“இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் உரிமை இருப்பது போல் ஆர்.எஸ்.எஸ். என்கிற அமைப்பிற்கு உரிமை இல்லையா..? எல்லோரும் ஊர்வலம் நடத்தலாம் என்றால் ஆர்.எஸ்.எஸ். நடத்தக்கூடாதா..? ஜனநாயக உரிமைகளுக்காக போராடுகிறவர்களும் இப்படி ஜனநாயகத்தை மறுக்கலாமா..?” என்று கடும் ஜனநாயகக்குரல் களை இப்போது நாம் எதிர்கொள்கிறோம். ஆனால் ஒன்றை மறந்துவிடக்கூடாது. இவை எல்லாமே ஜன நாயக அமைப்புகளுக்குத்தானே தவிர, பெயருக்குக் கூட ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளாத ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளுக்கு அல்ல. ஆர்.எஸ்.எஸ். தொடங்கிய காலத்திலிருந்து அந்த அமைப்பின் தலைவர்கள் சாதியின் அடிப்படை யில் தான் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதே இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணானது. தங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் பட்டியலை கூட வெளி யிடாத ரகசிய அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்ட நாளிலிருந்து ஒரு நாளும் ஆர்.எஸ்.எஸ். ஜனநாயக சக்திகளுக்கு கொடுத்த வாக் குறுதிகளை நிறைவேற்றியதில்லை என்பதே வரலாறு.
1948இல் காந்தியடிகள் படுகொலையை தொ டர்ந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடைசெய்யப் பட்டது. அப்போது அதன் தலைவர் கோல்வால்கர் தங்கள் மீதான தடையை நீக்கக்கோருவதற்காக பிரதமர் நேருவை நேரில் சந்திக்க பல முறை முயன் றார். ஒரு போதும் அவர் தன்னை சந்திக்க அனு மதிக்கவில்லை நேரு. இருந்த போதும் கடுமை யான கடிதம் ஒன்றை தன் கைப்பட கோல்வால்க ருக்கு எழுதியனுப்பினார். “கடந்த ஆண்டு இறுதி யில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகள் பற்றி ஏராளமான தகவல் கள் கிடைத்திருக்கின்றன. நீங்கள் எழுதிய கடிதத் தில் கூறப்பட்டிருக்கின்ற சமாதானங்கள் நம்பும் படியாக இல்லை. நீங்கள் உங்கள் கொள்கையாக எதையெல்லாம் அறிவித்திருக்கிறீர்களோ அதற் கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மேற்கொள்ளும் நட வடிக்கைகளுக்கும் சம்பந்தமேயில்லை. இந்திய நாடாளுமன்றத்தின் கொள்கையையும், அமைய இருக்கும் அரசியல் சட்டத்தையும், எதிர்ப்பதுதான் உங்கள் வன்மையான கொள்கை. எங்களுக்கு கிடைத்திருக்கிற தகவலின்படி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நடவடிக்கைகள் தேசவிரோதமா னவை, சூழ்ச்சியானவை, வன்முறையானவை. இதற்கு எதிராக நீங்கள் தரும் உறுதியை மட்டும் நாம் நம்பிவிட முடியாது” என்கிற ஜனநாயகத்தின் மீது உட்சபட்ச மரியாதை கொண்ட நேருவின் இந்த வார்த்தைகள் தான் அதற்கு சாட்சி. இதை விட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஜனநாயக, தேசவிரோத அமைப்பு என்பதற்கு வேறு ஆதாரம் தேவை யில்லை. அப்படிப்பட்ட நேருவிடமே புதுவேடத் தோடு “இனி அரசியலில் ஈடுபட மாட்டோம்” என்கிற உறுதிமொழியை கொடுத்து தன் பயணத்தை தொடர்ந்தாலும் அது ஒரு போதும் தன் உறுதி மொழியை காப்பாற்றியதில்லை.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக விடுதலைப் போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன் றவர்களோடு ஜனசங்கம் என்ற முகமூடியை மாட்டிக்கொண்டு கொஞ்சகாலம் சுதேசி, தேசபக்தி என்று பேசித் திரிந்த ஆர்.எஸ்.