articles

img

தனியார்மயம் தவிர்ப்போம்! பொதுப் பள்ளிகளைக் காப்போம்! - செல்லத்துரை

2020இல் ஒன்றிய அரசால் அறி முகப்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை தனியார் மயத்தை மேலும் வேகப்படுத்தும் வகையில் அமைந் துள்ளது. பல மாநில அரசுகள் பொதுப்பள்ளிகளை மூடு வதுடன் பல பள்ளிகளை இணைத்து பள்ளிக் குழுமம் (கிளஸ்டர் ஆஃப் ஸ்கூல்ஸ்) உருவாக்கப்படுகிறது. மகா ராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த ‘கிளஸ்டர் ஆப் ஸ்கூல்ஸ்’ திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஒரு பக்கம் கல்வி அடிப்படை உரிமையாக்கப்பட்டு இருக்கிறது; மறுபக்கம் கல்வி வணிகப் பொருளாக மாற்றப்பட்டு தனியார் மயத்தை நோக்கி செல்கிறது. அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை கல்விச் சிறந்த தமிழ்நாடு என்பதில் ஐயமில்லை. தமிழக அரசு  14 வகையான நலத்திட்டங்களை மாணவர்களுக்கு செயல்படுத்துகிறது. சத்துணவு,ஆரம்பப் பள்ளி மாண வர்களுக்கு காலை உணவும் வழங்கப்படுகிறது. ஆனாலும் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. 2019-ல்  22 ஆரம்பப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லை  எனவும் 669 பள்ளிகளில் பத்துக்கும் குறைவான மாண வர்களே  சேர்ந்துள்ளனர் எனவும் ஒரு தகவல் தெரி விக்கிறது.

இதை சரி செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை களை மேற்கொள்வது மகிழ்ச்சி அளிக்கும் செயல். மாணவர் சேர்க்கையில் தமிழக அரசின் கல்வித் துறையும் மிகுந்த அக்கறை காட்டுகிறது. என்றாலும் நிலைமை மேம்பட வேண்டியுள்ளது. 

அரசுப் பள்ளிகளும்  தனியார் பள்ளிகளும்

தமிழகத்தில் ஆரம்பப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை 37,579 அரசுப்  பள்ளிகள் உள்ளன. இப் பள்ளிகளில் 2.27 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்ற னர். 45,93,622 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் 12, 382 தனியார் பள்ளிகள் உள்ளன. இவைகளில் 64,15,398 மாணவ- மாணவி யர் படிக்கிறார்கள். 2.53 இலட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த விவரங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இணையதளத்தில் கிடைக்கும் புள்ளி விவரங்கள். இன்றைய நிலை இன்னும் மாற்றம் உடையதாக இருக்கும்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இன்று நடைமுறை யில் ஆசிரியர்களாக பணியாற்றும் நேரத்தை விட புள்ளி விவரங்களை கொடுக்கும் எழுத்தர்களாக மாறி உள்ளது சோகம் தரும் நிலையாகும்.

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களைப் பற்றி பொதுமக்களிடம் எதிர்மறையான கருத்துக் களை கொண்டு செல்வதில் ஊடகங்களும் தங்கள் பணியை செய்கின்றன. ஆசிரியர் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் திறமை மிக்க பணிக்கலாச்சார மிக்க ஆசிரியர்கள் கூட தற்போதைய வேலை முறை தங்களை மிகவும் சோர்வடையச் செய்து விட்டதாக தெரிவிக்கிறார்கள். இரண்டு ஆசிரியர்கள் பணி யாற்றும் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் விடுப்பு எடுத்து விட்டால் அல்லது அலுவலகப் பணிக்கு சென்று விட்டால் அந்தப் பள்ளியின் அனைத்து மாணவர் நலன் களும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. இதற்கு மாற்று ஏற்பாடு அவசியம் ஆகும். பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக  உள்ளன. வகுப்பு க்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் மிகக் குறைந்த ஊதியத்தில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையும் போதுமான ஊழியர்களும் கட்ட மைப்பும் மற்றும் கழிப்பறை வசதிகளும் உள்ள சூழ்நிலையில் தங்கள் குழந்தைகளை அங்கு கல்வி கற்க அனுப்புவதை பெருமையாக கருதுகிறார்கள்.

இன்னும் கூடுதலாக கவனித்தால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்,மத்திய தர மக்கள், சமூக ரீதியில் உயர்வடைந்த கிராமத்து மக்கள் உட்பட தங்கள் குழந்தைகளை எந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக ளிலும் சேர்த்து கல்வியை பெற தயாராக இல்லை.

அரசு பள்ளி மாணவர்களுக்கான போக்குவரத்து என்பதும் இன்று கடுமையாக மாறியிருக்கிறது. குழந்தைகளை பள்ளிகளில் கொண்டு சேர்க்கும் பணி சவாலாக மாறி உள்ளது. அதே நேரத்தில் தனியார்  பள்ளிகள் காலை 7 மணிக்கு வீடுகளில் சென்று பிள்ளை களை பிடித்து வரும் மஞ்சள் நிற பேருந்துகளை தமிழகம் முழுவதும் காண முடியும். குறுக்கும் நெடுக்குமாக வேன்கள், ஆட்டோக்கள் குழந்தைக ளை மூட்டைகளாக அடுக்கிச் செல்கின்றன.

