articles

img

8 மணி நேர வேலை: பிச்சையால் கிடைத்தது அல்ல!

8 மணி நேர வேலையை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும். இதனால், உற்பத்தி அதிகரிக்கும் என அறிவியல் ஆய்வுகள் தெரிவித்து வருகிறது. இதன் அடிப்படையில் உலகத்தின் பல நாடுகள் வேலை நேரத்தை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், மேடை தோறும் திராவிட மாடல் அரசு என முழங்கும் முதல்வரோ 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்த முடிவெடுத்துள்ளார். இது எந்த மாடல் அரசு என்பதை  விளக்குங்கள். வேலை நேரத்தை வரையரை செய்தது, எவரின் கருணையிலோ, பிச்சையோ அல்ல, தொழிலாளர் வர்க்கம் உதிரம் சிந்தி, உயிரை கொடுத்து போராடிப்பெற்றது. அதை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே!. சட்டத்தை நிறுத்தி வைத்தது மட்டும் போதாது; திரும்பப்பெற வேண்டும் என்கிறார்கள் இவர்கள்...

12 மணி நேர வேலை: பெண்களை எப்படி பாதிக்கும்?

12 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்தால் பெண்கள் உடல்நலம் மிகவும் பாதிக்கும். திருப்பூர், கோவை போன்ற தொழில் நிறைந்த நக ரங்களில் வேலை செய் யும் பெண்கள் தொடர்ச் சியாக நின்றபடி கட்டிங் மற்றும் அமர்ந்தபடி டெய்லரிங்  போன்றவை செய்யும் போது மாத விடாய் கோளாறு மற்றும் சுழற்சி முறையில் பாதிப்புகள் ஏற்படும். இதனால் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு இனப்பெருக்க பாதிப்பு ஏற்படும்.  மாற்றம் இல்லாத இந்திய சமூகத்தில் பெண் களுக்கு காலையில் எழுந்து வீட்டு வேலைகள் குழந்தைகள், பெரியவர்கள், கணவன் ஆகி யோரை கவனித்து வேலைக்கு செல்லும் போது  தூக்க நேரம் குறையும். இது அவர்கள் மனதை  பாதிக்கும். காலை 6 மணிக்கு எழுந்து செய்ய  வேண்டிய வேலைகள் அதிகாலை மூன்று  மணிக்கு ஆரம்பித்து செய்ய வேண்டியிருக்கும்.  காலை 8மணி முதல் மாலை 8மணி வரை வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது நிச்சயம் இரவு 10 மணி ஆகிவிடும். அவர் கள் உணவு சமைத்து உண்பது அல்லது மறு நாளுக்கான தயாரிப்பு செய்து படுக்கை செல்ல இரவு 12 மணி ஆகிவிடும். தூக்க நேரம் 3 மணி  நேரம் மட்டும் இருக்கும். இதனால், குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களோடு நேரத்தை செலவிடவே வாய்ப்பில்லாத நிலை உருவாகும். இதனால், குடும்ப சிக்கல்கள் எழும் அபாயம் உள்ளது.  மூன்று நாட்கள் விடுமுறை இருந்தாலும் மற்ற 4 நாட்களுக்கு தயாரிப்பு செய்ய வேண்டாமா? துணி துவைப்பது, குடிநீர் பிடிப்பது, பேங்க் வேலைகள் பார்ப்பது மின்சாரம் குடிநீர் பணம் கட்டுவது, மாவு அரைப்பது, அயர்ன் செய்வது, குழந்தைகள் பாடங்களை பார்ப்பது, மருத்துவ மனை செல்வது, பொருட்கள் வாங்குவது,  வீடு  சுத்தப்படுத்துவது, உறவினர்களைப் பார்ப்பது போன்றவற்றை செய்ய வேண்டி இருக்கும்.  இதனால், வேலைக்குச் செல்லும் பெண் களின் எண்ணிக்கை குறையும் ஆபத்து ஏற் படும். குடும்ப பொருளாதாரம் குறையும். குடும் பங்களில் வறுமை மற்றும் குற்றங்கள் அதிகரிக் கும். வருங்கால சந்ததியினர் சரியான வழிகாட்டு தல் இல்லாமல் தவிப்பர். குடும்ப அமைப்பு  முறை சிதையும். எனவே இந்த சட்டத்திருத்தத் தால் பெண்களுக்கு எந்த பலனும் இல்லை. மொத்தத்தில் ஒருவர் மூன்று நாட்கள் பட்டினி கிடந்து மற்ற நான்கு நாட்கள் 6 வேளை உணவு அருந்துவது எப்படியோ அப்படித்தான் இந்த 12  மணி நேர வேலை நேர சட்டத்திருத்தம். மனி தனை இயந்திரமாக்க முயலும் இந்த 12 மணி  நேர வேலை சட்டத்திருத்தத்தை எப்பாடுபட்டே னும் முறியடிக்க வேண்டும்.

