சாத்தூர் பட்டாசு விபத்தில் 8 பேர் பலியான துயரம் பசுமைத் தீர்ப்பாய உத்தரவின் படி நிவாரணம் வழங்க வேண்டும்!
தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை
சென்னை, ஜூலை 2 - சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியான 8 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பசுமைத் தீர்ப்பாய உத்தரவின்படி நிவாரணம் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கையில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே, சின்னக்காமன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகியுள்ளனர். 5 பேர் கவலைக் கிடமான முறையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கும், அவர்களது உறவினர்களுக் கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரி வித்துக் கொள்கிறது. அதிகாரிகளின் மெத்தனத்தால் அதிகரிக்கும் விபத்துக்கள் தமிழ்நாட்டில் பட்டாசு விபத்துக்கள் அதி கரிப்பதும், அப்பாவி தொழிலாளர்கள் உயி ரிழப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகள் மேற்கொள்வது, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவது, விதிமுறைகளை கறாராக கண்காணிப்பது போன்றவற்றில் அரசு அதி காரிகள் மெத்தனப்போக்கில் செயல்படு வதும் இதுபோன்ற விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன என்ப தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக் காட்ட விரும்புகிறது. எனவே, இதுபோன்ற விபத்துக்களை தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்துகிறது. தலா ரூ. 30 லட்சம் நிவாரணம் வழங்குக! உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 4 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல எனவும், பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின் படி உயிரிழந்த வர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 20 லட்சமும், ஆலை நிர்வாகம் சார்பில் ரூ. 10 லட்சமும் உடனடியாக வழங் கிட வேண்டுமென உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினரும், தொழிற்சங்க அமைப் பினரும் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்டு பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி உடனடியாக தமிழக அரசு நிவாரணத் தொகையை வழங்கிட வேண்டும். மேலும், படுகாயமுற்று ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரு பவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ. சண்முகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.