காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் வசித்து வந்த வேல்முருகன் என்ப வர் தனது குழந்தைகளுக்கு மலைக் குறவன் பழங்குடியினர் சான்றிதழ் கோரி மனுச் செய்துள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரியால் அம்மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அக்டோபர் 11ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 12ஆம் தேதி அதிகாலை மரணமடைந்துவிட்டார். இது பெருந்துயர மான ஒன்று. மறைந்த வேல்முருகனுக்கு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். குடும்பத்தலைவ னை இழந்து அந்தக்குடும்பம் மீளாத்துயரில் உள் ளது. இந்த நிலையில் 15.10.2022 அவருடைய மனைவி சித்ராவும் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலை யில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வேல்முருகன் மரணத்தையொட்டி பழங்குடியினர் சான்றிதழ் பெறுவது தொடர்பான பிரச்சனை பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. பல விதமான ஆலோ சனைகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பட்டியல்படுத்தப்பட்ட பழங்குடியினர் 36 பிரிவினர். இவற்றில் மலைக்குறவன் என்ற பிரிவு 1976ஆம் ஆண்டு பழங்குடி பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதற்கு முன்பாக குறவன், கொரவர் என்றே இவர்கள் சாதிச்சான்றிதழ் பெற்று வந்தனர். தமிழ்நாட்டில் குறவர் இன மக்கள் 27 பிரிவாக பிரித்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இதில் குறவன், சித்தனார் என்றால் பட்டியல் சாதியினராகவும், கொரவர் என்றால் பிற்படுத்தப்பட்டவராகவும், மற்ற 24 பிரிவினர் மிகவும் பிற்படுத்தப்பட்டவராகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வின மக்கள் பல்வேறு பட்டியல்களில் வைக்கப்பட்டுள்ள கார ணத்தினாலேயே சாதிச்சான்றிதழ் பெறுவது மிகவும் கடினமான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. வருவாய்த் துறை அதிகாரிகளும் இதைப் பயன்படுத்தி அலைக் கழிப்பது, பணம் பறிப்பது, ஏதாவதொரு சான்றிதழை கொடுப்பது என்று வழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
வேல்முருகன் தந்தை அரசுப் பள்ளி ஆசிரியராக பணி யாற்றி ஓய்வு பெற்றவர். இவர் குறவன் எஸ்.சி. என்றே சான்றிதழ் பெற்றுள்ளார். அரியலூர் மாவட்டம் மீன் சுருட்டி இவர்களின் சொந்த ஊர். அந்த ஊரில் மலைக் குறவன் பழங்குடியினர் சான்றிதழ் இதுவரை யாரும் பெறவில்லை. ஆசிரியரான இவரின் பணிப்பதிவேட்டி லும் குறவன் எஸ்.சி. என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இவ ருடைய மகன்கள் குறவன் (எஸ்.சி) என்றே சான்றிதழ் பெற்றுள்ளனர். வேல்முருகன் மீன் சுருட்டியிலிருந்து இடம் பெயர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்னால் படப்பையில் குடியேறி இருக்கிறார். இந்த நிலையில் தான் தன்னுடைய குழந்தைகளுக்கு மலைக்குறவன் (எஸ்.டி) சான்றிதழ் வழங்கவேண்டுமென்று நேரிலும், இணைய வழியாகவும் விண்ணப்பித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணைக்குப் பிறகு செப்டம்பர் 26ஆம் தேதி மனுவை தள்ளுபடி செய்துள்ள தகவல் வேல்முருகன் அலைபேசிக்கு குறுந்தகவல் மூலமாக வந்துள்ளது. மலைக்குறவன் என்ற பிரிவு 1976ஆம் ஆண்டு தான் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, அதற்கு முன்பாக யாரும் மலைக்குறவன் என்ற சான்றிதழ் பெற்றிருக்க வாய்ப்பில்லை. கோட்டாட்சியர் இதை கவனத்தில் கொண்டு மானிடவியல் அறிஞர்களின் பரிசீலனைக்கு மனுவை அனுப்பி இருக்கலாம். மாறாக, இடம் பெயர்ந்து வந்து வாழ்ந்து வருபவர் குறித்து அக்கம் - பக்கம் வசிப்பவர்கள் என்ன விபரங் களை அதுவும் அவருடைய சாதி குறித்து சொல்லி விட முடியும். மறைந்த வேல்முருகனின் வாக்கு மூலத்தை தவிர வேறு ஆதாரங்கள் எதையும் அவர் கொடுக்கவில்லை என்றே அவருடைய துணைவியார் தெரிவிக்கிறார்.
