தமிழகத்தில் திமுக அரசாங்கம் வேலை வாய்ப்பில் சில புதிய முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது. இதில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டம் அறிமுகம், முதல் தலைமுறை பட்ட தாரிகளுக்கும், அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பம் சேர்ப்பு, அரசுப் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தாளை கட்டாயமாக்கியது ஆகியவை வரவேற்கத்தக்கவை. இதில் முக்கியமாக தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவ னங்கள், வாரியங்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அதிகார அமைப்பு களுக்கான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத்தின் வாயிலாக அமர்த்துவ தற்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறை வேற்றப்பட்டுள்ளது. இதன்மூலமாக நியமனங்கள் வெளிப்படையாக நடைபெறும் என்பது வரவேற்கத்தக்கது.
தமிழகத்தில் வேலையின்மை நிலவரம்
தமிழகத்தில் கடந்த 2021 டிசம்பர் 31 வரை, மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 75 லட்சத்து 31 ஆயிரத்து 122 பேர் காத்திருப்பதாக மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இதில் ஆண்கள் 35 லட்சத்து 35 ஆயிரத்து 992 பேர்; பெண்கள் 39 லட்சத்து 94 ஆயிரத்து 898 பேர், 232 பேர் மூன்றாம் பாலினத்தவர். பதிவு செய்துள்ளவர்களில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18 லட்சத்து 25 ஆயிரத்து 668 பேரும்; 19 முதல் 23 வயது வரையுள்ள பல்வேறு தரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 15 லட்சத்து 50 ஆயிரத்து 245 பேரும்; 24 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 28 லட்சத்து 30 ஆயிரத்து 275 பேரும்; 36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 13 லட்சத்து 13 ஆயிரத்து 652 பேரும்; 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 11 ஆயிரத்து 282 பேரும், மாற்றுத் திறனாளிகள் 1 லட்சத்து 39 ஆயிரத்து 414 பேரும் உள்ளனர்.
கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் 6,800 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டபோது 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் வேலையின்மை குறித்து விரி வான ஆய்வுகள் நடத்தப்படுவதில்லை. வேலை யின்மை விகிதம் வேகமாக அதிகரித்து வருவதால் ஒன்றிய மோடி அரசு ஆய்வறிக்கை வெளியிடுவ தையே நிறுத்திவிட்டது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் நடத்திய ஆய்வில் 2021 டிசம்பர் மாதம் தமிழகத்தில் வேலையின்மை விகிதம் 6.8 உள்ளது. தமிழகத்தின் வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனையே வேலைவாய்ப்புகளில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கையும், போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையும் மேலும் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது.
காலிப் பணியிடங்கள்
சமீபத்தில் தமிழக நிதியமைச்சர் அரசுப் பணி யிடங்களில் 6 லட்சம் காலியிடங்கள் இருப்பதாக தெரி வித்தார். அரசு நடத்தும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் திட்டங்களிலும் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் உள்ளன.
காவல் துறையில்...
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பணி நியம னத்தில் முறைகேடு நடைபெற்றதாக காவல் துறை தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் கடும் துயரங்களை சந்தித்தனர். 2021 ஜூன் மாதம் தமிழக காவல்துறை யில் ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 198 ஆகும். தற்சமயம் பணியில் உள்ள காவலர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 861 ஆகும். சமீபத்தில் நடந்த தேர்வின் மூலமாக 10 ஆயிரத்து 391 காவலர்களும், 969 உதவி ஆய்வாளர்களும் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் உள்ளனர். தற்போது காலியாக உள்ள 20220 பணியிடங்களில் 11 ஆயிரத்து 812 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடுமென எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கல்வித்துறையில்...
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 9,494 பணியிடங்களை நிரப்புவதற்கான 2022- கால அட்டவணை அறிவிக்கையை வெளியிட்டது.இதில் ஏப்ரலில் ஆசிரியர் தகுதித் தேர்வு,ஆகஸ்ட்டில் அரசு கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு, நவம்பரில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஆகியவை அடங்கும்.
தமிழகத்தில் 150 அரசுக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 2011- 12 ஆம் கல்வியாண்டில் 1074 பாடப் பிரிவுகள் செயல்பட்டு வந்தன. தற்சமயம் இதனுடைய எண்ணிக்கை 3720 ஆக உயர்ந்துள் ளது. இதனடிப்படையில் பணியிடங்கள் தோற்று விக்கப்பட்டு உள்ளன. அதே போல புதிதாக உரு வாக்கப்பட்ட 40 கல்லூரிகளில் 200 பாடப்பிரிவுகளுக்கு ஆயிரம் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணி யிடங்கள் காலியாக உள்ளன. 41 உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டு உள்ளன. அதில் காலியாக உள்ள 1500 பணியிடங்களும், அரசு கல்லூரி களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை 700, அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் 4081 பேரும் பணியாற்றி வருகின்றனர். இதனடிப்படையில் அரசு கல்லூரிகளில் 7,000 பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணி யிடங்கள் காலியாக உள்ளன. அரசு கல்லூரிகளில் 2019ஆம் ஆண்டு 2340 பணியிடங்களுக்கான தேர்வுக் கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால் தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு 1334 பணி யிடங்களுக்கு மட்டுமே அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது எவ்விதத்திலும் போதுமானது அல்ல.
