கொரோனா பெருந்தொற்றுக் காலத்தி ற்கு பின்பு ஆட்டோ தொழிலில் பெரும் மாற்றம் ஏற்பட்டு, பாதிப் பைச் சந்தித்து வருகிறது. போதிய சவாரி கிடைக்க வில்லை. அதனால் வருமானம் பாதிக்கப்பட்டது. அன்றா டம் குடும்ப செலவுகளுக்கு மட்டுமல்ல; வாகனம் வாங்கிய கடனுக்கான ஈவு செலுத்துவதிலும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். நாள் ஒன்றுக்கு 100 கிலோ மீட்டர் தூரம் ஆட்டோ ஓட்டும் தொழிலாளி ஆண்டுக்கு எரிபொருளுக்கு வரியாக மட்டும் 36 ஆயிரம் ரூபாய் செலுத்துவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. தமிழகத்தில் சுமார் 3 லட்சம் ஆட்டோ பர்மிட்டு கள் உள்ளன. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தோராய மாக 1000 கோடி ரூபாயை அரசுக்கு அள்ளிக் கொடுக்கி றார்கள் ஆட்டோ தொழிலாளிகள். காலை முதல் மாலை வரை சாலைகளில் வாகனம் உருளுவதன் மூலமாக வாழ்க்கையை நடத்தும் ஆட்டோ தொழிலாளிகள் எப்சி கட்டணம், பர்மிட் கட்ட ணம், சாலைவரி, இன்சூரன்ஸ் கட்டணம், அபராதக் கட்ட ணம் என பல ஆயிரம் கோடி ரூபாய்களை அரசாங்கத்தி ற்கு அள்ளித் தருகிறார்கள்.
ஆன்லைன் அபராதம் எனும் வழிப்பறி
கையில் எலக்ட்ரானிக் மெஷினோடு திரும்பும் திசை எல்லாம் போக்குவரத்து காவலர்கள் நின்று கொண்டு ரூபாய் 1000, 5000, 10000 என அபராதத்தை தட்டி விட்டு ஒவ்வொரு வாகன ஓட்டுநரையும் பதற வைக்கிறார்கள். ஆட்டோ ஓட்டுநரின் மொபைல் எண்ணுக்கு அபராத விபரம் வருகிறது; அல்லது வட்டாரப் போக்குவரத்து அலு வலகங்களுக்கு செல்லுகிற போது அபராதம் தெரிய வருகிறது. மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின் ஒரு பகுதி யாக இந்த ஆன்லைன் அபராதம் என்பது அமல் படுத்தப்பட்டு வருகிறது. மோட்டார் வாகன சட்ட திருத்தம் என்பது ஓட்டுநர்க ளை மனிதாபிமானம் அற்றவர்களாக சித்தரிக்கிறது. காலையில் வாகனங்களை வெளியில் எடுக்கிற போதே, இன்று யாரையாவது மோதி விபத்துக்கு உள்ளாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வாகனத்தை சாலை யில் ஓட்டுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் அபராதத்தையும் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தையும் தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்ற கோரிக்கை ஆட்டோ தொழிலாளர்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது.
பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்
விபத்தை தடுப்பதற்கு வாகனங்களில் இரவு நேரங்களில் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டுகிற ஒரு வாய்மொழி உத்தரவை கடந்த எடப்பாடி ஆட்சி காலத்தில் அமல்படுத்தினார்கள். எவ்வித அரசு உத்தரவு இல்லா மல் ஆர்டிஓக்களும் ஸ்டிக்கர் ஒட்டுகிற சில கம்பெனி களும் சம்பாதிப்பதற்காக ஒப்பந்த முறையில், குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு தரப்பட்டது. அதில் வாகன ஓட்டி களிடம் மிகப்பெரிய கொள்ளை நடத்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு இதற்கு முடிவு கட்டி, இனி எப்சி எடுக்க வரும் வாகனங்கள் பிரதி பலிப்பான் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனாலும் கூட இன்றைக்கும் தமிழகம் முழுவதும் வட்டார போக்கு வரத்து அலுவலகங்களில் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாயமாக்கப்பட்டு வாகன ஓட்டுநர்களிடம் ஆயிரக்கணக்கான ரூபாய் கொள்ளை அடிக்கப்படுவது தொடர் கதையாகவே உள்ளது.
