உணவு மற்றும் எரிபொருள்களின் விலைகள் 12 ஆண்டுகளில் மிகவும் அதிகமாகும். இவை அனைத்தும் மக்களின் துன்ப துயரங்களை அதிகப்படுத்தி இருக்கிறது.இதற்கு எதிராகக் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கிளைகளுக்கும் அறைகூவல் விடுக்கிறது.
உணவு மற்றும் எரிபொருள்களின் விலைகள் 12 ஆண்டுகளில் மிகவும் அதிகமாகும். இவை அனைத்தும் மக்களின் துன்ப துயரங்களை அதிகப்படுத்தி இருக்கிறது.இதற்கு எதிராகக் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கிளைகளுக்கும் அறைகூவல் விடுக்கிறது.
கோவிட் பெருந்தொற்று: ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன
கோவிட் பெருந்தொற்றில் ஒமைக்ரான் என்னும் புதிய தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கெடுவாய்ப்பாக அரசின் சார்பில் வயதுவந்த அனைவருக்கும் தடுப்பூசி கள் போடும் இலக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவேற்றப்படும் என்று கூறியிருந்தபோதிலும், இதுவரையிலும், அதாவது டிசம்பர் 18 வரையிலும், 39 சதவீதத்தினருக்கே முழுமையாக இரண்டு தவணை களும் தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கிறது. நாட்டில் புதிய சுகாதார அவசரநிலை உருவாவதைத் தடுப்ப தற்காக, அனைவருக்கும் முழுமையாகத் தடுப்பூசிகள் போடுவதை உடனடியாக விரைவுபடுத்திட வேண்டும்.
பெண்களுக்கான திருமண வயதை உயர்த்தியிருத்தல்
பெண்கள் திருமணம் செய்துகொள்ளும் வயதை, தற்போது 18 என்று இருப்பதை 21 என உயர்த்துவதற்காக ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரவிருக்கும் சட்டமுன்வடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆத ரிக்காது. இவ்வாறு உயர்த்துவதற்காக, அரசுத்தரப்பில் கூறப்படும் காரணங்கள் ஏற்கத்தக்கதல்ல. இது தொடர்பாக அனைத்துத்தரப்பினருடனும் ஓர் ஆழமான ஆய்வு மேற்கொள்வதற்காக, இந்த வரைவு சட்டமுன்வடிவு சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும். ஒரு பெண், 18 வயதினை நிறைவடையும்போது அவர் சட்டப்பூர்வமாக வயதுக்கு வந்தவராகிவிடுகிறார். ஆனால், அவரைத் திருமணம் தொடர்பான காரணங்க ளுக்கு மட்டும் இளம் சிறாராகக் கருதுவது, சுய-முரண் பாடானதாக இருக்கிறது, வயது வந்த ஒருவர் தன் வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அளிக்க மறுக்கும் விதத்திலும் அமைந்தி ருக்கிறது. இந்தச் சட்டமுன்வடிவு, ஒரு பெண் தன் சொந்த வாழ்க்கை குறித்துத் தீர்மானித்திடும் உரிமை யைப் பறிக்கிறது.
பெண்களின் திருமண வயது தற்போது 18 என இருக்கும் சமயத்திலேயே, அரசாங்கம் 2017இல் வெளி யிட்டுள்ள தரவின்படி பெண்கள் திருமணம் செய்து கொள்ளும் வயது அகில இந்திய அளவில் சராசரியாக 22.1 ஆண்டுகள் என்பதாகும். எனவே, இப்போது இதுபோன்றதொரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை. இந்தச் சட்டமுன்வடிவானது, பெண்களின் சுகாதா ரக் காரணங்களுக்காகக் கொண்டுவரப்படுவதாகக் கூறப்படுமானால், இந்த அரசாங்கம் பெண்கள் கரு வுற்றிருக்கும் நிலையில் தாய்-சேய் மரணம் ஏற்படாது தடுப்பதற்காக, அவர்களுக்குப் போதிய ஊட்டச்சத்து உணவு வழங்குவதை உத்தரவாதப்படுத்திட என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? இவற்றையெல்லாம் செய்யாது, பெண்களின் திருமண வயதை உயர்த்து வது மட்டும் தீர்வாகிவிடாது.
லக்கிம்பூர் கெரி கொலைகள்
உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது. அதில், கொலை செய்யப்படுவ தற்கு, “முன்கூட்டியே சதி மேற்கொள்ளப்பட்டது” என குறிப்பிட்டிருக்கிறது. இந்த நிகழ்வில் எட்டுபேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் பிரதானமாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர், ஒன்றிய உள்துறை இணை அமைச்சர், அஜய் மிஸ்ரா வின் மகனாவார். அந்த அமைச்சர் ஒன்றிய அமைச்சர வையிலிருந்து நீக்கப்பட வேண்டும் என அனைத்துத் தரப்பிலிருந்தும் குரல் எழுப்பப்பட்டுள்ளபோதிலும், பிரதமர் மோடி அவரைத் தன் அமைச்சரவையிலிருந்து நீக்கவில்லை. அவர் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது.
