articles

img

ஒடுக்கப்படும் பெண் குரல் கேட்கிறதா இந்த தேசத்தின் செவிகளுக்கு?-ஆர்.எஸ்.செண்பகம்

நம்மில் நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பெண்களின் ஒடுக்கப்பட்ட அழுகுரல் இது தான். காலம் காலமாய் ஒடுக்கப்படும் வலி யின் எதிரொலி. சீறிக் கிளம்பும் கோபத்தின் வெடிப்பு.  ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று, கால் பதிக்காத துறையில்லை என்று மார் தட்டி உயர்ந்தெழுந்த பெண்களின் விம்மல் இது.  நின்றால்  குற்றம், அமர்ந்தால் குற்றம், சிரித்தால் குற்றம், பேசினால் குற்றம், குரல் உயர்த்தினால் குற்றம், மௌ னமும் குற்றம் என ஆணாதிக்கத்தின் மிச்ச சொச்சங்க ளாய் வெளிப்படும் உடல் மொழிகள், வாய் மொழி கள், அலட்சியப் பார்வைகள், புறக்கணிப்புகள்,  திரு திராஷ்டிர ஆலிங்கனங்கள் இதையெல்லாம் எதிர் கொள்ளும் 663 மில்லியன் இந்தியப் பெண்களில் ஒருவராய் உத்தரப்பிரதேச பெண் சிவில் நீதிபதியின் குரல் எழுந்துள்ளது.

நடந்தது என்ன?
மாவட்ட நீதிபதியால் பாலியல் துன்புறுத்தல் மற்றும் சித்ரவதைக்கு ஆளான உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் சிவில் நீதிபதி ஒருவர், மாவட்ட நீதிபதி மீதான பாலியல் துன்புறுத்தல் புகார் சரியாக கவனிக் கப்படாததால்,  தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள அனுமதி கோரி வெளிப்படையாக கடிதம் எழுதியுள்ளார்.  இதையடுத்து, டிசம்பர் 15, 2023 அன்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்ச நீதிமன்றத்தின் மூலம் அலகாபாத் உயர் நீதி மன்றத்திற்கு அந்த பெண் நீதிபதி தாக்கல் செய்துள்ள அனைத்து புகார்களின் தற்போதைய நிலை குறித்து  தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.   

தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், உயர் நீதிமன்றத்தின் ஐசிசி எனப்படும் உள்ளக புகார் குழு விற்கு புகார் அளித்த போது, விசாரணையைத் தொ டங்கவே ஆறு மாதங்கள் ஆனது என்றும், அது போலி யான துவக்கமாகவே இருந்தது என்றும் குறிப்பிட் டுள்ளார். ஏனெனில் விசாரணையில் உள்ள அனைத்து சாட்சிகளும் மாவட்ட நீதிபதியின் கீழ் உடனடி மேற் பார்வையில் வேலை செய்பவர்கள். இந்த வழக்கில் நியாயமான விசாரணை கோரி டிசம்பர் 13-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள் ளார். ஆனால், நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையி லான அமர்வு அவரது மனுவை தள்ளுபடி செய்து விட்டது. நீதித்துறையிலேயே கூட, நீதிபதியின் அந்தஸ்தில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் நிலைமையை இந்த நிகழ்ச்சி படம்பிடிக்கிறது.  

தீர்க்கப்படாதபாலியல் குற்ற வழக்குகள்

போர்ப்ஸ் இந்தியா ஏடு, “இந்தியா முழுவதும் தீர்க்கப்படாத பணியிட பாலியல் துன்புறுத்தல் வழக்கு கள் ஏராளம் உள்ளன” என்று கூறுகிறது. மேலும், “மார்ச்  2023 இல், இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில், பணியிட பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் நிலுவை யில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 101 சதவீதம் உயர்ந்துள்ளது. வழக்குகளை குறிப்பிட்ட காலத்தில்  தீர்க்க முடியாத நிறுவனங்களின் இயலாமையை இது காட்டுகிறது” என்று குறிப்பிடுகிறது.   நிஃப்டி நிறுவனங்க ளில், இந்த நிதியாண்டில் 883 வழக்குகளில் 165 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

