articles

img

அருணா ஜெகதீசன் அறிக்கையின் முழுமையான சாரம் என்ன? - ஜி.செல்வா

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன்  ஆணையத்தின் அறிக்கைப்படி, அப்போதைய  முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியது. இதனால் ஆத்திரமடைந்த அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மார்க்சிஸ்ட் கட்சியின் மீது அவதூறு பரப்பி அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில், அருணா ஜெகதீசன் அறிக்கை முழுமையாக என்ன சொல்கிறது என்பதை ஆராய்ந்தால், மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்து மிகச் சரியானது என்ற  முடிவுக்கு எவரும் வரமுடியும். அதன் பொருட்டு, அருணா ஜெகதீசன் அறிக்கையின் முழுமையான சாராம்சத்தை இங்கு தருகிறார் சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர்.

புனேயை பூர்வீகமாகக் கொண்டு, லண்டனில் நிரந்தரமாகத் தங்கியிருக்கும் கார்ப்பரேட் முதலாளியான அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமானது, ஸ்டெர் லைட் ஆலை. 1997ஆம் ஆண்டு தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் மக்களின் எதிர்ப்பையும் மீறி உரு வாக்கப்பட்டது, ஸ்டெர்லைட் தொழிற்சாலை. அயல் நாட்டிலிருந்து மூலப் பொருட்கள் / தாதுப் பொருட் கள் ஆகியவற்றை வரவழைத்து தாமிரம், தாமிர மின்ன ணுக்கள் முதலியவற்றை உற்பத்திசெய்வதில் முதன் மையாக ஈடுபட்டது.  ஆலை உருவான எட்டு ஆண்டுகளில் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிலையம் (நீரி) (NEERI) உச்ச நீதிமன்றத்தில் 2005இல் தாக்கல் செய்த அறிக்கையிலும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி யின் சமூக மருத்துவத் துறை நடத்திய களஆய்விலும் ஆலையைச் சுற்றி நிலத்தடி நீர் மாசுபட்டு இருப்ப தும், பல்வேறு தொற்றுநோய்கள் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதும் விரிவாக, வெளிப்படையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனமோ ஆலை யின் உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிக்கும் வகையில் வீரபாண்டியபுரம் பகுதியில் கட்டுமான பணிகளை தொடங்கியது. தனது சட்டவிரோத ஆலை விரிவாக்கத்துக்கு மக்களிடம் கருத்தறியும் முறைமை யிலிருந்து தப்பிப்பதற்காக, சிப்காட் எல்லைக்குள் ஆலை இருப்பதாக அனைவரையும் நம்ப வைப்ப தற்கான அனைத்து காரியங்களிலும் ஈடுபட்டது. ஆலையினுடைய கருத்தையே உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ஒப்புக்கொண்டதை நீதியரசர் அருணா ஜெகதீசன் குழு சுட்டிக்காட்டி “மாண்புமிகு உச்ச நீதிமன்றம் 2013ஆம் ஆண்டு பொதுநலன் கருதி ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் இயங்கிட அனு மதித்தது” என சொல்லிச் செல்கிறது. இதில் ‘பொது  நலன் என்பது வேதாந்தாவின் நலன்தான்’ என்பதை வாசிப்பவர் உணர முடியும்.

இதைத் தொடர்ந்து ஆலை கட்டுமானப் பணிக ளுக்காக எல் & டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப் பட்டது. ஆலையின் விஷத்தன்மை தெரியாத ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பீகார், ஒடிசா மாநில தொழி லாளர்கள் ஒப்பந்தக் கூலிகளாக கொண்டுவரப்பட்டு அடிப்படை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆழ்துளைக் குழாய்கள் மூலம் தண்ணீர் எடுப்ப தற்கு ஆலையைச் சுற்றியுள்ள 11 கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. காரணம், மேற்கண்ட 11 கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 48 பேருக்குப் புற்றுநோய், 49 பேர் சிறுநீரக - இதர பிரச்சனைகள், 78 பெண்களுக்கு கருச்சிதைவு, 137 பேருக்கு ஆஸ்துமா, 100க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு தோல் நோய்களால் பாதிப்பு என அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும் 2015இல் 16 பேர், 2016இல் 28 பேர், 2017 மற்றும் 2018இல் 31 பேர் பல்வேறு நோய்களால் இறந்துள்ளனர்.  இத்தகு காரணங்கள்தான் ஆலையின் சுற்று வட்டார கிராமங்களை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நெடிய போராட்டத்திற்கு உந்தித்தள்ளின என அருணா ஜெகதீசன் ஆணையம் குறிப்பாக எடுத்து ரைத்துள்ளது.