எஸை கொஞ்சநாளி லேயே புரிந்துகொண்டார் ஜேபி. “ஜனசங்கம் தன்னை ஒரு மதச்சார்பற்ற அமைப்பு என்று கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால், அவர்கள் ஆர்.எஸ்.எஸ். எனும் எந்திரத்தால் இயக்கப்படுகிற வர்களாகவே இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். ஒரு வகுப்பு வாத பாசிச இயக்கம்” என்று பகிரங்கமாக அறிக்கையை வெளியிட்டார். அதோடு நெருக்கடி நிலைக்குப் பிறகு உருவாகியிருந்த ஜனதா அரசின் தலைமையை கைப்பற்ற ஆர்.எஸ்.எஸ். முயற்சிக் கிறது என்று அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய்யை எச்சரிக்கும் வகையில் கடிதம் எழுதி னார். அதனைத்தொடர்ந்து இரட்டை உறுப்பினர் பிரச்சனை எழுந்தபோது, அதன் விளைவாகவே ஜனதா அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு வெளி யேறியது ஆர்.எஸ்.எஸ். ஜனசங்கம் முகமூடியும் கிழிந்தவுடன், மக்களிடம் பிரபலமாக இருந்த ஜனதா என்னும் சொல்லோடு பாரதிய என்னும் சொல்லை இணைத்து பாரதிய ஜனதா என்னும் புது முகமூடியோடு 80களுக்குப் பிறகு அரசியல் களத்திற்கு வந்தது ஆர்.எஸ்.எஸ்.”மண்டையை மறைத்தாலும் கொண்டையை மறைக்கவில் லையே” என்பதைப்போல பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் ஏற்பட்ட தடையை எதிர்கொள்ள பலப் பல புதிய முகமூடிகளை உருவாக்கிக் கொண்டே வந்துள் ளது. 2002 குஜராத் கலவரத்திற்குப் பிறகான அப்துல் கலாம் எனும் இஸ்லாமிய ஜனாதிபதி முகமூடி, இந்தியா ஒளிர்கிறது என்கிற 2004 முகமூடி, 2014இல் ஊழல் ஒழிப்பு, வளர்ச்சியின் நாயகன் எனும் மோடி என்னும் முகமூடி, இன்று தேசப்பொ ருளாதாரத்தை பாதுகாக்கவே அதானி பாதுகாப்பு என்பதைப்போன்ற கார்ப்பரேட் தேசிய முகமூடி என்று முகமூடிகள் தொடர்கின்றன.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளை அமைப்பின் பெயரில் நேரடியாகவே ஒரு குறிப்பிட்ட காலம் வரை நடத்தியவர்கள் தான் இவர்கள். 1980இல் இவர்கள் சோதனைச் சாவடி யான குஜராத்தில் நாட்டிலேயே முதல் முறையாக தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டிற்கு எதி ராக கலவரம் செய்து ரத்த ஆற்றை ஓடவிட்டார்கள். அப்போது அந்த நரப்படையின் தளபதிகளில் ஒருவர் தான் இன்றைய பிரதமர். ஆனால் அது பலனளிக்காமல் எதிர்மறையாக பல இடங்களில் திரும்பியது. தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள மீனாட்சிபுரத்தில் 1982 பிப்ரவரி 2ஆம் தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித்துகள் இஸ்லாத் திற்கு மதம் மாறியது அதன் உச்சம் எனலாம். தங்களுக்கு எதிராக நாட்டின் சூழல் திரும்புகிறது என்கிற போது, அப்படியே அதே ரத்தக்கறையோடு தலித்துக்களை ஆலிங்கனம் செய்யத் தொடங்கி னார்கள். அடுத்த இரண்டு மாதத்தில் ஐதராபாத் நகரில் 1982 ஏப்ரல் 14அன்று முதல் முறையாக அம்பேத் கர் பிறந்தநாளை கொண்டாடினார்கள். அதுவும் “சமூக சமத்துவ நாள்” என்று பெயர் சூட்டி பேரணியும் நடத்தினார்கள். வரலாற்றில் ஒரு நாளும் ஆர்.எஸ். எஸ். அமைப்பை திரும்பிக்கூட பார்க்காத அம்பேத் கரின் வரலாறே இவர்களுக்கு பிரச்சனையாகிற போது அம்பேத்கர் குறித்த புரட்டு வரலாற்றை கற் பனையாக எழுதிக்குவிக்கிறார்கள். அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸ். முகாமிற்கு சென்றதாகவும், அங்கு சாதி வேற்றுமை இல்லை என்று பாராட்டியதாகவும் கலர் கலராக கதைவிடுகிறார்கள்.