ஆகஸ்ட் 2022 இல் வெளியிடப்பட்ட குற்றப் பதிவு வாரியத்தின் (CRB) அறிக்கை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2020ல் 56.5 சதவீதத்திலிருந்து 2021இல் 64.5 சதவீதமாக  15.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்று  குறிப்பிடுகிறது. 2022 ஆம் ஆண்டில் தேசிய மகளிர் ஆணையத்தில் (NCW) ஏறக்குறைய 31,000 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2014 க்குப் பிறகு மிக அதிகமாகும். 2019 ஆம் ஆண்டில், இந்தியாவில் மொத்தம் 894 பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்கு தல் வழக்குகள் பதிவாகியுள்ளன; இது கடந்த ஆண்டு 1,278 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும், ஜூலை 20 வரை 741 வழக்குகள் பதிவாகி யுள்ளன. பாலியல் துன்புறுத்தல், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. உத்தரப் பிரதேசம் 2069, தில்லி 422, மத்தியப் பிரதேசம் 242, மகாராஷ்டிரா 231, ஹரியானா 199, பீகார் 188, ராஜஸ்தான் 173, கர்நாடகா 163, மேற்கு வங்கம் 135, தமிழ்நாடு 119.  அதே போல, இந்தியாவின் முன்னணி  பொது வர்த்தக நிறுவனங்களில் 70 சதவீதம் பாலியல் வன் கொடுமைகள் அதிகரித்துள்ளன என்று மிண்ட் (MINT) வருடாந்திர அறிக்கையின் தரவுகளின் பகுப்பாய்வு  காட்டுகிறது.

POSH சட்டம் 2013 உருவான வரலாறு
2013 க்கு முன், இந்திய தண்டனைச் சட்டம் (IPC)  1860ன்  பரந்த விதிகளின் கீழ் பாலியல் துன்புறுத்தல் சேர்க்கப்பட்டிருந்தது. அதாவது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்களைக் கையாள்வதில் குறிப்பிட்ட சட்டம் எதுவும் இல்லை. 1997 இல், இந்திய உச்ச நீதி மன்றம், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் வெளிப்படும் ஆழமான, வேரூன்றிய பாலின ஏற்றத் தாழ்வுகளை ஆய்வு செய்தது. இந்திய அரசியலமை ப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரி மைகளை மீறுவதாக இதுபோன்ற செயல்கள் உள்ளன என்று கருதிய நீதிமன்றம், இந்த வன்முறைகளை விசாரணை செய்வதற்கு உரிய சட்டத்தை இயற்று மாறு அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

அதன் பின்னணியில் ‘விசாகா வழக்கு’ வந்த போது தான், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்த லைத் தடுப்பதற்காக, நீதிமன்றம் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளை வகுத்தது. இப்பிரச்ச னைக்கு தீர்வு காண சட்டமன்றத்தால் பொருத்த மான சட்டம் இயற்றப்படும் வரை விசாகா வழிகாட்டு தல்கள் வழிகாட்டும் கொள்கைகளாக கருதப்படும் என்று 1997ல் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும், பாலியல் கொடுமைகளில் இருந்து பெண்களைக் காக்கும் சட்டம் (POSH) 2013 இல் நடைமுறைக்கு வர, மேலும் 16 ஆண்டுகள் ஆனது. பெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை வழங்குவது முதலாளிகளின் கடமை என்று இச்சட்டம் அறிவுறுத்துகிறது.

பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், அரசு அலுவ லகங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பெண்கள்  பணிபுரியும் இடங்கள் உட்பட, இந்தியாவில் உள்ள அனைத்து பணியிடங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். இருப்பினும், விசாகா வழிகாட்டுதல்க ளை அமல்படுத்தியதைப் போலவே, ‘போஷ்’ சட்டத்தை அமல்படுத்துவதிலும் ஆழமான குறை பாடுகள் தொடர்கிறது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பான பணிச்சூழலை உறுதிசெய்ய முதலாளிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; பத்து அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்களில் நிர்வா கம் ஒரு உள்ளக புகார் குழுவை (IC) நிறுவ வேண் டும்; சிறிய நிறுவனங்களைப் பொறுத்தவரை, மாவட்ட அளவில் உள்ளக புகார் குழு அமைக்கப்பட வேண்டும்;  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணைகளைத் தொடங்குவதற்கும், தகுந்த தண்ட னைகள் மற்றும் தண்டனைகளை நிர்வாகத்திற்கு பரிந்துரைப்பதற்கும் உள்ளகக் குழுவிற்கு ‘போஷ்’ ‘(POSH)’ சட்டம் அதிகாரம் அளிக்கிறது. பணி யிடத்தில் பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பது குறித்துப் பயிற்சி அளிப்பது மற்றும் அவர்களின் பணி யாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது அந்நிறுவனத்தை நடத்துபவர்கள் மற்றும் பொறுப் பாளர்களின் கடமையாகும்.