களத்தில் மக்கள்; கண்டுகொள்ளாத அதிகார வர்க்கம்

மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்த வேளையில், அதிகார வர்க்கம் கண்டுக்கொள்ளாமல் கடந்து சென்ற விஷயங்களை ஆணையம் பட்டிய லிட்டுக் காண்பித்துள்ளது.  முதலாவதாக, பல்வேறு கிராமங்களில் மக்கள் கூட்டாக அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக 2018 பிப்ரவரி 12ஆம் தேதி தூத்துக்குடி எம்.ஜி.ஆர் பூங்கா அருகில் 500க்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். கை எட்டும் தூரத்தில் மாவட்ட ஆட்சியர் இருந்த போதும், போராட்ட இடத்திற்கு நேரடியாக வந்து மக்களைச் சந்திக்காதது, அவரின் பொறுப்பிலிருந்து தவறிய செயல் என ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. மக்களோடு பேசுவதற்கு மாறாக, போராட்டத்தில் பங்கேற்றவர்கள், தலைமை வகித்தவர்கள், நல்லெண் ணத்தோடு உதவி செய்தவர்கள் ஆகியோரை காவல் துறை வன்மத்தோடு கையாண்ட செயல்கள்தான் நிலைமையை மோசமாகியுள்ளது.

இரண்டாவதாக, இதே காலகட்டத்தில், காவல் துறை அனுமதியோடு சிதம்பரம் நகர் பழைய பேருந்து நிலையம் அருகில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தர மாக மூடக் கோரிய பொதுக் கூட்டத்தில் 30 ஆயிரம் மக்கள் பங்கேற்றுள்ளனர். இப்பொதுக்கூட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக 12,000 கடைகள், நிறுவ னங்கள் கடையடைப்பு செய்துள்ளனர். குறிப்பாக,  தங்களின் வாழ்வாதாரத்தைக்கூட பொருட்படுத்தா மல் 2,000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தம் செய்துள்ளனர். இதையெல்லாம் குறிப்பிட்டுவிட்டு, இவ்வளவு எண்ணிக்கையில் மக்கள் அணிதிரண்ட போதும், எந்தவிதமான அசம்பாவித மும் மக்கள் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படவில்லை என ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.  மூன்றாவதாக, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தர மாக மூடக் கோரி 44வது நாள் போராட்டம் நடந்து கொண்டிருந்த வேளையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் விதித்த நிபந்தனைகளை ஆலை நிர்வாகம் கடைப்பிடிக்காததால், மின்சாரம் துண்டிக்கப் பட்டு, ஆலையில் தாமிர தாதுப் பொருள் உருக்கும்  பணி தடைசெய்யப்பட்டது. ஆனால் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை மக்கள் வெளிப் படையாக அறியும் வண்ணம் எந்த அறிவிப்பையும் மாவட்ட நிர்வாகம் வெளியிடவில்லை. அதுபோலவே, மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் தனது உத்தரவின் காரணமாக ஆலை மூடப்பட்டுள்ளது குறித்து எந்த விளம்பரமும் செய்யவில்லை. 

நான்காவதாக, போராட்டம் 50ஆவது நாளை எட்டிய தருணத்தில், போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர் கள் வகுப்புகளை புறக்கணித்தனர். ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் அபாயகரமான கழிவு கள் ஆலையைச் சுற்றியுள்ள 9 கிராமங்களில் வசிப்போ ருக்கு சுவாசக் கோளாறுகள், புற்றுநோய், தோல் நோய்கள் ஏற்படுத்துவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கின்றனர். 2018 ஏப்ரல் 9ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர்.   ஐந்தாவதாக, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள் 06.05.2018, 11.05.2018 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்று கையிடுவது சம்பந்தமான தயாரிப்புக் கூட்டம் நடை பெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்காக மேற் கொள்ளப்பட்ட விரிவான தயாரிப்புப் பணிகள் முழு மையாக அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள் ளது. மேலும் இக்காலகட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் பல கட்டப் போராட்டங்கள் நடை பெற்றுள்ளன. 2018 மே 6ஆம் தேதி தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகில் நடைபெற்ற போராட்டங் கள் மற்றும் அங்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கை களின் முக்கியத்துவத்தையும் ஆணையம் சுட்டிக் காட்டுகிறது. மேற்கண்ட அம்சங்களை மிக விரிவாக எடுத்துச் சொல்லும் நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணை யம், இத்தருணங்களில் அதிகாரத்தில் இருப்போர் உரிய வகையில் தலையிட்டு நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்தால் மிகப் பெரிய உயிர்ச் சேதம் தவிர்க்கப் பட்டிருக்கும் என சரியாகவே சுட்டிக்காட்டியுள்ளது.

