சென்னைப் பல்கலைக்கழகத்தில் 27 ஆண்டுகள் பேராசிரியராக பணிசெய்து தற்போது தகைசால் பேராசிரியராகப் பணியாற்றி கொண்டிருக்கும் பேராசிரியர் சற்குணவதி இலக்கிய அறிஞர் எனும் டி.லிட் பட்டம் தமிழில் பெற்ற முதல் பெண்மணி ஆவார். தமிழில் 27 ஆய்வுநூல்களை எழுதியுள்ள தமிழறிஞர் பன்னாட்டு அளவில் சிறந்த ஆராய்ச்சியாளர், விருதினை பெற்றவர். இவரது ஆய்வு, இலக்கியம், கல்வி மற்றும் சமுதாயப் பணியைப் பாராட்டி 2021 ஆண்டிற்கான “அம்மா இலக்கிய விருதினை” தமிழக அரசு இவருக்கு வழங்கியது. பல்வேறு அமைப்புகளில் இருந்து இவர் 15 விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை ‘சிங்கப்பெண்’ விருதினை 2020 இல் இவருக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளது.
இத்தகு பெருமைகளுக்குரிய பேராசிரியர் சற்குணவதி அவர்களை நேரில் சந்தித்தோம்.
தனித்துவ ஆய்வின் விவரம்
பல்வேறு இலக்கிய ஆய்வுகளை செய்துள்ள பேராசிரியர் மு.சற்குணவதி, கள ஆய்வுகளையும் சிறப்பாகச் செய்துள்ளார். “உடுக்கடி யில் அண்ணன்மார் கதைப்பாடல்” என்னும் தமிழகத்தில் வாழ்ந்த இரண்டு வீரர்களின் வரலாற்றை ஒரு ஆண்டு காலம் கள ஆய்வு செய்து 1050 பக்க நூலாக வெளி யிட்டுள்ளார். இந்த வரலாற்றுப்பதிவு இனி கிடைப்பதற்கரிய பெட்டகமாகும். சின்னமலை லம்பாடிகள், சர்க்காபகிகாடு இருளர், தனிஞ்சிமலை பளியர், மேற்குத்தொடர்ச்சி மலை முதுவர் ஆகிய நான்கு மலைவாழ் மக்கள் பற்றி கள ஆய்வு செய்து நூலாக வெளியிட்டுள்ளார். இவரது மலை மக்கள் ஆய்வில் மிகவும் குறிப்பிடத்தக்கது, மேற்குத் தொடர்ச்சி மலை வாழ் முதுவர் பழங்குழமக்கள் பற்றியது. தமிழ்நாட்ழல் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள வெள்ளி முடி, கரி முட்டி, பூச்சிகொட்டாம் பாறை, ஆட்டுமலை, சங்கரன் குடிமலை, இடமலை, மஞ்சம்பட்டி மலை, வெள்ளக்கல் மலை, மேல் குறுமலை ஆகிய ஒன்பது மலைப் பகுதிகளில் ‘முதுவர்’ இனமக்கள் வாழ்கின்றனர். அவற்றுள் பூச்சிகொட்டாம்பாறை மலை, மேல் குறுமலை ஆகிய இரண்டு மலைப் பகுதியில் வாழும் முதுவர் மக்களை கள ஆய்வு செய்துள்ளார்.
