக்க சிஐடியு உறுதி யளிக்கிறது. இந்துத்துவா என்பது ஒரு அரசியல் திட்டம் என ஆர்எஸ்எஸ் பிதாமகன் சாவர்க்கர் வரை யறுத்துள்ளார். இதற்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என நாட்டு மக்களுக்கு சிஐடியு நினை வூட்டுகிறது. சமூகத்தை மத, சாதி, வட்டார, மொழி அடிப்படையில் பிளவுபடுத்தும் ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவாரின் முயற்சிகளை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்து-முஸ்லிம் கிறிஸ்தவர்களின் ஒவ்வொரு பண்டி கையிலும் மக்களிடையே மோதல்களை, வெறுப்பை ஏற்படுத்தவே ஆர்எஸ்எஸ் முயல்கிறது. சில சந்தர்ப் பங்களை தனது தவறான நோக்கங்களுக்காக ஆர்எஸ்எஸ் பயன்படுத்தவும் செய்கிறது. ஹிஜாப், ஹலால் செய்யப்பட்ட இறைச்சி. மசூதிகளில் ஒலி பெருக்கி, இந்து கோயில்கள் முன் முஸ்லிம் கடைகள் வைத்து வணிகம் செய்வது, ராமநவமியின் போது இறைச்சி உண்பது அல்லது பரிமாறுவது போன்ற சந்தர்ப்பங்களை சங்பரிவார் மதவெறி, மதக் கலவரம் ஏற்படுத்த பயன்படுத்துகிறது.
பசு பாதுகாப்பு என்பதன் பெயரால் பசு பாதுகாப்புக் குண்டர்கள் முஸ்லிம்களை, தலித்துகளை தாக்கிக் கொல்கின்றனர். பெண்கள், தலித்துகளுக்கு எதிரான பாரபட்சமான நிலைகளை மனுஸ்மிருதி மூலம் ஆர் எஸ்எஸ், பாஜக தலைவர்கள் நிலைநாட்டுகின்றனர். ஆணவக்கொலைகள் அதிகரித்த வண்ணமுள்ளன. மோடி தலைமையிலான பாஜக அரசு நமது குடி யரசின் மதச்சார்பின்மை அடித்தளத்தை அழித்துவிட தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்து வருகிறது. சிஐடியு வன்மையாக இந்த முயற்சிகளை எதிர்க்கிறது. நமது அரசியல் சட்டத்துக்குப் பதிலாக இந்து ராஷ்டி ரத்தை நிறுவுவதே ஆர்எஸ்எஸ் பாஜகவின் திட்ட மாகும். குடியுரிமை திருத்தத் சட்டத்தை அதற்கிருந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அரசு நிறைவேற்றியது. குடியுரிமைக்கு மதம் ஒரு அடிப்படை எனக் கூறும் சட்டம், நம் நாட்டிலேயே பிறந்து வளர்ந்த முஸ்லிம் களை இரண்டாந்தர குடிமக்களாகக் கருதுகிறது.
தேர்தல் மூலம் பதவிக்கு வரும் எதேச்சதிகார நாடு
அரசுக்கு எதிரான கருத்துக்களை அடக்கி ஒடுக்கும், பாஜக அரசின் முயற்சிகளை சிஐடியு வன் மையாகக் கண்டிக்கிறது. பயங்கரவாத நடவடிக்கை தடுப்புச் சட்டம், தேசப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் அரசின் பல்வேறு அமைப்புகளை சட்டவிரோதமாக அரசின் கொள்கைகளை எதிர்ப்பவர் மீது அரசு பயன்படுத்துவதை சிஐடியு கண்டிக்கிறது. அறி வாளிகள், பத்திரிகையாளர், மனித உரிமை செயல் பாட்டாளர், தொழிற்சங்கம் மற்றும் இதர ஜனநாயக அமைப்புகளின் செயல் வீரர்களை ஜாமீனில் வெளி வர முடியாதவாறு அரசு சிறையில் அடைக்கிறது. மோடிக்கு ஆதரவான ஊடகங்களுக்கு அரசு பக்கபல மாக உள்ளது. இந்தியா தற்போது தாராளவாத ஜனநாயக நாடு அல்ல, தேர்தல் மூலம் பதவிக்கு வரும் எதேச்சதிகார நாடு. ஜனநாயக உரிமைகள் கடுமையாகத் தாக்கப்படுகின்றன. ஆளும் கட்சியான பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் நிறுவனங்களிடம் இருந்து ஏராளமான பணம் வசூலித்து செலவிடுகிறது. தேர்தல் கேலிக்கூத்தாக மாறியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மிக அதிக நன்கொடைகளை பாஜகவே பெற்றுள்ளது. கார்ப்ப ரேட்டுகள் தங்களின் நலன்களை பாதுகாக்கும் என்பது தெரிந்தே அக்கட்சிக்கு அதிக அளவில் நன்கொடைகளை வாரி வழங்குகின்றனர்.