காவல்துறை, உளவுத்துறை, ஆட்சி நிர்வாகம் நிகழ்த்திய வன்முறை

ந்தளிப்பு அதிகரிப்பதை உணர்ந்து 2018 ஏப்ரல் 10 அன்று கள நிலவரத்தை விரிவாகக் குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல்துறையே கடிதம் அனுப்பியுள்ளது. அதன் நகல், தென்மண்டல காவல் துறை தலைவர், திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டது. இக்கடிதத்தை பெற்றுக்கொண்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை களை மேற்கொள்ளாததை ஆணையம் விமர்சனம் செய்துள்ளது.  அதிலும், காவல்துறையின் கடிதத்திற்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றாத மாவட்ட ஆட்சியர், அப்போ தைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாத னுக்கு ஸ்டெர்லைட் ஆலையின் பிரச்சனை குறித்து, மக்கள் போராட்டங்கள் குறித்து வாட்ஸ்அப் மூலம் தகவல்களை பல நாட்களாகப் பகிர்ந்துள்ளதை ஆணைய விசாரணையில் தெரிவித்துள்ளார். மேற் கண்ட தகவல்களை தெரிவித்துவிட்டு, “தலைமைச் செயலாளர் இந்த பிரச்சனையை மேல் நடவடிக்கைக் காக மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக வாக்குறுதி அளித்தார். அது எப்போதுமே வாக்குறுதியாகவே இருந்துள்ளது என்பது தெரியவருகிறது” என ஆணையம் குறிப்பிட் டுள்ளது. இதிலிருந்து அன்று தமிழக அரசை இயக்கிய மையப்புள்ளியாக கிரிஜா வைத்தியநாதன் கோலோச்சியது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

அலட்சியத்தின் உச்சத்தில் அன்றைய முதல்வர்

மேலும் ஸ்டெர்லைட் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தையும், நிகழ்வையும் நுட்பமாக நுண்ணறிவுத் துறை தகவல்கள் மூலம் உள்வாங்கிய நுண்ணறி வுத் துறை ஐ.ஜி., அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சேலத்திற்கு நேரடியாகச் சென்று சந்தித்து பிரச்சனையின் வீரியத்தை விரிவாக எடுத்து ரைத்துள்ளார். முதல்வருக்கு அவர் கொடுத்த ஆலோச னைகளையும் ஆணையம் பட்டியலிட்டுக் காண்பித் துள்ளது. அது போன்றே உளவுத்துறையின் தகவல்க ளின் பேரில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை  தரப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. அதிலும் 1 லட்சம் பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும், முன்னெச்ச ரிக்கையாக கைதுசெய்ய வேண்டியவர்களின் பட்டிய லையும் மாநில நுண்ணறிவுத் துறை கொடுத்துள்ளது. ஆனால், அன்றைய முதல்வர் முதற்கொண்டு மாவட்ட நிர்வாகம் வரை நுண்ணறிவுத்துறையின் குறிப்பு களை முழுமையாக நிராகரித்துள்ளனர்.

அதே வேளையில், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி 144 தடையுத்தரவு கேட்டு உயர் நீதிமன்றத்தை  ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நாடியுள்ளது. நீதி மன்றமும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் வேண்டு கோளை ஏற்று, நேரடியாக 144 தடையுத்தரவை பிறப்பிக் கக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதையெல்லாம் சுட்டிக்காட்டி, “ஒரு கார்ப்பரேட் கம்பெனி எப்படி தன் விருப்பத்தை மாவட்ட நிர்வா கத்தின் மீது திணிக்க முடியும்..?” என ஆணையம் கேள்வியெழுப்பி, மாவட்ட நிர்வாகம், காவல்துறையி டமிருந்து எவ்வித கருத்துக்களையும் கேட்டறியாமல் மாண்புமிகு நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.  ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென்ற ஒற்றைக் கோரிக்கையை ஏந்தி ஒரு லட்சம் பேர் ஆட்சி யர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியாக எந்த வழி யில், எந்த திசையில் வரப்போகிறார்கள் என அத்தனை  தகவல்களும் வெளிப்படையாக அரசு நிர்வாக அமைப் புகளுக்கு தெரிந்துள்ளது. இதை எதிர்கொள்வதற்கு தேவையைவிடக் குறைந்த எண்ணிக்கையில் காவ லர்கள், வஜ்ரா - வருண் வாகனங்கள் ஆகியன கேட்கப் பட்டிருந்தபோதும், கேட்டதைவிட குறைவாகவே அரசுத் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்சி யர் அலுவலகம் நோக்கி அலைகடலென திரண்ட மக்கள் மீது குண்டுகளை பொழிந்து சாகடிக்காமல் தடுத்துநிறுத்துவதற்கு, மக்களை கலைய வைப்ப தற்கு வாய்ப்பாக உள்ள வஜ்ரா வாகனத்தை தேவைப் படும் இடத்தில் முறையாகப் பயன்படுத்தாத அலட்சி யத்தை ஆணையம் கடுமையாக விமர்சித்துள்ளது.