தமிழக வனத்துறைக்கு விண்ணப்பித்து முறையாக அனுமதிபெற்று ரு 25 ஆயிரம் கட்டணம் செலுத்தி தனது கள ஆய்வை மேற்கொண்டார். கோவையி லிருந்து உடுமலை சென்று அங்கிருந்து பொன்னா லம்மன் சோலைக்குச் சென்று அங்கிருந்து 19 கி.மீ தூரம், பாதையற்ற, அடர்ந்த காடுகள் நிறைந்த, கொடிய விலங்குகள் வாழும் மலையில் கால்நடை யாகவே மேலே ஏறிச்சென்று பூச்சிகொட்டாம்பாறை மலையில் தங்கியிருந்து அங்கு வாழும் முதுவர்களையும், உடுமலையை அடுத்த திரு முர்த்தி மலை அடிவாரத்திலிருந்து 21 கி.மீ. தூரம் கால்நடையாகவே மேலே ஏறிச்சென்று மேல் குறு மலையில்; தங்கி இருந்து அங்கு வாழும் முதுவர் மக்களையும் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டார். கடல் மட்டத்திலிருந்து பூச்சிகொட்டாம் பாறை மலை 1100 மீட்டர் உயரத்திலும் மேல் குறுமலை 1200 மீட்டர் உயரத்திலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் சத்திரம்
பூச்சங்கொட்டாம் பாறையில் 38 குடில்களில் மொத்தம் 200 பேர் வாழ்கின்றனர். மேல் குறுமலையில் 40 குடில்களில் மொத்தம் 220 பேர் வாழ்கின்றனர். தேன் எடுத்தல், தைலம் காய்ச்சுதல், சீமார் புல் வெட்டுதல், சில தானியங்களைப் பயிரிடுதல் ஆகியவை இவர்களது தொழிலாகும். வயதில் மூத்த ஊர்த்தலைவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு வாழ்கின்றனர். திருமணம் ஆகும் வரை அனைத்து ஆண்பிள்ளைகளும் ‘ஆண்கள் சத்திரம்’ எனும் குடிலில் வாழ்கின்றனர். திருமணம் ஆனதும் தனிச் குடில் அமைத்துத் தருகின்றனர். வனதேவதை, மீனாட்சியம்மை ஆகியவற்றை தெய்வங்களாக வணங்குகின்றனர். பழங்கால பாண்டியநாட்டு மதுரையே தங்களது பூர்வீகம் எனக் கூறுகின்றனர். ஆண்டிற்கொருமுறை நடத்தும் தைநோன்பு திருவிழாவில் முதுவர் ஆண்கள், பெண்கள் சந்தித்துக் கொள்கின்றனர். அப்போது தான் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. கோமாளி ஆட்டம் என்பது இவர்களின் தனித்துவமான கலையாகும். கல்வி அறிவு இல்லாதிருந்த முதுவர் மக்களுக்கு தனது ஆய்வின் போது பேராசிரியர் சற்குணவதி, கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். அதன் விளைவாக தற்போது 17 பிள்ளைகள் வால்பாறை, மறையூர், சாலக்குடியில் உள்ள தங்கும் விடுதியுடன் கூடிய அரசு உறைவிட பள்ளிகளில் படிக்கின்றனர். தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக அவர்களுக்கு கல்வி விழிப்புணர்வுடன், தன்னால் இயன்ற அளவு பொருள் உதவியையும் செய்து வருகின்றார். கடந்த 2022 ஜூன் 23ஆம் தேதி வனத்துறை அனுமதியுடன் 15 பேர் அடங்கிய குழுவுடன் வனத்துறை ஜீப்பில் பயணம் செய்தும், கால் நடையாகவும் சென்று அங்கு தங்கி இருந்து முதுவர் மக்களை நேரில் சந்தித்து, படிக்கும் 17 பிள்ளை களுக்கும் முதுகு பை, நோட்டுப்புத்தகம் முதலிய கல்வி உபகரணங்களையும், நாற்காலி, முக்காலி, பாய், லுங்கி, டவல், சேலை, வேட்டி முதலிய பொருட்களையும் வழங்கியுள்ளார். அத்துடன் தன் உறவினர் இலண்டன் மருத்துவர் ஆ.கோகுல் ராஜ், மருத்துவர் ரா.சித்ரா கோகுல்ராஜ் இருவரையும் தன்னுடன் அழைத்து சென்று மருத்துவ முகாம் நடத்தி 40 பேர் சிகிச்சை பெறச் செய்துள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரியாக்க...
தற்போது பூச்சி கொட்டாம் பாறை மலையில் உள்ள 38 குடும்பங்களையும் பொறுப்பெடுத்து, தொடர்ந்து கல்விசார் விழிப்புணர்வை வழங்கி முதுவர் மக்கள் வாழ்வு மேம்படத் திட்டமிட்டு செயல்பட்டு வரு கின்றார். அதன்படி வால்பாறை, சாலக்குடி, மறையூர் ஆகிய ஊர்களில் தங்கி படிக்கும் பிள்ளைகளை விடு முறை நாட்களில் அழைத்து வர வேன் மற்றும் வனத்துறை ஜீப்பிற்கும் ஏற்பாடு செய்து கொடுத் துள்ளார். முதுவன் செல்லமுத்து என்பவரின் மகள் சீதேவி +2 தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு மேல் படிப்பிற்கான செலவு முழுவதையும் சற்குணவதி ஏற்றுள்ளார். சீதேவியை ஐஏஎஸ் அதிகாரியாக்க திட்டமிட்டுள்ளார். உடல் பொருள் ஆவியை செலவிட்டு Biger Reserve Forest ற்குச் சென்று அங்கு வாழும் மலை மக்களின் முன்னேற்ற வாழ்விற்கு வழி வகுத்து வருவது சற்குணவதியின் தனித்துவ சாதனை களில் முதன்மையானதாக அமைகிறது. இதுபற்றி பேரா.சற்குணவதியிடம் பேசியபோது அவர் கூறியதாவது:
அரசு சார்ந்த உதவிகள்
எனது 14 ஆண்டுகால ஆய்வில் முதுவர்களிடம் முன்னேற்ற மாற்றங்களைக் காண்கிறேன். முதுவர் களுக்கு அரசாங்கம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை வழங்கி உள்ளது. எனது ஆரம்ப ஆய்வில் இல்லாத சோலார் விளக்கு அரசாங்கம் தற்போது அமைத்து கொடுத்துள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட புயலால் இடிந்து விழுந்த குடிசைகளை அரசாங்கம் புதுப்பித்து கொடுத்துள்ளது.