-இந்திரா, சமூக செயற்பாட்டாளர்'

நேர கணக்கு தெரியுமா?

12 மணி நேர வேலைன்னா 9.00 - 9.00 தானேன்னு ரொம்ப ஈசியா நெனச்சுக்கிறாங்க போல.  திருப்பூர் மாதிரி ஏரியாவுல ஃபாக்டரி வேலை எப்படி இருக்கும் தெரியுமா? 9 மணிக்கு ப்ரொடக்சன் ஆரம்பிக்கனும்னா, அவன் 8.45க்கு  யூனிட்க்குள்ள இருக்கனும். அப்பதான் மெசின தொடச்சி கிடச்சு, பொருள் எல்லாம்  எடுத்து அரேஞ்ச் பண்ண முடியும். 8.45க்கு யூனிட்க்குள்ள இருக்கனும்னா 8.30க்கு  ஃபாக்டரிக்குள்ள வந்திருக்கனும் அப்பதான் அட்டனன்ஸ் எண்ட்ட்ரி போட்டு உள்ள போக சரியா இருக்கும். 8.30க்கு ஃபாக்டரிக்குள்ள இருக்கனும்னா அவன் 8.20க்கு பஸ்சிலிருந்து இறங்கியிருக்கனும். அதுக்கு அவன் 8.00 மணிக்கு பஸ் ஏறியிருக்க னும். 8 மணி பஸ் ஏற அவன் 7.50க்கு பஸ் ஸ்டாண்ட் வரனும். அதுக்கு அவன் 7.30க்கு  வீட்லிருந்து கிளம்பனும். 7.15 மணிக்கு சாப்பிட்டு  முடிச்சிருக்கனும். 6.45 மணிக்கு குளிச்சிருக்கனும். 6.30க்கு காலைக்கடன் முடிச்சிருக்கனும். 6 மணிக்கு எழுந்தி ருக்கனும். நைட் 9 மணிக்கு மெஷின் ஆஃப் பண்ண பிறகு எடுத்து வெச்சிட்டு 9.15க்கு  யூனிட்-லஇருந்து வெளியே வந்து, எக்சிட் ரெஜிஸ்டர் பண்ணி ஃபாக்டரிக்கு வெளியே வரும்போது 9.30 ஆகியிருக்கும். பஸ்ச பிடிச்சு பஸ் ஸ்டாண்ட்ல இறங்கி, அங்கி ருந்து வீட்டுக்கு ஓடி அப்பாடான்னு உக்காரும்போது 10.30 ஆகியிருக்கும். சாப்பிட்டு முடிச்சு பெட்டுக்கு போறப்ப மணி 11 ஆகியிருக்கும்.  ஆக மொத்தம் தூங்கறதுக்கு கிடைக்கிற மிச்ச நேரம் 7 மணி நேரம். பொண்டாட்டி பிள்ளைகளோட ரெண்டு வார்த்த பேசவோ, கொஞ்ச நேரம் டி.வி பாக்கவோ, பக்கத்து வீட்டு மனுஷங் கள எட்டிப் பாக்கவோ, புத்தகம் வாசிக்கவோ நேரம் ஒதுக்கனும்னா மிச்சம் இருக் கிற அந்த ஏழு மணிநேரத்துலதான் கழிக்கனும். இதுல வேலைக்கு போற பெண்கள் நிலைமைய யோசிச்சு பாருங்க. காலை சமைக்கனும், புள்ளைகளுக்கு ஊட்டனும், ஸ்கூல்க்கு கிளப்பனும், புருஷங் கார புடுங்கிக்கு பணிவிடைகள் செய்யனும். இதெல்லாம் முடிச்சிட்டுதான் வேலைக்கு கிளம்பனும். அப்படினா அந்த பெண் எத்தன மணிக்கு எந்திரிக்கனும்? இப்ப  சொல்லுங்க; 12 மணிநேர வேலைன்னா வெறும் 12 மணிநேரம் மட்டும்தானா? மனு ஷங்கள உணர்வுகளற்ற மெசின்களா மாத்தப்போகுற இந்த இரக்கமில்லாத சட்டத்த உசுரக்குடுத்தாவது முறியடிக்க வேண்டும்.