உடுமலை ஒன்றியத்தில் ஓர் ஆய்வு
தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் உடு மலை ஊராட்சி ஒன்றியம் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது 122 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.

9 உதவி பெறும் பள்ளிகள் உள்ளன.35 தனியார் பள்ளிகள் உள்ளன. 122 பள்ளிகளில் ஏழு மாணவர்க ளைக் கொண்ட ஆரம்பப் பள்ளியும் 122 மாணவர்களைக் கொண்ட அரசு மேல்நிலைப் பள்ளியும் உண்டு. 122 அரசுப் பள்ளிகளிலும் படிக்கும் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 11,970. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6,959 குழந்தைகள் படிக்கிறார்கள்.

அதே நேரத்தில் வெறும் 35 தனியார் பள்ளிகளில் 19,177 மாணவர்கள் படிக்கிறார்கள். சமூகத்தின் அடித் தட்டில் உள்ள எளிய பிரிவினர், பட்டியலின குழந்தை கள் உட்பட அரசு பள்ளிகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு உதவி பெறும் தனியார் பள்ளி களில்  அல்லது தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளதை காண முடிகிறது. 19,177  மாணவர்கள் படிக்கும் தனியார் பள்ளி களில் 1,648 பட்டியலின குழந்தைகள் படிக்கிறார்கள்.

உதவி பெறும் தனியார் பள்ளிகளில் 28.7 சதவீதம் அதாவது 1937 பட்டியலின மாணவர்கள் படிக்கிறார்கள்.

அரசுப் பள்ளிகளில் 38.4 சதவீதம் அதாவது 4607 பட்டியலின மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள்.

வறுமை ஒரு பக்கம் இருந்தாலும்; ஏராளமான நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தினாலும் கற்றல் - கற்பித்தல் திறன்களை கருத்தில் கொண்டு தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் இருந்து விடுவித்து தனியார் பள்ளியை நோக்கிய நகர்வு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கிராமப்புறங்களை மையமாகக் கொண்ட வேளாண் மையை அடிப்படையாகக் கொண்ட உடுமலைப் பேட்டை ஒன்றியத்தில் இந்த நிலை என்றால் மாநிலம் முழுவதும் இதை கவனத்துடன் கவனிக்க வேண்டியுள்ளது.

கல்வி ஒரு வணிகப் பொருள்; தனியார்மயக் கல்வி வலிமையானது; சிறப்பானது என்ற கருத்து மக்களிடம் வலுவாக கொண்டு சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்கிறது.

போதுமான  ஆசிரியர்கள் அவசியம்
தனியார்மயத்தில் கல்வித்துறை வெகு தூரம் பயணம் செய்த மாநிலமாக தமிழகம் உள்ளது.  எண்ணிக்கையில் அடங்காத பொறியியல் கல்லூரி கள், தனியார் மருத்துவக் கல்லூரிகள்,நர்சிங் கல்லூரி கள், வேளாண்மை கல்லூரிகள், பி.எட் பட்டப்படிப்பு கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், பாலிடெக்னிக்குகள், மத்திய செகண்டரி பள்ளிகள்,சர்வதேச பள்ளிகள், மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் என கல்வி வணிகமயம் அதிவேக வளர்ச்சி பெற்றுள்ளது.

இவர்களோடு போட்டியிட்டு பள்ளியில் போதுமான அளவில் ஆசிரியர் இல்லாத நிலையில்  திறன்மிக்க கல்வியை குழந்தைகளுக்கு கொடுக்க முடியும் என்பது கனவு காண்பதாகவே இருக்கும்

. அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; அவை பெருமையின் அடையாளம் என்று  தமிழக கல்வித்துறை சரியாகவே சுட்டிக் காட்டுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளைப் பாது காக்க அரசும், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்க ளும் முற்போக்கான சிந்தனை உடைய அரசியல் உணர்வாளர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து செயல்பட்டால் தவிர தனியார் பள்ளிகளு க்கு இணையான திறமை மிக்க கல்வியை அரசு பள்ளி கள் வழங்க இயலாது.

பொதுப்பள்ளிகள் வளர்ச்சி அடையாத போது சமூக அமைதி, சமூக நீதி, மதச்சார்பின்மை, சாதி வேற்றுமை களைதல் போன்ற உயர்ந்த லட்சியங்கள் கற்பனை யாக போய்விடும்.

மனிதர்களை மேம்படுத்தும், மனிதர்களை மனி தர்களாக மாற்றும், சமூகத்தை வளர்ச்சி அடையச் செய்யும் ஒரு வலிமை வாய்ந்த கருவி என்பதை நாம் அனைவரும் புரிந்து கொண்டு பொதுப்பள்ளிகளை பாதுகாப்போம்.