முதுவர்களின் கோரிக்கையும் உங்களது செயல்பாடுகளும்
என்னிடம் முதுவர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். கழிப்பறை கட்டித் தருமாறும், உறைவிடப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை விடுமுறையில் அழைத்துவர ஜீப்பிற்கு ஏற்பாடு செய்து தருமாறும் கேட்டனர். குறிப்பிட்ட இடம் வரை வனத்துறை ஜீப்பில் பயணிக்கும் நிலை இன்று உள்ளதால், அந்த வனத்துறை ஜீப் செல்வதற்கு சாதாரண பாதை அமைத்து கொடுத்தால் நலமாக இருக்கும் என்றும் கோரிக்கை வைத்தனர். உறைவிடப்பள்ளியிலிருந்து படிக்கும் பிள்ளைகள் விடுமுறையில் அழைத்துவர வனத்துறை ஜிப்பிற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளேன், வனத்தில் பயோ டாய்லெட் கட்டி தரவும் முயற்சி செய்கிறேன்.
அரசிடம் உங்கள் பரிந்துரைகள்
தமிழக அரசு அடிப்படை வசதிகளில் சிலவற்றை செய்து கொடுத்துள்ளது. இன்னும் சிலவற்றை செய்து கொடுத்தால் நலமாக இருக்கும் என கருதுகிறேன்
. • மனித குல வாழ்விற்கு வனத்தைப் பாதுகாக்க வேண் டியதும் வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டிய தும் அவசியமாகும். அதனால் முதுவர்கள் வனத்திற் குள் வாழும் காலம் வரை பயோ டாய்லெட் அரசு கட்டித்தரலாம். அதனால் கழிப்பிடம் தேடி வனத்திற் குள் செல்கிற போது விலங்குகளால் ஏற்படும் ஆபத்தி லிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
• உறைவிட பள்ளிகளிலிருந்து படிக்கும் பிள்ளை களை அழைத்துவர வனத்துறை ஜீப்பிற்கு ஏற்பாடு செய்து தரலாம். • பாதுகாக்க வேண்டிய வனத்தில் பாதை அமைத்தல் இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் அவ்வப்போது வனத்துறை ஜீப் செல்லும் அளவிற்கு சிறு செடிகளை வெட்டிக் கொள்ள அனுமதி வழங்கலாம்.
• புழங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் பழங்குடி மக்களுக்கான தனித்த சந்தைகளை உருவாக்கலாம்.
உங்களின் எதிர்கால திட்டங்கள்
• தனி ஒரு பெண்ணாக பேரார்வத்தின் காரணமாக செய்துவரும் எனது கல்வி விழிப்புணர்வு சேவையை? தொடர்ந்து செய்வேன்.
• அரசின் சலுகைகளை முதுவர்களுக்கு எடுத்துரைத்து அவற்றை பெறும் வழி முறைகளை விளக்கி அவற்றைப் பெற உதவி செய்வேன்.
• பன்னிரண்டாம் வகுப்பு முடித்து திருச்சூர் இரியான் குடியில் உள்ள கிறிஸ்ட் கல்லூரியில் கல்லூரியில் இளங்கலை படிக்கும் சீதேவியை ஐஏஎஸ் பயிற்சியிடங்களில் சேர்த்து படிக்க வைத்து, தேர்வெழுதச் செய்து அவள் ஒரு மாவட்ட ஆட்சியராக உருவாக அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன் என்று நம்பிக்கை மிளிரப் பேசினார்.