கடலுக்குச் செல்ல தடை நீட்டிப்பு
இராமேசுவரம், அக். 27 - வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் திங்களன்று புயலாக வலுவடைந்துள்ளது. ‘மோந்தா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ‘மோந்தா’ புயலால் கடல் சீற்றம் ஏற்படும் என்பதால், செவ்வாயன்று மீன்பிடி அனுமதிச்சீட்டு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.