தமிழ்நாட்டின் பாரம்பரிய இசைக்கருவி களில் தனிப் பெருமை கொண்டது தவில். அது மங்கள இசைக்கான மகத்துவத்தை யும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. நாதஸ்வரத்திற்கு துணையாக வாசிக்கப் படும் தாள இசைக் கருவியான தவில், கர்நாடக இசைக்கும் கிராமிய இசைக்கும் பயன்படுத்தப் படுகிறது. இந்த தவில் இசைக்காக புதுவை சப்தர் ஹஸ்மி கலைக்குழுவின் அமர்நாத்துக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. இவரது தவில் இசையின் சத்தம் புதுச்சேரி மட்டுமின்றி தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளில் ஓங்கி ஒலிக்காத பகுதியே இல்லை என்று கூறிவிடலாம். முழு நேர தவில் வாத்திய கலைஞரான அமர்நாத்தின் கலை இசைப் பயணம் 33 வருடங்களுக்கு மேலாகத் தொடர்கிறது.
இடைவிடா தொடர் நிகழ்ச்சி
கம்யூனிஸ்ட் கட்சி பாடல்கள், கட்சி மேடை என்று இயங்கிக் கொண்டிருந்த இவரது பய ணத்தை இன்னமும் பரவலாக்கியது முற் போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத் தின் கலை இரவு மேடைகள். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் 2010 ஆம் ஆண்டு புத்தாண்டையொட்டி புதுச்சேரி கடற்கரையில் 12 மணி நேரம் இடை விடாமல் நடத்திய தொடர் இசை நிகழ்ச்சி புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலத்தையும் திரும்பிப் பார்க்கச் செய்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி கடற்கரை திடலில் பல்வேறு வடிவங் களில் நடத்தி வருகின்றனர். நிகழ்வுகள் என்பது மேடை நிகழ்வுகள் மட்டு மல்ல, பெரும்பான்மையான நிகழ்வுகள் நாள் முழுக்க நடக்கும் கட்சி பிரச்சாரம் மற்றும் தேர் தல் பிரச்சாரங்களும்தான். மேளத்தை மடியில் கிடத்திக் கொண்டதுமே அவரது பத்து விரல்க ளும் கர்நாடக இசைக்கும் கிராமிய இசைக்கும் ஏற்ப தாளம் போடும். இயல், இசை, நாடகம், நடனம், ஓவியம், சிற்பம், நாட்டுப்புறக் கலை என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ்நாட்டைப் போன்று புதுச்சேரியிலும் ஆண்டு தோறும் கலைமாமணி விருதுகள் வழங் கப்பட்டு வந்தது. பல்வேறு காரணங்களால் புதுச் சேரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விருது கள் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, சில தினங் களுக்கு முன்பு 2016 கலைஞர்களுக்கு கலை மாமணி விருது வழங்கியது அரசு. அதில் தவில் இசைக் கலைஞரான அமர்நாத்தும் ஒருவர்.
பாதை மாறாப் பயணம்...
புதுச்சேரி மாநிலம், திருக்கனூரை அடுத்துள்ள செட்டிப்பட்டி கிராமத்தில் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர் அமரநாதன். அப்பா பெயர் சாமி கண்ணு, அம்மா பக்கிரி யம்மாள், உடன் பிறந்தவர்களில் மூத்தவர் கணேசன், இளைய சகோதரர் ஜனார்த்தனன், சகோதரி முத்தமிழ். சிறுவயது முதல் பொதுவுடமை சிந்தனை யால் ஈர்க்கப்பட்டு இன்றுவரை அந்தப் பாதை யிலே பயணித்து வருகிறார். அதிகம் படிக்காத வர் என்றாலும் நடுநிலை பள்ளி படிப்பின் போது, நண்பர்கள் பாடும் பாடலுக்கு பள்ளி யின் மேசையில் தாளம் கட்டத் தொடங்கினர். அதுவே முழு நேர தொழிலானது. அன்றைக்கு அது ஒரு திறமை என்றெல்லாம் அவருக்கு தெரியாது. ஆனாலும் அவரது வகுப்பு ஆசிரியை சுசிமேரி அடையாளம் கண்டு உற்சாகப்படுத்தினார். பள்ளி அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்க தவில் கலை ஞர்களிடம் 15 நாட்கள் பயிற்சிக்கு அனுப்பி வைத்துள்ளார். அன்றைக்கு மூன்று தவிலை கிழித்ததெல்லாம் தனிக்கதை! அதன் பிறகு, கலந்து கொண்ட போட்டி களில் பரிசு நிச்சயம் என்ற நிலைக்கு உயர்ந் தார். அத்துடன் பள்ளிப்படிப்புக்கும் முழுக்குப் போட்டார். அந்த நேரத்தில், நண்பர் அண்ணா துரை மூலம் அறிவொளி இயக்கத்தில் சேர்ந் தார். 90 நாட்கள் நடந்த அந்த கலைப் பயணம் அமர்நாத்தை ஒரு நடிகனாகவும் அறிமுகம் செய்தது. அந்த அனுபவத்தோடு ‘சப்தர் ஹஸ்மி’ கலைக்குழுவின் கன்வீனரும் பாடகரு மான அன்புமணியோடு இணைந்த கலைப் பயணம் அமரநாதன் என்கிற கலைஞனை தவில் ‘அமர்நாத்’ என்று அடையாளப்படுத்தியது. இசைப்பயணத்தோடு தனியார் கம்பெனி யில் ஆலைத் தொழிலாளியாக பணியைத் தொடர்ந்தார். கலைக்குழுவில் முழுமையாக ஈடுபட்டு வந்ததால் அடிக்கடி விடுப்பு எடுக்கும் நிலை ஏற்பட்டது. அன்றைக்கு வேலையா? கலைக் குழுவா? என்கிற ஒரு சூழல்
முன்னுக்கு வந்தபோது கலைக்குழுவுக்கே முன்னுரிமை என்றதால், வேலை யிலிருந்து வெளியேற்றப்பட்டார். அன்று முதல் இன்று வரைக்கும் புதுவை சப்தர் ஹஸ்மி கலைக்குழுவில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அந்தக் கலைக்குழு ஸ்திரத்தோடு செயல்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அத்தனை தலைவர்களும் ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து வருகிறார்கள். இருந்தாலும் புதுச்சேரி தலைவர்களான தா.முருகன், வெ.பெருமாள், இரா.ராஜாங்கம், சு.ராமச்சந்திரன், கருவடிக் குப்பம் ஜீவா ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்கள்.
முதல் சந்திப்பும்-வாழ்க்கைத் துணையும்!
இந்த சூழ்நிலையில்தான் புதுச்சேரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில், பாடகர் உமாவை சந்திக்கிறார் அமர்நாத். அந்த சந்திப்பு இருவரையும் மண வாழ்க்கையில் கொண்டு சேர்த்தது. இன்றைய செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் அருகே உள்ள தண்டரை புதுச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் உமா. அவருக்கு நினைவு தெரிவதற்கு முன்பாகவே அவரது அப்பா இறந்து விட்டார். அத்தகைய சூழ்நிலையில், மூத்த மற்றும் இளைய சகோதரிகள் உள்ளிட்ட மூவரும் தாயின் அரவணைப்பில் வளர்ந்தனர். அந்த சின்னஞ்சிறு கிராமத்திலுள்ள தேவாலயத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கலை நிகழ்வுகள் அடிக்கடி நடக்கும். அப்போது பாட்டுப் பாடும் பெண்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு பாடல்களை கேட்டு வந்த அவரது அம்மா, உமாவுக்கும் சொல்லிக் கொடுக்க அப்படியாகவே சிறுவயதில் இருந்து பாட கற்றுக் கொன்றார்.
பள்ளியில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளிலும் போட்டிகளிலும் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்றிருக்கிறார். அதிலும் ‘குருவி தலையில பனங்காயப் பாருங்க... சித்தெறும்பு முதுகுல பாறாங்கல்ல பாருங்க’ என குழந்தைத் தொழி லாளர்கள் முறைக்கு எதிரான பாடல் தான் இவர் பாடிய முதல் பாடல். அது திரைப்படப் பாடல் அல்ல. கிராமப்புற வறுமையையும் துயரங்களையும் பிரதிபலிக்கும் பாடல் என்பதால் அந்தப் பாடலை பாடிய அவருக்குள்ளும் அந்த பாதிப்பு இருந்தது.அதன் பிறகு அறிவொளி இயக்கம் சார்பில் பல பயிற்சிகள் வழங்கப்பட்டன. அப்போது, “எங்கள் தேசம் இந்திய தேசம் வாழ்க. வாழ்க.. வாழ்கவே... இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் எங்களது சகோதர்களே” என்கின்ற பாடல் பதிவு செய்து புது தில்லிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறந்த தேசிய ஒருமைப் பாட்டு பாடலாக தேர்வு செய்யப்பட்டது. கல்வி உதவித் தொகையும் கிடைத்தது.
பட்டயப்படிப்பு...
பள்ளிப்படிப்பை முடித்த உமா, அதே ஊரைச் சேர்ந்த ராஜேஸ்வரி இருவரும் அறிவொளி இயக்கத்தில் இணைந்து அன்றைய காஞ்சிபுரம் மாவட்ட முழுவதும் கிராமங்கள், நகரங்கள் தோறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தனர். அன்றைக்கு மாவட்ட ஆட்சியாளராக இருந்த ராம மோகன் ராவ் இவர்களுக்கு உறுதுணையாக இருந்து இசைக்கல்லூரியில் குரல் இசைத் துறையில் இசைக்கலைமணி பட்டயப் படிப்பில் சேர்த்தார். அறிவொளி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜெயவேல் உள்ளிட்ட பலரும் உறுதுணை யாக இருந்தனர். பிறகு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய கலை இரவுகள், இசை நிகழ்ச்சிகள், தெருமுனைப் பிரச்சாரங்களில் கிராமிய இசை பாடல்களை பாடி வந்த உமாவை, 22 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார் அமர்நாத். இவர்களது இணைப்புக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்கள் சப்தர் ஹஸ்மி கலை குழுவின் அன்புமணி, செல்வம்.
வருமானமே வாழ்க்கை அல்ல!
இசைக்கலை மணி பட்டயப் படிப்பு முடித்திருந்த உமா, அமர்நாத் இருவரும் திருமணத்துக்கு பிறகும் சப்தர் ஹஸ்மி கலைக்குழுவில் கலைப் பயணத்தை தொடர்ந்தனர். சொற்ப வருமானம் என்றாலும் கூட, வேறு எந்தப் பணிக்கும் செல்லவில்லை. இவர்கள் மட்டுமல்ல இந்த கலைக்குழுவின் அத்தனை கலை ஞர்களும் அப்படியே பயணிக்கின்றனர். அக்கலைக் குழுவின் செயலாளராக தொடர்ந்து எட்டு வருடமாக வழிநடத்தி வருகிறார் அமர்நாத். கலைக்குழுவின் பாடகராக இருக்கும் அன்புமணி, கட்சியின் இடைக் கமிட்டி செயலாளராகவும் உமா தமுஎகசவின் மாநில துணைப் பொதுச் செயலாளராகவும் புதுச்சேரியின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்கள். இந்த ஆளுமைப்பண்பை அவர்கள் வளர்த்துக்கொள்ள உதவியது கலைக்குழு வின் நீண்ட கால அனுபவமே. கலை இரவு மேடைகள் மட்டுமல்லாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் அகில இந்திய மாநாடுகள் முதல் மாநில, மாவட்ட, வட்டார மாநாட்டு மேடைகளிலும், சட்டமன்றம், மக்களவை, உள்ளாட்சி அமைப்பு தேர்தல் பிரச்சாரங்களிலும் அமர்நாத்தின் தவிலிசை தூள் கிளப்பியது.
கொரோனா தொற்றுக்காலம் அவரை டாட்டா ஏசி ஓட்டுநராக மாற்றியது. அதன்பின்னர் தடையில்லாமல் தனது கலைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார். ஒரு அரங்கத்திற்குள் நிகழும் இசைக் கச்சேரி, பாடல் நிகழ்ச்சிகளை விட சமூக சீர்திருத்தப் பணிகளையே முதன்மையாகக் கொண்டு தெருவோர முனையில் மக்களோடு மக்களாக கலந்து அந்த மக்களுக்காக தவில் இசையோடு பாடப்ப டும் பாடல்கள் கலை அம்சத்தையும் தாண்டியது. அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சூழ்நிலையிலும் கூட, மேடை ஏறத்தயங்காத இவரது கலை அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் 50 வயதிலும் சோர்ந்து விடக்கூடாது என்பதற்காக கிடைத்த அங்கீகாரம் மட்டுமல்ல உற்சாக ஊக்கமும் தான் ‘கலைமாமணி’ விருதும். தனது இறுதி மூச்சு வரை இசைக்கலைஞனாகவும் கம்யூனிஸ்டாகவும் இருப்பதைவிட எனக்கு வேறு எந்த இலக்கும் கிடையாது என்று பெருமை கொள்ளும் கலைமாமணி அமர்நாத், உமாவின் பணிகள் மென்மேலும் சிறக்க அனைவரும் வாழ்த்துவோம்!