ஆட்டோ செயலி அமலாகுமா?
ஓலா, உபேர், ராபிட்டோ போன்ற பன்னாட்டு நிறுவ னங்கள் எந்த மூலதனமும் போடாமல் ஒரு செயலியை வைத்துக்கொண்டு ஆட்டோ தொழிலாளர்களிடமும் பயணிகளிடமும் பல்லாயிரம் கோடி ரூபாயை ஆண்டு முழுவதும் கொள்ளை அடிக்கின்றன. இதிலிருந்து ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டுநர்க ளை பாதுகாக்க வேண்டும்; அரசே செயலியை உரு வாக்கி கேரளா போல் செயல்படுத்த வேண்டும். கேரளாவில் அரசின் ஆட்டோ செயலி பெரிய வரவேற்பு பெற்றது. கேரளாவில் ஆட்டோ இயக்கம் வரையறுக்கப்பட்ட மீட்டர் கட்டணத்தோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால் அங்கே பயணிக ளுக்கும் ஓட்டுநர்களுக்கும் எந்த மனக்கசப்பும் இல்லா மல் சுமூகமாக இருக்கிறது. தமிழகத்தில் அரசாங்கம் செயலியை உருவாக்கி கட்டணத்தை தீர்மானித்து செயல்படுத்தினால், ஆட்டோ தொழிலாளிகள் மத்தியில் மட்டுமல்ல; பொதுமக்கள் மத்தியிலும் இந்த அரசாங்கத்திற்கு நற்பெயர் ஏற்படும்.
தனி நல வாரியம்
கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ஆட்டோ தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் என்பது அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. தற்போது செயல்படுகிற நல வாரியத்தில் ஆட்டோ தொழிலாளி கள் என்கிற பெயரையே நீக்கிவிட்டு உருவாக்கி இருக்கி றார்கள். இது ஆட்டோ தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்களை இந்த அரசாங்கத்திற்கு வரி யாக செலுத்துகிற ஆட்டோ தொழிலாளிக்கு, அவர்கள் பேரில் தனி நல வாரியம் அமைக்கப்பட வேண்டும். கலைஞர் அவர்கள் அறிவித்ததால் அதிமுக அந்தப் பெயரை மாற்றியது. தற்போது தமிழ்நாடு அரசு ஆட்டோ தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் உரு வாக்க வேண்டும். மேலும் விரிவடைந்து வருகிற நகராட்சி, பேரூ ராட்சி, மாநகராட்சி, ஊராட்சி பகுதிகளில் ஆட்டோ நிறுத்து வதற்கு ஸ்டாண்ட் வசதிகள் உருவாக்கித் தர வேண்டும்; இன்சூரன்ஸ் கட்டண உயர்வுகள் தடுத்து நிறுத்த ப்பட வேண்டும். ஒவ்வொரு இன்சூரன்ஸ் கம்பெனியும் ஒவ்வொரு வகையான பிரீமியத்தை வசூல் செய்து கொள்ளையடிப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்;
ஆட்டோக்கள் வாங்க அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடன் தருவதை உறுதி செய்ய வேண் டும்; புதிய ஆட்டோக்கள் வாங்குவதற்கு ரூபாய் 10,000 மானியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் இதுபோன்ற - ஆட்டோ தொழிலாளிகளும், வாகன ஓட்டுநர்களும் அன்றாடம் சந்திக்கிற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 25 (நாளை) தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஆட்டோ தொழி லாளர் சம்மேளனம் (சிஐடியு) ஆர்ப்பாட்டம் நடத்து கிறது. ஆட்டோ தொழிலாளர்கள் நடத்துகிற போராட்டம் ஆட்டோ தொழிலாளர்களுடைய வாழ்க்கையை மேம் படுத்துவற்காக மட்டுமல்ல, ஆட்டோவை பயன்படுத்து கிற விளிம்புநிலை மக்கள், நடுத்தர மக்களுக்கான போராட்டமும் ஆகும்.
கட்டுரையாளர் : பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு ஆட்டோத் தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு)