articles

img

பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்த கோவை வீரங்கனை - கார்த்திக் மதிவாணன்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பி.டி.உஷா வின் தேசிய சாதனையை சமன் செய்த கோவையை சேர்ந்த லாரி ஓட்டுநரின் மகள்- சகோதரி யுடன் களமிறங்கி 3 பதக்கங்களை வென்று அசத்தி உள்ளனர். கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியத்தில் அமைந்திருக்கிறது மீனாட்சிபுரம் கிராமம். இங்கு வசித்து வரும் லாரி ஓட்டுநரான ராம்ராஜ் மீனா தம்பதி யினருக்கு 3 பெண் குழந்தைகள். மூத்த மகளுக்கு திரு மணமாகிவிட்டது. அடுத்த இரட்டை பெண் குழந்தை களான வித்யா மற்றும் நித்தியா சிறு வயது முதலே தடகளப் போட்டிகளில் ஆர்வம் செலுத்தி வந்தனர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் போது உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான  போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளனர். இந்த நிலையில் சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சகோதரிகள்  இருவருக்கும் தடகள போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியது. இதில் தொடர் ஓட்டத்தில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்ற வித்யா, 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தியுள்ளார். அதே போட்டியில் வித்யாவின் சகோதரியான நித்தியா  நான்காவதாக வந்து நூலிழையில் பதக்கம் பெறும் வாய்ப்பை தவற விட்டார். தடகள வீராங்கனை பி.டி.உஷா 1984ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டபோது, 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் அவர் 55.42 விநாடிகளில் இலக்கை அடைந்தார். இதனைத்தொடர்ந்து 400 மீட்டர் தடை தாண்டு தல் போட்டியில் 55.42 விநாடிகளில் கடந்த பி.டி.உஷா வின் சாதனை கடந்த 40 ஆண்டுகளாக முறியடிக்க முடியா மல் இருந்தது. இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டுதல் இறுதிப் போட்டிக்கு முன்பான தகுதி ஆட்டத்தில் பந்தய தூரத்தை 55.42 வினாடிகளில் கடந்து வித்யா முதலிடம் பிடித்தார். இதன்மூலம் முன்னாள் வீராங்கனை பி.டி.உஷாவின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.  வித்யாவின் இந்த சாதனையை அவரது கிராம மக்கள் ஊர் முழுக்க பேனர் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

மகளின் சாதனை குறித்து வித்யாவின் பெற்றோர் ராம்ராஜ், மீனா கூறும்போது, அடிப்படையில் ஏழ்மை யான குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் அன்றாடச் செலவு களுக்கே சிரமப்பட்டு வந்தோம். மூவரும் பெண் குழந்தை கள் என்பதால் என்ன செய்யப் போகிறார்களோ என அக்கம்பக்கத்தினர் காது படவே பேசினார்கள், அதற்கெல் லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது எங்களது மகள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3 பதக்கங் களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.  ஆரம்ப காலகட்டத்தில் பள்ளியில் நடைபெறும் விளை யாட்டுப் போட்டிகள் அனைத்திலும் கலந்து கொண்ட  இருவரும் எளிதில் வெற்றி பெற்றனர். இதனால் இயற்கை யிலேயே அவர்களுக்கு தடகளப் போட்டிகளில் ஆர்வம் இருப்பதை உணர்ந்தோம். விளையாட்டு தான் எதிர்காலம் என்று முடிவு செய்தபோது, அவர்களின் விருப்பத்துக்கு தடை சொல்லாமல் ஊக்கப்படுத்தும் வேலையை மட்டும் செய்தோம். வாழ்க்கையை நடத்துவதே சிரமம் என்ற நிலையில் வருமானத்தை குழந்தைகளின் எதிர்காலத்திற்காக செலவு செய்தோம்.  ஆரம்ப காலகட்டத்தில் விளையாட்டுக்கான உபகர ணங்களை வாங்கித் தருவதே கடும் சவாலாக இருந்தது. நல்ல ஷூ கூட இல்லாமல் மதுரையில் நடைபெற்ற தடகளப் போட்டியில் வித்யா கலந்து கொண்ட போது காலில் காயம் ஏற்பட்டது. எனினும் அதனை பொருட்படுத்தாமல் ஓடி முதல் இடம் பெற்றார்.  இருவரும் உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான தடகள போட்டிகளில் சாதித்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் இருவருக்கும் அரசு பணி கிடைத்தது. இதனால் பொருளாதார ரீதியில் ஓரளவு சமாளித்து வருகிறோம். ஆசிய போட்டியில் நூலிழையில் நித்தியா பதக்கத்தை தவறவிட்டது வருத்தம் தான், என்றாலும் எதிர்வரும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கங் களை வெல்வார்கள் என உறுதியாக நம்புகிறோம்.  ஊர் பொதுமக்கள் எங்களது மகள்களின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஊர் முழுவதும் பேனர் வைத்துள்ள னர். இருவரையும் மேளதாளங்களுடன் வரவேற்பதற் காக ஊர் பொதுமக்கள் காத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தனர்.