 மனித உயிர்களை  வேட்டையாடிய அதிகார வர்க்கம்

 ஆட்சியர் அலுவலக முற்றுகைப் பேரணியானது பனிமய மாதா தேவாலயம், விவிடி சிக்னல், மூணா வது மைல், எப்.சி.ஐ. ரவுண்டானா வழியாகச் செல்லும் என முன்னுணர்ந்த மாவட்ட நிர்வாகம், மக்களின் கொதிநிலை உணர்வை கவனத்தில் கொண்டும், வன்முறை நடக்க வேண்டும் என்ற இலக்கோடும் செயலாற்றியுள்ளது என்பதை அறிக்கையின் பக்கங் கள் சொல்லாமல் சொல்லிச் செல்கின்றன. எனவே, அதற்கு உகந்த வகையிலேயே காவல்துறையின் செயல்பாடு அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. மக்கள் திரளை எதிர்கொள்வதற்கான ஏராளமான காவல்துறை வழிகாட்டு குறிப்புகள் இருந்தபோதும், அவற்றையெல்லாம் அறிந்த, புரிந்துகொண்ட உயர் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் அவற்றைக் கடைப்பிடிக்காமல் ஓடிஒளிந்ததையும், ஆணையத்தின் முன் பொய் வாக்குமூலத்தை அள்ளித் தெளித்ததையும் ஆணையத்தின் அறிக்கை யை வாசிப்பதன்வழி அறிய முடிகிறது. ஆட்சியர் அலுவலக முற்றுகைப் பேரணியை எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு நிர்வாக நடுவர்கள், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பணி செய்யாதது மட்டுமல்லாமல், உயர் அதிகாரி களின் விருப்பத்திற்கேற்ப ஏதோ ஓரிடத்தில் இருந்து கொண்டு, துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு உத்தர விட்டுள்ளதாக ஆணையம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் சிறப்புக் கட்டுப்பாட்டு அறைக்கு பொறுப்பான அதிகாரி நியமிக்கப்பட்ட போதும், அவர் செய்ய வேண்டிய பணிகளை, கையொப்பமிட வேண்டிய கோப்புகளை வேறொரு பெண் அதிகாரி மேற்கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அவர் அங்கிருக்க வேண்டிய அவசி யமே இல்லாத போதும், காவல்துறையின் கூற்றுக்கு தகுந்தவாறு பொது நாட்குறிப்பை பராமரித்துள்ளதாக ஆணையம் கடுமையான விமர்சனத்தை பதிவு செய்துள் ளது. ஆணையம் இன்னும் ஒருபடி மேலே சென்று, சம் பந்தப்பட்ட அந்தப் பெண் அதிகாரி, துப்பாக்கிச் சூட்டில் மக்கள் கொடூரமாக கொல்லப்படுவதற்கான நிகழ்வில் முக்கியப் பங்குவகித்த சிப்காட் காவல் ஆய்வாளரின் மனைவி என சுட்டிக்காட்டியுள்ளது. 