வரவேற்கத்தக்கது
பழங்குடியினர் சான்றிதழ் பெறுவது தொ டர்பான சந்தேகத்துக்குரிய மனுக்களில் உதவி செய்வ தற்கு என்றே தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மானிடவியல் துறையில் ஆய்வுப் பட்டம் பெற்றவர்க ளை நியமனம் செய்துள்ளது வரவேற்கத்தக்க நட வடிக்கை. ஆனால், வருவாய்த்துறையினர் அவர்களை எந்த அளவுக்கு பயன்படுத்துகின்றனர் என்பது தெரிய வில்லை. இந்த ஏற்பாட்டை முறையாகப் பயன்படுத்தி இருந்தால் வேல்முருகன் மரணம் தவிர்க்கப்பட்டி ருக்கலாம்.
ஒன்றிய அரசு அறிவித்திருந்தால்...
குறவன் இனத்தின் அனைத்து உட்பிரிவினரை யும் பழங்குடிப் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறது. மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்றுத்தான் தமிழ்நாடு பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுக்கு அரசு உத்தரவிட்டது. ஆய்வின் முடிவில், குறவன் இனத்தின் அனைத்து உட்பிரிவின ரும் பழங்குடியினர் தான் என்றும், எனவே, அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும் பரிந்துரை செய்தது. இப்பரிந்துரையை ஏற்று தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்து ரையை ஏற்று ஒன்றிய அரசு பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அறிவித்திருந்தால் எவ்வித குழப்பமும் இல்லா மல் இவ்வினமக்கள் சான்றிதழ் பெற்றிருக்க முடியும். மாறாக, விளக்கங்கள் கேட்பது என்கிற பெயரில்இந்தப் பரிந்துரை கடந்த 18ஆண்டு காலமாக கிடப்பிலே போடப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு, குறவன் இனத்தின் அனைத்து உட்பிரிவுகளையும் பழங்குடியி னர் பட்டியலில் சேர்ப்பதற்குரிய நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஒன்றிய அரசு, மாநில அரசுகளின் இதுபோன்ற பரிந்துரைகளின் மீது ஒரு குறிப்பிட்ட காலவரையறைக் குள் முடிவெடுக்கவேண்டும். இந்த விஷயத்தில் ஒன்றிய அரசுக்கு உதவிட தனி ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டுமென்று நீண்டகாலமாக வலி யுறுத்தி வருகிறோம். ஆனால், ஒன்றிய ஆட்சியாளர் கள் இந்த விஷயத்தில் மிகுந்த அலட்சியத்தோடு நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான சம்பவத்துக்கு பிறகா வது பட்டியலில் சேர்த்தல் தொடர்பான பிரச்சனையில் ஆட்சியாளர்கள் அக்கறையுடனும், அவசர உணர்வுட னும் செயல்பட வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.
மானிடவியல் அறிஞர்கள் உதவியை நாடுவதில்லை
பழங்குடியினத்தில் சில பிரிவுகளை பயன்படுத்தி பழங்குடியினர் அல்லாதார் பழங்குடி சான்றிதழைப் பெற்று பல்வேறு பணிகளில் உள்ளனர் என்பது உண்மை. அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுப்ப தற்கு ஏற்கனவே, விதிமுறைகள், உச்சநீதிமன்ற வழி காட்டுதல்கள் உள்ளன. அதன்படி நடவடிக்கை எடுப்ப தில் யாருக்கும் ஆட்சேபணை இல்லை. ஆனால், போலி கள் இருக்கிறார்கள் என்பதற்காக உண்மையான பழங்குடி மக்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் தேவை யற்ற கெடுபிடிகள், காலதாமதம், மன உளைச்சலு க்கு உள்ளாக்குவது, பல்லாயிரக்கணக்கில் பணம் பிடுங்குவது போன்ற வகையில் வருவாய்த்துறையினர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. மனித வாழ்க்கை யில், பழக்க வழக்கங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்க ளை அதிகாரிகள் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், அதிகாரிகள் கருணையற்ற முறை யில் நடந்து கொள்கிறார்கள். அதிகாரியால் முடிவுக்கு வர முடியவில்லை என்றால் அவர் மானிடவியல் அறிஞர்களின் உதவியை பெற முடியும் - மாறாக, தானடித்த மூப்பாக தள்ளுபடி செய்வது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். என்றாலும் பழங்குடியினர் சான்றிதழுக்காக உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எக்காரணம் கொண்டும் எடுக்கக் கூடாது என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். கடந்த ஜூலை மாதம் கொண்டாரெட்டி பழங்குடியினர் சான்றிதழ் மறுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியசாமி என்பவர் பள்ளிப்பட்டு வட்டாட் சியர் அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வைத் தராது. மாறாக அமைப்பாகத் திரண்டு அதிகாரிகளை, அரசை நிர்ப்பந்தித்து போராடுவதற்கு முன்வர வேண்டும்.
