“மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரருமான என். சங்கரய்யா உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
உழைக்கும் மக்களின் தோழ ராக வாழ்ந்த சங்கரய்யா இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் மூத்த தலைவர்களோடு பயணித்தவர். கல்லூரி பருவத்திலிருந்தே பொது வாழ்க்கைக்கு தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொண்டவர். சீரிய சிந்தனையா ளர்.‘தீக்கதிர்’ இதழின் ஆசிரிய ராகப் பணியாற்றியதோடு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்குவதற்கு முக்கிய பங்காற்றியவர்.
உழைக்கும் மக்களின் நல னுக்காக தொடர்ந்து களப்பணி ஆற்றியவர், தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த காலத்திலும் பல முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை கையில் எடுத்தவர். எளிமையான வாழ்க்கை வாழ்ந்த சங்கரய்யா வின் இழப்பு, உழைக்கும் மக்க ளுக்கும் கம்யூனிஸ்ட் பேரியக்கத் திற்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பு.
அவரை பிரிந்து வாழும் குடும் பத்தினர், நண்பர்கள், உறவினர் கள் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதிபெற எல்லாம் வல்ல இறை வனை வேண்டுகிறேன்” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.