அரசு எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒடுக்கும் பாசிச பாணி...
முதலாளித்துவம் அமைப்பு ரீதியிலான நெருக்க டியில் சிக்கியுள்ளது. நவீன தாராளமயக் கொள்கைக ளுக்கு எதிரான மக்களின் கோபம் அடிப்படையில் மக்களுக்குச் சாதகமான மாற்றுக் கொள்கைகளை முன்வைத்துப் போராடும் இடதுசாரிகளின் வளர்ச்சி யைத் தடுத்திட முதலாளித்துவ வர்க்கம் வலதுசாரிக ளின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. இடதுசாரி களை ஓரம் கட்ட ஆளும் வர்க்கங்கள் முயல்கின்றன. நவீன தாராளமயக் கொள்கைகளை வலதுசாரி சக்தி கள் எதிர்ப்பதில்லை. ஆனால் இக்கொள்கைகளால் அதிருப்தியுற்ற மக்களை அவர்களது துயரங்களுக்கு இன்னொரு மதம், இனம் சாதி, வட்டாரம், பாலினம், மொழியே காரணம் என மக்களை பிளவுபடுத்தி ஒன்றுபட்ட போராட்டங்களையும் பலவீனப்படுத்து கின்றன. பொது மக்களின் போராட்டங்களை அரசு எதிர்ப்பு சக்திகளை எதேச்சதிகாரமான பாசிச பாணி நடவடிக்கைகள் மூலம் அரசு அடக்கவே செய்கிறது. முதலாளித்துவம் என்ற அமைப்புக்கே நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மக்கள் மீது பல்வேறு தாக்குதலை தொடுப்பதை தவிர வேறு வழியில்லை என ஆளும் வர்க்கங்கள் கருதுகின்றன. இதை தொழிலாளி வர்க்கம் ஒருங்கிணைந்த வகையில் புரிந்து கொள்ள வேண்டும் என சிஐடியு அறைகூவி அழைக்கிறது. ஆளும் வர்க்கங்கள் தங்கள் லாபம், செல்வத்தை பாதுகாக்க மக்களின் போராட்டங்களை வலதுசாரி எதேச்சதிகார அரசுகள் மூலம் அடக்கி ஒடுக்கவே செய்கின்றன. மதவாத விஷக்கருத்துகள் சமூகத்தில் பரப்பப்படுகிறது. தொழிலாளி வர்க்கம் அரசுக்கு எதிராக எதிர்த் தாக்குதலை தொடுக்க முன்வர வேண்டும்.
சிங்காரவேலர் கொண்டாடிய மே தினத்தின் நூறாம் ஆண்டு
இந்த மே நன்னாள், 1923 -இல் சென்னை கடற்கரை யில் முதன்முதலாக தோழர் ம.சிங்காரவேலர் கொண்டாடிய மே தினத்தின் நூறாம் ஆண்டு.
பிரிவினைவாத பிளவுவாத சக்திகளின் இழிமுயற்சி களை தோற்கடித்து, நமது ஒற்றுமை, தொழிலாளி வர்க்க ஒற்றுமை, விவசாயிகளுடன் ஒற்றுமை, அனைத்துப்பிரிவு உழைக்கும் முற்போக்கு மக்களின் ஒற்றுமையைப் பலப்படுத்த சபதமேற் போம்! நமது துறைவாரியான கோரிக்கைகள் மீது, நமது பொதுக் கோரிக்கைகள் மீது, நவீன தாராளமயத்திற்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டத்தை தீவிரப்படுத்த சபதம் ஏற்போம்! உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கு நவீன தாராள மயக் கொள்கைகளே அடிப்படைக் காரணம் என்பதை உணர்ந்திடுவோம்.
தொழிலாளர் மற்றும் அனைத்து உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத முதலாளித்துவ அமைப்பின் தோல்வி களை தோலுரித்து காட்டுவோம். உலகத்தின் செல்வம், அடிப்படை தேவைகள் உணவு, சுகாதா ரம், கல்வி, வீட்டுவசதி போன்றவைகளை உருவாக்கு வது உழைக்கும் வர்க்கமே. ஆனால் இவற்றை எல்லாம் சுருட்டிக் கொண்டு போவது விரல் விட்டு எண்ணக்கூடிய சில சூப்பர் பணக்காரர்கள். ஒன்றுபட்ட போராட்டங்களை மென்மேலும் உயர்ந்த மட்டங்களுக்கு எடுத்துச் செல்வோம்! மக்களுக்கு சாதகமான மாற்றுக் கொள்கைகளுக்காக போராடத் தயாராவோம்!
மேதினம் வாழ்க!
தொழிலாளி வர்க்க ஒருமைப்பாடு ஓங்குக!
தொழிலாளி - விவசாயி ஒற்றுமை ஓங்குக!
சோசலிசம் நீடு வாழ்க!
தமிழில் : ஆர்.சிங்காரவேலு