பொருத்தமான வழிகாட்டுதல் தேவை
பழங்குடியினர் சான்றிதழ் கோரும் மனுக்களின் மீது உரிய காலத்தில் பரிசீலித்து வழங்கவும், அதிகாரிகளு க்கு உத்தரவிட வேண்டும். குறிப்பாக, மலைக்குறவன், மலை வேடன், குறுமன்ஸ், கொண்டாரெட்டி, காட்டு நாயக்கன் ஆகிய பிரிவு மக்களுக்குத்தான் சான்றிதழ் பெறுவது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. பெற் றோர்களுக்கு சான்றிதழ் இருந்தால் அதை அடிப்படை யாக கொண்டு, அவர்களுடைய குழந்தைகளுக்கு தருவதற்குகூட கோட்டாட்சியர்கள் மறுக்கிறார்கள். ஒரு குழந்தைகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு சான்றிதழ் பெறப்பட்டிருந்தால் அவருடன் பிறந்த இன்னொருவருக்கு தர மறுக்கிறார்கள். ஏனென்றால் நீதிமன்ற உத்தரவு அந்த குழந்தைக்குத்தான் மற்றொரு குழந்தைக்கும் நீங்கள் நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்று வாருங்கள் என்று வேண்டுமென்றே இழுத்த டிக்கும் போக்கும் அதிகாரிகளிடம் இருக்கிறது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு கோட்டாட்சியர் சான்றிதழ் வழங்கியிருந்தால் அதே குடும்பத்தில் வேறொரு குழந்தைக்கு விண்ணப்பிக்கும் போது அதே கோட்டத்தில் மற்றொரு கோட்டாட்சியர் அதை ஏற்க மறுத்து இழுத்தடிப்பதும், நிராகரிப்பதும் நடக்கிறது. இவையெல்லாம் சான்றிதழ் தரக்கூடாது என்ற முன்தீர் மான கருத்தின் அடிப்படையிலேயே அதிகாரிகளால் கடைப் பிடிக்கப்படுகிறது என்று உறுதியாக சொல்லமுடியும்.
8 லட்சத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினர் அனை வருக்கும், அவர்களுடைய குடியிருப்புக்கே சென்று குடும்ப அட்டை வழங்குவதை போல குடும்ப இனச் சான்றிதழ் அட்டை வழங்குவதன் மூலம் அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்தால் பெயரை மட்டும் சேர்த்தால் போதும் என்ற நிலையை ஏற்படுத்தி சான்றிதழ் பெறு வதை எளிதாக்க முடியும். எனவே, இப்பிரச்சனையில் தமிழ்நாடு அரசு, பொருத்தமான வழிகாட்டுதல்களை மேற்கொள்ள வேண்டும். விரும்பத்தகாத சம்பவம் நடந்துவிட்ட பின்னணி யில், அந்த குடும்பத்திற்கும், அக்குழந்தைகளின் எதிர் காலத்திற்கும் உதவ வேண்டியது அரசின் கடமை. எனவே, வேல்முருகன் மனைவிக்கு அரசு வேலை யும், அக்குழந்தைகளின் கல்விச் செலவை முழுமையாக அரசு ஏற்பதன் மூலமும் வேல்முருகனின் இழப்பை ஓர ளவு ஈடுசெய்ய முடியும். சான்றிதழுக்காக இனியொரு மரணம் நிகழக்கூடாது என்பதே நமதுவேண்டுகோள்.
கட்டுரையாளர் : மாநில தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்