articles

அண்ணா கொடிக் கட்சியும், அண்ணாமலையின் அடாவடியும் - மதுக்கூர் இராமலிங்கம்

அதிமுக - பாஜக கூட்டணியில் மோதல் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. அதிமுக வுடன் பாஜக கூட்டணி அமைத்தால், அக்கட்சி யின் மாநிலத் தலைவராக இருக்க மாட்டேன் என அண்ணாமலை பகிரங்கமாக தெரிவித்தார். மேலிடம் அழைத்துப் பேசியதைத் தொடர்ந்து அமுக்கி வாசித்தார்.  ஆனாலும், அவருக்கு ஆத்திரம் அடங்க வில்லை. பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாடும் நாளில், அண்ணா குறித்த அவதூறுகளை அவிழ்த்துவிட்டார். மதுரையில் 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்ச் சங்க பொன் விழாவில் அண்ணா பேசியதைத் தொடர்ந்து, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவ ருக்கும், அண்ணாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டது உண்மை. இதுகுறித்து தென்றல் ஏட்டில் கவிஞர்  கண்ணதாசன் ‘எண்ணம்’ என்ற தலைப்பில் எழுதி யுள்ளார். ஆனால், அண்ணா மன்னிப்பு கேட்கா விட்டால், மதுரை மீனாட்சி அம்மனுக்கு பால்  அபிஷேகத்திற்கு பதிலாக, ரத்த அபிஷேகம் நடக்கும் என பசும்பொன் தேவர் எச்சரித்ததாக வும், இதைத் தொடர்ந்து அண்ணா தலைமறை வானதாகவும், கடைசியில் மன்னிப்புக் கேட்டதாக வும் அண்ணாமலை எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறாகப் பேசியுள்ளார். 

பசும்பொன் தேவர் பேசியதற்கு அடுத்த நாள், மதுரையில் அண்ணா பங்கேற்ற கூட்டம்  நடைபெற்றதாகவும் ஆனால், நடந்த சர்ச்சை குறித்து அண்ணா ஒருவார்த்தை கூட பேச வில்லை என்றும் வரலாற்றுக் குறிப்புகள் தெரி விக்கின்றன. ஆனால், அண்ணா மன்னிப்புக் கேட்டார் என அண்ணாமலை அள்ளி வீசியுள்ளார். இப்போது தேவையில்லாமல் அண்ணாவை பிறாண்டுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மறுபுறத்தில், பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா  என்ற ஆசாமி, பெரியார் பிறந்த நாள் விழா வின்போது அவரை இழிவுபடுத்தியுள்ளார். பெரி யார் தன்னுடைய வாழ்க்கையை திறந்த புத்தக மாகவே வைத்திருந்தார். இளமைக் காலத்தில் தனது வாழ்வில் நடந்ததை அவரே வெளிப்படை யாக தெரிவித்துள்ளார். சாமி சிதம்பரனார் எழுதியுள்ள ‘தமிழர் தலைவர்’ என்ற புத்தகத்தில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இது பெரியார் காலத்திலேயே வெளியான புத்தகம். இதிலுள்ள சில தகவல்களை மிகைப்படுத்தி ஏதோ அமலாக்கத்துறை சோதனையின்போது தான் கண்டுபிடித்தது போல குரைக்கிறார் எச்.ராஜா. பெரியார் எப்போதும் விலை மாதர்கள் வீட்டி லேயே இருந்ததாக எச்.ராஜா அவதூறு செய்துள் ளார்.  பாஜகவின் முன்னோடிகள் மற்றும் இப்போதைய தலைவர்களின் மகாத்மியங் களை பல்லக்கில் ஏற்றினால், ஊரே நாறிப் போய்விடும்.

அண்ணாமலையின் பேச்சுக்கு சி.வி.சண் முகம், செல்லூர் ராஜூ, டி.ஜெயக்குமார் போன்ற வர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சி.வி.சண்முகம் மாலை 6 வரை ஒன்று பேசுவார். பிறகு வேறொன்று பேசுவார் என்று அவரை குடிகார ராக சித்தரித்ததோடு, 10 ஆண்டுகளாக துப்பா க்கிப் பிடித்த கை இது என்றும், என்னுடைய சுய மரியாதைக்கு இழுக்கு வந்தால் சும்மா இருக்க மாட்டேன் என்று அண்ணாமலை மிரட்டியுள் ளார். கூட்டணி கட்சித் தலைவர்களை நோக்கி,  துப்பாக்கி நீட்டுகிற அளவுக்கு அண்ணாமலை யின் வாய்க் கொழுப்பு எல்லை மீறியிருக்கிறது.  இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்றும் கட்சியின் முடிவைத்தான் தான் அறிவிக்கிறேன் என்றும் ஜெயக்குமார் கூறியுள் ளார். ஜெயலலிதாவை விமர்சித்து மன்னிப்புக் கேட்ட நிலையில், அண்ணாவை அண்ணாமலை விமர்சிக்கிறார் என்று ஜெயக்குமார்கூறியுள்ளார். ஜெயலலிதாவின் ஆட்சிதான் இந்தியா விலேயே ஊழல் மிகுந்த ஆட்சி என்று அண்ணா மலை ஏற்கனவே கூறியதும், இந்தக் கருத்தை  வாபஸ் வாங்க மாட்டேன் என்று அடம்பிடித்த தும், பின்னர் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என ஜகா வாங்கியதும் நினைவுகொள்ளத்தக்கது. 

இந்தப் பின்னணியில், மேலே உள்ளவர்கள் சொல்லித்தான் அண்ணாமலை இப்படி பேசியுள் ளார் என குற்றம் சாட்டியுள்ள ஜெயக்குமார், தற் போதைக்கு அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்றும், பாஜக என்பது அதிமுகவுக்கு வேஸ்ட் லக்கேஜ், எக்ஸ்ட்ரா லக்கேஜ் என்றெல் லாம் விமர்சித்துள்ள ஜெயக்குமார், அண்ணா மலை பாஜக தலைவர் பொறுப்புக்கு தகுதியான வர் அல்ல. தமிழ்நாட்டில் பாஜக நோட்டாவை கூட தாண்ட முடியாது என்றும், கோப்பு, பைல் என்ற பூச்சாண்டிகளுக்கு பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்றும் அண்ணாமலை ஒரு கோழை என்றும் கூறியுள்ளார். ஜெயக்குமாரின் பேட்டியை பார்க்கும் போது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச் சாமியின் ஒப்புதலுடன்தான் அவர் பேசியுள்ளார் என்று தெரிகிறது. நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் பாஜக கொண்டு வரும் மக்கள் விரோத மசோதாக்களை எதிர்ப்பதன் மூலமாக அதிமுக தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துவார்களா? அண்ணாவின் உருவப்படத்தை கொடியில் வைத்துள்ள கட்சி, அண்ணாமலையின் அடாவடி யை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.