 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் எரிவதற்கு முன்பாகவே, திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதை ஆணையம் மிக  விரிவாக எடுத்துச் சொல்லியுள்ளது. குறிப்பாக, “பேரணியில் சில ஆண்கள் ரகசியமாக போராட்டக் கூட்டத்தில் நுழைந்து நாசவேலையில் ஈடுபட்டார் கள் என்றும், ஸ்டெர்லைட் நிர்வாகம் - காவல்துறை யின் கூட்டுப் பங்களிப்புடன், அவர்களின் வேண்டுகோ ளின் பேரில், அவர்களின் நோக்கத்திற்காக செயல் பட்டுள்ளதாக சாட்சியங்கள் தெரிவித்ததாக” அறிக்கை சொல்கிறது. இவ்வாறு ‘கூலிக்கு அமர்த்தப்பட்ட குண்டர்கள்’, ‘நாசவேலையில் ஈடுபட்ட குழுவினரை’ கண்டறியுமாறு மாவட்ட காவல்துறைக்கும், சிபிஐ க்கும் விசாரணை ஆணையம் வேண்டுகோள் விடுத் தும், இந்த இரண்டு அதிகார மையங்களும் மேற்கண்ட நபர்களை அடையாளம் காண இயலவில்லை என பசப்பு மொழியில் பதில் அளித்துள்ளது வெட்கக்கேடு.

உயிர் பறிப்பதையே இலக்காக்கி இயங்கிய கொடூரர்கள்

நூறாவது நாள் நிறைவையொட்டி நடைபெற்ற பேரணியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் எவ்வித முன்னறிவிப்பும், எச்சரிக்கையும் இன்றி கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்று மனித உயிர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன. இதில் தமிழரசன் என்ப வர், ஓடியபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரி விக்கும் ஆணையம், வேறொரு இடத்தில் சிவப்பு சட்டை அணிந்திருந்த தமிழரசன் இடதுசாரி கருத்தி யலை கொண்டவர் என்பதால், காவல்துறை இலக்கு வைத்து அவரை சுட்டுக் கொன்றிருக்கலாம் என பொதுமக்கள் கருதுவதாக தெரிவிக்கிறது. ஆட்சியர் அலுவலக வாயிலில் காவல்துறையினர் உள்ளிட்ட யாருடைய உயிருக்கோ, உடைமைக்கோ,  சொத்துக்கோ எவ்விதமும் மிரட்டலும் விடுக்கப்படாத ஆட்சியர் அலுவலக வாயிலில் காவல்துறையினர் உள்ளிட்ட யாருடைய உயிருக்கோ, உடைமைக்கோ,  சொத்துக்கோ எவ்விதமும் மிரட்டலும் விடுக்கப்படாத நிலையில், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது குறி பார்த்து காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். போராட்டத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்த, கார்ப்பரேட் கம்பெனியின் கயமைத்தனத்தை எடுத்துரைக்கும் ஜனநாயக வேள்வியில் பங்கேற்ற 20 வயது நிரம்பிய ஸ்னோலின் உள்ளிட்டோர் கொல்லப் பட்டனர். மேலும் காவல்துறை துப்பாக்கிச் சூட்டின் காரணமாக கொல்லப்பட்டவர்களின் பெயர்களையும், எந்தவித வழிகாட்டு நெறிமுறைகளை இம்மியள வும் கடைப்பிடிக்காமல் அப்பாவி மனித உயிர்களை வேட்டையாடிய காவல்துறையின் குரூர நடவடிக்கை களை ஆணையம் அப்படியே பதிவுசெய்துள்ளது. அதிலும் காவல்துறை உயர் அதிகாரிகள், பதவி நிலையில் தங்களைவிடக் கீழ்நிலையில் உள்ள காவலர்களை பயன்படுத்தி, அவர்களிடம் ஆயுதம் கொடுத்து, உரிமைக்காக போராடிய மக்களைத் திட்ட மிட்டு படுகொலை செய்த செயல்களை விசாரணை ஆணையம் வெளிப்படையாக, விரிவாகப் பதிவுசெய்துள் ளது. மேலும் காவல்துறையின் தாக்குதலால் ரத்த வெள்ளத்தில் மிதந்த மக்களுக்கு எவ்வித மருத்துவச் சிகிச்சையும் அளிக்கப்படாமல், ஈவு இரக்கமற்ற முறை யில் அதிகார வர்க்கம் நின்றிருந்த நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், நல்லதம்பி மருத்துவமனை ஆகியவற்றின் ஆம்புலன்ஸ் மூலமும் இருசக்கர வாக னங்களின் உதவியோடும்தான் மக்கள் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறாக நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கையானது உரி மைக்காக களம் கண்ட மக்களின்பால் எவ்வித அக்க றையுமின்றி அரசும், அதன் அதிகார வர்க்க இயந்திர மும் அரசமைப்பு சாசனம் உள்ளிட்ட அரசாங்க வழி காட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல், திட்ட மிட்டு, வெறிகொண்டு, மனித உயிர்களை சுட்டு கொன்ற மாபாதக செயல்களை பதிவு செய்துள்ளது.