-சம்சுதீன் ஹீரா, எழுத்தாளர்

பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசு வழங்கியுள்ள Flexibilities: - பிரதாபன் ஜெயராமன்

1. மலிவு விலையில் நிலம்
2. நீர்
3. தடையில்லா மின்சாரம்
4. ஒப்பந்த முறை
5. பயிற்சியாளர், தற்காலிக ஊழியர்கள்
6. தொழிற்சங்க அங்கீகாரம் இன்மை
7. முதலீடுக்கு வங்கி கடன்
8. வேலை நீக்கத்திற்கு ஆதரவான தீர்ப்புகள்
9. தொழிலாளர்களை சட்டபூர்வமாக ஏமாற்ற தொழிலாளர் நலத்துறை
10. போராட்டங்களை ஒடுக்க போலீஸ்
11. கருங்காலிகளை காக்க லோக்கல் கட்சி புள்ளிகள்
  இன்னும் பல.,
  இந்த நெகிழ்வுத்தன்மை போதாதா அமைச்சரே?

ஜங்சன் அண்ணாதுரை, அம்பேத்கர் மக்கள் இயக்கம்

தமிழகத்தில் உள்ள எந்த  தொழிற்சாலைகளில், எந்த நிறுவ னங்களில் உள்ள தொழிலாளர்கள் எங்களுக்கு 8 மணி நேர வேலைக்கு பதிலாக 12 மணி நேர வேலை வேண் டும் என கோரிக்கை வைத்தார்கள்? 12  மணி நேர வேலை வேண்டும் என எந்த தொழிலாளர்கள்  போராட்டம் நடத்தினார்கள்? எந்த தொழிலாளர்களும் அவ் வாறான கோரிக்கையை முன் வைக்கவும் இல்லை. போராட்டமும் நடத்தவில்லை. தமிழக சட்டசபையில் தற்போது நிறைவேற்றியுள்ள தொழிலாளர் நல னுக்கு எதிரான சட்டத்தை பொருத்தவரையில் கார்ப்பரேட் நிறுவனங்களையும், பெரு  முதலாளி களையும் திருப்தி படுத்துகின்ற   கார்ப்பரேட் நிறு வனங்களின்  வேண்டுகோளுக்கிணங்க கொண்டு  வரப்பட்ட சட்டம். இது முழுக்க முழுக்க தொழிலாளர் நலனுக்கு எதிராகவும் தொழிலாளர்களின் குடும் பத்தில் உள்ளவர்களின் நலனுக்கு எதிராகவும் அவர் களுடைய உடல் நலனுக்கு எதிரானதுமான சட்டம். 1942 ஆம் ஆண்டில் நடந்த இந்திய தொழி லாளர்கள் மாநாட்டின் ஏழாவது அமர்வில் தொழிற் சாலையின் வேலை நேரத்தை 14 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைக்கும் கோரிக்கையை டாக்டர் அம்பேத்கர் முன்வைத்தார். அதுமட்டுமில்லா மல் கடுமையான உழைப்பு சுரண்டலுக்கு ஆளாக் கப்பட்ட அன்றைய இந்திய தொழிலாளர்களுக்கு சட்ட பூர்வமாக 8 மணி நேர வேலை உரிமையை இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே ஆங்கி லேய வைஸ்ராய் சபையில் தொழி லாளர்கள் நலத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்  இருந்தபோது எட்டு மணி நேர வேலை  சட்டத்தை 1945 நவம்பர் 28 அன்று  நிறைவேற்றி சட்டமாக்கினார். தொழிலாளர்கள்  நலன் கருதி இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் பாகவே டாக்டர் அம்பேத்காரல்  8 மணி நேர வேலை  என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தொழி லாளர்களின் நலனுக்கு எதிராகவும், தொழிலா ளர்கள் கடும் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாக்கப் படும் விதத்திலும் தற்போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் நலனுக்கு எதிரான சட் டத்தை அம்பேத்கார் மக்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. “இது சமூக நீதிக்கான ஆட்சி; இது திராவிட மாடல் ஆட்சி” என்று பேசி வருகின்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் தொழிலாளர்களின் நல னுக்கு எதிரான சட்டத்தை கொண்டு வருவது எந்த வகையில் ஏற்புடையது. தமிழக அரசு தொழிலாளர் களின் நலன் கருதி 12 மணி நேர வேலை என்கிற சட்டத்திருத்தம் மசோதாவை திரும்பப்பெற வேண்டும்  என அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பில் தமி ழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.