நுட்பமான தீர்ப்புகள்

2013 இல் ‘போஷ்’ சட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து, உச்ச நீதிமன்றமும், பல்வேறு மாநிலங்க ளில் உள்ள உயர் நீதிமன்றங்களும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை கையாள்வதில் நுட்பமான தீர்ப்புகளை வழங்கி யுள்ளன. சமீபத்தில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில், வேறொரு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு கிளை அலுவலகத்தின் ஊழியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானால், அதுவும் போஷ் சட்டத்தின் கீழ் வரும் என்றும், அத்தகைய கிளை அலுவலகங்களும் டிஜிட்டல் தளங்களும் ஒரு பணி யிடமாக கருதப்பட வேண்டும் என்றும் கூறியது. 

மற்றொரு வழக்கில்,மும்பை உயர் நீதிமன்றம்,  ‘பணியிடம்’ என்பதன் வரையறையில் ஒப்பந்ததாரரின் அலுவலகங்கள், சைபர்ஸ் பேஸ்கள், போக்குவரத்து, வேலைக்காக வெளியூர் செல்லும் இடங்கள் உட்பட பலவற்றையும் உள்ளடக்கியது என்று வலியுறுத்தி யுள்ளது. அதேபோல, ‘பாலியல் துன்புறுத்தல்’ என்பது பெண்ணை அச்சுறுத்தும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும் அல்லது பெண்ணுக்கு விரோதமான சூழலை உருவாக்கும் மற்றும் அவமானகரமாக நடத்தும் சூழல் போன்றவற்றையும் உள்ளடக்கியது என்று மும்பை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மற்றொரு வழக்கில்,மும்பை உயர் நீதிமன்றம்,  ‘பணியிடம்’ என்பதன் வரையறையில் ஒப்பந்ததாரரின் அலுவலகங்கள், சைபர்ஸ் பேஸ்கள், போக்குவரத்து, வேலைக்காக வெளியூர் செல்லும் இடங்கள் உட்பட பலவற்றையும் உள்ளடக்கியது என்று வலியுறுத்தி யுள்ளது. அதேபோல, ‘பாலியல் துன்புறுத்தல்’ என்பது பெண்ணை அச்சுறுத்தும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும் அல்லது பெண்ணுக்கு விரோதமான சூழலை உருவாக்கும் மற்றும் அவமானகரமாக நடத்தும் சூழல் போன்றவற்றையும் உள்ளடக்கியது என்று மும்பை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

தொழிற்சங்கத்தின் தலைமையில்...
சமீபத்திய உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை கவ னத்தில் கொண்டு, முதலாளிகள் அதாவது வேலை யளிப்பவர்கள் வெறும் வாய் வார்த்தைகளாக, ஆவ ணத் தேவைக்காக மட்டும் அல்லாமல், போஷ் சட்டத்தி ற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கூட்டு முயற்சி மற்றும் தொழிற்சங்கங்களின் தலைமையில் பெண்க ளை அணி திரட்டுவதன் மூலம் இந்த சட்டத்தை முறை யாக செயல்படுத்தச் செய்ய முடியும் என்பது நமது நாட்டில் உழைக்கும் பெண்கள் இயக்கத்தின் அனுப வம். தொழிற்சங்கங்களின் பெண் பிரதிநிதிகளும் உள்ளகக் குழுக்களில் சேர்க்கப்பட வேண்டும் என்பது தொழிற்சங்க இயக்கத்தின் கோரிக்கையாக இருந்து வருகிறது. பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலி யல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013 (போஷ் சட்டம்) மற்றும் அதன் கீழ் உள்ள  விதிகள் இந்தியாவில் இயற்றப்பட்டு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகிறது. ஒன்றிய அரசு அலுவல கங்கள், அமைச்சகங்கள் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களில், போஷ் சட்டத்தின்படி உள்ளகக் குழுக்கள் அமைக்கப்படவில்லை அல்லது அமைக் கப்பட்ட இடத்தில் முறையாக செயல்படவில்லை. அதே போல பெரும்பாலான மாவட்டங்களில் இவை அமைக்கப்படவில்லை. அமைப்பு சாரா துறை உட்பட அனைத்து பணியிடங்களிலும் சட்டத்தை முறையாக அமல்படுத்தக் கோரி சிஐடியு தொடர்ந்து போராடி வருகிறது.

இடதுசாரி சிந்தனையாளர்கள், மாதர் அமைப்பு கள், தொழிற்சங்கங்கள், வாலிபர் மாணவர் அமைப்பு கள், முற்போக்கு இயக்கங்கள் என அனைவரும் இணைந்து போராடி பாலியல் துன்புறுத்தலுக்கு எதி ரான இயக்கங்களை வலுப்படுத்த வேண்டியுள்ளது.

கட்டுரையாளர்: மாநில இணை அமைப்பாளர், 
உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு (சிஐடியு)