பட்டதாரி மற்றும் மேல்நிலை பட்டதாரி ஆசிரி யர்கள் காலிப்பணியிடங்கள் 12344 உள்ளன. ஆரம்பப் பள்ளிகளில் 1500 ஆசிரியர் பணியிடங்கள் காலி பணி யிடங்களாக உள்ளன. தேர்வு வாரியத்தின் அறிவிப்பில் அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, தையல், ஓவியம், இசை ஆகிய சிறப்பாசிரியர்களுக்கான தேர்வு அறிவிக்கப்படவில்லை.
ஊழலும் நியமனமும்
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பணி நியமனம் செய்யப்படவில்லை. இதனால் இக்கல்லூரிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வித்துறையில் கடந்த 10 ஆண்டு காலமாக பணியிடங்கள் நிரப்புதல் நியாயமான முறையில் நடைபெறவில்லை என்பது மட்டுமல்ல; அதில் மிக மோசமான முறையில் ஊழலும், முறைகேடு களும் நடைபெற்றது. கல்வியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முழுமையான அளவில் ஆசிரியர் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இல்லை என்றால் மாணவர்களின் திறன் மற்றும் ஆளுமை வளர்ச்சியில் மிகப் பெரிய பாதிப்பை உரு வாக்கும். கடந்த ஐந்து ஆண்டு காலத்திற்கு மேலாக அதிமுக அரசு இருந்த போதும் ஆசிரியர் தேர்வு வாரியம் எவ்விதமான தேர்வையும் நடத்தவும் இல்லை, பணி நியமனத்தை மேற்கொள்ளவும் இல்லை.
அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக 2022 ஆம் ஆண்டுக்கான தேர்வுகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 11 ஆயி ரத்து 86 இடங்களுக்கான அறிவிப்புகள் 2 மற்றும் 4 இடங்களுக்கான அறிவிப்புகள் வந்துள்ளன. ஆனால் ஒட்டுமொத்த காலியிடத்தை கணக்கிடும்போது அதில் இரண்டு சதவீதத்தை கூட நிரப்புவதற்கான முறையில் அறிவிப்புகள் இல்லை என்பது இளை ஞர்கள் மத்தியில் கடும் நம்பிக்கை இழப்பை ஏற்படுத்தி யுள்ளது. தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலமாக பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பணி நியமனம் நடைபெறும் என்பது வரவேற்கத்தக்கது.
தமிழகத்தில் உள்ள மின்சாரத்துறையில் கிட்டத்தட்ட 55 ஆயிரம் பணியிடங்களும், போக்கு வரத்து துறையில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பணி நியமனம் செய்யப்படாததால் 30 ஆயிரம் பணி யிடங்கள் காலியாக உள்ளன. குடிநீர் வடிகால் வாரி யத்தில் ஒப்பளிக்கப்பட்ட 12 ஆயிரம் பணியிடங்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் 8500 இடங்கள் வெட்டி சுருக்கப்பட்டன. தற்சமயம் 3500 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 2025 ஆம் ஆண்டு வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே பணியாற்றக் கூடிய சூழல் உருவாகியிருக்கிறது. இத்துடன் பால்வளத்துறை, காகித தொழிற்சாலை, சிமெண்ட் தொழிற்சாலை- இன்னும் அரசால் நடத்தக்கூடிய பல்வேறு நிறுவனங்க ளில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன.
அரசின் பொறுப்பு
தமிழகத்தில் வேலையின்மையின் அளவு அதி கரித்து வரக்கூடிய சூழலில் அரசின் பொறுப்பு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் பொதுத்துறையில் உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதற்கான விரிவான திட்டத்துடன், அதற்கான காலக்கெடு தீர்மானித்து நிறைவேற்ற வேண்டியுள்ளது. ஒவ்வொரு இளைஞருக்கும் சுயமரியாதையுடன் கூடிய கௌரவமான வாழ்க்கை அவசியமான ஒன்றா கும். சமூக நீதி அடிப்படையில் சம நீதியை நோக்கி சமூகம் முன்னேறுவதற்கு இளைஞர்கள் வாழ்க்கை யில் வேலைவாய்ப்பை உருவாக்கிட புதிய அரசு ஆக்கப்பூர்வமான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் எதிர்பார்க்கிறது. விடியல் என்பது இளைஞர்கள் வாழ்வில் வர வேண்டுமென்றால், அதற்கு வேலை வாய்ப்பு தான் திறவுகோலாகும்.
கட்டுரையாளர் : மாநிலச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்