அம்பேத்கர் வரலாற்றில் அவர் எந்த ஆர்.எஸ்.எஸ். முகாமிற்கும் சென்றார் என்பது குறித்து ஒரு இடத்தில் கூட குறிப்பு இல்லை. மாறாக அவர் களை கடுமையாக தாக்கும் பகுதிகளே இருக்கின் றன. “இந்து மகாசபை போன்ற அமைப்புகள் தீண் டாமை மற்றும் சாதியைப் பற்றிய சமூகப் பிரச்சனை களைப் பேசத் தகுதியற்றவை. இந்திய அரசியலில் முஸ்லீம்களை எதிரியாகக் காட்டுவதே அவர்க ளின் ஒரே நோக்கம்” என்று காந்தியடிகளை விமர் சிக்கும் “தீண்டத்தகாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் செய்தது என்ன” என்னும் நூலில் கூட அம்பேத்கர் இந்துத்துவ அமைப்புகளையே கடு மையாகச் சாடியுள்ளார். 1946இல் எழுதிய ஒரு பதி வில் “ஆர்.எஸ்.எஸ்., அகாலிதள் இரண்டும் அபாய கரமான அமைப்புகள்” என்று எச்சரிக்கிறார். 1956இல் அம்பேத்கர் பௌத்த மதத்திற்கு கூட்டமாக மாறியபோது அதை கடுமையாக எதிர்த்த ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ். சாவர்க்கர், “பௌத்தம் ஒரு கோழை மதம். அது காட்டிக்கொடுத்த மதம்” என்று கோபத்தின் உச்சத்தில் விமர்சனம் செய்தார். இதற்கு பதில் தரும் விதமாக அம்பேத்கரின் ஆதர வாளர்கள் வீர்சாவர்க்கரின் “வீர்” எப்படி வந்தது? காட்டிக்கொடுப்பது பற்றி சாவர்க்கர் போன்றவர்கள் பேசலாமா?” என்று பதிலடி கொடுத்துள்ளார்கள்.
தன் எழுத்துக்களாலும் செயல்பாடுகளாலும் வாழ்நாள் முழுக்க ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக இருந்த அம்பேத்கரை ஆர்.எஸ்.எஸ். தன் சாகாக்க ளில் “தீண்டாமையை தீவிரமாக எதிர்த்த இந்துமத சமூக சேவகர்” என்று கூச்சமில்லாமல் சொல்லிவரு கிறது. அதே போல் காந்தியடிகளும் ஆர்.எஸ்.எஸ்ஸை புகழ்ந்து பேசியதாக வரலாற்றிலே இல்லாத பதிவுகளை வேகவேகமாக எழுதி பரப்பி வருகிறது. இந்தப்பட்டியலில் நாம் கொண்டாடும் பகத்சிங் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு பக்கம் பக்கமாக புரட்டு வரலாற்றை சளைக்காமல் எழுதி வருகிறது. அதை மக்களிடம் கொண்டு செல்லவே ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ஊர்வலங்கள். அம்பேத்கர் காந்தியடிகள் போன்றோரின் படங்களையும் தனது ஊர்வலத்தில் பயன்படுத்தி, கூடிய வரை பொதுச் சமூகத்தை தன் சீரழிவுப் பணிகளுக்காக உள் இழுக்கும் வேலையை தீவிரமாகச் செய்ய எல்லா வேலைகளையும் செய்யும். ஊர்வலம் கவனம் பெறவில்லை என்றால் அந்த ஊர்வலத்தை கலவரக் களமாக தானே மாற்றி கவனம் பெற வைக்கும். ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினர் தங்களின் இலக்கை அடைவதற்கு எத்தனை முகமூடிகளை யும் அணிந்து கொண்டே இருப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கென்று ஒரு முகமே கிடையாது. இருப்பதோ சாதிப்படிநிலை கொண்ட குரூரமான மூளை.
கட்டுரையாளர்: தமுஎகச துணைப் பொதுச் செயலாளர்