வெற்றிகரமான வங்கி ஊழியர் வேலை நிறுத்தம்
டிசம்பர் 16-17 தேதிகளில் நாடு முழுதும் சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு அதனை வெற்றி பெறச் செய்திருப்பதற்காக அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் அரசியல் தலைமைக்குழு தெரிவித்துக் கொள்கிறது. வங்கிகள் தனியார்மயம் நோக்கி செல்லப்படுவதையும், மக்களின் சேமிப்புகளைத் தங்களுக்கு வேண்டிய கார்ப்பரேட் கூட்டுக்களவாணிகள் சூறையாட மோடி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதையும் அதுவே வேலைநிறுத்தத்திற்கான காரணம் என்பதையும், வங்கி ஊழியர்கள் மக்கள் மத்தியில் எடுத்துச்சென்று விளக்கியிருந்ததால் இந்த வேலைநிறுத்தத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்களும், பொது மக்களும் விரிவான அளவில் ஆதரவு தெரிவித்தனர். மோடி அரசாங்கம் தன் ஆட்சிக்காலத்தில் 10.7 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்பட்ட கடன்களை ரத்து செய்துள்ளது. இதன் பின்னர் வங்கிகள் தங்களை நிலைநிறுத்திக் கொள்வ தற்காக மீண்டும் பொது மக்களிடம் பணத்தை சேமித்திருக்கிறது.
பொதுத்துறை வங்கிகளை இந்தவிதத்தில் ஆபத்திற்குள்ளாக்கிவிட்டு, இதனையே ஒரு சாக்காக வைத்து, வங்கிகளைத் தனியார்மயப்படுத்திட நடவ டிக்கைகளை எடுத்திருக்கிறது. இது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பேரழிவை ஏற்படுத்திடும். அரசின் தனி யார்மயத் திட்டங்கள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது.
விலைவாசி உயர்வு
நவம்பர் மாதத்தில் மொத்த விலைவாசிக் குறி யீட்டெண் 14.2 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இது, கடந்த முப்பதாண்டுகளில் மிகவும் அதிகமானதாகும். மொத்த எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் விலைகள் 39.81 சதவீதம் உயர்ந்திருக்கிறது. உணவு மற்றும் எரிபொருள்களின் விலைகள் 12 ஆண்டுகளில் மிகவும் அதிகமாகும். இவை அனைத்தும் மக்களின் துன்பதுய ரங்களை அதிகப்படுத்தி இருக்கிறது.இதற்கு எதிராகக் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கிளைகளுக்கும் அறைகூவல் விடுக்கிறது.
வேலையின்மை
2021 நவம்பரில் மட்டும் ஊதியம் வாங்கிக்கொண்டி ருந்த 68 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் வேலை களை இழந்துள்ளார்கள். நகர்ப்புற வேலையின்மை என்பது கடந்த 17 வாரங்களில் மிகவும் அதிகமாகி இருக்கிறது. அதேபோன்று ஒட்டுமொத்த வேலை யின்மை என்பதும் கடந்த 9 வாரங்களில் அதிகமாகி இருக்கிறது. பணவீக்கம் பாய்ச்சல் வேகத்தில் சென்றுகொண்டி ருப்பதுடன், இவையும் சேர்ந்து மக்கள் மீது மிகப்பெரிய அளவில் துன்ப துயரங்களைச் சுமத்தி இருக்கிறது. இவற்றின் விளைவாக, பொருளாதாரத்தில் மக்களின் தேவை சுருங்கி, பொருளாதார மந்தத்தை மேலும் ஆழப்படுத்தி இருக்கிறது. வருமானவரி செலுத்தாத குடும்பத்தினருக்கு மாதத்திற்குக் குறைந்தபட்சம் 7,500 ரூபாய் உடனடி யாக, நேரடியாக ரொக்கமாகக், கொடுக்கப்பட வேண்டும்.
தேர்தல் ஆணையத்தைப் பிரதமர் அலுவலகம் அழைத்ததற்குக் கண்டனம்
தலைமைத் தேர்தல் ஆணையம் என்பது அரசமைப்புச்சட்டத்தின் அதிகாரத்தின் கீழ் சுயேச்சை யாக இயங்கும் ஓர் அமைப்பாகும். இது நாட்டில் தேர்தல்களை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்து வதற்கு அமைக்கப்பட்டதாகும். அது, தன் கடமைகளை யும் பொறுப்புகளையும் நிறைவேற்றிட, அரசாங் கத்திற்குப் பயப்படாமல், முழுமையாக சுயேச்சை யாக செயல்பட வேண்டும். சமீபத்தில், பிரதமர் அலுவலகத்திலிருந்து தலைமைத் தேர்தல் ஆணையரும், இதர இரு தேர்தல் ஆணையர்களும் அழைக்கப்பட்டிருப்பது, அரசமைப்புச்சட்டத்தின் நெறிமுறைகளையும், சட்டங்களையும் முழுமையாக மீறிய செயலாகும். மோடி அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமற்ற முறை மற்றும் நடுநிலைத்தன்மை ஆகியவற்றின்மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கைகள் சரியத் தொடங்கிடும். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கடுமையாகக் கண்டிக்கி றது. அரசமைப்புச்சட்ட நிறுவனங்களின் சுதந்திரத் தின்மீது தலையிடுவதை மோடி அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கோருகிறது.
23ஆவது அகில இந்திய மாநாடு
23ஆவது அகில இந்திய மாநாட்டின் வரைவு அரசியல் தீர்மானத்தை, அரசியல் தலைமைக்குழு விவாதித்து, இறுதிப்படுத்தி இருக்கிறது. இது, 2022 ஜனவரி 7-9 தேதிகளில் ஹைதராபாத்தில் நடைபெற வுள்ள மத்தியக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்படும்.
தமிழில்: ச.வீரமணி